“சிறுவரில் ஒரு குற்றத்தினை  நிறுத்துவது என்பது  ஒரு உயிரை காப்பாற்றுவது”

குற்றம் என்பது ஒரே நாளில் உருவாகும் முடிவு அல்ல; அது ஒரு நீண்ட பயணம். முதலில் ஒரு சிறிய குற்றம்  மூலம் தான் தொடர் குற்றம் மற்றும் பாரிய குற்றம் ஆரம்பம் ஆகின்றது . அந்த முதல் குற்றம் மனத்தில் உள்ள அறநெறி தடையை உடைத்து விடுகிறது. “நான் இதைச் செய்துவிட்டேன், ஒன்றும் ஆகவில்லை” என்ற எண்ணம் மனதில் பதிகின்றது. இதுவே முதல் படி ஒரு முறை தவறு செய்தால்,அடுத்த முறை செய்வது எளிதாகிறது. பின்னர் மனம் தன்னை நியாயப்படுத்த மனித மனம் (Cognitive Dissonance) பல காரணங்களை உருவாக்குகிறது. உதாரணமாக  “அது அவசியம் தான்”, “எல்லோரும் இப்படித்தான் செய்கிறார்கள்” என்று. இதனால் குற்றம்  → நியாயம் ஆகிறது. இதுவே மிக ஆபத்தான கட்டம்.

தவறு செய்தவன், தன்னைப் புரிந்துகொள்ளும் மனிதர்களைத் தேடுவான். அப்போது தவறை ஊக்குவிப்பவர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள் நண்பர்களாக மாறுவார்கள் “நாம்தான் சரி – சமூகம் தான் தவறு” என்ற எண்ணம் உருவாகும். அடுத்து சமூகக் கற்றல் தொடங்குகிறது. ஒரே மாதிரி சிந்தனை கொண்டவர்கள், இரகசிய உறவுகள், குற்றங்களை ஊக்குவிக்கும் உற்றார், உறவினர்கள் மற்றும் சமூகம் காரணமாக “நாம் vs சமூகம்” என்ற மனநிலை உருவாகிறது. சட்டப்படி வாழும் உலகம் வெளிப்புறமாக மாறுகிறது. பல நேரங்களில் இரண்டாவது குற்றம் லாபத்திற்காக அல்ல, முதல் குற்றத்தை மறைக்கவே செய்யப்படுகிறது.

முதல் தடவை உரிய ஆவணம் இன்றி வாகனம் செலுத்துதல்  → பொலீசாரிடம் பிடிபடல்  → முதல் தடவை குற்றத்தில் இருந்து தப்ப பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்தல்  → எவ்வித குற்ற உணர்வும் இன்றி தொடர்ச்சியாக குற்றம் செய்தல் உருவாக்கப்படுகின்றது மற்றும் குற்றம் மறைக்கப்படுகின்றது. முதல் குற்றம் மறைக்க, இன்னொரு குற்றம் செய்ய வேண்டி வரும். இப்போது மனிதன் குற்றம் செய்கிறான் லாபத்திற்காக அல்ல – தப்பிக்க.

Skinner கூறிய வலுவூட்டல் கோட்பாடு (Reinforcement Theory) படி, குற்றம் பலன் தரும் போது, தண்டனை தவிர்க்கப்படும் போது, மேலும் ஊரார், உறவினர் பாராட்டும் பொழுது அல்லது கவனிக்கப்படாமல் விடும் பொழுது அந்த குற்றங்கள் மீண்டும் மீண்டும் செய்யப்படும். குற்றம் → பலன் என்ற சமன்பாடு மனதில் பதிகிறது. சமூகத்தில் “குற்றவாளி” என்ற அடையாளம் ஒட்டப்பட்டால், வேலை வாய்ப்பு குறையும், மரியாதை இழக்கும். அதனால் “நான் ஏற்கனவே குற்றவாளி தான்” என்ற எண்ணம் வலுப்பெற்று, குற்றம் வாழ்க்கை முறையாகிறது. மேலும் குற்ற செயல்களினால் இலகுவாக உடல் வேதனையின்றி கிடைக்கும் வெகுமதி (பணம் அல்லது பொருள் ) மேலும் குற்ற செயல்களை செய்ய தூண்டும் . குற்றம் செய்து பணம் கிடைத்தால் தண்டனை வரவில்லை என்றால் மனம் கற்றுக்கொள்கிறது.“இது வேலை செய்யும் வழி” பயம் குறைகிறது துணிச்சல் அதிகரிக்கிறது.

சிக்கிய திரும்ப முடியாதநிலை (Entrapment Stage)

குற்றத்தினை நிறுத்தினால் வெளிப்படும் ஆபத்து, குற்றத்தினை தொடர்ந்தால் மட்டுமே பாதுகாப்பு என்ற மனநிலை உருவாகிறது. இப்போது குற்றம் பணத்திற்காக அல்ல, வாழ்வதற்காக செய்யப்படுகிறது. தொடர்ந்து குற்றம் செய்வதால் மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன முக்கியமாக Amygdala மங்குகிறது, Dopamine அதிகரிக்கிறது, Prefrontal Cortex குறைகிறது. குற்றம் பழக்கமாகி, நரம்பியல் அடிமைத்தனமாகிறது. ஒரு கட்டத்தில் நிறுத்தினால் வெளிப்படுவேன் தொடர்ந்தால் தான் பாதுகாப்பு என்ற பயம் உருவாகும் அப்போது குற்றம் வாழ்க்கையாக மாறுகிறது.

ஆனால் சிலர் தொடர் குற்ற உலகில் இருந்து வெளியே வருகிறார்கள். Hirschi கூறிய சமூக கட்டுப்பாட்டு கோட்பாட்டின் (Social Control Theory) படி, திருமணம், குழந்தை, பொறுப்பு, சமூக ஆதரவு ஆகியவை பிணைப்பை வலுப்படுத்தி குற்றத் தொடரினை உடைக்கின்றன. மாறாக சிலர் கடுமையான குற்றங்களுக்கு செல்கிறார்கள் அவர்களில் உணர்ச்சி மங்கல், குற்ற உணர்வு இல்லாமை, அதிகார ஆசை ஆகியவை வன்முறையை அதிகரிக்கின்றன.

முடிவாக, குற்றம் என்பது ஒரே முடிவு அல்ல; அது ஒரு தொடர் வீழ்ச்சி. முதல் தவறு → நியாயப்படுத்தல் → சமூகச் சுற்றம் → மறைப்புக் குற்றங்கள் → அடையாள மாற்றம் → சிக்கிய நிலை என குற்றத் தொடர் உருவாகிறது.

சமூகத்தின் பொறுப்பு

✅ ஆரம்பத்தில் கண்டித்தல்

✅ சரியான வழிகாட்டல்

✅ மாற்றத்திற்கான வாய்ப்பு

❌ கேலி செய்யாதீர்கள்

❌ நிரந்தரமாக ஒதுக்காதீர்கள்

இதுவே குற்றங்களைத் தடுக்கும் உண்மையான வழி. தண்டனை மட்டும் போதாது ஆரம்பக் கட்டத்தில் தலையீடு அவசியம். ஒவ்வொரு பெரிய குற்றமும் ஒரு சிறிய தவறிலிருந்து தான் தொடங்குகிறது. அந்த முதல் தவறை நியாயப்படுத்தாதீர்கள் அத்துடன் சாதாரணமாக நினைக்காதீர்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.