இலங்கையில் 2026ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சல் தொற்று கடுமையாகப் பரவி வருகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அலகின் தரவுகளின்படி, ஜூலை மாதம் முதல் வாரம் வரை 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், 45 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மேற்கு மாகாணம், குறிப்பாக கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள், அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இறப்பு விகிதம் (Case Fatality Rate) 0.07% எனும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. எனினும் ஒவ்வொரு மரணமும் தவிர்க்கக்கூடியதாக இருந்திருக்கலாம் என்பதால், “டெங்கு காய்ச்சலால் ஏன், எவ்வாறு மரணம் நிகழ்கிறது?” என்பதை தடயவியல் நோயியல் (Forensic Pathology) பார்வையில் புரிந்துகொள்வது பொதுமக்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மிக முக்கியமானது.
டெங்கு தொற்று ஏற்படும் விதம்
டெங்கு காய்ச்சல், Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசு இனங்களால் பரப்பப்படும் DENV-1, DENV-2, DENV-3, DENV-4 என்ற நான்கு வைரஸ் வகைகளால் ஏற்படுகிறது. ஒருமுறை ஒரு வகை வைரஸால் தொற்றுண்டவர், பின்னர் வேறொரு வகையால் மீண்டும் தொற்றுண்டால், நோய் கடுமையடையும் அபாயம் அதிகரிக்கும் என்பது நன்கறியப்பட்ட உண்மை. இதற்கு ‘Antibody-Dependent Enhancement’ எனும் நோயியல் விளக்கம் அளிக்கப்படுகிறது.
மரணத்திற்கு இட்டுச்செல்லும் உடற்தொழிலியல் மாற்றங்கள்
\தடயவியல் நோயியலின் பார்வையில், டெங்கு காய்ச்சல் மரணத்திற்கு இட்டுச் செல்வது ஒரு தனிக் காரணியால் அல்ல; பல உடல் அமைப்புகளையும் ஒருங்கே பாதிக்கும் தொடர் நிகழ்வுகளின் விளைவாகும். முக்கியமான நோயியல் வழிமுறைகள் பின்வருமாறு:
பிளாஸ்மா கசிவு மற்றும் அதிர்ச்சி நிலை (Plasma Leakage & Dengue Shock Syndrome) — இரத்த நாளங்களின் உட்சுவர் ஊடுருவுத் தன்மை (vascular permeability) அதிகரிப்பதால், இரத்தத்தின் திரவப் பகுதி மார்பு மற்றும் வயிற்று குழிகளுக்குள் கசிகிறது. இதனால் இரத்த அளவு குறைந்து, இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைந்து அதிர்ச்சி நிலை (shock) ஏற்படுகிறது.
இரத்தத்தட்டுக் குறைவு மற்றும் இரத்தப்போக்கு (Thrombocytopenia & Coagulopathy) — எலும்பு மஜ்ஜையின் அடக்கம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டல தாக்குதலால் இரத்தத்தட்டுகள் வெகுவாகக் குறைகின்றன. இதனுடன் இரத்தம் உறையும் காரணிகளும் பாதிக்கப்படுவதால், உள்ளுறுப்புகளிலும் தோலின் கீழும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
கல்லீரல் செயலிழப்பு (Hepatic Failure) — வைரஸ் நேரடியாக கல்லீரல் செல்களைத் தாக்குவதால் நச்சுத்தன்மை (necrosis) ஏற்படுகிறது; இது இரத்தம் உறையும் திறனை மேலும் பாதிக்கும்.
பன்-உறுப்பு செயலிழப்பு (Multi-organ Failure) — நீடித்த அதிர்ச்சி நிலை சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் வீக்கம் (pulmonary oedema/ARDS), மற்றும் சில வேளைகளில் மூளை வீக்கம் (encephalopathy) என பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடும்.
மேற்படி நோயியல் வழிமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக, அல்லது ஒரே நேரத்தில் நிகழும்போது, சுவாசத் தொகுதி செயலிழப்பு (ARDS), இரத்தப்போக்குத் திணறல் (bleeding diathesis), குறை இரத்த அழுத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளிலும் மரணத்திற்கான பொதுவான காரணங்களாக அறியப்பட்டுள்ளன.
பிரேதப் பரிசோதனையில் காணப்படும் மாற்றங்கள்
டெங்கு தொடர்பான மரணங்களில் நடத்தப்படும் பிரேதப் பரிசோதனைகளில் பொதுவாகக் காணப்படும் மாற்றங்கள்:
மார்பு மற்றும் வயிற்றுக் குழிகளில் திரவம் தேங்கியிருத்தல் (Pleural effusion & Ascites) — பிளாஸ்மா கசிவின் நேரடி அடையாளம்.
உடலின் பல பாகங்களிலும் — தோல், சவ்வு, நுரையீரல், இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் மேற்பரப்பில் — சிறு மற்றும் பரவலான இரத்தப்போக்குகள் (petechial to diffuse haemorrhages).
கல்லீரல் பெரிதாகி மஞ்சள் நிறமாக மாறியிருத்தல், நுண்ணோக்கியில் மையப்பகுதி நசிவு (centrilobular/midzonal necrosis) காணப்படுதல்.
நுரையீரல் வீக்கம் மற்றும் உள்-நுண்குழல் இரத்தப்போக்கு (pulmonary oedema & intra-alveolar haemorrhage).
அரிதான வேளைகளில் மண்ணீரல் அல்லது கல்லீரல் கிழிதல் (splenic/hepatic rupture) — உள் இரத்தப்போக்கால் திடீர் மரணத்திற்கு வழிவகுக்கக்கூடும்
இத்தகைய கண்டுபிடிப்புகள் பன்னாட்டு ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக பதிவாகியுள்ள⁵. நுண்ணோக்கு/histopathology பரிசோதனை மற்றும் NS1/PCR போன்ற வைரஸ் உறுதிப்படுத்தல் பரிசோதனைகள் இணைந்தே இறுதி நோய் கண்டறிதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
தடயவியல் மருத்துவரின் பங்கு
டெங்கு காய்ச்சல் தொடர்பான மரணங்களில் தடயவியல்/நீதிமருத்துவ அலுவலரின் பங்கு பல அடுக்குகளைக் கொண்டது:
மரணத்திற்கான உண்மையான காரணத்தை (immediate cause), அதற்கு வழிவகுத்த நோயியல் தொடரை (antecedent causes) தெளிவாக பதிவு செய்தல் — எடுத்துக்காட்டாக, ‘Dengue Shock Syndrome’ → ‘Multi-organ Failure’ → மரணம் என்ற வரிசையில்.
மரணத்திற்கு முன் இருந்த பிற நோய்கள் (comorbidities) அல்லது தாமதமான மருத்துவமனை வருகை போன்ற காரணிகள் மரணத்தில் எவ்வளவு பங்களித்தன என்பதை மதிப்பீடு செய்தல்.
மருத்துவ சிகிச்சையில் குறைபாடு (medical negligence) இருந்ததா என்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, மருத்துவப் பதிவேடுகளும் பிரேதப் பரிசோதனை கண்டுபிடிப்புகளும் ஒப்பிட்டு புறநிலையான அறிக்கை வழங்குதல்.
பிரேதப் பரிசோதனையின்போது ஏற்படும் இயல்பான பிந்தைய-மரண மாற்றங்களை (postmortem artefacts — எ.கா. இரத்தம் அடர்த்தியாதல்) நோய் காரணமான மாற்றங்களிலிருந்து பிரித்தறிதல்.
இவ்வாறு, தடயவியல் மருத்துவர் ஒரு தொற்றுநோய் மரணத்தை வெறும் புள்ளிவிபரமாக அல்லாமல், சட்டரீதியாகவும் அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கக்கூடிய ஒரு பதிவாக மாற்றுகிறார்
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களில் டெங்கு மரண அபாயம் ஏன் அதிகம்?
🤰 கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப கால உடலியல் மாற்றங்கள், பிளாஸ்மா கசிவு மற்றும் இரத்தப்போக்கு அதிகரிப்பதால் தாயும் கருவும் ஆபத்துக்குள்ளாகலாம்.
👶 குழந்தைகள்: உடலில் திரவ அளவு குறைவாக இருப்பதால் நீரிழப்பு மற்றும் அதிர்ச்சி நிலை (Shock) விரைவாக ஏற்படுகிறது. நோய் வேகமாகக் கடுமையடையலாம். குழந்தைகளின் உடல் எடை குறைவாக இருப்பதால், சிறிய அளவிலான பிளாஸ்மா கசிவே கூட வேகமாக அதிர்ச்சி நிலையை (Shock) ஏற்படுத்த முடியும்
👴 முதியவர்கள்: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற இணைநோய்கள் இருப்பதால் டெங்கு பல உறுப்புகளின் செயலிழப்பை விரைவாக ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டெங்குவின் உயர் அபாயக் குழுவினர் (High-risk group). இவர்களுக்கு காய்ச்சல் குறையும் 3–7 ஆம் நாட்களில் (Critical Phase) உடனடி மருத்துவ கண்காணிப்பும் சிகிச்சையும் உயிரைக் காப்பாற்ற மிகவும் அவசியம்
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்கள், ஒரு எளிய காய்ச்சல் நோய் எவ்வாறு உடலின் பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கே செயலிழக்கச் செய்யக்கூடும் என்பதற்கான உதாரணமாகும். தடயவியல் நோயியல் பார்வையில் இந்நோயியலைப் புரிந்துகொள்வது, மருத்துவர்களுக்கு துல்லியமான மரணச் சான்றிதழ் வழங்கவும், பொதுமக்களுக்கு ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு உரிய நேரத்தில் சிகிச்சை பெறவும் உதவுகிறது. விழிப்புணர்வும் விரைவான மருத்துவ நடவடிக்கையுமே தவிர்க்கக்கூடிய இம்மரணங்களைத் தடுக்கும் திறவுகோலாகும்.
இன்றைய உலகில் சர்வதேச விமான நிலையங்கள் தினமும் இலட்சக்கணக்கான பயணிகளை கையாளுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களிடையே குற்றவாளிகள், பயங்கரவாதிகள், போலி ஆவணங்களைப் பயன்படுத்துவோர் அல்லது சட்ட அமலாக்க அமைப்புகளால் தேடப்படும் நபர்களை மனிதர்களால் மட்டுமே அடையாளம் காண்பது மிகவும் கடினமான பணியாகும்.
இதனை எளிதாக்குவதற்காக பல நாடுகள் முகஅடையாளம்காணும்தொழில்நுட்பத்தை(Facial Recognition Technology – FRT) எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு (Immigration) அமைப்புகளுடன் ஒருங்கிணைத்துள்ளன. இது செயற்கைநுண்ணறிவு(Artificial Intelligence – AI), கணினிப்பார்வை(Computer Vision) மற்றும் உயிரியல்அடையாளவியல்(Biometrics) ஆகியவற்றின் இணைப்பாகும். முகஅடையாளம் காணும் முறை, கைரேகை அல்லது கண்விழித் திரை (Iris) பரிசோதனை போல உடலைத் தொட வேண்டிய அவசியமின்றி, தொலைவிலிருந்தே ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் திறன் கொண்டது.
முகஅடையாளம்காணும்தொழில்நுட்பம்என்றால்என்ன?
மனித முகத்தின் தனித்துவமான அமைப்புகளை கணினி மூலம் பகுப்பாய்வு செய்து, அந்த முகத்தை அரசாங்கம் அல்லது சட்ட அமலாக்க அமைப்புகளின் தரவுத்தளத்தில் (Database) உள்ள முகங்களுடன் ஒப்பிட்டு, அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் உயிரியல் அடையாள (Biometric) தொழில்நுட்பமே முகஅடையாளம்காணும்தொழில்நுட்பம் ஆகும். இந்த முறை சாதாரண புகைப்படங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவதில்லை. மாறாக, முகத்தின் அமைப்புகளை கணிதவடிவமாக(Mathematical Representationஅல்லதுFace Embedding) மாற்றி அதையே ஒப்பிடுகிறது.
அறிவியல்அடிப்படை
ஒவ்வொரு மனிதரின் முகத்திலும் பல தனித்துவமான உடற்கூறு (Anatomical) அம்சங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
இரு கண்களுக்கிடையிலான தூரம்
மூக்கின் அகலம் மற்றும் நீளம்
தாடையின் வடிவம்
முகத்தின் நீளம்
உதடுகளின் அமைப்பு
காதுகளின் நிலை
நெற்றியின் அகலம்
கன்ன எலும்புகளின் உயரம்
தாடை முனையின் வடிவம்
இந்த அனைத்து அளவுகளும் கணினியால் எண்களாக மாற்றப்பட்டு, ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான முகஉயிரியல்குறியீடு(Facial Biometric Template) உருவாக்கப்படுகிறது.
முகப்படங்கள் பின்வரும் இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
விமான நிலைய நுழைவாயில்
Check-in பகுதி
பாதுகாப்பு சோதனை
குடிவரவு (Immigration)
Boarding Gate
வருகைப் பகுதி
சில விமான நிலையங்களில்
Infrared Camera
Near Infrared Camera
3D Camera
Depth Sensor
போன்ற தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
2.முகத்தைகண்டறிதல்(Face Detection)
முதலில் கணினி படத்தில் மனித முகம் இருக்கிறதா என்பதை கண்டறிகிறது.
இதன்போது
கண்கள்
மூக்கு
வாய்
முகத்தின் வெளிப்புற எல்லை
ஆகியவை அடையாளம் காணப்படுகின்றன.
இதன் நோக்கம் பின்னணியில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கி முகத்தை மட்டும் தனியாகப் பிரிப்பதாகும்.
3.முகத்தைசீரமைத்தல்(Face Alignment)
ஒருவர் நேராக கேமராவைப் பார்க்காமல் இருக்கலாம். தலை சாய்ந்திருக்கலாம். இதனால் AI
கண்களின் மையம்
மூக்கின் நுனி
வாயின் முனைகள்
ஆகியவற்றைப் பயன்படுத்தி முகத்தை நேராகச் சீரமைக்கிறது.
