DNA பரிசோதனையும் மனிதனை அடையாளம் காணலும்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் தற்கொலைக் குண்டுதாரியின் தாயாரான வகீர் மொஹமட் பல்கீஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கி, குண்டுவெடிப்பில் துண்டிக்கப்பட்ட அலாவுதீனின் தலையை தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் DNA அறிக்கை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடதியவர் அஹமட் முகத் அலாவுதீன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்போது சட்டமருத்துவ அதிகாரி உடற்கூற்றாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன், குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இவ்வாறே சங்கரில்லா ஹோட்டலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது மொஹமட் சஹ்ரான்தான் என்பது DNA பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன. சஹ்ரானின் மகளிடமிருந்து பெற்ற இரத்த மாதிரி, சங்கரில்லா ஹோட்டலில் மீட்கப்பட்ட சஹ்ரானுடையது என கருதப்பட்ட உடல் பாகம் என்பவற்றை DNA பரிசோதனைக்குட்படுத்தியபோது இந்த முடிவு கிட்டியது.

தற்பொழுது பலரினதும் கேள்வி ஒரு தாயார் தனது மகனின் தலையினை பார்த்து முக தோற்ற இயல்புகளை வைத்து அவர்தான் தனது மகன் என்று அடையாளம் காட்டியபோதும் ஏன் DNA பரிசோதனை செய்யப்பட்டது என்பதுதான். அனர்த்தம் எனப்படும் பொழுது அதற்கு பல்வேறு பட்ட வரைவிலக்கணங்கள் வெவ்வேறு பாடத்திட்டங்களில் வெவ்வேறு விதமாக கூறப்பட்டுள்ளது. சட்ட மருத்துவத்தில் ஒரு சம்பவத்தில் 12 பேருக்கு அதிகமானோர் இறக்க நேரிடும் பொழுது அது அனர்த்தம் (Disaster) ஆக கருதப்படும். இங்கு அனர்த்தம் என்பது இயற்கையால் ஏற்படும் அழிவுகளையோ மனிதனால் ஏற்படும் அழிவுகளான குண்டு வெடிப்பு மற்றும் போர் அழிவுகளை குறிக்கும். இவ்வாறு அனர்த்தம் ஒன்றில் இறந்தவரினை விஞ்ஞான ரீதியில் சரியாக அடையாளம் (Disaster victim Identification – DVI) காண சர்வதேச போலீசான இன்டர்போல் (https://www.interpol.int/en/How-we-work/Forensics/Disaster-Victim-Identification-DVI)

பின்வரும் முறைகளை அங்கீகரித்துள்ளது

  1. கைரேகை மூலம் (finger print)
  2. பற்களின் பரிசோதனை மூலம்
  3. DNA மூலம்

மேற்குறிய முறைகளில் DNA மூலம் இறந்த ஓர் மனிதனை அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்த முறையாகும். மேலும் முகத்தோற்றம் அல்லது உடல் அமைப்புக்களை வைத்து ஓர் அனர்த்தத்தில் இறந்த மனிதனை இனம் காண்பது என்பது ஓர் விஞ்ஞான ரீதியான முறையாக அங்கீகரிக்க படவில்லை. இதனால் எதிர்காலத்தில் விடை காணமுடியாத சர்ச்சைகள் ஏற்படும். ஓர் இறந்த மனிதனை அடையாளம் காணல் என்பது காணாமல் போனவரின் உறவினரின் ஓர் அடிப்படை உரிமை ஆகும்.

One thought on “DNA பரிசோதனையும் மனிதனை அடையாளம் காணலும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.