அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் சம்பவத்தில் போலீசார் ஒருவர் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் கழுத்துப் பகுதியில் தனது முழங்காலினை வைத்து நெரித்ததினால் அந்த நபர் பரிதாபகரமான முறையில் இறந்து போனார். நடைபெற்ற இந்த சம்பவம் உலகம் பூராகவும் பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இவ்வாறு குற்றவாளிகளை அல்லது சந்தேக நபர்களை கைது செய்யும் பொழுது அல்லது சிறையில் உள்ள சிறைக்கைதிகளினை அடக்கும் பொழுது போலீசார் பல்வேறுபட்ட வழிமுறைகளில் அவர்களை விலங்கினாலும் கைகளினாலும் கட்டிப்போடுவார்கள் ( Physical restrain methods). இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இப்பதிவில் இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது என்பது பற்றி விளக்கப்படுகின்றது.


1. Hog-tying (total appendage restraint procedure -TARP)
இந்த முறையில் கைதியின் கைகள் மற்றும் கால்கள் மடிக்கப்பட்டு அவரின் உடலின் பின்புறத்தில் கட்டப்படும். அதன் பின்னர் கைதி முகம் தரையினை பார்த்தவாறு கிடத்தப்படுவார். இந்த நிலையின் பொழுது கைதியின் நெஞ்சுபகுதி அழுத்தப்படுவதினால் அவருக்கு படிப்படியாக மூச்சு திணறல் ஏற்படும். அத்துடன் அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு மற்றும் சுவாச நோய்கள் இருந்தால் இந்த நிலைமை காரணமாக அவை மோசமடையும். மேலும் கைதி ஐஸ், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தால் மூச்சுத்திணறல் அதிகரிக்கும். இறுதியில் கைதி கவனிப்பாரற்ற நிலையில் இருப்பாராயின் இறப்பு ஏற்படும்.

2. Choke hold
இந்த முறையின் பொழுது உத்தியோகத்தர் பின்னே நின்று, கைதியின் கழுத்தினை சுற்றி கையினை இறுக்குவார். இங்கு கழுத்து பகுதியினை கை பகுதியே அழுத்தும். இந்த முறையின் பொழுது கழுத்தின் முன் பகுதியில் இருக்கும் சுவாசக்குழாய் அழுத்தப்படும். அதன்காரணமாக கைதி மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறக்க நேரிடலாம்.

3. Lateral vascular neck restraint (LVNR)
இந்த முறையும் மேற்குறித்த முறையினை ஒத்தது ஆனால் இங்கு கழுத்து பகுதியானது முழங்கை பகுதியில் நெறிப்படும். இதனால் கைதிக்கு மூச்சு திணறல் ஏற்படும்.

மேற்குறித்த முறைகள் தவிர பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீசார் மற்றும் சிறைக்காவலர் தமது வசதி, அனுபவத்திற்கு ஏற்றவாரு பல்வேறு முறைகளை உருவாக்குவார்கள். பொதுவாக கைதிக்கு கைவிலங்கையினை மாட்டிய பிறகு அல்லது அவயவங்களை கட்டிய பிறகு இவ்வாறு செய்வதன் காரணமாக, கைதிகளினால் தப்பித்து ஓட முடியாது. இவ்வாறான கட்டுப்போடும் முறைகளினால் பல சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக பல நாடுகளில் இத்தகைய முறைகளை பாவிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக கைதிகளைக் கட்டுப்படுத்த Pepper spray போன்ற மிளகு எண்ணெயினை விசிறும் உபகரணங்கள், மின்சார தாக்குதலை உண்டாக்கும் Taser போன்ற துப்பாக்கிகள் நவீன உலகத்தில் பயன்படுகின்றன. இதனால் பெருமளவில் உயிரிழப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளன.

முற்றும்
