தலைக்கவசம் உயிர்க்கவசமாகுமா? (பகுதி 1)

அவர்கள் இருவரும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும்  போலீஸ் உத்தியோகத்தர்கள்.  அன்று இருவரும் கடமை முடித்து விட்டு போலீஸ் நிலையம் திரும்பும் வழியில் சிறிதளவு மதுபானம் அருந்திய நிலையில் மோட்டார் சைக்கிளில்  திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அவர்களை எதிரே வந்த கார் மோதித் தள்ளியது. மோட்டார் சைக்கிளினை  செலுத்தியவர் சிறு காயங்களுடன் தப்பித்து கொண்டார். பின்னிருந்த நண்பன் மூச்சு பேச்சு இன்றி நிலத்தில் விழுந்து கிடந்தான். அவர்கள் இருவரும் சம்பவம் நடைபெற்ற பொழுது தலைக்கவசம் அணிந்து இருந்தனர்.

இதன் பின்னர் சுய நினைவு அற்ற நிலையில் அவன் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டான். வைத்தியர்கள் அவனின் மனைவிக்கு “அவனுக்கு உடம்பில் வெளிக் காயம் ஒன்றும் இல்லை. ஆனால் மூளையின் முன் பகுதியில் இரத்த கசிவு இருப்பதாகவும் அதனால் ஒப்பரேசன் ஒன்று செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்,  அவளும் சம்மதித்தாள். ஒபரேசனும் முடிந்தது அவனுக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை. சில மாதங்களில் அவன் இறந்துவிட்டான். அவனது மனைவியும் ஓர் போலீஸ் அதிகாரி தான். அவளின் மனது கேட்கவில்லை. அதாவது அவளுக்கு எவ்வாறு  வெளியில் காயம் இல்லாமல் உள்ளே மூளையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்று அவளுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது . இறுதியாக அவள் குற்ற புலனாய்வு பிரிவுவில் சட்ட வைத்திய அதிகாரிக்கும் வழக்கினை விசாரணை செய்த போலீஸ் அதிகாரிக்கும் எதிராக மேலதிக விசாரணையினை கோரி ஓர் முறைப்பாட்டினை  மேற்கொண்டாள் .

அவர்களின் விசாரணையும் அதுவும் தலைக்கவசம் அணிந்த நிலையில், தலையில் வெளிப்பகுதியில் காயம் ஏற்படாத பொழுது அதுவும் உள் பகுதியில் உள்ள  மூளையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்றே அமைந்தது. அது எவ்வாறு சாத்தியம்? என்பதுவும் அவர்களின் முக்கிய கேள்வி ஆகும்

இன்று மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பல்வேறு வகையான தலைக் கவசங்களை பாவிக்கின்றனர்.தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்த வேண்டும் என்பது நாட்டின் சட்டம் ஆகும். இந்நிலையில் பலர் நினைக்கின்றனர் தலைக்கவசம் அணிந்துவிட் டால் எவ்வகையான விபத்தில் இருந்தும் உயிர் தப்பி விடலாம் என்று, உண்மையிலே தலைக்கவசம் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பினையே வழங்குகின்றது. அதாவது சாதரணமாக பாவிக்கும் தலைக்கவசம் ஆனது மண்டை ஓட்டின் (Skull) வெளிப்புறம் காயங்கள் வராமல் பாதுகாப்பதோடு முகத்தில் உள்ள முக்கிய அங்கங்களான கண், மூக்கு, காது, வாய் போன்றவற்றிற்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கின்றது.

சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் நாம் பிரயாணம் செய்யும் பொழுது எமது தலையும், அதனுள் அமைந்த மூளை மற்றும் அதனை சூழவுள்ள நீர்ப்பாயம் என்பன மோட்டார் சைக்கிளின் வேகத்திலேயே செல்லும், வழமையாக விபத்தின் பொழுது வாகனத்தின் வேகம் அமர்முடுகல் காரணமாக குறித்த கணநேரத்தில் பூச்சிய நிலைக்கு வரும், ஆனால் மூளை மற்றும் அதனை சூழவுள்ள நீர்ப்பாயம் என்பனவற்றின் வேகம்  சிறிது கண நேர தாமதத்தின் பின்னர் தான் பூச்சிய நிலைக்கு வரும்.

இதன் காரணமாக மூளையானது மண்டையோட்டின் உட்பகுதியில் (Base of the Skull) உரசுப்பட மூளையினுள்  பாரிய இரத்த கசிவு காயங்கள் (contre-coup injury ) உண்டாகும் (coup injury occurs under the site of impact with an object, and a contre-coup injury occurs on the side opposite the area that was hit). இக்காயங்கள் பொதுவாக வெளிப்புறத்தில் விசை தாக்கிய பக்கத்தின் எதிர்பக்கம் உள்ள மூளையின் பகுதியில் உருவாகும். இக்காயங்கள் (contre-coup injury) என்று அழைக்கப்படும். பொதுவாக இவ்வகையான காயங்களுக்கும் வாகனத்தின் வேகத்திற்கும் விஞ்ஞானரீதியான தொடர்பு இல்லை.

ஒருவர் தலைக்கவசம் அணிந்த நிலையில் வெளிப்புறம் காயம் ஏற்படாது. ஆனால் மூளையின் உட்புறத்தில் இவ்வாறான காயங்கள் ஏற்படுவதினை தவிர்க்க முடியாது. மேலும் இக்காயங்கள் வெளிப்புற காயங்களினை விட மிக ஆபத்து உள்ளவையாக (more severity) இருக்கும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.