4.முகஅம்சங்களைபிரித்தெடுத்தல்(Feature Extraction)
இது முழு செயல்முறையின் மிக முக்கியமான கட்டமாகும்.
Deep Learning மற்றும் Convolutional Neural Network (CNN) போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் ஆயிரக்கணக்கான முக அம்சங்களை பகுப்பாய்வு செய்கின்றன. பின்னர் புகைப்படத்தை சேமிக்காமல், 128 முதல் 512 வரை எண்ணியல் மதிப்புகளைக் கொண்ட ஒரு Feature Vector உருவாக்கப்படுகிறது.
இந்த எண் தொகுப்பே அந்த நபரின் முகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
5.தரவுத்தளஒப்பீடு(Database Matching)
உருவாக்கப்பட்ட Feature Vector பின்வரும் தரவுத்தளங்களுடன் ஒப்பிடப்படுகிறது.
Passport Database
Visa Database
Immigration Records
National Identity Database
Police Database
Criminal Database
Interpol Database
Terrorist Watch List
இங்கு புகைப்படங்கள் ஒப்பிடப்படுவதில்லை. மாறாக, இரண்டு Feature Vectors-களுக்கிடையேயான கணித தூரம் (Mathematical Distance) கணக்கிடப்படுகிறது.
பொதுவாக
Euclidean Distance
Cosine Similarity
போன்ற கணித முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
6.பொருத்தமதிப்பீடு(Matching Score)
ஒப்பீட்டின் முடிவில் ஒரு Similarity Score வழங்கப்படுகிறது. உதாரணமாக
பொருத்தமதிப்பெண்
விளக்கம்
99.8%
ஒரே நபர் என மிகுந்த சாத்தியம்
98%
மிகவும் அதிக பொருத்தம்
90%
சாத்தியமான பொருத்தம்
70%
பொருந்த வாய்ப்பு குறைவு
முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட அளவை (Threshold) விட மதிப்பெண் அதிகமாக இருந்தால், அமைப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை (Alert) அனுப்பும்.
விமானநிலையத்தில்செயல்படும்முறை
ஒரு பயணி குடிவரவு சோதனைக்கு வரும்போது,
கேமரா அவரது முகத்தைப் பதிவு செய்கிறது.
AI முகத்தை கண்டறிகிறது.
முகம் சீரமைக்கப்படுகிறது.
முக அம்சங்கள் எடுக்கப்படுகின்றன.
Feature Vector உருவாக்கப்படுகிறது.
அது தேசிய மற்றும் சர்வதேச தரவுத்தளங்களுடன் ஒப்பிடப்படுகிறது.
பொருத்தம் இல்லையெனில் பயணி வழக்கமான நடைமுறையில் அனுமதிக்கப்படுகிறார்.
அதிக பொருத்தம் இருந்தால் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படுகிறது.
அதன் பின்னரே மனித அதிகாரிகள் ஆவணங்கள், கைரேகை அல்லது பிற உயிரியல் அடையாளங்களைப் பயன்படுத்தி இறுதி சரிபார்ப்பை மேற்கொள்கிறார்கள்.
முக்கியமாக, முகஅடையாளம் காணும் அமைப்பு மட்டும் ஒருவரை கைது செய்யாது; அது ஒரு எச்சரிக்கை கருவியாக மட்டுமே செயல்படுகிறது.
செயற்கைநுண்ணறிவின்(AI)பங்கு
நவீன Facial Recognition அமைப்புகள் Deep Learning தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. மில்லியன் கணக்கான முகப்படங்களைப் பயன்படுத்தி AI பயிற்சி பெறுகிறது. இதன் மூலம்,
வயது அதிகரித்தாலும்
தாடி வளர்ந்தாலும்
கண்ணாடி அணிந்தாலும்
ஒப்பனை செய்தாலும்
உடல் எடை மாறினாலும்
முகபாவனை மாறினாலும்
வெளிச்சம் மாறினாலும்
அதே நபரை அடையாளம் காணும் திறன் மேம்படுகிறது.
நன்மைகள்
1.எல்லைப்பாதுகாப்பைஅதிகரிக்கிறது
தேடப்படும் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் போலி அடையாளங்களை விரைவாகக் கண்டறிய உதவுகிறது.
2.குடிவரவுசெயல்முறைவேகமாகிறது
நீண்ட வரிசைகள் குறைகின்றன.
3.தொடர்பில்லா(Contactless)அடையாளம்
உடலைத் தொட வேண்டிய அவசியமில்லை.
4.தொடர்ச்சியானகண்காணிப்பு
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகளை கண்காணிக்க முடியும்.
5.சட்டஅமலாக்கத்திற்குஉதவுகிறது
தப்பியோடிய குற்றவாளிகள்
காணாமல் போனவர்கள்
போலி கடவுச்சீட்டு பயன்படுத்துவோர்
ஆகியோரை கண்டறிய உதவுகிறது.
குறைபாடுகள்
1.தவறானநேர்மறை(False Positive)
குற்றமற்ற ஒருவர் தவறுதலாக குற்றவாளி என அடையாளம் காணப்படலாம்.
2.தவறானஎதிர்மறை(False Negative)
உண்மையான குற்றவாளி கண்டறியப்படாமல் போகலாம்.
3.வெளிச்சத்தின்தாக்கம்
மிகக் குறைந்த வெளிச்சம் அல்லது அதிக வெளிச்சம் செயல்திறனை பாதிக்கலாம்.
4.முகமறைப்பு
முகக்கவசம், பெரிய கண்ணாடி அல்லது தொப்பி போன்றவை அடையாளம் காணும் திறனை குறைக்கலாம்.
5.தனியுரிமை(Privacy)
பொதுமக்களின் உயிரியல் தரவுகள் சேமிக்கப்படுவதால்,
தனியுரிமை
தரவு பாதுகாப்பு
சட்டபூர்வமான பயன்பாடு
ஆகியவை மிக முக்கியமான விவாதங்களாக உள்ளன.
6.தரவுத்தளத்தின்வரம்பு
தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாத நபர்களை இந்த அமைப்பு அடையாளம் காண முடியாது.
நெறிமுறைமற்றும்சட்டரீதியானஅம்சங்கள்
முகஅடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது,
மனித உரிமைகள்
தனியுரிமை பாதுகாப்பு
தரவு பாதுகாப்பு
வெளிப்படைத்தன்மை
பொறுப்புணர்வு
நீதித்துறை மேற்பார்வை
ஆகியவை உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும். AI வழங்கும் முடிவு இறுதி முடிவாக அல்ல; அது மனித அதிகாரியின் மதிப்பீட்டுடன் இணைந்தே பயன்படுத்தப்பட வேண்டும்.
எதிர்காலவளர்ச்சிகள்
எதிர்காலத்தில்,
மேலும் துல்லியமான AI மாதிரிகள்
3D முகஅடையாளம்
முகம் + கைரேகை + கண்விழித் திரை (Multimodal Biometrics)
குறைந்த தரமான படங்களிலும் அதிக துல்லியம்
குறியாக்கப்பட்ட (Encrypted) உயிரியல் தரவு ஒப்பீடு
போன்ற முன்னேற்றங்கள் இந்த தொழில்நுட்பத்தை மேலும் பாதுகாப்பானதாகவும் திறமையானதாகவும் மாற்றும்.
முகஅடையாளம் காணும் தொழில்நுட்பம் என்பது செயற்கைநுண்ணறிவு,கணினிப்பார்வை,உயிரியல்அடையாளவியல்மற்றும்கணிதப்பகுப்பாய்வு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் செயல்படும் நவீன பாதுகாப்பு அமைப்பாகும். இது முகத்தின் புகைப்படத்தை நேரடியாக ஒப்பிடுவதில்லை; மாறாக, முகத்தின் தனித்துவமான உடற்கூறு அம்சங்களை கணித வடிவமாக மாற்றி, அரசாங்க மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளின் தரவுத்தளங்களுடன் ஒப்பிடுகிறது. இதன் மூலம் விமான நிலையங்களில் குற்றவாளிகள், போலி அடையாளம் பயன்படுத்துபவர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்புப் பட்டியலில் உள்ள நபர்களை விரைவாகக் கண்டறிய முடிகிறது.
எனினும், இந்த தொழில்நுட்பம் முழுமையாகப் பிழையற்றதல்ல. தவறான பொருத்தங்கள், ஒளி மற்றும் முகநிலை மாற்றங்களால் ஏற்படும் துல்லியக் குறைபாடுகள், தனியுரிமை தொடர்பான சவால்கள் ஆகியவை தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. ஆகையால், முகஅடையாளம் காணும் அமைப்பு ஒரு உதவிமுடிவுஎடுக்கும்கருவி(Decision Support System) ஆக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; இறுதி அடையாள உறுதிப்படுத்தல் எப்போதும் பயிற்சி பெற்ற மனித அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சரியான சட்டக் கட்டுப்பாடுகள், தரவு பாதுகாப்பு, மனித மேற்பார்வை மற்றும் நெறிமுறை வழிகாட்டுதல்களுடன் பயன்படுத்தப்படும் போது, இந்த தொழில்நுட்பம் உலகளாவிய விமானப் பாதுகாப்பையும் எல்லைப் பாதுகாப்பையும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும் திறன் கொண்டதாகும்.
இன்றைய காலத்தில் சிறுநீர் மூலம் போதைப்பொருள் பரிசோதனை செய்யும் விரைவு (Rapid) பரிசோதனைக் கருவிகள் இலங்கையின் மருந்தகங்கள், தனியார் ஆய்வகங்கள் மற்றும் பல குடும்பங்களின் மருந்துப் பெட்டிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. தங்களுடைய பிள்ளையின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்படும் பெற்றோர்கள், புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள், போதைப்பொருள் மீளுருவாக்க (Rehabilitation) மையங்கள் ஆகியவை சில நிமிடங்களில் முடிவைக் காட்டும் இந்தச் சிறிய கருவிகளைப் பயன்படுத்துகின்றன.
தடயவியல் மருத்துவ அதிகாரியாக (Judicial Medical Officer) பணியாற்றும் எனக்கு, நீதிமன்றம் மற்றும் சட்டவியல் சூழல்களில் இப்பரிசோதனை முடிவுகளை விளக்க வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இந்த அனுபவத்தில் நான் கவனித்த முக்கியமான உண்மை என்னவெனில், இந்தக் கருவிகளின் பயன்பாடு மிகவும் பரவலாக இருந்தாலும்,
இவை உண்மையில் எதை அளவிடுகின்றன,
அவற்றின் நம்பகத்தன்மை எவ்வளவு,
எந்த அளவிற்கு சட்டப்பூர்வ ஆதாரமாக பயன்படுத்த முடியும்
என்பதைப் பற்றிய புரிதல் பொதுமக்களிடையே மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இந்தக் கட்டுரை இப்பரிசோதனைக் கருவிகளின் அறிவியல் அடிப்படையையும், அவற்றின் வரம்புகளையும் எளிய மொழியில் விளக்குகிறது.
இந்தப் பரிசோதனை எவ்வாறு செயல்படுகிறது?
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான சிறுநீர் போதைப்பொருள் பரிசோதனை கருவிகள் Lateral Flow Immunochromatography எனப்படும் நோய் எதிர்ப்பு (Immunological) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கருவிக்குள் ஒரு சிறப்பு காகிதப் பட்டை (Test Strip) உள்ளது. அதில் குறிப்பிட்ட போதைப்பொருள் அல்லது அதன் வளர்சிதை மாற்றப் பொருளை (Metabolite) அடையாளம் காணக்கூடிய Antibody (எதிர் அணுக்கள்) பொருத்தப்பட்டிருக்கும். சிறுநீர் மாதிரி கருவியில் சேர்க்கப்பட்டவுடன், அது காகிதப் பட்டையின் வழியாக நுண்குழாய் ஈர்ப்பு விசை (Capillary Action) மூலம் முன்னோக்கி நகர்கிறது. அதனுடன், சிறுநீரில் உள்ள போதைப்பொருள் மூலக்கூறுகளும் நகர்கின்றன.
இந்தப் பட்டையில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.
1. பரிசோதனைபகுதி (Test Zone)
இங்கு, சிறுநீரில் உள்ள போதைப்பொருள் மூலக்கூறுகள், முன்கூட்டியே குறியிடப்பட்ட (Labelled) போதைப்பொருள்-இணைப்பு (Drug Conjugate) மூலக்கூறுகளுடன் போட்டியிட்டு Antibody-யுடன் இணைகின்றன.
சிறுநீரில் போதைப்பொருள் அதிகமாக இருந்தால், அவை பெரும்பாலான Antibody-களுடன் இணைந்து விடும்.
இதனால் நிறமுள்ள Drug Conjugate இணைவதற்கு இடமிருக்காது.
எனவே Test Line தோன்றாது.
அதாவது, கோடுஇல்லாதது = Positive (போதைப்பொருள்கண்டறியப்பட்டது) மாறாக,
சிறுநீரில் போதைப்பொருள் இல்லையோ அல்லது Cut-off அளவைவிட குறைவாக இருந்தாலோ,
நிறமுள்ள Drug Conjugate Antibody-யுடன் சுதந்திரமாக இணைகிறது.
அதனால் நிறமுள்ள கோடு தோன்றுகிறது.
அதாவது, கோடுதோன்றுவது = Negative (போதைப்பொருள்கண்டறியப்படவில்லை)
2. கட்டுப்பாட்டுபகுதி (Control Zone)
Control பகுதியில் எப்போதும் ஒரு கோடு தோன்ற வேண்டும். அது,
பரிசோதனை சரியாக நடைபெற்றதையும்,
சிறுநீர் சரியாக நகர்ந்ததையும்,
கருவியின் வேதிப்பொருட்கள் செயல்பாட்டில் இருப்பதையும்
உறுதிப்படுத்துகிறது. Control Line இல்லையெனில், அந்தப் பரிசோதனை செல்லுபடியாகாது. இந்த முறை, வீட்டில் பயன்படுத்தப்படும்
கர்ப்பப் பரிசோதனை (Pregnancy Test)
COVID-19 Antigen Rapid Test
ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் Antigen–Antibody தொழில்நுட்பத்தின் அதே அடிப்படையையே கொண்டது. வேறுபாடு என்னவெனில், இங்கு புரதங்களை அல்ல, சிறிய போதைப்பொருள் மூலக்கூறுகளை கண்டறிகிறது.
