கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் நான் வீதிவழியே பிரயாணித்து கொண்டிருந்த பொழுது, ஓர் நாற்சந்தியில் பெரும் வாகன நெரிசல். ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் மற்றைய வாகனங்களும் வீதியினை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நானும் வாகனத்தினை நிறுத்தி விட்டு நடந்து சென்று பார்த்தால், அது ஓர் விபத்து சம்பவம் மோட்டார் சைக்கிள் ஒட்டி இரத்த வெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தார். அவரின் மோட்டார் சைக்கிளும் விபத்திற்கு உள்ளான மோட்டார் காரும் வீதியின் நட்ட நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆம்புலன்ஸ் வேறு மிக சத்தத்துடன் சைரன் எழுப்பியபடி நோயாளியினை அணுக முடியாமல் சில நூறு மீற்றர் தூரத்தில் வந்துகொண்டிருந்தது. நான் அதில் மும்முரமாக வாக்குவாத பட்டு கொண்டிருந்த ஒருவரிடம் சொன்னேன் விபத்துக்குள்ளான வாகனங்களினை வீதியோரமாக நகர்த்தி ஆம்புலன்ஸ் வருவதற்கும், மற்றைய வாகனங்கள் செய்வதற்கு வழி விடும் படி கேட்டேன். அவர் சொன்னார் போலீசார் வந்த பிறகே வாகனத்தினை வீதி ஓரத்திற்கு எடுக்கலாம் என்று, நான் கூறினேன் நீங்கள் கைத்தொலைபேசி மூலம் விபத்துக்களான இரு வாகனங்களின் நிலையினினையும் போட்டொ எடுத்த பின்னர் வாகனங்களினை அப்புறப்படுத்தலாம் அல்லது வாகனங்களின் ரயரின் நிலையினை வெண்கட்டியினால் அல்லது அல்லது கல் வேறு ஏதாவது பொருள் ஒன்றினால் வீதியில் குறித்த பின்னர் அகற்றலாம் தானே என்று, அதற்கு குறித்த வாகனத்தின் சாரதி மறுத்த நிலையில் வீதி போக்குவரத்து போலீசார் வரும் வரை ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வீதியில் காத்திருக்க நேரிட்டது.
இவ்வாறு வீதியில் நிற்கும் பொழுது ஓர் போலீஸ் மேலதிகாரிக்கு கோல் பண்ணி சம்பவத்தினை சொன்னேன். அடுத்து அவர் கூறிய மறுமொழி தான் தூக்கி வாரிப்போட்டது. அவர் சொன்னார் வாகனங்களின் நிலையினை போட்டோ எடுத்த பின்னர் அல்லது வேறு விதத்தினால் அடையாளப்படுத்திய பின்னர் அப்புறப்படுத்தல் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் வடக்கு மாகாண மக்கள் அவ்வாறு செய்ய விட மாட்டார்கள். நீங்கள் வீதியில் பொறுமையாக இருங்கள் என்று, பிறகு சொன்னார் நீங்கள் உங்கள் வாகனத்தினை தயவு செய்து எடுக்க வேண்டாம் அவ்வாறு செய்தால் சிலவேளை அவர்கள் உங்கள் வாகன கண்ணாடியினை உடைத்து விடுவார்கள் எனவே பொறுமையாக இருங்கள் சேர் என்றார்.
மக்களின் அறியாமை காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் போலீசாரின் பக்க சார்பான செயற்பாடுகள் காரணமாகத்தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அறிவோம் தெளிவோம்.
முற்றும்

