இளம் தம்பதியினர் ஹோட்டலில் மரணம்!! நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற தம்பதியர் ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தயிருந்தது. அவர்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.
அவர்கள் முந்திய இரவுப் பொழுதில் விருந்தில் BBQ முறையில் இறைச்சியை சுட்டு சாப்பிட்டிருக்கின்றனர் அதன் பின்னர் குளிர் அதிகமாக இருக்கவே அரைகுறையாக எரிந்து மீதமிருந்த BBQ உபகரணத்தினை தமது அறைக்கு எடுத்து சென்று குளிரினை போக்கிய பின்னர் நித்திரைக்கு சென்றுவிட்டனர். அதன் பின்னர் காலையில் வேறு அறையில் தங்கியிருந்த உறவினர்கள் தம்பதியினர் வெளியில் வராமையினை கண்டு கதவினை உடைத்து உட்சென்று பார்த்த பொழுது தான் அவர்கள் ஏற்கனவே இறந்திருந்தமை கண்டறியப்பட்டது. இச்சம்பவம் அவர்களுக்கு பலத்த அதிர்ச்சியினையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து நடாத்தப்பட்ட மரண விசாரணை மற்றும் உடற்கூராய்வு பரிசோதனை போன்றவற்றின் முடிவில் குறித்த தம்பதியினர் இறந்தமைக்கான காரணம் எரிந்து மீதமிருந்த BBQ உபகரணத்தில் இருந்து வெளியேறிய கார்பன் மொனோக்சைட்டு (Carbon monoxide) வாயுவினை அவர்கள் சுவாசித்தமையே காரணம் என்று கண்டறியப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கையிலும் இவ்வாறான மரணங்கள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்பன் மொனோக்சைட்டு வாயு ஆனது பொதுவாக குறை தகனம் நிகழும் பொழுது வாகனகளில் இருந்து வெளியேறும் ஓர் மணம், நிறம் அற்ற வாயு ஆகும். இது ஓர் சுவாசிக்க தகுந்த அல்லாத ஓர் நச்சு வாயு ஆகும். இது சாதாரணமாக வழிமணடலத்தில் இருந்து நாம் உள்ளெடுக்கும் ஒக்சிசன் விட இது 200 மடங்கு எமது இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறத்திற்கு காரணமான ஈமோகுளோபினுடன் நிரந்தரமாக இணையும் திறன் உள்ளது. இதன் காரணமாக  ஒக்சிசன் எமது உடலில் உள்ள அங்கங்களுக்கு கடத்தப்படாது. இதன்காரணமாக மூளை மற்றும் இருதயம் ஆகியன இறக்கும் அதனை தொடர்ந்து அம்மனிதனும் இறப்பான். மேலும் கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசிக்கும் பொழுது மனிதன் அதனை உணர்வதில்லை ஏன்னெனில் அதற்கு மணம் மற்றும் நிறம் இல்லை மேலும் தொடர்ச்சியாக சுவாசிக்கும் இடத்து குறித்த நேரத்தின் பின்னர் மனிதன் சுய நினைவினை இழந்து விடுவான் இதன் காரணமாக ஆபத்தில் இருந்து மனிதன் விலக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

இவ்வாறு கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசித்து மரணம் ஏற்படும் வேறுசில சந்தர்ப்பங்கள் வருமாறு

  1. மூடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த சிறிய இடத்தில் இயக்கப்படும் வாகனம் அல்லது ஜெனறேற்றர் போன்றவற்றின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  2. மூடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த சிறிய இடத்தில் இயக்கப்படும் BBQ இயந்திரத்தின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  3. ஆழ் கிணறுகளின் உள்ளே எரிபொருள் மூலம் இயக்கப்படும் நீர்ப்பம்பிகளின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  4. மூடப்பட்ட வாகனம் இயங்கு நிலையில் இருக்கும் பொழுது வாகனத்தின் புகை போக்கியில் இருந்து வாகனத்தின் உள்ளே புகை கசிவு ஏற்படும் பொழுது
    எனவே இவற்றினை அறிந்து கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசிப்பதினால் ஏற்படும் மரணங்களை தடுப்போம்
    முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.