கொரோனா – மரணத்தின் பின்னர்?

எது நடக்கக்கூடாது என்று பலரின் பிரார்த்தனையாகவும் விருப்பமாகவும் இருந்ததோ, அது நடந்துவிட்டது. ஆம் அதுதான் இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியின் மரணம். மருத்துவ உலகில் உள்ள எவருமே இவ்வாறான மரணங்களை விரும்புவதில்லை. இம்மரணத்தினை தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் கொரோனாவின் கோரமுகத்தினை நாம் பார்க்கலாம்.

New coronavirus cases jump sharply in Europe, with Italy worst hit ...இப்பதிவில் இலங்கையில் கொரோனா நோய் உள்ளது என அல்லது இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால் அடுத்து அவரது உடல்  என்ன என்ன செயற்பாட்டு முறைகளுக்கு உள்ளாகும் என விபரிக்கப்படுகின்றது.

  1. கொரோனா நோய் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டவர் இறந்தால்

மரண விசாரணையோ, பிரேத பரிசோதனையோ அல்லது உடலை பதனிடல் போன்ற செயற்பாடுகள் எதுவுமே நடைபெறாது. வைத்தியசாலையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இறந்தவரின் உடலினை  நெருங்கிய உறவினர்கள் பார்வையிடலாம் அதன் பின்னர் உடல் சீல் செய்யப்பட்டு 24 மணி நேரத்தினுள் அடக்கம் செய்யப்படும்.உடலானது வீடு கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

  1. கொரோனா நோய் இருக்கலாம் என சந்தேகிப்படுபவர் இறந்தால்

இங்கு கொரோனா நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர் யாரென்றால் இரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் கொரோனா நோய் இருப்பதனை உறுதிப்படுத்த முன்னர் இறப்பவர்கள் மற்றும் நோயாளியின் குணம் குறிகள் மற்றும் நெஞ்சு கதிர் வீச்சு படங்கள் போன்றன கொரோனா நோய் அவருக்கு இருப்பதனை  உணர்த்தும் நோயாளிகள்

இவர்களுக்கு தேவை ஏற்பட்டால் மரண விசாரணை மேற்கொள்ளப்படும். பொதுவாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு அவசியம் எனில் உடலின் வெளிப்புற பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படும். உடலினை பதப்படுத்தல் செயன்முறைகள் எதுவுமே இல்லை. . வைத்தியசாலையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இறந்தவரின் உடலினை  நெருங்கிய உறவினர்கள் பார்வையிடலாம் அதன் பின்னர் உடல் சீல் செய்யப்பட்டு 24 மணி நேரத்தினுள் அடக்கம் செய்யப்படும்.உடலானது வீடு கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

மேற்படி இருவகையில் இறப்பு நடைபெற்றாலும்  இறப்பின் பின்னர்

  1. உடலினை கழுவி சுத்தம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
  2. உடலினை புதைக்க அல்லது எரிக்க அனுமதி அளிக்கப்படும்.
  3. புதைப்பதாயின் 6 அடி ஆழமான குழியினுள் புதைக்க வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது இறந்தவரின் உடல் உடல் பையினால் சுற்றப்பட்டு சீல் செய்யப்பட்டிருக்கும் மேலும் சில சந்தர்ப்பத்தில் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியானது சீல் செய்யப்பட்டிருக்கும். புதைக்கப்பட்டிருக்கும் இடம் ஆனது இனம் காணக்கூடிய வகையில் அடையாளப்படுத்தப்படும்
  4. உடல் தகனத்திர்ற்கு போலீசார், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர் ஆகியோர் மேற்பார்வை செய்வர்

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இறந்தவரின் உடலினை தகனம் செய்யலாம் அல்லது புதைக்கலாம். சில மக்கள் மத ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் உடலினை தகனம் செய்ய விருப்பபுவதில்லை. இந்நிலையில் யாரவது வைத்திய அதிகாரிகள் கட்டாயம் தகனம் செய்யவேண்டும் என வற்புறுத்தினால் மேலதிகாரிகளுக்கு பொதுமக்கள் முறையிடலாம்.

இப்பதிவானது சாதாரண பொதுமக்களுக்கு விளங்கும் வகையில்  சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையினை  தழுவி எழுதப்பட்டது. மூலப் பிரதியினை பின்வரும் லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளலாம்  http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/covid-19-cpg_march-2020-moh-sl.pdf

                                                            முற்றும்

கொரோனாவும் சட்டமும்

கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியான முறையில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் அண்மையில் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில், அவர்களை விமான நிலையத்தில் தனிமைப் படுத்த முயன்ற பொழுது அவர்கள் பலவந்தமாக தப்பி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் கொரோனா நோயினை வேண்டும் என்றே பரப்புவர்களுக்கு எதிராக இலங்கையில்  தற்பொழுதுள்ள எவ்வகையான சட்ட திட்டங்கள் மூலம் முறையாக நடவடிக்கை எடுக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

hqdefault

1.தொற்று நோய்கள் தொடர்பான தனிமைப்படுத்தல் சட்டம் (Quarantine and Prevention of Diseases Ordinance.)

இந்த சட்ட மூலம் இலங்கையில் உள்ள ஓர் மிக பழமையான சட்ட ஏற்பாடு ஆகும். இது 1897 ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இசசட்டத்தின் பிரகாரம்

இலங்கையின் ஏதாவது துறைமுகம் அல்லது விமான நிலையம் ஒன்றினுள் நுழையும் கப்பல் அல்லது விமானம் ஒன்றில் இருக்கும்  தொற்று நோய்க்கிருமிகளினை அழித்து கிருமி நீக்கம் செய்யவும் அவ்வாறே அவற்றில் கொண்டுவரப்பட்டிருக்கும் பொருட்களினை கிருமி நீக்கம் செய்யவும் அதிகாரம் அளிக்கின்றது. மேலும் இச்செயற்ப்பாடுகளுக்கு தேவையான பணத்தினை அறவிடவும் வழிவகை செய்கின்றது

மேலும் ஓர் கப்பலினை அல்லது விமானத்தினை விட்டு பிரயாணிகள் மற்றும் பொருட்கள் வெளியேற்றப்படுவதினையும் தடை செய்கின்றது. மேலும் தொற்று உள்ளது என சந்தேகிக்கப்படும் பொருட்களை கைப்பற்றவும் அவற்றினை உரிய அனுமதி பெற்ற தரப்பு அழிக்கவும் வழிவகை செய்கின்றது.

