இந்த நூற்றாண்டின் வியத்தகு கண்டுபிடிப்புகளில் ஒன்றே முகநூல். முகநூலை பாவிப்பதினால் நன்மையா, தீமையா என்ற விவாதம் நீண்ட காலமாகக் நடைபெற்று வருகின்றது. உண்மையில் நன்மையோ தீமையோ தீர்மானிப்பது பாவிப்பவர்கள் தான். இன்றைய இளைஞர் சமுகத்தில் பலர் முகநூலை பல்வேறு தீமையான விடயங்களுக்காக பாவிப்பவர்களும் உள்ளார்கள். அவற்றில் ஒன்றே இந்த Facebook party என்பது. முகநூலில் உள்ள ஒத்த கருத்துடைய பெரும்பாலும் ஒரே வயதுடைய, குறிப்பாக பாடசாலை மாணவர்கள் அதுவும் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த Facebook party இல் ஒன்று கூடுகிறார்கள் . இலங்கையில் அண்மைக்காலங்களில் இவ்வாறு ஒன்று கூடிய பல பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப் பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
உண்மையில் இந்த Facebook party இல் என்னதான் நடக்கிறது என்று ஆராய்ந்தால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் .
முக்கியமாக இந்த வகை பார்ட்டிகள் இளைஞர் குழு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்படும். அவர்கள் முதலில் இவ்வாறு நடைபெற்ற பார்ட்டிகளில் எடுக்கப்பெற்ற கவர்ச்சிகரமான படங்களை முதலில் முகநூலில் பதிவேற்றி வாடிக்கையாளர்களினை சேர்ப்பார்கள். பின்பு அவர்கள் உரிய இடத்தினை தெரிவு செய்வார்கள் அது பெரும்பாலும் கடற்கரையில் அமைந்துள்ள ஹோட்டல் ஆக அல்லது காட்டு பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் ஆக இருக்கும். இவற்றில் மாலை தொடக்கம் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் ஒன்று சேர்வர். இரவானதும் மதுபானத்துடன் தொடங்கும் பார்ட்டி போகப்போக போதைப்பொருள் ஐஸ் போன்றவற்றின் பாவனையுடனும் பெரும்பாலும் பாலியல் உறவுடனும் அடுத்தநாள் அதிகாலை முடிவுறும்.
இப்பொழுது இந்த வகை பார்ட்டிகளினால் என்னதான் பிரச்சனை? ஒவ்வொன்றாக பார்ப்போம்
1. இலங்கையில் தற்பொழுது அதிகளவு இளைஞர்கள் ஐஸ் என்ற methamphetamine என்ற போதைப்பொருளினை இங்குதான் பாவிக்க தொடங்குகின்றார்கள். சாதாரண பார்ட்டி தான் என்று முதலில் அழைக்கப்டும் மாணவர்கள் மற்றைய நண்பர்களின் வற்புறுத்தினால் போதைக்கு அடிமையாக தொடங்குகின்றனர்.மேற்குறித்த போதைப்பொருளினை தவிர சிகரெட் , மதுபானம் போன்ற பல்வேறுபட்ட போதைப்பொருள் பாவனையினை ஆரம்பிக்க இவ்வகையான பார்ட்டிகள் உதவுகின்றன.
2. இங்கு மேலும் குறிப்பிட தக்க விடயம் யாதெனில் பெண்கள் அதுவும் பாடசாலை மாணவிகள் இதனை பாவிக்க தொடங்கு கின்றார்கள்
3. உண்மையில் இவ்வகையான பார்ட்டிகள் போதைப்பொருள் வியாபாரிகள் , பாலியல் தொழில் செய்பவர்களின் போன்றோரின் மறைமுக அனுசரணையுடன் தான் நடைபெறுகின்றது. அவர்களின் நோக்கமே புதிய வாடிக்கையார் களை கண்டு பிடிப்பதே.
4. சில சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இவ்வாறான பார்ட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்கள் மூலம் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றலாம்
5. முக்கியமாக இவ்வகையான பார்ட்டிகளில் பொதுவாக யார் பங்குபெறுகின்றார்கள் என்று ஆராய்ந்தால் கிராமப்புறங்களில் இருந்து தொழில் மற்றும் கல்வி போன்றவற்றிக்காக நகர்ப்புறங்களிற்கு வரும் இளைஞர்களே.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறன பார்ட்டிகள் சிறிய அளவில் நடைபெற தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. எனவே விழிப்போடு இருந்து எதிர்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்

