கொரோனாவை ஒளித்து மறைப்பது ஏன்?

நேற்றைய தினம் நீர்கொழும்பு பகுதியில் ஒருவர் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தார். அதனைத்தொடர்ந்து அந்த நோயாளி மீது தன்னிடம் இருந்த நோயினை மறைத்து வைத்ததாகவும், சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்கவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் குற்ற சாட்டுக்கள் பரவிய வண்ணம் உள்ளன. நோயாளியும் குடும்பத்தினரும் இவ்வாறு மறைத்தமைக்கான காரணங்களில் ஒன்று இறந்தவர் கொரோனா நோயாளி என கண்டுபிடிக்கப்பட்டால் இறப்பினை தொடர்ந்து அவரது உடல் கட்டாயம் எரிக்கப்படும் என்ற பொய்யான தகவலே ஆகும். பொதுவாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூத மதத்தினர் இறந்தவரின் உடலினை புதைக்கவே விரும்புவர். எரித்து தகனம் செய்வது என்பது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதினால் அதனை விரும்புவதில்லை.
இலங்கையில் உள்ள தற்போதைய சுகாதார அமைச்சின் சட்ட திட்டங்களின் பிரகாரம் கொரோனா தொற்றினால் மரணமடைந்த ஒருவரின் உடலினை எரித்து தகனம் செய்ய அல்லது புதைக்க முடியும். புதைப்பதாயின் 6 அடி ஆழமான குழியில் நீருடன் தொடுகையில் இல்லாதவாறு உரிய சட்ட விதிகளின் படி புதைக்க முடியும். வைத்தியசாலையில் இவ்வாறான இறப்பு நடைபெற்ற பின்னர் அதிகாரிகள் யாரவது இறந்தவரின் உடலினை எரித்து தகனம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்தினால் மேலதிகாரிகளுக்கு அல்லது நீதிமன்றில் முறையிட முடியும்.
கீழே உள்ள படத்தில் இருந்து உரிய தகவல்களை பெற்று கொள்ள முடியும்.

Doc2-1_LI

ஆதாரம்: http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/covid-19-cpg_march-2020-moh-sl.pdf
25 தொடக்கம் 28 வரையான பக்கங்கள்

                                                                        முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.