சட்ட ரீதியான முறையில் நோய் தடுப்பு மையங்களை அமைக்கவும், முக்கியமாக நோயாளிகளை தடுத்து வைத்து சிகிச்சை அளிக்கவும் மற்றைய பிராயணிகளை தடுத்து வைத்து மருத்துவ கண்காணிப்பு செய்யவும் வழிவகை செய்கின்றது. தொற்று நோய் உள்ள நோயாளிகளை வேறு இடத்திற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கவும் முடியும்.

இவ்வாறே சந்தேகத்திற்குரிய கப்பலினை அல்லது விமானத்தினை சோதனை இடவும் இச்சட்டம் அனுமதி அளிக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நோயாளிகள் தங்கியிருக்கும் கட்டிடத்தினையும் சோதனையிட முடியும்.

wp-15841865674796858912672646381447.jpg

   இனி முக்கியமான விடயமான இச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் எவை என பார்த்தால் முக்கியமாக குறித்த நபர் தனிமைப்படுத்தலுக்கும் அதனைத்தொடர்ந்து சிகிசசைக்கும் ஓத்துழைக்க வேண்டும் அத்துடன் அதிகாரமளிக்கப் பட்ட உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவிக்க கூடாது . அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதிகபட்சமாக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையுடன் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை தண்டமாக அறவிடப்படும்.

2. அடுத்து முக்கியமாக இலங்கையின் தண்டனை சட்ட கோர்வையின் 262, 263 ம் பிரிவின் ( 262 – Negligent act likely to spread injection of any disease dangerous to life, 263 – Malicious act likely to spread infection of any disease dangerous to life.) பிரகாரம் ஒருவர் தனக்கு ஓர் குறித்த நோய் நிலைமை உள்ளது என்பதினை மறைத்து அதனை மற்றவருக்கு பரப்புவதன் மூலம் மற்றவரின் உயிருக்கு பங்கம் விளைவித்தல் ஓர் குற்ற செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறன குற்றங்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை உண்டு அத்துடன் சந்தேக நபர்கள் நீதிமன்றின் பிடியாணை எதுவும் இன்றி கைது செய்யப்படலாம்.

மேலும் 264ம் (Disobedience to a quarantine rule) பிரிவு நோயாளர் தனிமை படுத்தல் சட்டத்திர்ற்கு கட்டுப்பட்டு ஒழுக்காதவர்களை தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.

3. இது தவிர தண்டனை சட்ட கோர்வையின் 310ம் பிரிவின் பிரகாரம் வேண்டும் என்றே இன்னொருவருக்கு நோயினை பரப்பில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும் (Hurt – section 310 of the penal code – Causing bodily pain, disease or infirmity)

4. இது தவிர போலீஸ் சட்டத்தின் பிரகாரம் கொரோனா பற்றிய பொய் செய்திகளையும், சமூகத்திற்கு தீங்கு இளைக்கும் வதந்திகளை பரப்புபவர்களை கைது செய்ய முடியும்.

5. தற்பொழுது புத்தளம், சிலாபம்…போன்ற பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டமும் ஒருவகையில் கொரோனா நோய் பரவுவதினை குறைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

இவ்வாறு பல சட்டங்கள் இருந்து பொறுப்பற்ற விதத்தில் கொரோனா நோயினை பரப்புபவர்களை கட்டுப்படுத்த முடியாமைக்கு முக்கிய காரணம் எம்மவருக்கு உள்ள சமூக அக்கறை அற்ற தன்மை என்றால் அது மிகை அல்ல.

                                                                       முற்றும்

கொரோனா – உயிரிழப்பு ஏன்?

இலங்கையிலும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. பயப்பீதி காரணமாக மக்கள் அதிகளவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பதுக்குகின்றனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றில் பலரும் கொரோனாவில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என பதிவுட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் எவ்வாறு இறப்பு ஏற்படுகின்றது, அது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.

wp-15841866321156732119278545175137.jpg

 

சாதாரணமாக தடிமலை (Flu) தோற்றுவிக்ககூடிய அண்ணளவாக 600 வகையான கொரோனா வைரசுக்கள் உள்ளன , உலகம் பூராக உள்ள அனைவரும் வாழ்நாளில் தடிமலினால் ஒருதடவையாவது  பாதிக்கப்படுகிறார்கள். பலர் ஆயுட்காலத்தில் நூற்றுக்கணக்கான முறை பாதிக்கப்படுகின்றார்கள், இவ்வாறு பாதிக்கப்படும் பொழுது அதனால்  ஏற்படும் மரணம் மிக மிக குறைவு , 10000 தடவை தடிமல் ஏற்படும் போது எத்தனை பேர் மரணிக்கின்றார்கள் என்பதை ,  10000 பேருக்கு கொரோனா ஏற்படும் போது எத்தனை பேர் மரணிக்கின்றார்கள் என்பதே சர்ச்சசைக்குரிய கேள்வி.

மேலே உள்ள படமானது கோரோனோவினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் நெஞ்சு பகுதிக்குரிய கதிர்ப்படமாகும். இதிலிருந்து நோயாளியின் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதினை நாம் பார்த்து அறிந்து கொள்ளலாம்

wp-15841865674796858912672646381447.jpg

கொரோனா நோயினை உண்டாக்கும் வைரசுவானது நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து தும்மும் போதும் இருமும் போதும்  வெளியேறும் சிறு திவலைகள் காற்றின் மூலம் மற்றையவரை அடைவதன் காரணமாக பரவுகின்றது. கொரோனா ஆனது மிக்க வீரியமாக பரவும் திறன் கொண்டமையினால், இந்த நோயினால் இறந்தவரின் உடலை நோயியல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு (pathological autopsy) உட்படுத்தி ஆராய்வதில் பல பிரச்சனைகள் உண்டு. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே (limited autopsy) உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆராய்ச்சி முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

முக்கியமாக இவ்வைரசுக்கள் மனிதனின் நுரையீரலில் நியூமோனியாவினை ஏற்படுத்துகின்றன. இதன் பொழுது எமது சுவாச சிற்றறைகளில் ஆரம்பத்தில் நீர்ப்பாயம் தேங்கும் (pulmonary odema) அதன்பின்னர் இரத்தம் தேங்கும் (diffuse alveolar hemorrhage) அதன் காரணமாக சூழலில் உள்ள ஓட்ஸிசன் ஆனது வினைத்திறன் மிக்க முறையில் எமது இரத்தத்துடன் சேராது. இதன்காரணமாக உடலின் பல்வேறு அங்கங்களில் ஓட்ஸிசன் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் தொழில்பாடு குறைவடையும். முக்கியமாக சிறுநீரகம், மூளை, இருதயம் போன்றவற்றின் செயற்பாடுகள் குறைவடையும். இறுதியாக மனிதனுக்கு இறப்பு ஏற்படும். கொரோனா வைரசுவின் வீரியம் மிக அதிகமாகும் ஒரு நாளிலேயே நோயாளியின் இரு நுரையீரலும் கடுமையான நியூமோனியா தாக்கத்திற்கு உள்ளாகும். lung-pathology-n