சந்தையில் கிடைக்கும் பரிசோதனை கருவிகளின் வகைகள்
1. Dip Strip Test
சிறுநீர் மாதிரியில் Test Strip-ஐ சில விநாடிகள் நேரடியாக நனைத்து பரிசோதிக்கும் முறை.
2. Cassette Test
Dropper மூலம் குறிப்பிட்ட அளவு சிறுநீரை Sample Well-இல் சொட்டுவதன் மூலம் பரிசோதிக்கும் முறை.
3. Integrated Cup Test
சிறுநீர் சேகரிக்கும் கிண்ணத்திலேயே Test Strip பொருத்தப்பட்டிருக்கும். இதனால்,
மாதிரியை மாற்ற வேண்டிய அவசியம் குறைகிறது.
மாதிரி மாற்றம் (Tampering) செய்யும் வாய்ப்பு குறைகிறது.
வேலைத்தள மற்றும் நீதிமருத்துவ பயன்பாடுகளில் இது அதிக நம்பகத்தன்மை அளிக்கிறது.
ஒரே கருவியில் எத்தனை வகையான போதைப்பொருட்களை பரிசோதிக்க முடியும்?
சிறுநீர் போதைப்பொருள் பரிசோதனை கருவிகள் (Urine Drug Test Kits) ஒரே நேரத்தில் பரிசோதிக்கக்கூடிய போதைப்பொருட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து “Panel” என வகைப்படுத்தப்படுகின்றன.
Single-panel kit – ஒரு வகை போதைப்பொருளை மட்டும் கண்டறியும்.
5-panel kit – 5 வகைகள்.
6-panel kit – 6 வகைகள்.
10-panel kit – 10 வகைகள்.
12-panel kit – 12 வகைகள் அல்லது அதற்கு மேல்.
ஒரே சிறுநீர் மாதிரியில் பல்வேறு போதைப்பொருட்களை ஒரே நேரத்தில் பரிசோதிக்க முடிவது இந்த கருவிகளின் முக்கிய சிறப்பம்சமாகும்.
பொதுவாக பரிசோதிக்கப்படும் போதைப்பொருட்கள்
போதைப்பொருள்
சிறுநீரில்கண்டறியப்படும்காலம் (சராசரி)
முக்கியகுறிப்பு
ஆம்பெட்டமின் / மெத்தாம்பெட்டமின்
2–4 நாட்கள்
சில ADHD மருந்துகள் மற்றும் சளி மருந்துகள் தவறான நேர்மறை (False Positive) முடிவை ஏற்படுத்தலாம்.
கஞ்சா (THC)
அவ்வப்போது பயன்படுத்துவோரில் சுமார் 3 நாட்கள்; நீண்டகால பயனாளிகளில் பல வாரங்கள்
பிறர் புகையை சுவாசிப்பதால் பொதுவாக Positive ஆகாது.
கோகெயின்
2–4 நாட்கள்
மிகவும் குறிப்பிட்ட (Specific) பரிசோதனை.
ஓபியேட்கள் (Morphine, Codeine)
2–3 நாட்கள்
Poppy Seed கொண்ட உணவுகள் அரிதாக False Positive தரக்கூடும்.
Benzodiazepines
3–7 நாட்கள் அல்லது அதற்கு மேல்
சில மருந்துகளை Antibody சரியாக அடையாளம் காணாமல் போகலாம்.
Barbiturates
2–4 நாட்கள்; Phenobarbital பயன்படுத்தினால் பல வாரங்கள்
தற்போதைய Kit-களில் அரிதாக சேர்க்கப்படுகிறது.
Methadone
3–7 நாட்கள்
Opioid மாற்றுச் சிகிச்சை பெறுபவர்களுக்கு முக்கியமானது.
PCP
7–14 நாட்கள்
தென் ஆசியாவில் மிகவும் அரிது.
MDMA (Ecstasy)
2–4 நாட்கள்
Amphetamine உடன் Cross-reaction ஏற்படலாம்.
Tricyclic Antidepressants
சில நாட்கள்
சில 12-panel Kit-களில் மட்டும் இருக்கும்.
Cut-off (கட்-ஆஃப்) அளவு என்றால் என்ன?
மக்கள் பொதுவாக தவறாகப் புரிந்துகொள்ளும் ஒரு முக்கிய விஷயம் இதுவாகும். இந்த பரிசோதனை சிறுநீரில் எவ்வளவு போதைப்பொருள் உள்ளது என்பதை அளவிடுவதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட Cut-off அளவிற்கு மேல் உள்ளதா அல்லது கீழ் உள்ளதா என்பதையே தெரிவிக்கிறது. அதாவது,
Cut-off-க்கு மேல் இருந்தால் → Positive
Cut-off-க்கு கீழ் இருந்தால் → Negative
எனவே, இந்த பரிசோதனையின் மூலம்,
எவ்வளவு அளவு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது?
எப்போது பயன்படுத்தப்பட்டது?
எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?
என்பதைத் தீர்மானிக்க முடியாது.
Sensitivity மற்றும் Specificity என்றால் என்ன?
ஒரு பரிசோதனையின் தரத்தை மதிப்பிடுவதற்கு இரண்டு முக்கியமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Sensitivity (உண்மையானPositive-ஐகண்டறியும்திறன்)
உண்மையில் போதைப்பொருள் உடலில் இருந்தால் அதை சரியாக Positive எனக் கண்டறியும் திறனே Sensitivity ஆகும். Sensitivity அதிகமாக இருந்தால், போதைப்பொருள் பயன்படுத்திய நபரை தவறவிடும் வாய்ப்பு குறையும்.
போதைப்பொருள் பயன்படுத்தாத ஒருவரை Negative என்று சரியாகக் கூறும் திறனே Specificity ஆகும். Specificity அதிகமாக இருந்தால், பயன்படுத்தாதவரை தவறாக Positive என்று கூறும் வாய்ப்பு குறையும்.
இந்த கருவிகள் எவ்வளவு நம்பகமானவை?
பல ஆய்வுகளின் அடிப்படையில், Rapid Urine Drug Test Kit-களின்
Sensitivity சுமார் 85–98%
Specificity சுமார் 85–98%
வரை இருக்கலாம். ஆனால், இது
உற்பத்தியாளர்,
பரிசோதிக்கப்படும் போதைப்பொருள்,
Cut-off அளவு
ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
False Positive (தவறான Positive) ஏற்படுவதற்கான காரணங்கள்
சில நேரங்களில் போதைப்பொருள் பயன்படுத்தாத நபருக்கும் Positive முடிவு வரலாம். இதற்குக் காரணங்கள்:
சில மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள்
சளி மற்றும் மூக்கடைப்பு மருந்துகள்
Poppy Seed உள்ள உணவுகள்
சில மருந்துகளில் உள்ள வேதியியல் அமைப்பு Antibody-யுடன் Cross-reaction ஏற்படுத்துவது
False Negative (தவறான Negative) ஏற்படுவதற்கான காரணங்கள்
உண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தும் Negative முடிவு வரக்கூடும்.
இதற்கான காரணங்கள்:
அதிக அளவு தண்ணீர் குடித்து சிறுநீரை நீர்த்துப்போகச் செய்தல் (Dilution)
மிக அதிகமாக நீர்த்த சிறுநீர்
பயன்படுத்திய போதைப்பொருளை அந்த Kit அடையாளம் காண முடியாதது
மிகவும் விரைவாக அல்லது மிகவும் தாமதமாக பரிசோதனை செய்தல் (Detection Window-க்கு வெளியே பரிசோதித்தல்)
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது
Rapid Urine Drug Test Kit என்பது முதற்கட்ட (Screening) பரிசோதனை மட்டுமே. இது போதைப்பொருள்பயன்படுத்தியதைஉறுதிப்படுத்தும்இறுதிபரிசோதனைஅல்ல. எனவே, இதன் முடிவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவ, வேலைவாய்ப்பு அல்லது சட்ட ரீதியான முடிவுகளை எடுக்கக் கூடாது.
வீட்டில் சிறுநீர் போதைப்பொருள் பரிசோதனையை எவ்வாறு சரியாகச் செய்வது?
தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவோ இந்தக் கருவியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது முடிவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
1. புதியசிறுநீர்மாதிரியைசேகரிக்கவும்
சுத்தமான, உலர்ந்த பாத்திரத்தில் சிறுநீர் சேகரிக்க வேண்டும்.
அதிகாலை முதல் சிறுநீர் (First Morning Urine) பொதுவாக அதிக செறிவுடையதாக (Concentrated) இருப்பதால் பரிசோதனைக்கு மிகவும் ஏற்றதாகும்.
2. Kit-இன்காலாவதிதேதியைச்சரிபார்க்கவும்
பயன்படுத்துவதற்கு முன்,
Expiry Date முடிவடையவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
Foil pouch கிழியாமல் மூடப்பட்டிருந்ததா என்பதைப் பார்க்கவும்.
பரிசோதனைக்கு முன் Kit-மும் சிறுநீரும் அறை வெப்பநிலைக்கு (Room Temperature) வர அனுமதிக்கவும்.
Strip Test என்றால் குறிப்பிட்ட அளவு வரை மட்டும் சிறுநீரில் நனைக்க வேண்டும்.
Cassette Test என்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொட்டுகளை (Drops) மட்டும் Sample Well-இல் விட வேண்டும்.
அதிகமாகவோ குறைவாகவோ செய்வது தவறான முடிவை ஏற்படுத்தலாம்.
4. சரியானநேரத்தில்முடிவைப்படிக்கவும்
பொதுவாக,
5 நிமிடங்களுக்குள் முடிவைப் பார்க்க வேண்டும்.
மிகவும் சீக்கிரமாகவோ அல்லது மிகவும் தாமதமாகவோ (Strip உலர்ந்த பிறகு) பார்த்தால் அந்த முடிவு நம்பகமானதாக இருக்காது.
5. மங்கலானகோடு (Faint Line) இருந்தாலும்அதுNegative ஆகும்
பலர் செய்யும் பொதுவான தவறு இதுவாகும். Test பகுதியில் மங்கலான கோடு இருந்தாலும் அது Negative முடிவாகவே கருதப்படுகிறது. ஏனெனில், எந்த அளவிலான கோடு தெரிந்தாலும், அந்த மருந்தின் அளவு Cut-off-க்கு கீழே உள்ளது என்பதையே அது குறிக்கிறது.
6. Positive முடிவைஇறுதிதீர்ப்பாகக்கருதவேண்டாம்
வீட்டில் செய்யப்பட்ட பரிசோதனையில் Positive வந்தால், அதை
போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான இறுதி ஆதாரமாகவும்,
குற்றச்சாட்டிற்கான சான்றாகவும்,
குடும்பத் தகராறிற்கான காரணமாகவும்
பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக,
அந்த நபருடன் ஆதரவான முறையில் பேச வேண்டும்.
தேவையானால் மருத்துவ ஆலோசனையும் ஆய்வக உறுதிப்படுத்தும் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் இந்தப் பரிசோதனைக் கருவிகள் கிடைக்குமா?
ஆம். பின்வரும் இடங்களில் கிடைக்கும்
அரச மருந்தகங்கள் (Rajya Osusala) சில கிளைகள்
பெரிய தனியார் மருந்தகங்கள்
மருத்துவ உபகரண விநியோகஸ்தர்கள்
தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த ஆய்வகங்கள்
இணையவழி மருத்துவ உபகரண விற்பனை நிறுவனங்கள்
ஆனால்,அனைத்து மருந்தகங்களிலும் எப்போதும் இருப்பு (Stock) இருக்கும் என்று கருதக்கூடாது. எனவே, வாங்குவதற்கு முன் தொலைபேசி மூலம் கிடைப்பதை உறுதிப்படுத்துவது நல்லது.
தடய மருத்துவ நச்சியலில் (Forensic Toxicology) இதுவே Gold Standard பரிசோதனையா?
இல்லை. இது பொதுமக்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான உண்மையாகும். Rapid Urine Drug Test Kit என்பது Screening Test (முதற்கட்ட சோதனை) மட்டுமே. இது
போதைப்பொருள் இருக்கக்கூடும் என்று சந்தேகத்தை உருவாக்கும்.
ஆனால் அதை உறுதிப்படுத்தாது.
எனவே, இந்தக் கருவியின் முடிவை மட்டும் வைத்து
நீதிமன்ற தீர்ப்பு,
வேலைவாய்ப்பு நடவடிக்கை,
காவல் துறை விசாரணை,
ஒழுக்காற்று நடவடிக்கை
எதையும் மேற்கொள்ளக் கூடாது.
தடய மருத்துவ நச்சியலின் Gold Standard என்ன?
உலகம் முழுவதும் நீதிமருத்துவ மற்றும் மருத்துவ நச்சியல் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தும் (Confirmatory) பரிசோதனைகள்:
1. Gas Chromatography – Mass Spectrometry (GC–MS)
அல்லது
2. Liquid Chromatography – Tandem Mass Spectrometry (LC–MS/MS)
இந்த பரிசோதனைகள்,
எந்த போதைப்பொருள் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறியும்.
அதன் அளவையும் (Quantitative Concentration) அளவிடும்.
ஒரே மாதிரியான வேதிப்பொருட்களைத் தனித்தனியாகப் பிரித்து அடையாளம் காணும்.
மிக உயர்ந்த Specificity மற்றும் Accuracy கொண்டவை.
இதனால், நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவியல் ஆதாரமாக இப்பரிசோதனைகள் கருதப்படுகின்றன.
