அண்மைய காலப்பகுதியில் இலங்கையில் கொலை – தற்கொலை என்ற வகை மரணங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பெற்ற தாயே தனது குழந்தைகளுக்கு நஞ்சினை கொடுத்து அவர்களின் உயிரினை மாய்த்தும் தானும் நஞ்சினை அருந்தி உயிரிழக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ரயில் தண்டவாளத்தில் குழந்தைகளுடன் குதித்தல் மற்றும் கிணற்றில் குதித்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

இவ்வாறான கொலை – தற்கொலை சம்பவங்களில் பெரும்பாலும் பலியாகுவோர் ஏதும் அறியா அப்பாவி சிறுவர்களும் பெண்களுமே. பெரும்பாலான இச்சம்பவங்களுக்கு கடன் தொல்லை , மற்றும் கணவன் மனைவி இடையே உள்ள தீரா பிரச்சினைகளே காரணமாகக் அமைகின்றன. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக அண்மைக்காலங்களில் சில குடும்பங்கள் முற்று முழுதாக கருவறுக்கப்பட்டு இல்லாமல் போனமை மனதினை நெருடவே செய்கின்றது. உண்மையில் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சினைக்கு அவர்களில் ஒருவரை பழி வாங்குவதற்காக அப்பாவி சிறுவர்கள் பலி எடுக்கப்டுகின்றனர்.
சட்ட மருத்துவத்தில் இவ்வாறான ஓர் சம்பவம் நடைபெறும் பொழுது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெறும் புலனாய்வு முக்கியமானது ஆகும். இதன் மூலம் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மிக இலகுவாக மரணம் சம்பவித்த சூழ்நிலை மற்றும் மரணம் ஏற்பட்ட காரணம் என்பவற்றினை கண்டறிந்து விடுவார். இவ்வாறான சம்பவங்கள் அல்லது ஒரு இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்படும் பொழுது அவற்றினை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸாரிணை அழைக்கவேண்டும்.
https://www.youtube.com/watch?time_continue=91&v=gXXxJ8EY1C8
https://www.youtube.com/watch?time_continue=33&v=2v-McLtd5dE
