அண்மையில் வடமராட்சி பகுதியில் கிணற்றினுள் இருந்து கைகள் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து நடந்த உடற் கூறாய்வு பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பலர் தற்பொழுது அது கொலை எனவும் எவ்வாறு ஒருவர் தனக்குத்தானே பின்பக்கமாக கைகளை கட்டுபோடலாம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதலில் நாம் சிக்கலான தற்கொலைகள் (complex suicide) பற்றி பார்ப்போம். சிக்கலான தற்கொலை என்பது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப்பாவித்து ஒருவர் தற்கொலை செய்துகொள்வது ஆகும். இவர்கள் தங்களின் மரணத்தினை நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தும் முகமாகவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை தெரிவு செய்கின்றார்கள். உதாரணமாக நஞ்சினை உண்ட பின்பு தூக்கில் தொங்கல் அல்லது நீரில் மூழ்கல். சிக்கலான தற்கொலையில் இருவகை உண்டு
- திட்டமிடப்படாத சிக்கலான தற்கொலைகள் (unplanned complex suicides) – இதில் தற்கொலை செய்பவர் முதலில் ஒரு முறையினை பாவிப்பார் அதில் வெற்றி அடையாத சந்தர்ப்பத்தில் அவர் தொடர்ந்து தனது முயற்சியில் அதாவது இறக்கும் வரை பலமுறைகளை பாவிப்பார்.
உதாரணமாக ஒருவர் பூட்டிய அறையில் தனது மணிக்கட்டினை பிளேட்டினால் அறுப்பார், உடனடியாக இறப்பு நிகழாது அவர் இரத்தம் ஒழுக ஒழுக நடந்து திரிந்துவிட்டு, மேசையில் லாச்சியில் உள்ள இரு காட் பனடோல்களை விழுங்குவார். அப்பொழுதும் இறப்பு உடனடியாக நிகழாது, இறுதியாக கூரையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கொள்வார்.
பொதுவாக இச்சம்பவத்தினை பார்வையிடும் சாதாரண பொதுமகன் ஒருவர் இரத்த கறையினை பார்த்து இது கொலை என்றே கூறுவார்கள்.
2. திட்டமிடப்பட்ட சிக்கலான தற்கொலைகள் (planned complex suicides) இதில் தற்கொலையாளி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை ஒரே நேரத்தில் பாவிப்பர். உதாரணமாக அதிகளவு நித்திரை குளிசைகளை விழுங்கிய பின்னர் அவர் உயரமான கட்டிடங்களில் இருந்து விழுதல்
இங்கு நடைபெற்றதுவும் அவ்வாறான ஓர் சம்பவமாக இருக்கலாம்.

மேலுள்ள படமானது Planned complex suicide இணை விளக்குகின்றது இங்கு அவர் penetrating captive-bolt gunshot மூலமும் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளார். (penetrating captive-bolt gunshot இணை பற்றி அறிய பின்வரும் லிங்கினை பின்தொடரவும் சத்தமின்றி ஒரு வேட்டு )
.இனி தனக்குத்தானே கைகளை எவ்வாறு கட்டலாம் என்பதை சற்று பார்ப்போம். முதலில் உருவு தடம் மூலம் மணிக்கட்டில் நூலினை கட்டுதல் பின்னர் நூலின் மறுநுனியில் இன்னோர் உருவு தடத்தினை உருவாக்குதல். அதனை ஏற்கனவே கடுப்போட்ட கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலினால் பிடித்தல் பின்னர் கைகள் இரண்டினையும் உடலின் பின்பக்கம் கொண்டு சென்று, உருவு தடத்தினுள் மற்றைய கையினையும் கொழுவுதல். பின்னர் இரு கைகளையும் ஆட்டும் பொழுது கட்டுக்கள் இரண்டும் இறுகும். இது தவிர கைகளை பின்புறமாக தனக்குத்தானே கட்டிட பல்வேறு முறைகள் உண்டு.
நீரில் மூழ்கி ஒருவர் இறக்கும் பொழுது இவ்வாறு மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை எவ்வாறு வேறுபடும் என்பதை கீழ்வரும் லிங்கில் உள்ள பதிவு விளக்கின்றது
