யாழில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் நேற்று காலை 7 மணியளவில் தனக்கு தானே தீ மூட்டியபடி புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவத்தில் 32 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்மில் பலருக்கு ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்பது குறித்து பெரும் புதிராக உள்ளது.
முதலில் நாம் சிக்கலான தற்கொலைகள் (complex suicide) பற்றி பார்ப்போம். சிக்கலான தற்கொலை என்பது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப்பாவித்து ஒருவர் தற்கொலை செய்துகொள்வது ஆகும். இவர்கள் தங்களின் மரணத்தினை நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தும் முகமாகவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை தெரிவு செய்கின்றார்கள். உதாரணமாக நஞ்சினை உண்ட பின்பு தூக்கில் தொங்கல் அல்லது நீரில் மூழ்கல். சிக்கலான தற்கொலையில் இருவகை உண்டு
1. திட்டமிடப்படாத சிக்கலான தற்கொலைகள் (unplanned complex suicides) – இதில் தற்கொலை செய்பவர் முதலில் ஒரு முறையினை பாவிப்பார் அதில் வெற்றி அடையாத சந்தர்ப்பத்தில் அவர் தொடர்ந்து தனது முயற்சியில் அதாவது இறக்கும் வரை பலமுறைகளை பாவிப்பார்.
உதாரணமாக ஒருவர் பூட்டிய அறையில் தனது மணிக்கட்டினை பிளேட்டினால் அறுப்பார், உடனடியாக இறப்பு நிகழாது அவர் இரத்தம் ஒழுக ஒழுக நடந்து திரிந்துவிட்டு, மேசையில் லாச்சியில் உள்ள இரு காட் பனடோல்களை விழுங்குவார். அப்பொழுதும் இறப்பு உடனடியாக நிகழாது, இறுதியாக கூரையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கொள்வார்.
பொதுவாக இச்சம்பவத்தினை பார்வையிடும் சாதாரண பொதுமகன் ஒருவர் இரத்த கறையினை பார்த்து இது கொலை என்றே கூறுவார்கள்.
2. திட்டமிடப்பட்ட சிக்கலான தற்கொலைகள் (planned complex suicides) இதில் தற்கொலையாளி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை ஒரே நேரத்தில் பாவிப்பர். உதாரணமாக அதிகளவு நித்திரை குளிசைகளை விழுங்கிய பின்னர் அவர் உயரமான கட்டிடங்களில் இருந்து விழுதல்.
இங்கு நடைபெற்றதுவும் அவ்வாறான ஓர் சம்பவமாக இருக்கலாம்.

மேலுள்ள படமானது Planned complex suicide இணை விளக்குகின்றது இங்கு அவர் penetrating captive-bolt gun மூலம் தன்னைத்தானே சுட்டும் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளார். (penetrating captive-bolt gunshot இணை பற்றி அறிய பின்வரும் லிங்கினை பின்தொடரவும் சத்தமின்றி ஒரு வேட்டு ).
முற்றும்