இவ்வாறு ஏற்படும் கொரோணவிற்கு மருத்துவ சிகிச்சை இல்லையா? கொரோனா வைரஸ் எனப்படுகின்ற covid-19 தொற்றானது குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகவே அறியப்படுகிறது. பெரும்பாலான நோயாளிகள் எதுவிதமான விசேட சிகிச்சை எதுவும் இன்றி குணமடைந்தாலும் சில நோயாளிகளுக்கு அதிதீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாகும். செயற்கை சுவாச இயந்திரம்(Medical ventilator), டயலைசிஸ் (Hemodialysis) எனப்படும் குருதி சுத்திகரிப்பு, நாளமூடு செலுத்தப்படும் திரவ சிகிச்சை போன்றவை தேவைப்படும். இவற்றைச் செய்வதற்கு போதிய உபகரணங்கள் தேவைப்படும். எமது சுகாதார சேவையால் கையாளக்கூடியளவு நோயாளர்கள் தொற்றுக்குள்ளாகும்போது குணப்படுத்தல் சாத்தியப்படும். அதிகளவான நோயாளர்கள் தொற்றுக்குள்ளாகும்போது மருத்துவ சேவைகள் செயலிழக்கும். அதன்பின் நிலைமை பாரதூரமாக கை மீறிப் போகக்கூடும். அத்துடன் இவ்வாறு கொரோனா நோயாளி ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் பொழுது சிகிச்சை காரணமாக அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு (complications) உள்ளாவர், உதாரணமாக  சில சந்தர்ப்பங்களில் புதிதாக அவர்களுக்கு நுரையீரலில் பக்ரீறியாக்களின் தொற்று ஏற்பட்டு (secondary bacterial infection) இறப்பு ஏற்படலாம்.  இது தவிர நோயாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் நோய் நிலைமையானது அதாவது இருதய நோய்கள், சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்றன கொரோனா காரணமாக தீவிரமடைந்து இறப்பினை ஏற்படுத்தும் சாத்தியமும் உள்ளது.
முற்றும்

 

உயிரை பறித்த உலக்கை வைத்தியம்

இன்றைய உலகத்தில் பல்வேறு பட்ட மக்கள் பல்வேறுபட்ட வைத்திய முறைகளை மேற்கொள்ளுகின்றனர். எமது நாட்டில் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி மருத்துவம்… போன்ற பல்வேறு பட்ட வைத்தியமுறைகள் தற்பொழுது மக்களால் பின்பற்றபட்டு வருகின்றன. அண்மையில் கூட நண்பர் ஒருவர் முந்தைய காலத்தில் இருந்த முறிவு, நெரிவு வைத்தியம் தற்பொழுது இல்லாமல் போய்விட்டதாக பெரிதும் குறைப்பட்டுக் கொண்டார்.

இனி விடயத்திற்கு வருவோம், அவனுக்கு 25 வயதுதான் ஆனால் அவனது முதுகு சிறுவயதில் இருந்து கூனி (Kyphosis) விட்டது. இதன் காரணமாக அவன் படிப்பினை இடை நடுவில் கைவிட நேர்ந்தது. மற்றைய சிறுவர்களுடன் கூட பெரிதாக சேர்வதில்லை. ஆரம்பத்தில் பெற்றோர் பல வைத்தியர்களை நாடினர் எல்லோருமே சத்திர சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என தெரிவித்து விட்டனர். அவனுக்கும் பெற்றோருக்கும் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த பயம் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று. இதன் காரணமாக அவர்கள் வைத்தியசாலை கிளினிக் செல்வதையே பல வருடங்களுக்கு முன்னர் நிறுத்தி விட்டனர். இந்நிலையில் தான் அவர்களின் உறவினர்கள் மூலம் ஓர் வைத்தியரின் தொடர்பு கிடைத்தது. அவ்வைத்தியர் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் பிரபல்யம் வாய்ந்தவர் அத்தோடு பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்தவர் என்ற சிபாரிசுவுடன். அவனும் பெற்றோரும் ஓர் நன்னாளில் அவ்வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்றனர். முதலில் அவ்வைத்தியர் ஏன் இவ்வளவு காலமும் தன்னிடம் வரவில்லை என கடிந்து கொண்டார். அதன்பிறகு தனது சிகிச்சை முறைகளை பற்றி விளக்கப்படுத்தினார்.
அதன் பின்னர் அவனை தனது சிகிசசை அறைக்கு அழைத்து சென்று மரத்தினால் ஆன கட்டிலில் முகம் குப்பற படுக்க வைத்தார். அதன் பின்னர் பலவகை தைலங்கள் தடவினார்கள். பின்னர் அவ்வைத்தியரும் அவரது உதவியாளரும் சேர்ந்து உலக்கையினை எடுத்து அவனது முதுகில் வைத்து பலமாக அழுத்தினார்கள். அவன் வேதனையில் துடித்தான். வைத்தியர் அவனுக்கு பல பகிடிகள் கூறியவண்ணம் மீண்டும் அழுத்தினார். அவன் வேதனையில் பலமாக கத்திய படி மயங்கி விட்டான். வைத்தியர் பதறியபடி அவனது முகத்தில் நீரினை ஊற்றினார். எதுவித சலனமும் இல்லை. பெற்றோர் பதறியபடி அவசர சேவை அம்புலன்ஸினை அழைத்தனர். அவர்கள் வந்தனர். அவர்கள் அவனை பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாக கூறினர்.

Image result for kyphosis

இச்சம்பவத்தின் பிறகு போலீசார் அவனது உடலை உடற் கூராய்வு பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். உடற் கூராய்வின் பொழுது அவ்வைத்தியர் அதிகமாக அழுத்தியதன் காரணமாக அவனது முதுகு எலும்பு விலத்தி அதன் அருகில் உள்ள தொகுதி பெரு நாடியினை (Aorta) காயப்படுத்தியதன் காரணமாக அவனது இரண்டு லிட்டர்க்கும் அதிகமான இரத்தம் வெளியேறி வயிற்று குழியினுள் வந்திருந்தமை கண்டறியப்பட்டது.

 

blunt-aortic-injury-1-728

இவ்வாறு உடற்கூற்றியல், உடற் தொழிலியல், நோயியல் போன்றவற்றின் துறைசார் அறிவு இல்லாமல் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பது நிச்சயம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தினை விளைவித்து விடும்.