மருத்துவ நடைமுறையில் இதன் பயன்பாடு
ஒரு தடய மருத்துவரின் பார்வையில்,
Rapid Urine Drug Test Kit மிகவும் பயனுள்ளதாக இருப்பது
அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Department) போதைப்பொருள் விஷமருந்தல் சந்தேகிக்கப்படும் நோயாளிகளை விரைவாக மதிப்பீடு செய்ய.
போதைப்பொருள் மீளுருவாக்க மையங்களில் சிகிச்சை முன்னேற்றத்தைக் கண்காணிக்க.
வீட்டில் செய்யப்படும் பரிசோதனையின் முடிவு ஒரு முதற்கட்டதிரையிடல் (Screening Result) மட்டுமே. அது ஒருவருக்கு போதைப்பொருள் பயன்பாடு உள்ளது அல்லது இல்லை என்பதை உறுதியாக நிரூபிப்பதில்லை.
சில நேரங்களில் False Positive முடிவை உருவாக்கக்கூடும். எனவே பரிசோதனை முடிவை விளக்கும் முன், தற்போது பயன்படுத்தும் அனைத்து மருந்துகளையும் தெரிவிக்க வேண்டும்.
ஒரு பரிசோதனை முடிவு, அந்த நபரின் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பதிலாக இருக்காது. போதைப்பொருள் பாவனைக்குப் பின்னால்,
மனநலப் பிரச்சினைகள்
குடும்பச் சிக்கல்கள்
சமூக அழுத்தங்கள்
பொருளாதாரப் பிரச்சினைகள்
நண்பர்களின் தாக்கம்
போன்ற பல காரணிகள் இருக்கலாம். எனவே, ஒரு Positive முடிவைக் கண்டவுடன் குற்றம் சாட்டுவது, தண்டிப்பது அல்லது குடும்பத்திலிருந்து ஒதுக்குவது சரியான அணுகுமுறை அல்ல. அதற்குப் பதிலாக,
அமைதியான உரையாடல்,
மருத்துவ ஆலோசனை,
உளவியல் ஆலோசனை,
போதைப்பொருள் மீளுருவாக்க சேவைகள்
ஆகியவற்றின் உதவியை நாடுவது மிகவும் பயனுள்ளதாகும்.
அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்தக் கருவிகளை சரியான நோக்கத்திற்கும் சரியான வரம்பிற்குள் பயன்படுத்தினால் மட்டுமே அவை பொதுச் சுகாதாரத்திற்கும், மருத்துவ நடைமுறைக்கும், சமூக நலனுக்கும் உண்மையான பயனை அளிக்கும். அவற்றை இறுதி தீர்ப்பாக அல்லாது, தேவையான அடுத்த கட்ட மருத்துவ அல்லது ஆய்வக மதிப்பீட்டிற்கான தொடக்க வழிகாட்டியாகக் கருதுவதே பாதுகாப்பானதும் அறிவியல் ரீதியாகச் சரியானதுமான அணுகுமுறையாகும்.
கடந்த ஒரு தசாப்தத்தில் உலகளவில் இ-சிகரெட் (Electronic Cigarette) மற்றும் வேப்பிங் (Vaping) சாதனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே இவை “பாதுகாப்பான புகைப்பிடித்தல்”, “புகையை விட உதவும் மாற்று வழி” அல்லது “நவீன வாழ்க்கை முறை” என்ற தவறான நம்பிக்கையுடன் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தற்போதுள்ள அறிவியல் ஆய்வுகள் இ-சிகரெட்டுகள் முற்றிலும் பாதுகாப்பானவை அல்ல என்பதையும், அவற்றில் உள்ள நிக்கோட்டின் (Nicotine), கரைப்பான் (Solvents), மணமூட்டும் இரசாயனங்கள் (Flavoring Chemicals) மற்றும் சூடாக்கும்போது உருவாகும் நச்சுப் பொருட்கள் மனித உடலின் பல உறுப்புகளை பாதிக்கக்கூடியவை என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன.
இ-சிகரெட் என்றால் என்ன?
இ-சிகரெட் என்பது புகையிலை எரிக்காமல், அதற்குப் பதிலாக ஒரு திரவத்தை (E-liquid) மின்சார வெப்பமூலம் ஆவியாக்கி (Aerosol) சுவாசிக்கச் செய்யும் சாதனமாகும். அதன் திரவத்தில் பொதுவாக,
நிக்கோட்டின் (Nicotine)
புரோப்பிலீன் கிளைக்கால் (Propylene Glycol)
கிளிசரின் அல்லது காய்கறி கிளிசரால் (Vegetable Glycerin)
பல்வேறு மணமூட்டும் இரசாயனங்கள்
சில நேரங்களில் THC அல்லது பிற போதைப்பொருட்கள்
இடம் பெறலாம். ஆவியாகும் போது இவை புதிய இரசாயனக் கலவைகளாக மாறி நுரையீரலுக்குள் செல்கின்றன.
இ-சிகரெட் (E-cigarette) மற்றும் வேப் (Vape) – என்ன வித்தியாசம்?
பலர் இ-சிகரெட் (E-cigarette) மற்றும் வேப் (Vape) என்ற சொற்களை ஒரே பொருளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை முற்றிலும் ஒரே பொருள் அல்ல. இ-சிகரெட் (Electronic Cigarette) என்பது மின்சாரத்தின் உதவியுடன் ஒரு திரவத்தை (E-liquid) சூடாக்கி, அதிலிருந்து உருவாகும் ஏரோசோலை (Aerosol) சுவாசிக்கச் செய்யும் சாதனமாகும். ஆரம்ப காலத்தில் இவை புகையிலையைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதால் “Electronic Cigarette” என்று அழைக்கப்பட்டன.
வேப் (Vape) என்பது இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனங்களையும் குறிக்கும் பரந்த (umbrella) சொல்லாகும். இன்று சந்தையில் காணப்படும் பெரும்பாலான சாதனங்கள் பாரம்பரிய சிகரெட்டைப் போல இல்லாமல், பல்வேறு வடிவங்களில் உள்ளன. இதில் அடங்குபவை:
Disposable Vape (ஒருமுறை பயன்படுத்தி கைவிடப்படும் சாதனங்கள்)
Pod System (பாட் அமைப்புடைய சாதனங்கள்)
Vape Pen (பேனா வடிவ சாதனங்கள்)
Box Mod (அதிக சக்தியுள்ள பெரிய சாதனங்கள்)
எனவே, அவற்றின் வடிவம் மாறினாலும், பெரும்பாலான சாதனங்களின் செயல்முறை ஒன்றே. அவை ஒரு திரவத்தை வெப்பப்படுத்தி ஏரோசோலாக மாற்றி சுவாசிக்கச் செய்கின்றன
வேப்பிங் (Vaping) என்றால் என்ன?
வேப்பிங் (Vaping) என்பது ஒரு சாதனத்தின் மூலம் E-liquid-ஐ வெப்பப்படுத்தி உருவாகும் ஏரோசோலை (Aerosol) உள்ளிழுத்து வெளியேற்றும் செயலைக் குறிக்கும். இது சாதாரண நீராவி (Water Vapour) அல்ல. மாறாக இதில், நிக்கோட்டின் (Nicotine), புரோப்பிலீன் கிளைக்கால் (Propylene Glycol)…… ஆகியவை இருக்கக்கூடும். எனவே “வேப்பிங் என்பது வெறும் நீராவியை மட்டுமே சுவாசிப்பதாகும்” என்பது தவறான கருத்தாகும்
வேப்பிங் இனால் ஏற்படும் உடல் தீங்குகள்
நிக்கோட்டின் இனால் ஏற்படும் உடல் தீங்குகள்
நிக்கோட்டின் என்பது உலகிலேயே மிக வேகமாக அடிமைப்படுத்தும் இரசாயனங்களில் ஒன்றாகும்.
மூளையில்ஏற்படும்தாக்கம்
நிக்கோட்டின் சில விநாடிகளில் மூளையை அடைந்து டோபமைன் (Dopamine) என்ற வேதிப்பொருளின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இதன் விளைவாக,
தற்காலிக மகிழ்ச்சி
மனஅழுத்தம் குறைந்தது போன்ற உணர்வு
மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல்
ஏற்படுகின்றன. தொடர்ச்சியான பயன்பாட்டினால்,
நிக்கோட்டின் சார்பு (Nicotine Dependence)
அடிமைத்தன்மை
நிறுத்தும்போது எரிச்சல்
கவலை
மனஅமைதி இழப்பு
கவனக்குறைவு
ஏற்படலாம்.
இளம்வயதில்நிக்கோட்டின்ஏற்படுத்தும்பாதிப்புகள்
மனித மூளை சுமார் 25 வயது வரை வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் நிக்கோட்டின் பயன்படுத்தப்படும்போது,
நினைவாற்றல் பாதிப்பு
கற்றல் திறன் குறைவு
கவன ஒருமைப்பாடு குறைவு
முடிவெடுக்கும் திறன் பாதிப்பு
உணர்ச்சி கட்டுப்பாட்டில் மாற்றம்
எதிர்காலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கான அபாயம் அதிகரித்தல்
இ-சிகரெட்டுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் கரைப்பான்கள்:
புரோப்பிலீன் கிளைக்கால் (Propylene Glycol)
காய்கறி கிளிசரின் (Vegetable Glycerin)
இவை உணவுகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மீண்டும் மீண்டும் சூடாக்கி ஆவியாக சுவாசிப்பதற்கான நீண்டகால பாதுகாப்பு முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. சூடாக்கும்போது இவை சிதைந்து,
பார்மால்டிஹைடு (Formaldehyde)
அசிடால்டிஹைடு (Acetaldehyde)
அக்ரோலீன் (Acrolein)
போன்ற நச்சுப் பொருட்களை உருவாக்கக்கூடும். இவை,
சுவாசப்பாதையை எரிச்சலடையச் செய்கின்றன.
நுரையீரல் செல்களை சேதப்படுத்துகின்றன.
நீண்டகாலத்தில் நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
மணமூட்டும் இரசாயனங்களின் மறைந்துள்ள ஆபத்து
இ-சிகரெட் திரவங்களில் ஆயிரக்கணக்கான சுவைகள் உள்ளன. இவற்றில் சில,
டையாசிடைல் (Diacetyl)
சின்னமால்டிஹைடு (Cinnamaldehyde)
பென்சால்டிஹைடு (Benzaldehyde)
போன்ற இரசாயனங்களைக் கொண்டிருக்கலாம். ஆய்வுகள் இவ்வகை இரசாயனங்கள்,
சுவாசப்பாதை அழற்சி
செல்சேதம்
நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் மாற்றங்கள்
ஏற்படுத்தக்கூடும் எனக் காட்டுகின்றன. சில நாடுகளில் வேப்பிங் தொடர்புடைய தீவிர நுரையீரல் காயங்கள் (EVALI – E-cigarette or Vaping Product Use-Associated Lung Injury) பதிவாகியுள்ளன. குறிப்பாக சட்டவிரோத அல்லது தரமற்ற திரவங்களில் உள்ள சில சேர்மங்கள் இந்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
போன்ற உலோகத் துகள்கள் ஆவியுடன் கலக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை நீண்டகாலமாக உடலுக்குள் சென்றால் உடல்நல பாதிப்புகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.
லாம்.
“வேப்பிங் புகைப்பிடிப்பதை விட பாதுகாப்பானதா?”
சிகரெட்டில் உருவாகும் தார் (Tar) மற்றும் எரிப்பு மூலம் உருவாகும் பல நச்சுப் பொருட்கள் இ-சிகரெட்டில் குறைவாக இருக்கலாம். எனினும், அதனால் இ-சிகரெட் பாதுகாப்பானது என்று பொருள் கொள்ள முடியாது. புகைப்பிடிக்காத ஒருவர் வேப்பிங் தொடங்குவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
புகைப்பிடிப்பவர்கள் புகையை நிறுத்த விரும்பினால், மருத்துவரின் ஆலோசனையுடன் அறிவியல் ஆதாரம் கொண்ட புகைப்பிடித்தல் நிறுத்தும் (Smoking Cessation) முறைகளையே பயன்படுத்துவது சிறந்தது.
இளைஞர்களை ஏன் அதிகம் கவர்கிறது?
பழச்சுவை மற்றும் இனிப்பு மணங்கள்
வண்ணமயமான வடிவமைப்புகள்
சமூக ஊடக விளம்பரங்கள்
நண்பர்களின் தாக்கம்
“பாதுகாப்பானது” என்ற தவறான நம்பிக்கை
இவை அனைத்தும் இளைஞர்களிடையே பயன்பாட்டை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாகும்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
அடிக்கடி இனிப்பு மணம் வீசுதல்
அறையில் சிறிய மின்னணு சாதனங்கள்
திடீர் எரிச்சல்
அதிக செலவுகள்
கவனச்சிதறல்
பள்ளி செயல்திறன் குறைதல்
இவற்றைக் கண்டறிந்தால் குற்றம்சாட்டாமல் உரையாடி, தேவையானால் மருத்துவ அல்லது உளநல ஆலோசனையைப் பெறுவது நல்லது.
