அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களில் வீதிப்பாவனையாளர்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஒட்டியான இளைஞர்கள் வீதிப்போக்குவரத்து விதிகளை மீறி பிரயாணம் செய்யும் சந்தர்ப்பங்களில் தீடீர் என்று போக்குவரத்து போலீசாரினை கண்டதும் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை அல்லது வாகனத்தினை செலுத்துகின்றனர். இதன்காரணமாக பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நிறுத்திவைக்கப்பட்ட வாகனம் அல்லது மரம் போன்றவற்றில் மோதி காயமடைகின்றனர் அல்லது பரிதாபகரமான முறையில் மரணம் அடைய நேரிடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் போலிஸாரினால் கைது செய்யப்பட்டு நைய புடைக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்களின் வாகனமும் பலத்த சேதம் அடைகின்றது. ஒட்டு மொத்தத்தில் இவ்வாறு ஏற்படும் இழப்பு ஆனது போக்குவரத்து விதி மீறலுக்காக செலுத்த வேண்டிய குற்ற பணத்தினை விட பல மடங்கு அதிகமானது ஆகும். இளைஞர்கள் இவற்றினை ஆராய்ந்து பார்க்க மறுப்பதன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது. எனவே இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரினை கண்டதும் ஓட வேண்டியதில்லை.

பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு அகப்படும் இளைஞர்கள் குற்ற தொகையினை விட குறைவான பணத்தினை பொலிஸாருக்கு இலஞ்சமாக வழங்கி பிரச்சனைகளை முடித்துக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவேதான் நீங்கள் போக்குவரத்து விதியினை மீறி பயணிப்பவராயினும் போலீசாரினை கண்டதும் ஓடாதீர்.
முற்றும்
