நஞ்சு ஆனால் நஞ்சல்ல!!!

இன்று தொலைக்காட்சி சேனல்களை பார்த்தால் அதில் வரும் பெரும்பாலான விளம்பரங்கள் பல்வேறுபட்ட தொற்று நீக்கிகள், கிருமி நீக்கிகள், கைகழுவும் திரவங்கள் (hand sanitizer), சவர்க்காரங்கள் சம்பந்தமானவையே. இவை பல்வேறுபட்ட வர்த்தக நாமங்களில் பல விலை வித்தியாசங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் இவற்றினை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் பெரும் தொகையினை இலாபம் ஈட்டுகின்றன என்பது வெள்ளிடை மலை. அண்மையில் சந்தைக்கு வந்த கைகளை சுத்தப்படுத்தும் ஒருவகையான கைகழுவும் திரவத்தில் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் (alcohol) உள்ளதால் அதனைப்பாவிப்பது உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்ற வகையில் சில செய்திகள் வெளிவந்தன. இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் அங்கு விளம்பரப்படுத்தப் படுத்தப்பட்ட கைகழுவும் திரவத்தினை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுதினால் கைகளை கழுவ வேண்டிய தேவை இல்லை. குறிப்பாக இந்த கைகழுவும் திரவம் ஆனது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து உற்பத்தி செய்யப்படுகின்றது.

இனி விடயத்திற்கு வருவோம். 90 வீத செறிவு கொண்ட மதுசாரத்தினை உள்ளடக்கிய இந்த கைகழுவும் திரவத்தினை பாவிக்கும் பொழுது நாம் நஞ்சாதலுக்கு உட்படுகின்றோமா? என்பதே இப்பொழுதுள்ள கேள்வி.

நாம் உள்ளேடுக்கும் மருந்து அல்லது நஞ்சானது எமது உடலில் குறித்த அளவினை விட அதிகமாக இருக்கும் பொழுதே அதாவது இரத்தத்தில் அதன் செறிவு குறித்த அளவினை தாண்டும் பொழுதே நாம் நஞ்சாதலுக்கு உள்ளவோம். மேலும் ஒரு மனிதனை கொல்ல தேவையான நஞ்சின் அல்லது மருந்தின் அளவு Lethal Dose (LD) என்று அழைக்கப்படும். இது மருந்து அல்லது நஞ்சிற்கு ஏற்றவாறு வேறுபடும். இந்த அளவானது மருந்து அல்லது நஞ்சினை உள்ளெடுக்கும் மனிதனின் உடல் நிறை, வேறு நோய்கள் உள்ள நிலமை , குறிப்பாக சிறுநீரக மற்றும் ஈரல் போன்றவற்றின் தொழில் பாடுகள் பாதிக்கபட்டுள்ளமை போன்றவற்றில் தங்கி உள்ளது.

02

நாம் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் கொண்ட ஒரு போத்தலை (750ml) ஒரே தடவையில் மடமட வெனக்குடித்தால் நிச்சயம் வளர்ந்த மனிதன் ஒருவனுக்கு நஞ்சாதல் (intoxication) ஏற்படும்.

இங்கு பயன்படுத்தப்படும் கைகளை சுத்தமாக்கும் திரவத்தில் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் இருந்தாலும் ஒருசில தடவைகள் பயன்படுத்தும் பொழுது அது மிக குறைந்த அளவிலேயே உடலை அடையும் . அந்த மிகச்சிறிய அளவினால் மனித உடலில் அதாவது சிறுவர்களின் உடலில் எந்தவிதமான தீங்குகளை ஏற்படுத்த முடியாது. அவ்வாறே பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்த அதன் அளவு dose போதாது. இதேவேளை சிறுவர்கள் அந்த கைகள் கழுவும் திரவம் அடங்கிய போத்தலின் உள்ளடக்கம் முழுவதினையும் ஒரேதடவையில் குடித்தால் நிச்சயம் இறப்பு ஏற்படா விடினும் ஒரு சில பாதக விளைவுகள் ஏற்படும். இவ்வாறே இதில் இருக்கும் மற்றைய இரசாயன பாதார்த்தங்களும் சிறிய அளவில் இருப்பதால் மனிதருக்கு தீங்கில்லை.

90 வீத செறிவு கொண்ட மதுசாரம் ஆனது ஓர் சிறந்த தொற்று நீக்கி ஆகும். இதன் காரணமாக இது சாதாரணமாக வைத்திய துறையில் பெருமளவில் பாவிக்கப்படுகிறது. முக்கியமாக அதிதீவிர சிகிச்சை பிரிவுகள், சில நோயாளர் விடுதிகள் போன்றவற்றில் வைத்தியர் அல்லது ஏனைய ஊழியர்கள் ஒரு நோயாளியினைப் பரிசோதித்த பின்னர் மற்றைய நோயாளியை பரிசோதிக்க முன்னர் இவ்வாறான 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் உள்ளடங்கிய திரவங்களை பயன்படுத்தி தமது கைகளை மூலம் சுத்தப் படுத்துவார்கள்.

இவ்வாறே நாம் பனடோலுக்கு பதிலாக பயன்படுத்தும் பனடீன் என்ற மாத்திரையில் codeine என்ற போதைப்பொருள் மிக சிறிய அளவில் காணப்படுகின்றது. இவற்றினை பாவிக்கும் பொழுது போதை ஏறுதல் மற்றும் போதைக்கு அடிமையாகும் தன்மை என்பன ஏற்படாது.

11 பேரினை பலிகொண்ட …..

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.