“இ-சிகரெட்” மற்றும் “வேப்” என்ற பெயர்கள் வேறுபட்டாலும், பெரும்பாலான சாதனங்கள் ஒரே அடிப்படை தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, நிக்கோட்டின் அடிமைத்தன்மை, சுவாச மண்டல பாதிப்பு, இதய-இரத்த நாள பாதிப்பு மற்றும் பிற உடல்நல ஆபத்துகள் இரண்டிலும் காணப்படலாம். ஒரு சாதனம் “வேப்” என்று அழைக்கப்படுவதால் அது “பாதுகாப்பானது” என்று கருத முடியாது
இ-சிகரெட் மற்றும் வேப்பிங் சாதனங்கள் புகையிலை எரிப்பைத் தவிர்த்தாலும், அவை ஆபத்தற்றவை அல்ல. அவற்றில் உள்ள நிக்கோட்டின் கடுமையான அடிமைத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. மேலும் கரைப்பான்கள், மணமூட்டும் இரசாயனங்கள், சூடாக்கும்போது உருவாகும் நச்சுப் பொருட்கள் மற்றும் சில உலோகத் துகள்கள் சுவாச மண்டலம், இதய-இரத்த நாள அமைப்பு மற்றும் வளர்ந்து வரும் மூளை ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புகைப்பிடிக்காதவர்கள் இ-சிகரெட் அல்லது வேப்பிங் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கக் கூடாது. உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, எந்த வகையான நிக்கோட்டின் தயாரிப்பையும் பயன்படுத்தாமல் இருப்பதே ஆகும்.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் (Climate Change) தீவிர விளைவாக, ஐரோப்பிய கண்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் கோடைகாலத்தில் பதிவாகும் 43°C வரையிலான கடுமையான வெப்பநிலை, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. மருத்துவத் துறையில் “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படும் இந்த அதீத வெப்பம், உடலின் வெப்பச் சமநிலையைக் குலைத்து (Heat Stroke), நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration) மற்றும் நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை அதிகரித்து ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளுக்குக் காரணமாகிறது. பிரான்சின் தேசிய பொது சுகாதார அமைப்பான Santé publique France இன் அண்மைக்காலத் தரவுகள், இந்த வெப்ப அலையின் கோர முகத்தை அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் (Latest Statistics)
சமீபத்திய தீவிர வெப்ப அலையின் போது பதிவான முதற்கட்ட மற்றும் ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்களின் தொகுப்பு கீழே உள்ளவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
அதிகரித்த இறப்பு விகிதம் (Excess Mortality): தீவிர வெப்ப அலை வீசிய ஒரு சில நாட்களிலேயே பிரான்சில் வழக்கமான இறப்பு விகிதத்தை விட சுமார் 1,000 க்கும் அதிகமான கூடுதல் இறப்புகள் (Excess Deaths) பதிவாகியுள்ளன.
நாளாந்த இறப்புகளின் உயர்வு: ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரான்சின் சராசரி நாளாந்த இறப்பு எண்ணிக்கை 900 முதல் 1,000 ஆக இருந்த நிலையில், வெப்ப அலையின் உச்சக்கட்ட நாட்களில் அது நாளொன்றுக்கு 1,200 முதல் 1,400 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் (Vulnerable Population): உயிரிழந்தவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். எனினும், கடுமையான உழைப்பில் ஈடுபடும் இளைஞர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளில் ஏற்படும் மரணங்கள் (Deaths at Home): மருத்துவமனைகளுக்கு வெளியேயும், குறிப்பாக குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளில் தனியாக வசிப்போரின் மரண விகிதம் திடீரென 40% வரை அதிகரித்துள்ளது (குறிப்பாக பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்).
சிவப்பு எச்சரிக்கை (Red Alert): பிரான்சின் முக்கால்வாசிப் பகுதிகள் (Three-quarters of the country) மிக உயர்ந்த “சிவப்பு எச்சரிக்கை” வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஏன் இந்தியா மற்றும் இலங்கையில் 43°C வெப்பநிலையை மக்கள் தாங்குகிறார்கள், ஆனால் அதே 43°C வெப்பநிலை பிரான்சில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது?
இது மிகவும் சுவாரஸ்யமான ஒரு முரண்பாடாகத் தோன்றுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் கோடைக்காலங்களில் 40°C முதல் 45°C வரை வெப்பநிலை சாதாரணமாகக் காணப்படுகிறது. ஆனால் அதே 43°C வெப்பநிலை பிரான்சில் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கக்கூடும். இதற்கான காரணம் மனித உடலின் இயைபாக்கம் (Adaptation) மட்டும் அல்ல. உயிரியல், இயற்பியல், கட்டிடக்கலை மற்றும் சமூக அமைப்பு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து இதை விளக்குகின்றன.
1. உடலின்இயைபாக்கம்
மனித உடல் மிகவும் அற்புதமானது. அது சுற்றுச்சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இதுவே வெப்பஇயைபாக்கம்எனப்படுகிறது.
தெற்காசியமக்களின்உடல்
இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வாழும் மக்களின் உடல், நீண்டகாலமாக அதிக வெப்பத்திற்கு பழகியிருக்கிறது. அவர்களின் உடலில்:
இரத்தத்தின் மொத்த அளவு அதிகமாக இருக்கும்.
குறைந்த வெப்பநிலையிலேயே வியர்வை சுரக்கத் தொடங்கும்.
வியர்வையில் சோடியம் போன்ற மினரல்கள் குறைவாக வெளியேறுவதால் நீரிழப்பு குறையும்.
இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்பு வெப்பத்தை வெளியேற்ற திறமையாக செயல்படும்.
ஐரோப்பியர்களின்உடல்
பிரான்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் பெரும்பாலும் குளிரான அல்லது மிதமான காலநிலைக்கே பழகியவர்கள். திடீரென வெப்ப அலை ஏற்பட்டால்,
மனித உடல் வியர்வை சுரப்பதாலேயே குளிர்வதில்லை. வியர்வைஆவியாகமாறும்போதுதான்உடல்குளிர்கிறது. ஆனால் இது காற்றின் ஈரப்பதத்தைப் பொறுத்து வியர்வை ஆவியாகும் வீதம் வேறுபடும்
சுற்றுப்புறத்தில் ஈரப்பதம் (Relative Humidity) அதிகரிக்கும்போது, வியர்வைஆவியாகும்வேகம்குறையும். இது ஒரு எதிர்விகிதத் தொடர்பு (Inverse relationship).
அதைச் சரியான குறியீட்டு வடிவத்தில் கீழே உள்ளவாறு எழுத வேண்டும்:
காற்று ஏற்கனவே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும் போது (High Humidity), அது நம் உடலில் உள்ள வியர்வையை எளிதாக உறிஞ்சாது. இதனால் வியர்வை ஆவியாவது தடைபட்டு நமக்கு அதிகப் புழுக்கமாகவும் அசௌகரியமாகவும் இருக்கும்.
வறண்டவெப்பம்
இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் கோடைக்காலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்தாலும் காற்று வறண்டதாக இருக்கும். அதனால்
வியர்வை விரைவாக ஆவியாகிறது.
உடல் திறமையாக குளிர்கிறது.
ஐரோப்பியவெப்பஅலை
பிரான்சில் வெப்ப அலைகள் ஏற்படும் போது,
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
நகரங்களில் காற்றோட்டம் குறைவாக இருக்கும்.
இதனால்
வியர்வை ஆவியாக முடியாது.
உடல் தொடர்ந்து சூடாகிக் கொண்டே இருக்கும்.
வெப்பம் உடலுக்குள் சேமிக்கப்படுகிறது.
3. கட்டிடவடிவமைப்பு
ஒவ்வொரு நாட்டிலும் கட்டிடங்கள் அந்நாட்டின் இயல்பான காலநிலையை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.
தெற்காசியா
பிரான்ஸ்போன்றநாடுகள்
வெப்பத்தை வெளியேற்றும் வகையில் வடிவமைப்பு
வெப்பத்தை உள்ளே தக்கவைக்கும் வகையில் வடிவமைப்பு
உயரமான கூரைகள்
குறைந்த உயரம்
நல்ல காற்றோட்டம்
காற்று புகாத அமைப்பு
கான்கிரீட், செங்கல், ஓடு
தடித்த வெப்பக் காப்பு (Insulation)
விசிறி, குளிரூட்டிகள் பொதுவானவை
பல பழைய வீடுகளில் குளிரூட்டி இல்லை
இதன்விளைவு
பகலில் வீட்டுக்குள் புகுந்த வெப்பம் இரவில் வெளியேற முடியாமல் தங்கி விடுகிறது. இதனால் வீடுகள் “அடுப்பு” (Oven) போல மாறிவிடுகின்றன. மனித உடலுக்கு இரவில் குளிர்வதற்கான வாய்ப்பே கிடைப்பதில்லை.
4. வாழ்க்கைமுறைமற்றும்பண்பாட்டுபழக்கங்கள்
நூற்றாண்டுகளாக வெப்பத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையாகவே சில பாதுகாப்பு பழக்கங்களை வளர்த்துள்ளனர்.
தெற்காசியநாடுகளில்
நண்பகல் வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது.
அதிகாலை அல்லது மாலை வேலை செய்வது.
அதிக தண்ணீர் குடிப்பது.
இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களை அருந்துவது.
தர்பூசணி, வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்பது.
பருத்தி போன்ற இலகுவான ஆடைகளை அணிவது.
இவை அனைத்தும் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஐரோப்பாவில்
இந்த பழக்கங்கள் பொதுவாக வழக்கத்தில் இல்லை. எனவே திடீர் வெப்ப அலை வந்தபோது மக்கள் தயாராக இருப்பதில்லை.
5. முதியோர்மக்கள்தொகைமற்றும்சமூகஅமைப்பு
பிரான்சில் முதியோர் எண்ணிக்கை இந்தியா மற்றும் இலங்கையை விட அதிகமாக உள்ளது.
வயதுஅதிகரிக்கும்போது
தாகம் எடுக்கும் உணர்வு குறைகிறது.
வியர்வை சுரப்பிகள் குறைவாக செயல்படுகின்றன.
இதயத்தின் செயல்திறன் குறைகிறது.
உடல் வெப்பத்தை வெளியேற்றும் திறன் குறைகிறது.
மேலும், பல முதியவர்கள்
தனியாக வாழ்கின்றனர்.
உதவி செய்ய யாரும் அருகில் இருக்காமல் இருக்கலாம்.
வெப்பத்தின் ஆபத்தை உணர முடியாமல் போகலாம்.
சிலர் எடுத்துக்கொள்ளும்
சிறுநீர் அதிகரிக்கும் மருந்துகள் (Diuretics)
இதய மருந்துகள் (Beta-blockers)
போன்றவை உடலின் வெப்பக் கட்டுப்பாட்டு திறனை மேலும் பாதிக்கக்கூடும்.
ஐரோப்பாவில் 43°C வெப்பநிலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்குக் காரணம், அந்த வெப்பநிலை இயல்பாகவே மிகவும் ஆபத்தானது என்பதல்ல.
மாறாக,
வெப்பத்திற்கு பழகாத உடலியல் அமைப்பு,
அதிக ஈரப்பதம்,
வெப்பத்தை உள்ளே தக்கவைக்கும் கட்டிடங்கள்,
குளிரூட்டும் வசதிகளின் பற்றாக்குறை,
வெப்பத்திற்கேற்ற வாழ்க்கை முறையின் இல்லாமை,
அதிக அளவிலான முதியோர் மக்கள் தொகை மற்றும் தனிமையில் வாழும் நிலை
ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து வெப்ப அலைகளை உயிரிழப்புகளாக மாற்றுகின்றன.
அதே நேரத்தில், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் அதிக வெப்பநிலைக்கு பல தலைமுறைகளாக தகவமைந்து வாழ்ந்து வருவதால், உடலியல் மாற்றங்கள், பண்பாட்டு பழக்கங்கள், கட்டிட வடிவமைப்பு மற்றும் அன்றாட வாழ்க்கை முறை ஆகியவை வெப்பத்தின் தாக்கத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கின்றன. இருப்பினும், அதிகஈரப்பதம், நீண்டகாலவெப்பஅலைகள், அல்லது “வெட்–பல்ப்” (Wet-bulb) வெப்பநிலைமிகவும்உயர்ந்தால், தெற்காசிய நாடுகளிலும் வெப்பம் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும்.
“துஷ்பிரயோகம்” (Abuse) என்ற சொல் இன்று சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும், நீதிமன்றங்களிலும், அன்றாட உரையாடல்களிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, ஒவ்வொரு மனவேதனையும் அல்லது உறவு முறிவும் “துஷ்பிரயோகம்” அல்ல. அதேபோல், காதல் தோல்விக்குப் பிறகு ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அதற்காக மற்றைய நபர் தானாகவே சட்டப்படி குற்றவாளியாகிவிட மாட்டார்.
எனவே “சிறுவர் துஷ்பிரயோகம்”, “உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம்” மற்றும் “காதல் தோல்விக்குப் பிந்தைய தற்கொலை” ஆகிய மூன்றிற்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
துஷ்பிரயோகம் (Abuse) என்றால்என்ன?
துஷ்பிரயோகம் என்பது, ஒரு நபரின் உடல், மனம், பாலியல் சுதந்திரம், மரியாதை அல்லது பொருளாதார நலனுக்கு திட்டமிட்டு அல்லது தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் செயல் அல்லது நடத்தையாகும். துஷ்பிரயோகத்தின் முக்கிய அம்சங்கள்
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்
கட்டுப்படுத்த முயற்சித்தல்
அச்சுறுத்துதல்
உடல் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்துதல்
தொடர்ந்து நடைபெறும் தீங்கான நடத்தை
சிறுவர்துஷ்பிரயோகம் (Child Abuse) என்றால்என்ன?
சிறுவரின்உடல், மனம், பாலியல்பாதுகாப்புஅல்லதுஇயல்பானவளர்ச்சிக்குதீங்குவிளைவிக்கும்தொடர்ச்சியானஎந்தவொருசெயல், செயற்பாடுஅல்லதுபுறக்கணிப்பும்சிறுவர்துஷ்பிரயோகமாகும். சிறுவர் துஷ்பிரயோகம் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. உடல்துஷ்பிரயோகம்
அடித்தல்
உதைத்தல்
எரித்தல்
கழுத்தை நெரித்தல்
ஆபத்தான தண்டனைகளை வழங்குதல்
2. பாலியல்துஷ்பிரயோகம்
பாலியல் வன்புணர்வு
சிறுவரை பாலியல் நோக்கத்திற்காகத் தொடுதல்
சிறுவரின் ஆபாசப் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை உருவாக்குதல்
உடலில் காயங்கள் ஏற்படாமல் இருந்தாலும், ஒருவரின் மனநலம், தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் உணர்ச்சி நலனுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நடத்தையே உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் எனலாம். இது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகள் நீண்டகால மனநல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
உணர்ச்சிரீதியானதுஷ்பிரயோகத்தின்உதாரணங்கள்
“நீ ஒன்றுக்கும் உதவாதவன்.”
