சாட்சியங்களற்ற கொலை….

யுவோனா( Yvonne Jonsson) மற்றும் கரோலின் இருவரும் சுவீடனில் வசிக்கும் சகோதரிகள். இவர்களின் தாயார் ஓர் இலங்கையர். வழமையாக இவர்கள் இருவரும் விடுமுறை காலங்களினை இலங்கையில் வந்து களிப்பார்கள். இவ்வாறே 2005 ஆம் ஆண்டும் இலங்கை வந்திருந்தார்கள். பாவம் அவர்கள் அறியவில்லை அந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கறை படிந்த சம்பவமாக மாறும் என்று.
அவர்கள் இருவரும் ராஜகிரிய பகுதியில் உள்ள ரோயல் கார்டன் என்ற அதி சொகுசு மாடி குடியிருப்பில் தான் வழமையாக தங்குவார்கள். இந்தமுறையும் அவ்வாறு தான் தங்கினார்கள். இவ்வாறு தங்கிய இருவரும் 30 ஆம் திகதி ஜூன் மாதம் மாலை வேளையில் பார்ட்டி ஒன்றுக்காக கிளம்பினார்கள். அவர்கள் அறியவில்லை தங்களில் ஒருவர் அன்று உயிர் துறப்பார் என்று. போகும் வழியில் கரோலின் தனது ஆண் நண்பன் ஜெயமஹா என்ற இலங்கையனையும் அழைத்து கொண்டாள். மூவரும் பல்வேறுபட்ட கிளப் போன்றவற்றுக்கு சென்று கொண்டாடினார்கள். அங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது மது அருந்திய நிலையில் கரோலினுடன் ஜெயமஹா வாக்கு வாதப்பட்டான். அப்பொழுது யுவோனா அவர்களினை விலக்குப்பிடித்தாள். இதனால் யுவான்னா மீது ஜெயமஹா கடும் கோபத்தில் இருந்தான். பின்னர் மூவரும் நள்ளிரவில் திரும்பினர். ஜெயமாஹா சகோதரிகள் இருவரையும் அவர்களின் குடியிருப்பில் விட்டுவிட்டு சென்றான். சகோதரிகள் இருவரும் நடனமாடியதாலும் மது அருந்திய நிலையில் இருந்ததினால் விரைவில் தூங்கி போனார்கள். ஆனால் ஜெயமஹா செல்லவில்லை யுவானவை அவளது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து வெளியே வருமாறு அழைத்தான். அவளும் வெளியே வர காத்திருந்த ஜெயமஹா அவளை கொலை செய்தான். அடுத்த நாள் காலை வேளையில் தொடர் மாடியினை துப்பரவு செய்யும் தொழிலாளி ஒருவர் 19 வயதான யுவான்னாவின் உடலினை மாடிப்படியில் கண்டு பிடித்ததினை தொடர்ந்து. கொலை இடம்பெற்றது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

 

இவ்வாறு கொலை நடைபெற்ற பொழுது கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்கள் ஒன்றுமே இல்லை என்பதினால் பொலிஸார் என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்ற வேளையில் தான் பொலிஸார் ஒருவர் மாடிப்படியில் சில இரத்தத்தில் தோய்ந்த கை அடையாளங்களினை கண்டார்.
இதன் பின்னர் தான் திருப்பம் ஏற்பட்டது. விசேட கைரேகை நிபுணர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்களின் முடிவின் படி அந்த இரத்தம் தோய்ந்த கை அடையாளத்தில் இருந்த கை ரேகை முக்கிய சந்தேக நபராகிய ஜெயமஹாவின் கைரேகை உடன் ஒத்து போவது தெரிந்தது . குற்றவியல் வழக்குகளில் குற்றமானது நூறு வீத சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப் படவேண்டும் மேலும் கைரேகை அடையாளம் சிறு சத்திர சிகிச்சை போன்றவற்றினால் இலகுவில் மாற்றி அமைக்கப்பட முடியும். எனவே இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மேலும் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். முடிவாக இரத்தம் தோய்ந்த கை அடையாளத்தில் இருந்த இரத்த்தினை எடுத்து சந்தேக நபரான ஜெயமஹாவின் இரத்தத்தினையும் எடுத்து DNA பரிசோதனைக்கு அனுப்பினார்கள். பரிசோதனை முடிவில் முடிவில் இரண்டு இரத்தங்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் ஒருவருடையது என்று உறுதியாகியது. இதன் மூலம் ஜெயமஹாதான் குற்றவாளி என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டது. இந்த கொடூர கொ லை செய்த கு ற்றத்திற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூட் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேன பொ துமன்னிப்பு வழங்கியுள்ளதால், இது நாட்டிலே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இலங்கையின் இரு நீதிமன்றங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட மரண தண்டனை கைதியே அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் மன்னிப்பினால் விடுதலையானவர்.

34

சாட்சியங்களற்ற நிலையில் நடக்கும் கொலை, பாலியல் வல்லுறவு போன்றவற்றின் புலன் விசாரணையில் DNA பரிசோதனை மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டு. மேலும் மரண தண்டனை விதிக்கபட்டவர்களை விடுதலை செய்ய இலங்கையில் ஓர் நிபுணர் குழுவின் சிபாரிசு தேவைப்பாடாக உள்ளது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.