எப்ஸ்டீனின் மரணம்: தற்கொலையா? அல்லது கழுத்து நெரித்துக் கொலையா? சட்ட மருத்துவ பார்வையில் ஓர் அலசல்

2026-ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி, அமெரிக்க நீதித்துறைசுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை (Epstein Files) வெளியிட்டது. ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்’ கீழ் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்களில், ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நபர்களின் பெயர்கள் மற்றும் பயண விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் பின்னர் எப்ஸ்டீனின் மரணம் தொடர்பாக பல்வேறு வாத பிரதி வாதங்கள் இடம் பெற்று வருகின்றது. அவரது குடும்பத்தின் சார்பில் எப்ஸ்டீனின் பிரேத பரிசோதனையில் பங்குபற்றிய வைத்திய நிபுணர் எப்ஸ்டீனின் மரணம் கழுத்தை நெரிக்கப்பட்டதினால் ஏற்பட்ட மரணம் என கூறியுள்ளமை பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது இந்த நிலையில் எப்ஸ்டீனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது, மரணம் தற்கொலையா அல்லது கொலையா என இப்பதிவு விளக்குகின்றது .

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கைது செய்யப்பட்டது முதல் அவர் இறந்தது வரையிலான காலவரிசை இதோ:

  • ஜூலை 6: டெட்டர்போரோ (Teterboro) விமான நிலையத்தில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிறார்களை கடத்தியது மற்றும் பாலியல் குற்றச்சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
  • ஜூலை 10: பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் இருந்ததாலும் சிறை அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் (Special Housing Unit – SHU) அடைத்தனர்.
  • ஜூலை 18: நீதிபதி எப்ஸ்டீனுக்கு பிணை வழங்க மறுத்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
  • ஜூலை 23: எப்ஸ்டீன் கழுத்தில் படுக்கை விரிப்பு துணியுடன் மயங்கிக் கிடந்ததை காவலர்கள் கண்டனர்; உடனடியாக அவர் 24 மணிநேர “தற்கொலை கண்காணிப்பில்” (Suicide Watch) வைக்கப்பட்டார்.
  • ஜூலை 24: அவர் தற்கொலை கண்காணிப்பில் இருந்து நீக்கப்பட்டு, மனநல கண்காணிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
  • ஜூலை 30: அவர் மீண்டும் பழைய தனிமைப்படுத்தப்பட்ட  பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு விதிகளின்படி அவருடன் மற்றொரு கைதி (Cellmate) தங்கியிருக்க வேண்டும்.
  • ஆகஸ்ட் 10 (காலை 6:39): நியூயார்க் டவுன்டவுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எப்ஸ்டீன், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்  
  • ஆகஸ்ட் 9 (காலை 8:00): எப்ஸ்டீனுடன் இருந்த கைதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் எப்ஸ்டீன் அறையில் தனியாக இருந்தார் (இது சிறை விதிமீறல் ஆகும்).
  • ஆகஸ்ட் 9 (இரவு 10:30): காவலர் கடைசியாக எப்ஸ்டீனின் அறைப் பகுதிக்குச் சென்ற நேரம் இதுவே. அதன்பின் அடுத்த நாள் காலை வரை யாரும் அங்கு செல்லவில்லை.
  • ஆகஸ்ட் 10 (நள்ளிரவு 12:00 – காலை 6:30): காவலர்கள் டோவா நோயல் மற்றும் மைக்கேல் தாமஸ் ஆகியோர் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் செய்ய வேண்டிய சோதனைகளைச் செய்யத் தவறினர். பின்னர் தாங்கள் பொய் கணக்கு எழுதியதை ஒப்புக்கொண்டனர்.
  • ஆகஸ்ட் 10 (காலை 6:30): எப்ஸ்டீன் தனது அறையில் படுக்கை விரிப்பால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் அசைவற்றுக் கிடப்பதை காவலர்கள் கண்டனர்.
  • ஆகஸ்ட் 10 (காலை 6:33): அபாய மணி ஒலிக்கப்பட்டது. தாங்கள் சோதனைகளைச் செய்யாமல் “தவறு செய்துவிட்டதாக” காவலர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதிகாரப்பூர்வ உடற்கூறாய்வு அறிக்கையின்படி, எப்ஸ்டீனின் மரணம் “தூக்கிட்டுத் தற்கொலை” (Suicide by hanging) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், எப்ஸ்டீன் குடும்பத்தாரால் நியமிக்கப்பட்ட தடயவியல் நிபுணர் பின்வரும் சந்தேகங்களை எழுப்பி  இது கொலையாக இருக்கலாம் என்று கூறுகின்றார் அந்த விவரங்கள் இதோ

1. கழுத்து எலும்பு முறிவுகள் (Neck Fractures)

எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன. குறிப்பாக, நாக்குக்கு அடியில் உள்ள ஹையாய்டு எலும்பு (Hyoid bone) மற்றும் தைராய்டு குருத்தெலும்பின் (Thyroid cartilage) இரண்டு பக்கங்களும் உடைந்திருந்தன.