“உன்னை யாரும் விரும்பமாட்டார்கள்.”
தொடர்ந்து அவமானப்படுத்துதல்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துதல்
தொடர்ச்சியான சந்தேகம் மற்றும் கட்டுப்பாடு
மிரட்டல்
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புதல்
தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல்
உறவு முடிந்த பின்னரும் தொடர்ந்து தொந்தரவு செய்தல்
எல்லாகாதல்தோல்வியும்உணர்ச்சிரீதியானதுஷ்பிரயோகமா?
இல்லை. ஒருவர் காதலை நிராகரிப்பது அல்லது உறவை முடிப்பது மட்டும் சட்டப்படி துஷ்பிரயோகம் அல்ல. ஒவ்வொரு வயது வந்த நபருக்கும்
தற்கொலை செய்வதாக மிரட்டி மற்றவரை கட்டுப்படுத்த முயன்றால்
இவை உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் அல்லது பிற குற்றங்களாகக் கருதப்படலாம்.
இலங்கைச்சட்டத்தின்பார்வை
காதல் தோல்விக்குப் பிறகு ஒருவர் தற்கொலை செய்துகொண்டால். அந்த நபரை காதலித்தவர் அல்லது உறவை முடித்தவர் தானாகவேகுற்றவாளிஆகிவிடமாட்டார். நீதிமன்றம் பரிசீலிப்பவை
தொடர்ந்து மிரட்டப்பட்டாரா?
சட்டவிரோத அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
தற்கொலை செய்யத் தூண்டப்பட்டாரா?
மிரட்டல் செய்திகளா?
ஆதாரங்கள் உள்ளனவா?
இவ்வாறான ஆதாரங்கள் இல்லாமல், “அவர்என்னைவிட்டுச்சென்றதால்நான்தற்கொலைசெய்தேன்“என்பது மட்டும் மற்றவருக்கு குற்றப்பொறுப்பை ஏற்படுத்தாது.
சிறுவர் துஷ்பிரயோகம், உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் காதல் தோல்விக்குப் பிந்தைய தற்கொலை ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றினாலும், சட்ட மற்றும் தடயவியல் மருத்துவக் கண்ணோட்டத்தில் அவை முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களாகும். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவரின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் நலனை பாதிக்கும் செயலாகும். உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒருவரின் மனநலத்தையும் சுயமரியாதையையும் தொடர்ந்து சேதப்படுத்தும் நடத்தையாகும். காதல் தோல்விக்குப் பிந்தைய தற்கொலை என்பது பல உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகளின் சிக்கலான விளைவாகும். எனவே, ஒவ்வொரு வழக்கும் சட்ட ஆதாரங்கள், மருத்துவச் சான்றுகள் மற்றும் தடயவியல் விசாரணைகளின் அடிப்படையில் தனித்தனியாக மதிப்பிடப்பட வேண்டும்.
“சிறுவர்” என்ற சொல் நாம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தும் ஒரு சொல். ஆனால் சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, சிறுவர் என்ற சொல்லுக்கு ஒரே ஒரு பொருள் இல்லை. ஒரு நபர் குழந்தையா அல்லது பெரியவரா என்பதை தீர்மானிப்பது அவர் எந்தச் சூழ்நிலையில் உள்ளார் என்பதையே சார்ந்துள்ளது. கல்வி, மருத்துவம், பாலியல் உறவு, திருமணம், வேலைவாய்ப்பு, குற்றவியல் பொறுப்பு, வாக்களிக்கும் உரிமை, சொத்து உரிமை போன்ற ஒவ்வொரு சட்டத் துறையிலும் சிறுவரின் வயது எல்லை வேறுபடலாம். உதாரணமாக, 17 வயது மாணவன் சட்டப்படி இன்னும் சிறுவராக கருதப்படலாம். ஆனால் அதே மாணவன் சில சந்தர்ப்பங்களில் குற்றவியல் பொறுப்புக்கு உட்படுத்தப்படலாம். அதேபோல், 16 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் பாலியல் சம்மதம் வழங்கும் சட்டத் தகுதியைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது. இதனால், ” சிறுவர் ” என்ற சட்டக் கருத்து பல அடுக்குகளைக் கொண்டதாகும்.
தடயவியல் மருத்துவர்களுக்கு இந்த வயது வரம்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் தொழிலாளர் சுரண்டல், சிறுவர் குற்றங்கள், குடும்ப வன்முறை, மருத்துவ சம்மதம், சிறுவர் மரணம் போன்ற வழக்குகளில் வயது தொடர்பான சட்ட அறிவு இல்லாமல் சரியான மருத்துவக் கருத்தை வழங்க இயலாது.
1. சிறுவர்என்றால்யார்?
சர்வதேச அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (Convention on the Rights of the Child – CRC) படி, 18 வயதிற்குக் குறைவான அனைவரும் குழந்தைகள். இலங்கையும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே பெரும்பாலான தேசிய சட்டங்களும் 18 வயதிற்குக் குறைவானவர்களை சிறுவர்களாகவே கருதுகின்றன. ஆனால், இந்த பொதுவான வரையறை அனைத்து சட்டங்களிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. சில உரிமைகள் 16 வயதில் கிடைக்கின்றன; சில பொறுப்புகள் 12 வயதிலேயே ஆரம்பமாகின்றன. சில உரிமைகள் 18 வயதில் மட்டுமே கிடைக்கின்றன. சில செயல்களுக்கு 21 வயது வரை காத்திருக்க வேண்டும்.
இதனால், சிறுவர்களின் சட்ட நிலைமை அவர் எந்தச் சட்டத்தின் கீழ் மதிப்பிடப்படுகிறார் என்பதையே சார்ந்துள்ளது.
2. ஏன்வயதுவரம்புகள்மாறுபடுகின்றன?
மனிதனின் உடல், மூளை மற்றும் சமூக வளர்ச்சி ஒரே நேரத்தில் நடைபெறுவதில்லை. ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி, அறிவாற்றல், உணர்ச்சி கட்டுப்பாடு, முடிவெடுக்கும் திறன், சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை வெவ்வேறு காலகட்டங்களில் முழுமை அடைகின்றன. இதன் காரணமாகவே சட்டமும் ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி வயது வரம்புகளை நிர்ணயித்துள்ளது. உதாரணமாக,
16 வயதில் பாலியல் உறவு பற்றிய புரிதல் இருக்கலாம்.
18 வயதில் அரசியல் முடிவெடுக்க வாக்களிக்கலாம்.
21 வயதில் மதுபானம் வாங்குவதற்கு அனுமதிக்கப்படலாம்.
அதாவது, எல்லா உரிமைகளும் ஒரே நாளில் கிடைப்பதில்லை.
இலங்கைச் சட்டங்களில் பொதுவாகக் காணப்படும் முக்கிய வயது வரம்புகள் பின்வருமாறு:
விடயம்
சட்டவயது
சிறுவர்களின் பொதுச் சட்ட வரையறை
18 வயதிற்குக் குறைவு
பாலியல் சம்மத வயது
16 வயது
திருமண வயது (பொது சட்டம்)
18 வயது
சிறுவர் தொழிலாளர் குறைந்தபட்ச வயது
14 வயது
வாக்குரிமை
18 வயது
முழுமையான சட்ட வயது (Major)
18 வயது
குற்றவியல் பொறுப்பு
12 வயது முதல் (12–14 வயதில் மனப்பக்குவம் பரிசீலிக்கப்படும்)
மதுபானம் வாங்குதல்
21 வயது
புகையிலை வாங்குதல்
21 வயது
இந்த அட்டவணை, “வயது” என்பது சட்டத்தில் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
4. கட்டாயக் கல்வி (Compulsory Education) பெற வேண்டிய வயது
இலங்கையில் தற்போது 5 வயது முதல் 16 வயது வரை கல்வி பெறுவது கட்டாயமாகும். இது 2015 ஆம் ஆண்டின் “Compulsory Attendance of Children at Schools Regulations No. 1 of 2015” மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2016 முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு கட்டாயக் கல்வி வயது 5–14 ஆக இருந்தது; பின்னர் அது 5–16 ஆக உயர்த்தப்பட்டது
5. இராணுவ சேவைக்கான வயது வரம்பு
இலங்கையில் இராணுவ சேவை (Military Service) கட்டாயமானதல்ல. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் தன்னார்வ அடிப்படையில் (Voluntary Recruitment) ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு பதவிக்கும் (Officer, Cadet, Soldier, Technical Officer, Volunteer முதலியவை) வயது வரம்பு மாறுபடும். எவ்வாறாயினும் ஆகக்குறைந்த வயது எல்லை 18 வயது ஆகும்
6. இலங்கையில்ஓட்டுநர்உரிமம்பெறுவதற்கானவயதுவரம்பு
இலங்கையில் மிதிவண்டி (Push Bicycle) ஓட்டுவதற்கு சட்டத்தில் குறிப்பிட்ட குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர வண்டி, கார் போன்ற மோட்டார் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் கட்டாயமாகும். ஓட்டுநர் பயிற்சியைத் தொடங்குவதற்கும் Learner’s Permit (L Permit) பெறுவதற்கும் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறை (Practical) தேர்வில் வெற்றி பெற்று முழுமையானஓட்டுநர்உரிமம் (Driving Licence) பெறுவதற்கும், பொதுச் சாலையில் தனியாக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இந்த வயது வரம்புகள் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவதற்குத் தேவையான உடல், மன மற்றும் அறிவுசார் முதிர்ச்சியை அடைந்திருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
7. சிறுவர்களின்சட்டஉரிமைகள்
இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code – CPC) மற்றும் தண்டனைச் சட்டம் (Penal Code) ஆகியவற்றின்படி, 18 வயதிற்குக் கீழ் உள்ள எவரும் ” சிறுவர்” (Child) ஆவர். குற்றம் செய்த ஒரு நபர் 18 வயதிற்குக் கீழ் இருந்தால், அவரை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்காமல் சிறார் நீதிமன்றத்தில் (Juvenile Court) விசாரிக்க வேண்டும். Children and Young Persons Ordinance (No. 48 of 1939) மற்றும் திருத்தங்களின்படி, குழந்தைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள்:
• குழந்தை (Child): 14 வயதிற்குக் கீழ் உள்ளவர்
• இளம் வயதினர் (Young Person): 14–18 வயதினர்
• சிறார் (Juvenile): 18 வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் (சட்ட நடைமுறையில்)
சிறார் குற்றவாளிகளை சீர்த்திருத்த பள்ளி (Children’s Home, Remand Home, Approved School) ஆகிய இடங்களில் தான் அனுப்ப முடியும். பெரியவர்கள் சிறையில் அல்ல. ஒரு குழந்தை வயதில் சிறியவராக இருந்தாலும், அவருக்கு பல அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
உயிர்வாழும் உரிமை.
கல்வி பெறும் உரிமை.
பாதுகாப்பாக வாழும் உரிமை.
உடல் மற்றும் மனநலப் பாதுகாப்பு.
பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு.
பொருளாதார சுரண்டலிலிருந்து பாதுகாப்பு.
தமது கருத்தை வெளியிடும் உரிமை.
நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை பெறும் உரிமை.
தனியுரிமை.
இந்த உரிமைகள் அனைத்தும் குழந்தையின் சிறந்த நலனையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இலங்கை சட்டத்தில் ”சிறுவர்” என்பதற்கான வயது வரையறை ஒரு சட்டத்திலிருந்து மற்றொரு சட்டத்திற்கு மாறுபடுகிறது. பொதுவாக 18 வயதே அடிப்படை வரம்பாக கருதப்பட்டாலும், கல்வி (14 வயது), திருமணம் (MMDA: 12 வயது, Common: 18 வயது), தொழிலாளர் (14 வயது) ஆகிய துறைகளில் வேறுபட்ட வரம்புகள் உள்ளன. சட்டப்படி வரம்பு வெவ்வேறாக இருந்தாலும், குழந்தையின் நலன் (Best Interest of the Child) என்பதே அனைத்து சட்டங்களிலும் மிக முக்கியமான கொள்கையாகும்
நீண்டகாலமாக மந்தநிலையிலிருந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மரண வழக்கின் விசாரணை தற்போது அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய மர்ம மரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புதிய விசாரணை தொடங்கியுள்ள நிலையில், புதிய ஆதாரங்கள், நிதி தொடர்புகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் வழக்கிற்கு புதிய திருப்பத்தை அளித்துள்ளன.
தினேஷ் ஷாப்டர் மரண வழக்கு இலங்கையின் சமீபத்திய காலத்தில் மிக அதிக கவனத்தை ஈர்த்த குற்றவியல் வழக்குகளில் ஒன்றாகும். இந்த வழக்கு ஒரு சாதாரண மரண விசாரணையைத் தாண்டி, தடயவியல் மருத்துவம் (Forensic Medicine), குற்றப்புலனாய்வு (Criminal Investigation), சட்டவியல் (Criminal Law) மற்றும் அறிவியல் ஆதாரங்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்திய முக்கிய வழக்காக மாறியுள்ளது.
1. என்ன நடந்தது
2022 டிசம்பர் 15
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் தனது அலுவலகத்தை விட்டு, நிதி தொடர்பான பிரச்சினையைப் பேசுவதற்காக ஒருவர் சந்திக்கப் போவதாக தனது செயலாளரிடம் தெரிவித்திருந்தார்.
பின்னர் குடும்பத்தினரால் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.
அவரது மனைவி கைப்பேசி இருப்பிடத்தை (Location) பயன்படுத்தி அவரைத் தேடியபோது, பொரளைபொதுமயானத்தில் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
வாகனத்தின் உள்ளே அவர் கழுத்தில் பிளாஸ்டிக் கம்பி (Cable tie/ligature) சுற்றப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பின்னர் உயிரிழந்தார்.
2. ஏன்இந்தவழக்குஇவ்வளவுசர்ச்சையைஏற்படுத்தியது?
