வில் வித்தையில் ஒருவன் பயிற்சி பெறவேண்டுமானால், அவனது பெருவிரல் (கட்டைவிரல்) தான் மிக முக்கியமானது. மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு என்பதை அறிந்து அருச்சுனன் மட்டுமே மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் ஏகலைவன் வில்லைத் தொடக்கூடாது எனத் தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவு செய்தார் துரோணர். ஏகலைவனை நோக்கி “உனது வலதுகைக் கட்டைவிரலைத் தா” என்றார். ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் கத்தியை எடுத்தான் தனது வலதுகைக் கட்டைவிரலை வெட்டி எடுத்து துரோணரின் காலடியில் வைத்தான். ஒருவன் வலது கைக் கட்டைவிரல் இல்லாமல் வில் எய்ய முடியாது.

இக்கதையில் இருந்து கையில் உள்ள பெருவிரலின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம். இவ்வாறே காலில் உள்ள பெருவிரலும் சமநிலையான, வேகமான நடத்தலுக்கு உதவுகின்றது. அத்துடன் முக்கியமாக பலமான விசையினை கால் மூலம் பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களில் காலில் பெருவிரல் இருத்தல் முக்கியமானது. அவ்வாறு இருந்தால்தான் பலமான விசையினை ஓர் இடத்தில் பிரயோகிக்க முடியும். முக்கியமாக வாகன சாரதிகள் மற்றும் உதை பந்தாட்ட வீரர்களுக்கு காலில் பெருவிரல் இருத்தல் பெரும் பலமே.

அண்மையில் வாகனத்தின் (Manual transmission vehicle) சாரதி ஒருவர் அதுவும் முந்தைய விபத்தின் காரணமாக தனது வலது கால் பெருவிரலை இழந்த ஒருவர் விபத்தினை ஏற்படுத்தி இருந்தார். ஒருசில வினாடிகளில் அவரினால் எவ்வாறு ஓர் பலமான விசையினை கொடுத்து அதிவேகமாக செல்லும் வாகனத்தினை நிறுத்த முடியும் என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.
இலங்கை போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான சாரதிகள் ” நான் சப்பாத்து அணிந்து வாகனம் செலுத்துவேன்” போன்ற பொய் வாக்குறுதிகளை இலஞ்சத்தினை கொடுத்து இலகுவாக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுகொள்ளலாம் அல்லது புதுப்பித்து கொள்ளலாம் என்பது கவலை தரும் விடயம் ஆகும்.
முற்றும்

Netharshanamana unmai sir
Congratulations
LikeLike