HP PNG
இப்பதிவு மற்றைய வைத்திய முறைகளை பற்றி குறை கூறி ஓர் குறிப்பிட்ட மருத்துவ முறைதான் சிறந்தது அதனைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறவிழையவில்லை . மாறாக விஞ்ஞான ரீதியாக அற்று, பட்டறிவின் மூலம் அதாவது அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வைத்தியம் மூலம் எவ்வாறு மனித உயிருக்கு தீங்கு உண்டாகின்றது என்பது பற்றி விளக்குகின்றது.
முற்றும்

கிழக்கிற்கும் கொரனோ பரவும் ஆபத்து?

நாளுக்கு நாள் உலக நாடுகளில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் பலியாவோர் தொகை அதிகரித்து வருகின்றது அத்தோடு பல புதிய நாடுகளும் இவ்வைரசுவின் தாக்கத்திர்ற்கு உட்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பில் தொழுநோயாளர்களின் சிகிச்சை நிலையமாக அமைந்திருக்கும் மாந்தீவு வைத்தியசாலையிணை கொரனோ வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கை திருப்புபவர்களையும், பாதிக்கப்பட்ட வேறு வேறு வெளிநாட்டு நபர்களையும் அங்கு  தங்கி சிகிச்சை பெறும் நிலையமாக மாற்ற வேண்டும் என சில  வைத்திய அதிகாரிகள் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இச்செயற்பாடானது புத்திஜீவிகள் மத்தியில்  பலத்த சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது.

Quarantine என்ற ஆங்கில சொற்பதமானது  தொற்று நோய் பரவுவதினை தடுக்கும் முகமாக மக்களின் நடமாட்டத்தினை குறைத்தல் அல்லது மட்டுப்படுத்தல் என தமிழில் பொருள்படும். Quarantine என்பது Quaranta Giorni என்ற இத்தாலிய சொல்லினை அடிப்படையாக கொண்டே உருவாகியது. இதன் கருத்து நாற்பது நாட்கள் என்பதாகும். அதாவது முந்திய காலங்களில் ஓர் கப்பல் இத்தாலியினை அடையுமாயின் அவர்கள் அக்கப்பலில் உள்ளவர்களினை நாற்பது நாட்கள் தடுத்து வைத்த பின்னரே தமது நாட்டுக்குள் உள்நுழைய அனுமதிப்பர். இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஏதாவது தொற்று நோய் உள்ளதா என அவதானிப்பர், இருப்பின் அதற்கு சிகிச்சை வழங்குவர். அதன் பின்னரே தமது நாட்டிற்கு அனுமதிப்பர். தமிழில் quarantine என்பதினை தனிமைப்படுத்தப்பட்ட வைத்திய சாலை அல்லது விடுதி என அழைப்பதே சிறப்பானது.

 

quarantineக்கான பட முடிவுகள்

இவ்வாறான ஓர் நிலையில் மாந்தீவில் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்க முற்படுவது பின்வரும் சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது

  1. மாந்தீவு வைத்தியசாலை ஆனது ஆங்கிலேயரினால் தொழு நோயாளருக்கு கிசிச்சை அளிப்பதற்கென உருவாக்கப்பட்டது. அது ஓர் ஒதுக்கு புறத்தில், இலகுவில் அடையமுடியாது இடமாக அக்காலத்தில் இருந்தது. இதன் மூலம் தொழு நோயாளர் வெளிஉலகத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் வெளிச்செல்வது தடுக்கப்பட்டது. தொழு நோய் அற்றவர் ஒருவர் தொழு நோய் உள்ளவர்களுடன் நீண்ட காலம் தொடர்பில் இருக்கும் பொழுது தான் அவருக்கு அந்த நோய் ஏற்படுகின்றது. ஆனால் கொரனோ வைரசுவின் தாக்கம் அவ்வாறு அன்று அது மிக இலகுவாக மற்றவருக்கு (highly contagious) பரவி விடுகின்றது. இதன் காரணமாகவே உலக நாடுகள் இந்த வைரசுவினை கண்டு அச்சம் கொள்கின்றன. இந்நிலையில் மாந்தீவு வைத்திய சாலையில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், சிற்றுழியர், ஆய்வுகூட வசதி மற்றும் தொற்று நீக்கும் வசதி போன்றன உரிய வசதிகள்  காணப்படுமா என்றால் நிச்சயம் இல்லை. மேற்குறித்த வசதிகள் செய்யப்பட்டால் கூட   சிறப்பு வைத்தியர்களின் (Virologist, Microbiologist and other specialist) மேற்பார்வை மற்றும் MRI (Medical Research Institute) நிறுவனங்களின் போன்ற ஆய்வுகூட வசதிகள் கொழும்பினை தளமாக கொண்டே கிடைக்கப் பெறுகின்றன. எனவே இவற்றினை பெறுவது பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் கொழும்பில் இருந்து வைத்தியர்கள் வருகை தந்தாலும் அவர்கள் வாராந்தம் ஒருசில நாட்கள் மட்டுமே தங்கி நிற்பர். அவர்களை நம்பி இத்தகைய சவால் மிக்க சிகிச்சையினை ஆரம்பிக்கலாமா?
  1. பொதுவாக இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகள் அல்லது முகாம்கள் விமான நிலையம் அல்லது துறைமுகம் போன்றவற்றினை அண்டியே அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் உள்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதினை குறைக்கும் முகமாகவே, இலங்கையிலும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன. அந்நிலையில் அவற்றினை தவிர்த்து மிக தொலைவில் இருக்கும் மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன ?
  2. இவ்வாறு தெரிவு செய்ததன் மூலம் அப்பிரதேச மக்களுக்கும் ஏன் அம்மாகாண மக்களும் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்து அதிகம் ஏன்னெனில் நோய்தொற்றடைந்தவர் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்பு துறைமுகம் போன்றவற்றில் இருந்து இவ்வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படுவர். அவ்வாறு கொண்டுவரப்படும் பாதை முழுவதுமே நோய் பரவும் சாத்தியம் உள்ளது.
  3. நோயாளிகளை தரைப் பாதை தவிர்ந்து உலங்கு வானுர்தி மூலம் கொண்டுவருவது சாத்தியப்பாடு குறைவானது. அத்துடன் ஓர் நோயாளி கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் இறப்பராயின் உடலை என்ன செய்வது? உடலினை உலங்கு வானுர்தி மூலம் கொண்டுசெல்வது சாத்தியம் அற்றது. இறந்த உடல் நிச்சயம் ஆபத்தானது. சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு இவ்வாறு கொரனோ தொற்றடைந்த அல்லது சந்தேகங்களுக்குரிய மரணங்களுக்கு எவ்விதமான உடற் கூராய்வு பரிசோதனைகளும் செய்ய வேண்டாம் என கண்டிப்பான அறிவுறுத்தல் வேறு விடுக்கப்பட்டுள்ளது
  4. இலங்கையில் ஏற்கனவே இவ்வாறு ஏற்படும் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென முல்லேரியாவில் IDH (Infectious Disease Hospital) என்ற வைத்தியசாலை பெரும் வசதிகளுடனும் உரிய வைத்திய நிபுணர்களுடனும் செயற்பட்டு வரும் நிலையில், மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?HP PNG
  5. ஏற்கனவே துறைமுகங்கள் மற்றும் விமனநிலையங்கள் போன்றவற்றில் செய்யப்பட்டு வரும் இத்தகைய வைத்திய சாலைகள் போன்றவற்றின் பங்களிப்பு என்ன ?