பல காரணங்களால் இந்த மரணம் ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்குரியதாக இருந்தது.
(அ) சம்பவஇடம்
ஒரு பொது மயானத்தில், பகல் நேரத்தில், வாகனத்துக்குள் ஒருவர் இவ்வாறு இறந்த காணப்படுவது மிகவும் அபூர்வமானது.
(ஆ) கைகள்கட்டப்பட்டிருந்தமை
தற்கொலை செய்யும் ஒருவர் தனது கைகளை எவ்வாறு கட்டிக்கொள்ள முடியும் என்ற கேள்வி ஆரம்பத்திலிருந்தே எழுந்தது.
(இ) கழுத்தில்சுற்றப்பட்டிருந்தவயர்
கழுத்தில் சுற்றப்பட்டிருந்த வயர் அல்லது Cable tighter எந்த முறையில் பயன்படுத்தப்பட்டது என்பது முக்கியமான தடயவியல் கேள்வியாக மாறியது.
மேலும், விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் மரணத்திற்கான காரணம் குறித்து முரண்பட்ட விளக்கங்களை வழங்கியதால் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இது “சுயமாக கழுத்தை இறுக்கியதால் ஏற்பட்ட மரணம்” என கூறப்பட்டது. பின்னர் “சயனைட் ஊசி செலுத்தப்பட்டது” என்ற விளக்கமும் வெளியிடப்பட்டது. ஆரம்ப நீதிமருத்துவ அறிக்கையில், வணிகக் கடன்கள் அல்லது குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சாத்தியம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், பல தடயவியல் மருத்துவ நிபுணர்கள், உடல் கிடைத்த நிலை, கழுத்தில் சுற்றப்பட்டிருந்த வயர்கள், கட்டப்பட்டிருந்த கைகள் போன்றவை தற்கொலைக்கு இயல்பான அம்சங்களாகத் தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தனர். பல்வேறு விளக்கங்கள் வெளியானதால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. தடயவியல் மருத்துவத்தில் ஒரு மரணத்தின் காரணம் குறித்து இவ்வாறு முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
4. ஐந்துபேர்கொண்டதடயவியல்மருத்துவநிபுணர்குழு
ஷாப்டர் குடும்பத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, ஆரம்பகால காவல்துறை விசாரணை மற்றும் நீதிமருத்துவ அறிக்கையை சவாலுக்கு உட்படுத்தினார். இதன் பின்னர், ஐந்து மூத்த தடயவியல் மருத்துவ நிபுணர்கள் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து தடயவியல் ஆதாரங்களும் மீண்டும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டன. அந்த குழு இறுதியாக வழங்கிய முடிவில்:
இது தற்கொலை அல்ல.
இலங்கை தண்டனைச் சட்டத்தின் 296 ஆம் பிரிவின் கீழ் வரக்கூடிய கொலை (Homicide).
இந்த மரணம் வெளிப்புற நபரால் ஏற்படுத்தப்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவு இலங்கையின் சட்ட வரலாற்றில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக ஆரம்ப நீதிமருத்துவ அறிக்கையின் முடிவு, சிறப்பு தடயவியல் நிபுணர் குழுவின் அறிவியல் ஆய்வின் மூலம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த குழு,
பிரேதப் பரிசோதனை பதிவுகள்
Histopathology
Toxicology
புகைப்படங்கள்
சம்பவ இட ஆதாரங்கள்
பாதுகாக்கப்பட்ட உடல் உறுப்புகள்
ஆய்வக அறிக்கைகள்
என அனைத்து ஆதாரங்களையும் மீளாய்வு செய்தது.
5. உடலை ஏன் மீண்டும் தோண்டி எடுத்தார்கள்?
சாதாரணமாக பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடலை மீண்டும் தோண்டி எடுப்பது மிகவும் அரிது. ஆனால்,
ஆரம்ப அறிக்கையில் சந்தேகங்கள் இருந்தால்
புதிய அறிவியல் கேள்விகள் எழுந்தால்
புதிய நிபுணர் குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டுமென கருதினால்
உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்படலாம். இதன் மூலம்,
எலும்பு காயங்கள்
கழுத்து அமைப்புகள்
மென்மையான திசுக்கள்
பழைய காயங்கள்
மீண்டும் ஆய்வு செய்ய முடியும்.
6. நவீனதடயவியல்ஆய்வுகள்
இந்த வழக்கில் பல்வேறு அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைபேசிஆய்வு
Call Detail Records (CDR)
Cell Tower Analysis
கைப்பேசி இருப்பிடம்
CCTV
வாகனம் எப்போது வந்தது?
யார் வந்தார்கள்?
யார் வெளியேறினார்கள்?
இலத்திரனியல் தடயவியல் (Digital Forensics)
WhatsApp
SMS
Email
GPS தகவல்கள்
நச்சியல் (Toxicology)
மருந்துகள்
நஞ்சு
வேதிப்பொருட்கள்
7. குற்றச்சம்பவஇடத்தின்முக்கியத்துவம்
தடயவியல் மருத்துவத்தில் உடலை விட Crime Scene மிக முக்கியமானதாகும். இந்த வழக்கில் ஆய்வு செய்யப்பட்ட முக்கிய அம்சங்கள்
வாகனத்தின் கதவுகள்
இருக்கையின் நிலை
கயிறு அல்லது Cable tighter அமைப்பு
இரத்தக்கறைகள்
விரல் ரேகைகள்
DNA ஆதாரங்கள்
8. இந்த வழக்கின் சட்ட முக்கியத்துவம்
இந்த வழக்கு இலங்கை நீதித்துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில்,
ஆரம்ப நீதிமருத்துவ கருத்து பின்னர் மாற்றப்பட்டது.
நீதிமன்றம் சுயாதீன நிபுணர் குழுவை நியமித்தது.
அறிவியல் ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
விசாரணை புதிய திசையில் முன்னெடுக்கப்பட்டது.
9. இலங்கையின் தடயவியல் மருத்துவ வரலாற்றில் இந்த வழக்கின் இடம்
தினேஷ் ஷாப்டர் வழக்கு, இலங்கையில் அறிவியல் ஆதாரங்கள், நீதிமன்ற கண்காணிப்பு, மற்றும் பல்துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த ஆய்வு எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டிய வழக்காகக் கருதப்படுகிறது. இது, ஆரம்ப மருத்துவக் கருத்து இறுதியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்தால் வழக்கின் முடிவு மாறக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊடகங்களில் வெளியான அரசியல் தொடர்புகள், நிதி பரிமாற்றங்கள், இடைத்தரகர்கள், அல்லது குறிப்பிட்ட நபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணைக்குட்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே. அவை நீதிமன்றத்தில் இறுதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. குற்றவியல் நீதிமுறையின் அடிப்படை கொள்கையின்படி, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை எந்த நபரும் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும். மேலும் பின்வரும் விடயங்களையும் எடுத்துக்காட்டுகின்றது
✔ சம்பவ இட ஆய்வு இல்லாமல் பிரேதப் பரிசோதனை மட்டும் போதாது.
வட இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மோட்டார் சைக்கிள்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளன. குறைந்த செலவு, எரிபொருள் சிக்கனம், குறுகிய சாலைகளில் எளிதான இயக்கம் போன்ற காரணங்களால் மோட்டார் சைக்கிள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்களிடையே அதிக சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியுடன் இணைந்தே மோட்டார் சைக்கிள் விபத்துகளும் அதிகரித்துள்ளன. வட இலங்கையில் நிகழும் பல உயிரிழப்பு விபத்துகளில் மோட்டார் சைக்கிள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக மக்கள் சாலை குறைபாடுகள், வாகனக் கோளாறுகள் அல்லது போக்குவரத்து சட்ட அமலாக்கத்தின் பலவீனம் போன்ற காரணிகளைப் பற்றி பேசுகின்றனர். இருப்பினும், பல ஆய்வுகள் மற்றும் விபத்து விசாரணைகள் காட்டுவது என்னவென்றால், ஓட்டுநரின் ஆளுமைப் பண்புகள் (Personality Traits) மற்றும் நடத்தை முறைகள் விபத்துகளின் அடிப்படை காரணிகளாக உள்ளன.
ஆளுமைஎன்றால்என்ன?
ஆளுமை என்பது ஒரு மனிதன் சிந்திக்கும் விதம், உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை, அபாயங்களை மதிப்பிடும் திறன் மற்றும் சமூகத்தில் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாகும். ஒரே சாலையில், ஒரே வாகனத்தை ஓட்டும் இரு நபர்கள் முற்றிலும் மாறுபட்ட விபத்து அபாயங்களைக் கொண்டிருக்கலாம். இந்த வேறுபாட்டை தீர்மானிப்பதில் ஆளுமை முக்கிய பங்கு வகிக்கிறது.
வேகத்தைவிரும்பும்மனப்பான்மை
பல இளைஞர்கள் வேகம் மற்றும் பரபரப்பை விரும்புகின்றனர். உளவியலில் இது “Sensation Seeking Behaviour” என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய நபர்கள் அதிக வேகத்தில் பயணிப்பதை சாதனையாகவும், சாகசமாகவும் கருதுகின்றனர். வட இலங்கையின் நீண்ட நேரான சாலைகள், குறைந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் பரந்த திறந்த வெளிகள் வேகமாக ஓட்டுவதற்கான சூழலை உருவாக்குகின்றன. இதனால் சில இளைஞர்கள் தங்களின் வாகனத்தின் முழு திறனையும் சாலைகளில் சோதிக்க முயல்கின்றனர். ஆனால் அதிக வேகத்தில் பயணிக்கும் போது ஒரு சிறிய தவறுக்குக் கூட திருத்தும் வாய்ப்பு குறைகிறது. மனித உடலின் எதிர்வினை நேரம் மாறாத ஒன்று; ஆனால் வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் போது ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது.
தன்னம்பிக்கைமிகை
அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதற்கும், அதிக தன்னம்பிக்கை கொண்ட ஓட்டுநர் என்பதற்கும் இடையில் முக்கியமான வேறுபாடு உள்ளது. பல விபத்துகளில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தாங்கள் திறமையான ஓட்டுநர்கள் என்றும், எந்த சூழலையும் சமாளிக்க முடியும் என்றும் நம்பியிருந்தனர். இந்த தன்னம்பிக்கை மிகை காரணமாக
தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்
அதிக வேகத்தில் வளைவுகளை கடத்தல்
மழைக் காலங்களில் கவனக்குறைவாக ஓட்டுதல்
கைப்பேசியைப் பயன்படுத்தியபடி வாகனம் செலுத்துதல்
போன்ற அபாயகரமான நடத்தைகள் காணப்படுகின்றன. விபத்து நேரத்தில் இயற்பியல் விதிகள் ஓட்டுநரின் தன்னம்பிக்கையை மதிப்பதில்லை. வேகம், நிறை மற்றும் இயக்க ஆற்றல் மட்டுமே தாக்கத்தின் தீவிரத்தை நிர்ணயிக்கின்றன.
ஆண்மையைநிரூபிக்கமுயற்சித்தல்
வட இலங்கை உட்பட தெற்காசிய சமூகங்களில் மோட்டார் சைக்கிள் சில நேரங்களில் ஆண்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் மத்தியில் தைரியசாலி, சாகசக்காரர் அல்லது திறமையான ஓட்டுநர் என்ற பெயரைப் பெற முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக
வேகப்போட்டிகளில் ஈடுபடுதல்
மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்துதல்
ஒரு சக்கரத்தில் வாகனம் ஓட்டுதல்
அபாயகரமான முந்திச் செல்லும் நடவடிக்கைகள்
போன்ற செயல்கள் அதிகரிக்கின்றன. பல நேரங்களில் இவ்வாறான நடத்தைகள் திறமையின் அடையாளமல்ல; மாறாக அபாய மதிப்பீட்டுத் திறன் குறைவாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
குழுஅழுத்தம்மற்றும்நண்பர்களின்தாக்கம்
தனியாகப் பயணிக்கும் போது பாதுகாப்பாக ஓட்டும் ஒருவர் கூட நண்பர்கள் குழுவுடன் சேரும்போது முற்றிலும் மாறுபட்ட நடத்தையை வெளிப்படுத்தலாம். நண்பர்களின் முன்னிலையில்:
அதிக வேகத்தில் ஓட்டுதல்
போட்டி மனப்பான்மையுடன் செயல்படுதல்
தேவையற்ற அபாயங்களை ஏற்றுக்கொள்ளுதல்
போன்ற நடத்தைகள் காணப்படுகின்றன. இது குறிப்பாக 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. உளவியலாளர்கள் இதனை “Peer Influence” அல்லது “Peer Pressure” என குறிப்பிடுகின்றனர்.
பொறுமையின்மைமற்றும்கோபம்
சில ஓட்டுநர்கள் சாலையில் மிகவும் சீற்றமான நடத்தை வெளிப்படுத்துகின்றனர். இதில்
பாதசாரிகளுக்கு வழிவிட மறுத்தல்
மெதுவாக செல்லும் வாகனங்களை ஆபத்தான முறையில் முந்துதல்
ஹார்னை தேவையற்ற முறையில் பயன்படுத்துதல்
சிறிய தாமதங்களுக்குக் கூட கோபப்படுதல்
ஆகியவை அடங்கும். இந்த கோப மனநிலை ஓட்டுநரின் தீர்மானிக்கும் திறனை பாதித்து விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது.
அபாயத்தைகுறைத்துமதிப்பிடுதல்
பல இளைஞர்கள் தங்களுக்குத் தீங்கு ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர். “எனக்கு எதுவும் ஆகாது”, “நான் கட்டுப்பாட்டில் இருக்கிறேன்” என்ற எண்ணம் அவர்களை அபாயகரமான நடத்தைகளில் ஈடுபடச் செய்கிறது. ஆனால் விபத்து நேரத்தில் மனித உடல் மிகவும் பலவீனமானது. ஒரு மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு வளையம், காற்றுப்பைகள் அல்லது உடல் கவசம் கிடையாது. மோதலின் போது முழு தாக்கமும் நேரடியாக மனித உடலின் மீது விழுகிறது. இதன் விளைவாக:
கடுமையான தலைக்காயங்கள்
மூளைக் காயங்கள்
கழுத்து மற்றும் முதுகெலும்புக் காயங்கள்
பல எலும்பு முறிவுகள்
உடனடி மரணம்
ஏற்படுகின்றன.