எப்ஸ்டீன் குடும்பத்தாரால் நியமிக்கப்பட்ட தடயவியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் பேடன், தனது 50 ஆண்டு கால அனுபவத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒருவருக்கு இப்படி மூன்று எலும்புகள் உடைவதை தான் பார்த்ததில்லை என்று கூறினார். இது ஒருவரை கழுத்தை நெரித்துக் கொல்லும் போது (Homicidal strangulation) ஏற்படும் காயம் போன்றே இருப்பதாக அவர் வாதிடுகின்றார்.

மேலும் அவர் வாதிடும் பொழுது,  எப்ஸ்டினின் உடல் கால் தரையினை தொடும் படி இருந்த நிலையிலேயே அதாவது பகுதியளவிலான தூக்கில் தொங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டது. இதில் பகுதியளவான உடல் நிலையே கழுத்தில் நெருக்கும் விசையினை உஞற்றும் இதன் காரணமாக கழுத்து எலும்புகள் உடைவதற்கான சாத்தியக்கூறு குறைவாக இருக்கும்

 

2. கழுத்தில் இருந்த தழும்பு (Ligature Mark)

பொதுவாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு, கயிறு தாடைக்குக் கீழே மேல்நோக்கிச் செல்லும். ஆனால், எப்ஸ்டீனின் கழுத்தில் படுக்கை விரிப்பால் ஏற்பட்ட தழும்பு, கழுத்தின் நடுப்பகுதியில் நேராக இருந்தது. ஒருவரை கயிறு அல்லது கம்பியால் பின்னால் இருந்து நெரித்துக் கொல்லும் போதுதான் தழும்பு கழுத்தின் நடுவே நேராக அமையும் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

3. உயிரியல் ஆதாரங்கள் இல்லாமை (Lack of Evidence)

எப்ஸ்டீனின் கழுத்தில் ரத்தக் கறைகள் இருந்தன, ஆனால் அவர் கழுத்தை நெரிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் படுக்கை விரிப்பில் ரத்தக் கறைகள் இல்லை. இது அந்த விரிப்புதான் உண்மையில் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியது.

சட்ட மருத்துவ விளக்கம்

1.கழுத்து எலும்புகள் ஏன் முறிந்தன

    வயது முதிர்ந்தவர்களுக்கு (எப்ஸ்டீனுக்கு 66 வயது) கழுத்து எலும்புகள் பலவீனமாக இருப்பதால், தற்கொலை செய்து கொள்ளும்போதும் அரிதான நிகழ்வாக இத்தகைய முறிவுகள் ஏற்படலாம். மேலும் வயதாகும் பொழுது கழுத்தில் உள்ள மேற்குறித்த கசி இலைய எலும்புகள் கல்சியம் படிவடைவதன் காரணமாக எலும்பாக மாற்றமடையும் இந்நிலையில் இவை இலகுவாக முறிவடையலாம்

    2. போராட்டத்திற்கான அறிகுறிகள் இல்லை (No Defensive Wounds)

    எப்ஸ்டீனின் கைகளில் காயங்களோ, நகங்கள் உடைந்தோ அல்லது அவர் யாரையாவது தாக்கியதற்கான அடையாளங்களோ இல்லை.  

    3. இரத்த பரிசோதனை முடிவுகள்

    இரத்த பரிசோதனையின் பொழுது அவர் உடலில் மயக்க மருந்துகளோ அல்லது விஷமோ கொடுக்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை.

    எனவே, ஒரு போராட்டமின்றி அவரைக் கொன்றிருக்க வாய்ப்பில்லை என்று விசாரணை அமைப்பு (FBI) முடிவு செய்தது.சிறையில் கேமராக்கள் வேலை செய்யாதது மற்றும் காவலர்கள் தூங்கியது போன்ற பல குளறுபடிகள் இருந்தாலும், உடற்கூறாய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இது தற்கொலை என்றே இறுதி செய்யப்பட்டது.

    Leave a comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.