இவ்வாறான திடீர் நடவடிக்கையினால் நிச்சயம் பாதிக்கப்படுவது மக்கள் தான். மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வைத்தியர்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குறியாகின்றது. அவர்கள் மக்களுக்கு உண்மையில் நன்மை செய்ய விழைகின்றனரா? அல்லது மறைமுகமாக தாம் நன்மையடைய முற்படுகின்றனரா? என்ற கேள்விக்கான பதிலே முக்கியமானது ஆகும்.

முற்றும்

சாரதி தப்பி ஓட முடியாமைக்கு காரணம் என்ன?

அண்மையில் வவுனியாவில் ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கியிருந்த சாரதி விஷமிகளால் வைக்கப்பட்ட தீயில் கருகி உயிரிழந்தமை யாவரும் அறிந்ததே. சாதாரணமாக பாரிய விபத்து சம்பவம் ஒன்றினை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து சாரதி மற்றும் முன்னிருக்கையில் இருப்பவர் உடனடியாக வாகனத்தினை விட்டு வெளியேறுவது ஓர் கடினமான செயலாகவே இருந்து வருகின்றது. ஏன் இவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும். ஒவ்வோர் காரணங்களும் பின்வருமாறு
1. வாகனத்தின் முன்பகுதி (dash board) சாரதியின் கால்களினை தாக்கி எலும்பு முறிவு உட்பட பலத்த காயங்களினை விளைவித்திருக்கும் மற்றும் இரு கால்களும் வாகனத்தின் உடைந்த பகுதியில் வசமாக சிக்கி இருக்கும்.

driver injury patternக்கான பட முடிவுகள்

2. நவீன வாகனங்களில் வாகனத்தின் கதவானது விபத்தினை தொடர்ந்து இலகுவில் திறபடாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வீதி விபத்துக்களின் பொழுது வாகனங்கள் உருளும் பொழுது, வாகனத்தில் உள்ளிருப்பவர்கள் வெளியே தூக்கி எறியப்படாதவாறு வாகனங்களின் கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவும் ஓர் வகை பாதுக்காப்பு ஏற்பாடு தான். ஆனால் தீ பரவும் சமயங்களில் பிரயாணிகளுக்கு மற்றும் சாரதிக்கு ஆபத்தானதாக மாறிவிடுகின்றது.
3. சாரதியின் கழுத்து பகுதியில் ஏற்படும் காயம். இது சட்ட மருத்துவத்தில் whip lash injury என அழைக்கப்படும். விபத்துக்களின் பொழுது ஏற்படும் சடுதியான அமர்முடுகல் காரணமாக ஏற்படுகின்றது. இதன் காரணமாக கழுத்து பகுதியின் உள்ள தண்டு வடம் பாதிக்கப்படுவதன் காரணமாக உடனடியாகவே குறித்த நபரின் கை மற்றும் கால் ஆகியன பாரிசாவாத நிலைக்கு உள்ளாவதன் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

whiplash injuryக்கான பட முடிவுகள்

4. சிறிது நேரம் ஏற்படும் மயக்கமான நிலை (transient loss of consciousness) அதாவது தலையில் பலமான மொட்டை விசை ஒன்று தாக்கும் (blunt force) பொழுது அவருக்கு தலையில் எவ்விதமான காயங்களும் ஏற்படாது ஆனால் சிறிது நேரம் மயக்க நிலையில் இருப்பார். இவ்வாறான நிலை சட்ட மருத்துவத்தில் concussion என்றழைக்கப்படும். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

concussionக்கான பட முடிவுகள்

5. தலைப்பகுதியில் ஏற்படும் பாரதூரமான காயங்களினால் (Severe traumatic brain injury) ஏற்படும் நினைவிழந்த நிலை காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
6. மதுபானம் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை பாவித்து இருந்தால் அதன் தாக்கம் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

HP PNG

7. வாகனம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் இருந்து பல்வேறுபட்ட மனிதனின் சுவாசத்திற்கு உகந்தது அல்லாத வாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்களினை அவர் சுவாசிப்பதன் காரணமாக அவர் மயக்க நிலைமைக்கு உள்ளாவர். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
8. சாரதிக்கு விபத்தினை தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமைகளான மாரடைப்பு போன்றன தீவிரமடைந்த நிலையில்

முற்றும்

சாரதி உயிரோடு எரிக்கப்பட்டாரா?கண்டுபிடித்தது எவ்வாறு?

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதேவேளை வாகனத்திற்குள் சாரதி சிக்கியிருந்த நிலையில், சிலரினால் பஸ்ஸிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது எனவும் இதன் காரணமாக சாரதி இறந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் விபத்தினை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகவே சாரதிகள் வாகனத்தினை நிறுத்தாமல் நேரே போலீஸ் நிலையம் சென்று விடுவதும் உண்டு.