போதைப்பொருட்கள்மற்றும்மதுபானத்தின்தாக்கம்
மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் ஓட்டுநரின் சிந்தனை, தீர்மானம் மற்றும் எதிர்வினை திறன்களை பாதிக்கின்றன. வட இலங்கையில் சில உயிரிழப்பு விபத்துகளில்:
மதுபானம்
கஞ்சா
மெத்தாம்பெட்டமின் (ICE)
பிற போதைப்பொருட்கள்
பயன்படுத்திய வரலாறு பதிவாகியுள்ளது.
இவை அபாய உணர்வைக் குறைத்து, வேகமாக ஓட்டும் மனநிலையை உருவாக்குகின்றன.
சமூகஊடகங்களின்தாக்கம்
இன்றைய சமூக ஊடக உலகில் ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசங்கள் பெரிதும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. சில வினாடிகளுக்கான காணொளி அல்லது புகைப்படத்திற்காக இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். திரையில் காணப்படும் சாகசங்கள் பல நேரங்களில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் படமாக்கப்பட்டவை என்பதை உணராமல், பொதுச் சாலைகளில் அவற்றைப் பின்பற்றுவது பேராபத்தை ஏற்படுத்துகிறது.
வடஇலங்கையின்தனித்துவமானசூழல்
வட இலங்கையில்:
நீண்ட நேரான சமதரை சாலைகள்
குறைந்த போக்குவரத்து நெரிசல்
இரவு நேரங்களில் குறைந்த கண்காணிப்பு
சாலையோர கால்நடைகள்
மிதிவண்டி பயணிகள் மற்றும் பாதசாரிகள் அதிகம் இருப்பது
போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த சூழலில் அதிக வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிர்பாராத அபாயங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் திடீரென சாலையைக் கடக்கும் பாதசாரிகள் அல்லது மிதிவண்டி ஓட்டுநர்களைத் தவிர்ப்பது மிகவும் கடினமாகிறது.
மோட்டார் சைக்கிள் விபத்துகள் வெறும் இயந்திர அல்லது சாலைப் பிரச்சினை அல்ல. அவை மனித நடத்தை மற்றும் ஆளுமையின் பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. வேகத்தை விரும்புதல், தன்னம்பிக்கை மிகை, ஆண்மையை நிரூபிக்க முயற்சித்தல், குழு அழுத்தம், கோபம், அபாயத்தை குறைத்து மதிப்பிடுதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை வட இலங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்துகளின் பின்னணியில் அடிக்கடி காணப்படும் காரணிகளாகும். சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சட்ட அமலாக்கம் மட்டும் போதாது. இளைஞர்களின் மனப்பான்மை, ஆளுமை மற்றும் அபாய உணர்வை மாற்றும் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக தலையீடுகளும் அவசியமாகின்றன. உண்மையான திறமையான ஓட்டுநர் வேகமாகச் செல்லுபவர் அல்ல; தன்னையும் பிறரையும் பாதுகாப்பாக இலக்கை அடையச் செய்பவரே சிறந்த ஓட்டுநர்.
ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை, வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனையை உறுதிப்படுத்திய காவல்துறை, வெள்ளிக்கிழமை அன்று இதை அறிவித்தது. காவல்துறையின் கூற்றுப்படி, வெப்பத்தாக்கத்தால் ஏற்பட்ட உறுப்பு செயலிழப்பே மரணத்திற்கான உறுதியான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 44 வயதான அந்தத் தாய், தனது 20 மாத மகளைக் காரில் மறந்து சென்றுள்ளார். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் அவர்.
அந்தத் தாய் தனது குழந்தையை மழலையர் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நம்பினார் என்ற சந்தேகத்தை குற்றவியல் விசாரணை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த எண்ணத்தில்தான் அவர் புதன்கிழமை காலை வேலைக்குச் சென்றார். அன்று மதியம் சுமார் 2:30 மணியளவில் தனது மகளை அழைத்துச் செல்ல அவர் திரும்பியபோது, காரில் உயிரற்றுக் கிடந்த அந்தக் குழந்தையைக் கண்டார். குழந்தையை மீண்டும் உயிர் பெறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. அவள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. இந்தத் துயரம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை தடயவியல் மருத்துவக் கண்ணோட்டத்துடனும், அதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுக் கட்டுரையாக கீழே வழங்கப்பட்டுள்ளது.
பூட்டப்பட்ட வாகனங்களின் கண்ணுக்குத் தெரியாத ஆபத்துக்கள்
வாகனப் போக்குவரத்து பெருகிய இந்நாட்களில், நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கார் எவ்வளவு விரைவாக ஒரு உயிருக்கு ஆபத்தான இடமாக மாறும் என்பதைப் பலர் உணர்வதில்லை. அண்மையில் இலங்கையில் நடந்த துயர சம்பவம், செயலிழந்த அல்லது பூட்டப்பட்ட காருக்குள் குழந்தைகள் சிக்கிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. தடயமருத்துவ அறிவியலின் படி, மூடிய காரினுள் ஒரு குழந்தையின் உடலுக்கு என்ன நேரிடுகிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
1. ‘பச்சை வீட்டுவிளைவு’ (Greenhouse Effect)
வெளியே கடுமையான வெயில் இருந்தால் மட்டும்தான் காருக்குள் வெப்பம் ஏறும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். சாதாரண வெப்ப நிலை உள்ள ஒரு நாளில் கூட, மூடிய காருக்குள் என்ன நடக்கும் என்பதை தடயவியல் மரணக் காட்சி ஆய்வுகள் (Death scene investigations) விளக்குகின்றன:
வெப்பப்பொறி (Heat Trap): காரின் கண்ணாடி ஜன்னல்கள் சூரிய ஒளியின் குறுகிய அலைநீளக் கதிர்களை (Short-wave radiation) உள்ளே அனுமதிக்கின்றன. இந்த வெப்பத்தை காரின் சீட்டுகள், டேஷ்போர்டு போன்றவை உறிஞ்சுகின்றன.
வெப்பஉயர்வு: உறிஞ்சப்பட்ட இந்த வெப்பம், நீண்ட அலைநீளக் கதிர்களாக (Long-wave infrared radiation) மீண்டும் வெளியேற முயலும் போது, மூடிய கண்ணாடிகளைத் தாண்டி வெளியேற முடியாமல் காருக்குள்ளேயே தேங்குகிறது.
காலக்கெடு: வெளியில் 30°C வெப்பம் இருந்தால் கூட, பூட்டப்பட்ட காரின் உட்புற வெப்பநிலை வெறும் 20 நிமிடங்களுக்குள் 50°C-க்கும்அதிகமாக உயர்ந்துவிடும். ஒரு மணி நேரத்தில் அது 60°C ஐத் தாண்டும். செயலிழந்த காரில் காற்றோட்டம் இல்லாததால், உள்ளே இருக்கும் ஆக்சிஜன் அளவு மிக வேகமாக குறைந்து, ஈரப்பதம் அதிகரித்து, மூச்சுத்திணறல் ஏற்படும்.
2. குழந்தையின்உடலுக்குஎன்னநடக்கும்?
தடயவியல் மருத்துவக் கண்ணோட்டத்தில், இத்தகைய மரணங்கள் உடல் வெப்பநிலை அதீதமாக உயர்தல் (Hyperthermia/Heat stroke) மற்றும் மூடிய இடத்திற்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மூச்சுத்திணறல் (Entrapment Asphyxia) ஆகியவற்றால் ஏற்படுகின்றன. பெரியவர்களை விடக் குழந்தைகளின் உடல் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது என்பதால், இந்தச் சூழலில் அவர்களின் உடல் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது:
வேகமானவெப்பஉறிஞ்சுதல்
குழந்தைகளின் உடல் வெப்பநிலை, பெரியவர்களை விட 3 முதல் 5 மடங்குவேகமாக அதிகரிக்கும். அவர்களின் உடலின் மேற்பரப்பு அளவு (Surface area) அதிகம் என்பதால், சுற்றுப்புற வெப்பத்தை மிக விரைவாக உறிஞ்சுவார்கள். ஆனால், அந்த வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்றும் திறன் அவர்களின் உடலுக்கு இன்னும் முழுமையாக வளர்ந்திருக்காது.
உறுப்புகள்செயலிழப்பு
ஒரு குழந்தையின் உடலின் உட்புற வெப்பநிலை 40°C (104°F) ஐ எட்டும்போது, உடலின் குளிர்விக்கும் அமைப்புகள் முற்றிலும் முடங்கிவிடுகின்றன. அதுவே 41.5°C முதல் 42°C (107°F) ஆக உயரும் போது, செல்கள் அழியத் தொடங்குகின்றன:
மூளைப்பாதிப்பு: அதீத வெப்பத்தால் மூளையில் வீக்கம் (Cerebral edema) ஏற்படும். இதனால் குழந்தைக்குக் மயக்கம், வலிப்பு ஏற்பட்டு, சுயநினைவை இழப்பார்கள். இந்த நிலையை அடைந்த பின் குழந்தைகளால் சத்தம் போடவோ, கதவைத் தட்டவோ முடியாது.
இரத்தஓட்டம்முடங்குதல்: வெப்பத்தை வெளியேற்ற உடல் போராடுவதால், இரத்த நாளங்கள் அளவுக்கு அதிகமாக விரிவடையும். இதனால் இரத்த அழுத்தம் (Blood pressure) திடீரென சரிந்து, முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபடும்.
உறுப்புகள்செயலிழப்பு: தடயவியல் உடற்கூறாய்வின் போது (Post-mortem), அதீத வெப்பத்தால் உடலின் திசுக்கள் மற்றும் புரதங்கள் உள்நோக்கிச் சிதைந்துபோவது கண்டறியப்படுகிறது. இதனால் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயம் ஆகியவை அடுத்தடுத்து முற்றிலும் செயலிழக்கின்றன.
இத்தகைய உடற்கூறாய்வின் போது, குழந்தைகளின் உடலில் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு, உட்புற உறுப்புகளில் இரத்தக் கசிவு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் (Fluid accumulation) போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இது மிக அமைதியாக, ஆனால் மிக வேகமாக உடலை அழிக்கும் ஒரு கொடூரமான நிகழ்வாகும்.
குழந்தைகள் எவ்வாறு காருக்குள் சிக்குகிறார்கள்?
பொதுவாக இத்தகைய விபத்துகள் மூன்று வழிகளில் நடப்பதாக காவல்துறை மற்றும் தடயவியல் தரவுகள் கூறுகின்றன:
மறதி: அன்றாட வழக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால், பெற்றோர் தங்களுக்குத் தெரியாமலேயே காரின் பின் சீட்டில் தூங்கும் குழந்தையை மறந்துவிட்டு இறங்கிவிடுவது.
விளையாட்டாகச்சென்றுசிக்குவது: வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் அல்லது பழுதடைந்த காரைத் திறந்து, சிறுவர்கள் கண்ணாமூச்சி (Hide-and-seek) விளையாட உள்ளே செல்வது. கதவு தானாகப் பூட்டிக்கொள்ளும் போது, உட்புறமாகப் பூட்டைத் திறக்கத் தெரியாமல் உள்ளேயே மாட்டிக்கொள்வது.
“ஒருநிமிடம்தானே” என்றஅலட்சியம்: கடைகளுக்குச் செல்லும் போது “இதோ ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்” என்று குழந்தையைக் காரிலேயே அமர வைத்துவிட்டுப் பூட்டிச் செல்வது.
4. பொதுமக்களுக்கானவிழிப்புணர்வுவழிகாட்டுதல்
இனி ஒரு உயிர் கூட இப்படிப் பிரியக் கூடாது என்றால், நாம் அனைவரும் பின்வரும் பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்:
“பூட்டும்முன்பின்னால்பார்” (Look Before You Lock): நீங்கள் தனியாகப் பயணம் செய்தாலும், காரை நிறுத்திப் பூட்டும் போது, பின் இருக்கையை ஒருமுறை பார்க்கும் வழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் போன், பர்ஸ் அல்லது காலணியை பின் இருக்கையில் வைத்தால், நீங்கள் காரை விட்டு இறங்கும்போது கட்டாயம் பின் சீட்டைப் பார்க்க நேரிடும்.
பழுதடைந்தகார்களைப்பூட்டிவையுங்கள்: உங்கள் வீட்டு முற்றத்திலோ அல்லது சாலையோரத்திலோ பாழடைந்த அல்லது பழுதடைந்த கார்கள் இருந்தால், அவற்றின் கதவுகளை எப்போதும் பூட்டி வையுங்கள். அதன் சாவிகளைப் பிள்ளைகளுக்குக் கிடைக்காத இடத்தில் வையுங்கள்.
குழந்தைகளுக்குக்கற்றுக்கொடுங்கள்: உங்கள் குழந்தைகள் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் வயதில் இருந்தால், ஒருவேளை காருக்குள் மாட்டிக்கொண்டால், ஓட்டுநர் இருக்கைக்குச் சென்று காரின்ஹார்னை (Horn) தொடர்ந்துஅடிக்குமாறு கற்றுக்கொடுங்கள். ஹார்ன் சத்தம் பிறரின் கவனத்தை ஈர்க்கும்.
உடனேசெயல்படுங்கள்: பூட்டப்பட்ட காருக்குள் ஒரு குழந்தை தனியாக இருப்பதைக் கண்டால், காரின் உரிமையாளருக்காகக் காத்திருக்க வேண்டாம். உடனடியாகப் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்து, தேவைப்பட்டால் காரின் கண்ணாடியை உடைத்துக் குழந்தையைக் காப்பாற்றுங்கள். ஏனெனில், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கக்கூடும்.