இனி வரும் காலங்கள்…

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு வயது சிறுமி ஒருத்தியை தாயார் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் அழைத்து வந்திருந்தார். சிறுமியின் முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளில் ஆழமான பாரிய இன்றி காயம் காணப்பட்டது. எவ்வாறு தீக்காயம் ஏற்பட்டதுஎன்று வினாவிய பொழுது, அழைத்து வந்திருந்த போலீசார் மின்சார தடையின் பொழுது சிறுமி எரிந்து கொண்டிருந்த விளக்கின் மீது தவறுதலாக விழுந்ததன் காரணமாகவே இந்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறினார் எனினும் தனக்கு சந்தேகம் வேறு இருப்பதாகவும் கூறினார்.
தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் அதிகரித்த நேரத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முன்னிரவில் ஏற்படுத்தப்படும் மின்சார தடை காரணமாக பெரும்பாலான மக்கள் தமது வீடுகளை ஒளியேற்ற மண்ணெண்னை மற்றும் தேங்காய் எண்ணெய் விளக்குகளேயே பயன்படுத்துகின்றனர். இவற்றினை பயன்படுத்தும் பொழுது தீ விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கின்றது இதன் காரணமாக அநியாயமாக காயங்கள், உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் ஏற்படுகின்றன.
எவ்வாறு நாம் இவ்வாறன குப்பி விளக்குகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

  1. குப்பி விளக்கு ஆகட்டும், மெழுகுதிரி ஆகட்டும் எந்தவொரு விளக்கும் சிறுவர்களுக்கு எட்டாத இடத்தில் வைக்கப்பட வேண்டும். முன்னைய காலத்தில் அரிக்கன் லாம்புகள் வீட்டின் கூரையில் இருந்து தொங்கும் கம்பியில் தான் தொங்க விடப்பட்டன.
  2. சிறுவர்களுக்கு இவ்வாறான விளக்குகளுக்கு அண்மையாக செல்லக்கூடாது எனவும் அவ்வாறு சென்றால் தீக்காயம் ஏற்படும் எனவும் அறிவுறுத்த (?பயமுறுத்த) வேண்டும்.
  3. குப்பிவிளக்குகள் தயாரிக்க பயன்படும் போத்தல்கள் ஒடுங்கிய வாய் ஓடியதாக இருக்க வேண்டும் ஏனெனில் சரிபடும் பொழுது உள்ளே இருக்கும் மண்ணெண்ணெய் அதிகளவில் சடுதியாக வெளியேறாமல் இருக்கும்.
  4. குப்பிவிளக்குகள் தயாரிக்க பயன்படும் போத்தல்கள் கட்டையானதாகவும் உயரம் குறைந்தனவாகவும் அதன் தொடுகையுறும் அடிப்பரப்பு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதன் காரணமாக குறித்த போத்தலின் புவியீர்ப்பு மையம் உயரம் குறைவானதாக இருக்கும் இதன் காரணமாக குறித்த போத்தல் இலகுவில் சரிந்து விழுந்து விடாது.
பாதுகாப்பான குப்பி விளக்கு ஓர் ஓப்பீடு
  1. குப்பி விளக்குகளை மேசையில் அல்லது தரையில் வைத்து படிக்கும் பொழுது பெற்றோரின் அவதானிப்பு கட்டாயம் தேவை. பல சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் நித்திரை காரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகிய சந்தர்ப்பங்கள் உண்டு.
  2. குப்பி விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அல்லது சூடாக இருக்கும் பொழுது அதனுள் மண்ணெண்ணெய் நிரப்புதல் கூடாது. மேலும் மண்ணெண்ணெய் கொள்கலன்கள் தெளிவாக அடையாளம் காண தக்கவாறு இருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மண்ணெண்ணையிற்கு பதிலாக பெற்றோல் நிரப்பப்பட்டு பாரிய தீ விபத்துக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் நடைபெற்றுள்ளன.
  3. இவ்வாறான குப்பி விளக்குகளுக்கு பதிலாக LED பல்ப்புக்களிலாலான சார்ஜர் லைற்றுக்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
  4. மேலும் குப்பிவிளக்குகளின் மூடியில் இருந்து உலோக குழாய் (வால்வு கட்டை) வைத்து சிறிதளவு உயரத்தில் தான் திரியானது எரிய வேண்டும் அதன் பொழுதுதான் வெப்பமானது கீழே இருக்கும் தாங்கியினை சென்றடைவது குறைவாக இருக்கும்
    முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.