ராகல (Ragala) குகையில் நடந்தது என்ன?

அண்மையில் இரு இளைஞர்கள் வேட்டையாடும் பொழுது ஓர் முள்ளம் பன்றி ஒன்றினை கண்டார்கள். அவர்கள் அதனை துரத்தும் பொது அது அருகில் உள்ள குகை ஒன்றினுள் சென்றது. அதனை தொடர்ந்து அவர்களும் அவர்களின் வேட்டை நாயும் குகைவாசலில் நீண்ட நேரம் பன்றியின் வருகைக்குகாக காத்திருந்தார்கள். பன்றி வரவேயில்லை. அதன் பின்பு அவர்கள் அருகில் உள்ள குப்பை  எரித்து அதில் உண்டாகிய புகையினை குகையினுள் செலுத்தினார்கள் அதன் பின்னும் பன்றி வரவில்லை. அதன் பின்னர் அவர்களது வேட்டை நாய்  உள் நுழைந்தது நீண்ட நேரமாகியும் அது வரவில்லை பின்னர் அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவராக உள்சென்றர்கள். இறுதியில் ஒருவருமே வீடு திரும்பவில்லை. கிராம மக்கள் அடுத்த நாள் தேடுதல் வேட்டையில் இறங்கி தேடியபொழுது அவர்களின் இரு இறந்த உடல்களையும் மற்றும் பன்றி, நாய் என்பற்றின் உடல்களையும் எடுக்க முடிந்தது.

1537424826_6513812_hirunews_deth

சாதரரணமாக  நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவீத ஒக்சிசன் வாயு உள்ளது. ஆழமான கிணறு, குகை, மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பலின் கொள்கலன் போன்றவற்றில் ஒக்சிசன் வாயு குறைந்த சதவீதத்தில் உள்ளது. இவற்றினுள் செல்லும்போது மனிதர்களுக்கு மூச்சு திணறல் (Suffocation ) ஏற்படும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டது. அத்துடன் இவ்வாறான குகைகளில் நச்சு வாயுக்களும் (poisonous gases ) மனித சுவாசத்திற்கு உதவாத வாயுக்களும் ( irrespirable gases ) நிறைந்திருக்கும். மேலும் புகையுட்டல் ஆனது இச்சூழ்நிலையினை நிச்சயம் மோசமாக்கி இருக்கும். மூச்சு திணறல் ஏற்படும் பொழுது ஒருகட்டத்தில் எங்களின் சுயநினைவு குறைந்து அல்லது முற்றாக அற்று விடும் இந்நிலையில் அவர்களால் சிந்தித்து வெளியேறுவது கடினமாகிவிடும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.