HP PNG
இப்பதிவு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது இறந்த நிலையில் எரிக்கப்படாரா? என்று எவ்வாறு ஓர் சட்ட வைத்தியர் ஒருவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார் என்பதினை விளக்குகின்றது.
சாதாரணமாக ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருக்கும் மற்றும் நுரையீரல் சுருங்கி விரிவதன் மூலம் காற்றினை உள்ளிழுத்து வெளித்தள்ளிய வண்ணம் இருக்கும். இவ்வாறு வாகனம் ஒன்று எரியும் பொழுது அதில் உள்ள இறப்பரினால் ஆன மற்றும் பிளாஸ்ட்டிக்கினால் ஆன பகுதிகள் எரியும். இதன் பொழுது அவற்றில் இருந்து பல்வேறு பட்ட நச்சுவாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்கள் மனிதனுக்கு கடுமையான உடல்நலக்கேட்டினை விளைவிக்க வல்லன. இவ்வாயுக்களில் முக்கியமானது கார்பன் மோனோக்சைட் என்பதாகும். இவ்வாயு நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட 200 மடங்கு விரைவாக எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும் இதன் காரணமாக ஓட்ஸிசன் காவுதல் தடைப்பட இறப்பு நிகழும்.
எனவேதான் உடற் கூராய்வு பரிசோதனையில் இறந்தவரின் இரத்த மாதிரி பெறப்பட்டு அதில் கார்பன் மோனோக்சைட் மற்றும் ஏனைய வாயுக்கள் இருக்கின்றனவா என பரிசோதிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பட்ஷத்தில் அவர் தீ பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்திருக்கின்றார் என முடிவு செய்யப்படும்.
இறந்த பின்னர் இருதயம் துடிக்காது மற்றும் நுரையீரல் சுருங்கி விரியாது இதன் காரணமாக மேற்குறித்த வாயுக்கள் இரத்தத்துடன் இரசாயன ரீதியில் சேராது இருக்கும்.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கார்பன் மோனோக்சைட்டு வாயு சேர்வதினால் இறந்த ஒருவரின் உடலின் தோல் மற்றும் அங்கங்கள் சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும். இதன் மூலம் குறித்த நபர் உயிருடன் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்படும். இவை தவிர இறந்தவரின் தொண்டை பகுதியில் அவர் சுவாசம் மேற்கொண்டதன் காரணமாக கரி போன்றன படிந்திருக்கின்றனவா எனவும் பரிசோதிக்கப்படும்.

carbon monoxide poisoning color of skinக்கான பட முடிவுகள்

soot in larynx autopsy casesக்கான பட முடிவுகள்

மேலுள்ள படம் ஆனது ஒருவர் உயிருடன் எரிந்த பொழுது அவர் சுவாசித்ததன் காரணமாக கரியானது எவ்வாறு அவரின் சுவாச தொகுதியில் படிந்திருப்பதினை விளக்குகின்றது.

மேற்குறித்த செயற்பாடுகள் மூலம் ஒருவர் தீப்பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்தாரா அல்லது இறந்த நிலையில் எரிக்கப்பட்டாரா என்பதினை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

முற்றும்

அதிக கட்டணம் அறவிடும் வைத்தியர்கள் ???

அண்மையில் ஒருவர் தனது குழந்தையை காச்சல் காரணமாக ஓர் பிரபல தனியார் வைத்தியாலையில் அனுமதித்தார். சிகிச்சை முடிந்து வெளியேறும் பொழுது வழங்கப்பட்டிருந்த கட்டண சிட்டையில் அங்கு வைத்தியர்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்பட்டதக குறைப்பட்டுக் கொண்டார்.

வைத்தியர்கள், வழக்கு அறிஞர்கள், பொறியியலாளர்கள், பல்கலைகழக ஆசிரியர்கள்… போன்ற குறித்த துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தங்களின் சேவைக்காக அறவிடும் கட்டணமே தொழில்வாண்மை கட்டணம் (professional fee) ஆகும்.
நிபுணத்துவம் மிக்கவர்கள் எனப்படும் பொழுது குறித்த நபர் கலை, விஞ்ஞான துறைகளில் அல்லது வேறு ஏதாவது ஓர் துறையில் நாளாந்தம் தொழிலினை மேற்கோள்பவராகவும் அதில் அதில் பரந்துபட்ட திறமையான அறிவுடையவரகவும் இருப்பார்.
நிபுணர்கள் கட்டாயம் வைத்தியர்களாகவோ, பொறியியலாளர் ஆகவோ இருக்கக் வேண்டியதில்லை. அவர்கள் எந்தவொரு துறையில் சிறந்து விளங்கியவராகவும் இருக்கலாம் உதாரணமாக அழகுக்கலை நிபுணராக அல்லது சமையல் கலை நிபுணராக இருக்கலாம். மறுதலையாக தொலில்வான்மை மிக்க தொழில்களை செய்பவர்கள் எல்லோரும் திறமை மிக்கவராக இருக்கமாட்டார்கள். உதாரணமாக பல மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்பவர்கள் இருப்பார்கள், அவர்களின் ஒரு சிலரே சிறப்பு திறமை உடையவராக இருப்பர். அவர்களை நாடி அதிக வாடிக்கையாளர்கள் செல்வார்கள்.
இவ்வாறு தொழில்வாண்மை சேவை வழங்குநர் ஒருவர் சிறப்பு நிபுணராக இருக்கும் இடத்து அவர் தனது சேவைக்காக அதிக கட்டணம் அறவிடுவது வழமையான செயற்பாடே ஆகும். இதில் ஆச்சரியப்படுவதற்கோ அல்லது பொறாமை கொள்வதற்கோ எதுவும் இல்லை.
உதாரணமாக
1. சில பிரபல்ய சட்ட தரணிகள் வழக்குகளில் ஆஜராக்குவதற்கு
2. சில விசேட வைத்திய நிபுணர்களின் சேவையினை பெறுவதற்கு
3. சிறந்த கட்டிட வடிவமைப்பு கலைஞர் ஒருவரின் சேவையினை பெறுவதற்கு
4. ஏன் High profile பாலியல் தொழிலாளி ஒருவரின் சேவையினை பெறுவதற்கு
ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும். இங்கு வழங்கப்படும் சேவையின் தரத்தினை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அது எவ்வளவு நிமிடம் அல்லது நேரம் வழங்கப்பட்டது என கருதுவது தவறானது. அத்துடன் அது ஓர் விஞ்ஞான ரீதியான முறையும் அல்ல. தொழில்வாண்மையாளர் ஒருவர் சிறப்பு நிபுணராக இருக்கும் இடத்து அவர் மற்றையவர்களை விட அதிக கட்டணங்களை அறவிடுவர்.

professional chargeக்கான பட முடிவுகள்

என்னதான் பிரச்னை ?
பொதுவா சில தொழில்வாண்மை சார் அமைப்புக்கள் (professional bodies) தமது உறுப்பினர்கள் அறவிடவேண்டிய ஆகக்குறைந்த கட்டணத்தினை வரையறுத்துள்ளன. ஆனால் அறவிடப்படும் கூடிய கட்டணத்திற்கான சூத்திரத்தினை அறிமுகப்படுத்த வில்லை. அதாவது தொழில்வாண்மை மிக்க ஒருவர் எவ்வாறு தமது கட்டனத்தினை தீர்மானிக்க வேண்டும் என்று அறிவிக்கவில்லை. மேலும் தொழில்வாண்மை மிக்கோர் தமது கட்டனங்கள் தொடர்பாக தமது வாடிக்கையாளருக்கு விளக்கம் எதுவும் கொடுப்பதில்லை. இறுதியில் கட்டணத்தினை கூறும் பொழுதுதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது.

