ஆபத்தான பயணங்கள்

உலக சுகாதார நிறுவனம் மோட்டார் சைக்கிள், ஓட்டோ போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்பவர்களை “பாதிக்கப்படக்கூடிய வீதி பயனாளர்கள் (vulnerable road users)” என்று வகைப்படுத்தியுள்ளது. இதன் அர்த்தம் மேற்குறித்த வாகனங்களில் பிரயானிப்போர் அல்லது அவற்றின் ஓட்டிகள் வீதி விபத்தின் பொழுது அதிகளவு காயமடைவதற்கு அல்லது மரணமடைவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனபதே ஆகும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது போக்குவரத்து கொள்கையில் மேற்குறித்த வாகனங்களின் பாவனையை தமது நாடுகளில் ஊக்குவிக்காது ஏனெனில் பாதிக்கப்படப்போவது தமது நாட்டு மக்கள் என்ற படியாலேயே ஆகும். முக்கியமாக மேற்குறித்த வாகனங்களை கொள்வனவு செய்ய, பாவிக்க தடை செய்யப்பட்டிருக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இலகுவில் பெறமுடியாது  அல்லது அதிகளவு வரி விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் நிரந்தர போக்குவரத்து கொள்கை இல்லை மற்றும் வறிய நிலைமை காரணமாக மேற்குறித்த வாகனங்களின் இறக்குமதி மற்றும் பாவனை ஊக்குவிக்கப்டுகின்றது.    

நம்ம பெண்களில் பலருக்கு உள்ள பிரச்சனை மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பிரயாணம் செய்யும் பொழுது எவ்வாறு இருந்து பயணிப்பது என்பதே அதாவது ஒருபக்கமாக கால்களினை போடுவதா அல்லது இருபக்கமுமாய் போடுவதா என்பதே. குட்டை பாவாடை மற்றும் சேலை  அணிப்பவர்களுக்கு இருபக்கமும் கால்களை போட்டவாறு பிரயாணிப்பது கடினமாக இருக்கலாம் . மேலும்  பெண்களில் பலர் தங்களின் மேற்கால் அல்லது தொடை  தெரிந்து விடும் என்பதற்காக கால்கள் இரண்டையும் ஒரே பக்கமாய் வைத்தே பிரயாணம் செய்கின்றனர். இது உண்மையில் ஆபத்தானது ஏனெனில் இவர்கள் சடுதியான பிரேக் பிரயோகத்தின் பொழுது மோட்டார் சைக்கிளில் இருந்து வீதியில் விழக்கூடிய ஆபத்துண்டு. பொதுவாகவே மோட்டார் சைக்கிள் இலகுவில் சமநிலை குழம்ப கூடியது அவ்வாறான நிலைகளில் மோட்டர் சைக்கிளின் பின்புறத்தில் ஒரே பக்கமாக கால்களினை வைத்திருக்கும் பிரயாணி இலகுவில் விழுந்து விடுவார்.  மேலும் அவ்வாறு எதிர்பாராத விதத்தில் விழும் பொழுது பாரதூரமான காயங்கள் ஏற்படலாம். சில வேளைகளில் எதிர்திசையில் வரும் வாகனம் வீழ்ந்த நபரின் மீது ஏறிச்செல்லலாம். 

சில இதுபற்றி இலங்கையின் மோட்டார் வாகன சட்டம் ஏதாவது சொல்கின்றதா?

 இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஓர் பிரயாணி மோட்டார் சைக்கிளில் கால்களை இருபக்கமும் வைத்தவாறே பிரயாணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றது . தென்னிலங்கையில் பொதுவாக போக்குவரத்து பொலிஸார் இதனை கடுமையாகக் பார்த்துக் கொள்வர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுவாக இதனைக் கண்டு கொள்வதில்லை.

(Motor Traffic Act. Section 158: Pillion riding: The driver of a motor cycle which has no side-car attached thereto shall not carry more than one person on the cycle when it is used on a highway, and such person shall not be carried otherwise than sitting astride the cycle on a seat securely fixed thereto behind the driver’s seat.)

எனவே தகுந்த ஆடைகளை அணிந்து மோட்டார் சைக்கிளின் இருபக்கமும் கால்களை வைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதன் மூலம் மோட்டார் சைக்கிள் ஒட்டியின் உயிரையும் எமது உயிரையும் பாதுகாப்போம்.

நன்றி   

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.