முற்றும்

HP PNG

பகிடிவதையினால் உயிரிழந்த மாணவன் – ஏன்?

அண்மைக்கால பகுதியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் முக்கிய இடம் பிடித்து இருப்பது உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை சம்பந்தமான செய்திகளே. அவற்றில் பலர் குறிப்பிட்டிருந்த தகவல் யாதெனில் இதுவரை காலமும் பகிடிவதை செயற்பாட்டின் பொழுது இறந்த மாணவர்களின் விபரங்களும் அவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதுவுமே. பகிடிவதை செயற்பாடுகளின் பொழுது மாணவர்கள் அதீத மனஅழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டனர். அவர்களுக்கு அடுத்ததாக சிறுநீரக செயலிழப்பு அதிகளவு மாணவர்களுக்கு மரணத்தினை ஏற்படுத்தி இருந்தது. எம்மில் பலருக்கு பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது தெரியாது. முக்கியமாக பகிடிவதையில் ஈடுபடும் நபர்களுக்கு கூட அவ்விடயம் தெரியாது அதன் காரணமாகவே அவர்களும் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
இப்பதிவில் பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம். பகிடி வதையில் பல்வேறு பட்ட வடிவங்கள் உண்டு. உதாரணமாக பாலியல் (sexual) சார்ந்த பகிடிவதை, உடலியல் (physical) சார்ந்த பகிடி வதை மற்றும் மனம் (psychological) சார்ந்த பகிடிவதை. இவற்றில் உடலியல் சார்ந்த பகிடிவதையின் பொழுதே சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது.
உடலியல் சார்ந்த பகிடி வதையின் பொழுது மாணவர்கள் அதிக தடவைகள் தோப்புக்கரணம் போடுதல், அதிக தூரம் ஓடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உள்ளாவர். இதன் பொழுதே அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு அவர்கள் அதிகளவு உடலியல் சார்ந்த பகிடிவதைக்கு உட்படும் பொழுது அவர்களின் தசைகள் அழிவடைய ஆரம்பிக்கும். இச்செயற்பாடு மருத்துவரீதியில் Exertional Rhabdomyolysis (ER) என்றழைக்கப்படும். இதன் பொழுது எமது கை மற்றும் கால் போன்றவற்றில் உள்ள தசைகளில் இருந்து பின்வரும் நச்சு பதார்த்தங்கள் creatine kinase (CK),  myoglobin எமது இரத்த சுற்றோடடத்தினுள் விடுவிக்கப்படும். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியாக இறப்பினை ஏற்படுத்துகின்றது. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே எமது உடலில் இருந்தாலும் அவை கலங்களினுள் சேமிக்கப்பட்டிருப்பதினால் அது சிறுநீரகத்திற்கு நச்சு தன்மையினை உண்டு பண்ணுவதில்லை

rhabdomyolysis-1-638
தற்பொழுது எல்லோர் கேள்வி யாதெனில் புதுமுக மாணவர்கள் ஆரோக்கியமாகத் தான் பல்கலைக்கழகம் சென்றார்கள். அவ்வாறு இருக்க எவ்வாறு திடீர் என்று சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது என்பதே ஆகும். தற்காலத்தில் சகல புதுமுக மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது வேறுவிடயம். பின்வரும் காரணிகள் புதுமுக மாணவர்களில் தசை அழிவினை ஏற்படுத்தி (முக்கியமாக வன்கூட்டு தசை)சிறுநீரக செயலிழப்பினை தூண்டுகின்றன.
1. அதீத வெப்ப நிலையும் ஈரலிப்பும் (high temperatures and humidity)
இலங்கை ஓர் அயன மண்டல நாடாகும் இதன் காரணமாக சராசரி வெப்ப நிலை 27 செல்ஸியஸ் ஆகவும் அதிக ஈரலிப்பு உள்ளதாகவும் உள்ளது. குறிப்பாக பகிடிவதை நடைபெறும் இடம் காற்றோட்டம் குறைந்த இடமாகவே இருக்கும். சிரேஸ்ட மாணவர்கள் சத்தம் வெளியே கேட்காதவாறு யன்னல்களையும் கதவுகளையும் மூடியிருப்பர். இதன் காரணமாக அச்சூழலில் அதிக வெப்பநிலையும் ஈரலிப்பும் நிலவும் இவை சிறுநீரக பாதிப்பினை தூண்டும்
2. குறைந்த நீர்ச்சத்து (poor hydration)
புதுமுக மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள மலசல கூடங்களையும் சிற்றுண்டி சாலையினையும் பாவிக்க அனுமதிக்க படமாட்டார்கள், இதன் காரனமாக புதுமுக மாணவர்கள் குறைந்தளவு நீரே ஓர் நாளில் அருந்துவர். அதாவது சராசரியாக ஒரு மனிதனுக்கு ஓர் நாளில் தேவையான அளவான நீரின் அளவினை விட குறைந்தளவு நீரே அருந்துவர். இதனால் அவர்களின் உடலில் உள்ள நீரின் அளவு குறைவாக இருக்கும். இது எமது உடலில் தசைகள் அழிவடைவதையும், சிறுநீரக செயலிழப்பினை தூண்டும் ஓர் காரணியாகும்
3. அதீத உடல் வேலை (intense physical ?training)
சாதாரணமாக புதுமுக மாணவர்கள் கடினமான உடல் வேலைகளை செய்து பழகி இருக்க மாட்டார்கள், இவ்வாறானவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்களினால் வழங்கப்படும் உடல் வேலை ஆபத்தானதாகவே முடியும். இங்கு விஞ்ஞான ரீதியில் குறித்த மாணவருக்கு இவ்வளவு வேலை வழங்கினால் மட்டுமே பாதிப்பு வரும் என்று எவ்வித கணிப்பும் இல்லை.
4. தொடர்ச்சியான உடல் வேலை (bout of physical ?training)
சாதாரணமாக தீவிர உடல் வேலை செய்யும் பொழுது எமது உடலில் சேதமடையும் தசைநார்கள் புதுப்பிக்க குறித்த கால அவகாசம் தேவை. ஆனால் புதுமுக மாணவர்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக உடலியல் ரீதியான பகிடிவதைக்கு உள்ளாவதினால் அவர்களுக்கு தசை அழிவடைந்து சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

இவ்வாறன காரணிகள் தான் புதுமுக மாணவர்களில் தசை அழிவடைவதன் மூலம் சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றது.

                                                            முற்றும்

HP PNG

யார் இவர்கள்?

அண்மையில் மாங்குளம் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட வேலைகளின் பொழுது ஒரு சில மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. அது தவிர இலங்கையின் பல பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகளின் மூலம் பல நூற்றுக்கணக்கான மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மக்களின் முன்னால் உள்ள இது தொடர்பான  பல கேள்விகளில் பிரதானமானதும் முக்கியமானதுமான கேள்வி யாதெனில் இவ்  எலும்பு கூடுகளுக்கு உரியவர்கள் இனம் காணப்படுவார்களா? அதாவது இவ்வாறு எலும்பு கூடாக உள்ளவர்கள் யார்? என்பதே. எவ்வெலும்பு கூடுகளை அடையாளம் காண்பது என்பது சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதாரணமாக சட்ட மருத்துவத்தில் இவ்வாறு கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகள்  இருவிதமான அடையாள படுத்தலுக்கு உட்படுத்த படுகின்றது. அவையாவன

  1. பொதுவான அடையாளம் காணல் (Tentative identification)
  2. தனித்துவமான அடையாளம் காணல் (Specific/positive identification)

பொதுவான அடையாளம் காணல்

பொதுவான அடையாளம் காணலில் கிடைத்த எலும்பு கூடுகளில் இருந்து அவற்றின் மண்டையோடு,தாடை எலும்பு , இடுப்பு வளையம்  மற்றும் ஏனைய எலும்புகளின் உருவ தோற்றமைப்புகளை (Anthropological and morphological measurements) ஆராய்ந்து ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ள இயல்புகளுடன் ஓப்பிட்டு ஆராய்வதன் (Comparative analysis) மூலம் அவ்வெலும்பு கூட்டிற்கு உரியவரின் பால்(ஆண் /பெண்), வயது, உயரம் மற்றும் இனம் என்பன கண்டறியப்படும். இங்கு இனம் என்பது மனிதனில் உள்ள பின்வரும் உபஇனங்களை கூறிக்கும்

  • Caucasoid (White) race.
  • Negroid (Black) race.
  • Mongoloid (Oriental/ Amerindian) race.

சில சந்தர்ப்பங்களில் கிடைத்த எலும்புக்கூட்டில் அம்மனிதன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள், எலும்பு முறிவுக்கு செய்ய பட்ட சத்திர சிகிச்சையின் பொழுது வைக்க பட்ட உலோக தகடுகல்  மற்றும் ஆணிகளின் விபரங்கள், பற்களுக்கு அளிக்க பட்ட சத்திர சிகிச்சைகளின் விபரங்கள் முக்கியமாக பிடுங்க பட்ட , நாட்டப்பட்ட பற்களின் விபரங்கள் என்பவற்றினை ஓப்பிட்டு நோக்குவதன் மூலம் அவ்வெலும்பு  கூடுகள் யாராக இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வரலாம் . ஓரே விதமான சிகிச்சையினை பல மனிதர்களுக்கு அளிக்க படுவதனால் இவ்வாறு அடையாளம் காண்பதுவும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிக்கும். மேலும் இங்கு பால், வயது, உயரம் மற்றும் இனம் என்பன சரியாக கணிக்கப்பட்டாலும்  ஒரு குறித்த சமூகத்தில் பல மனிதர்கள் ஒரே வயது, பால்  மற்றும் உயரம் என்பதை கொண்டிருப்பதால், ஒரு மனிதனை தனித்துவமாக அடையாளம் காணமுடியாது. எனவே இவ்வாறு பல மனித எலும்புக்கூடுகள் அல்லது மனித உடல்கள் ஒரே சமயத்தில் மீட்கப்படும் பொழுது நாம் அவற்றிற்குரிய மனிதர்களை அடையாளம் காண தனித்துவமான அடையாளம் காணும் முறைகளை பிரயோகிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுவான அடையாளம் காணலுக்கு காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களின் தரவுகள் (Missing persons data) பெருமளவில் தேவைப்படும். அதாவது இங்கு தரவு என்று குறிப்பிடும் பொழுது அவர்களின் வயது, பால், உயரம், கடைசியாக அணிந்து இருந்த ஆடைகள், ஆபரணங்கள் பற்றிய விபரம், அவர்களுக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை பற்றிய விபரங்கள், அவர்களுக்கு இருந்த நோய்கள் பற்றிய விபரங்கள் ….போன்ற விபரங்கள் ஆகும். இவ்விபரங்களை கிடைத்த எலும்பு கூடுகளின் விபரங்களுடன் ஓப்பிட்டே பொதுவான அடையாளம் காணப்படும். அதன் பின்னரே தனித்துவமான அடையாளம் காணப்படும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

இலங்கையில் இவ்வாறு காணாமல் போனோரின் தரவுகள் (Anthropological data) எந்த ஒரு நிறுவனத்திடமோ, அராசாங்கத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். சில நிறுவனங்களிடம் இருந்தாலும் அது முழுமை பெறாத ஒன்றே.

மேலும் போர் நிறைவடைந்து ஏறத்தாழ 10 வருடங்கள் கழிந்த நிலையில் பல காணாமல் போனோரின் நெருங்கிய உறவினர்கள் தமது சொந்தங்களை தேடியே இறந்து விட்டார்கள் இதனால் இனிவரும் காலங்களில் காணாமல் போனோரின் மிகச்சரியான அடையாளம்காணலுக்குரிய தரவுகளை பெறுவது எட்டா கனியே. மேலும் காணாமல் போனோரின் உறவினர்கள் பயம் காரணமாக சரியான தகவல்களை வெளியிட தயங்குவார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

தனித்துவமான அடையாளம் காணல்

மனிதர்களில் தனித்துவமான அடையாளம் காணும் முறைகளாக பின்வரும் முறைகளை FBI, Interpol போன்ற பிரபல்யமான புலனாய்வு நிறுவனங்கள் கருதுகின்றன

  1. கைரேகை மூலம் அடையாளம் காணும் முறை
  2. பற்களின் தனித்துவமான அமைப்பு மூலம் முறை
  3. DNA மூலம் அடையாளம் காணும் முறை

இவற்றில் DNA மூலம் அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்தது. இவற்றில் இலங்கையில் குறிப்பிட்ட ஒருசில குற்றவாளிகளின் கைரேகை பற்றிய தரவுகளே இலங்கையில் உள்ளன. மற்றைய பற்கள் பற்றிய தரவுகள், DNA தரவுகள் எதுவும் இல்லை. மேலும் இங்கு  காணாமல் போனோரின் உறவுகள் இறந்தமையாலும் மற்றும் வெளிநாடு சென்றமையாலும் உரிய DNA மாதிரிகளை பெறுவதும் கடினமே. ஓட்டு மொத்தத்தில் கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகளுக்கு பொதுவான மற்றும் தனித்துவமான அடையாளம்காணலை மேற்கொள்வது என்பது கடினமானதே.

                                                                        முற்றும்

HP PNG