வெடி மருந்தின்றி ஒரு வெடிப்பு சம்பவம்

இலங்கையில்  கல்சியம் காபைட் ஆனது பொதுவாக மலசல கூட கழிவு குழாய்கள், சமையற்கூட கழிவு குழாய்கள் கழிவுகளினால் அடைபடும் பொழுது அவற்றினை நீக்க பாவிப்பார்கள்.

அது கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள்  கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும்  பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட் ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான்  தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார்.  இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது

கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும் இவ்வாயுவானது மிகஎளிதாக தீப்பற்றி எரியும் தன்மை யுடையது மற்றும் இவ்இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது.இங்கு மலசலக்கழிவுத்துதொட்டியானது ஓர் இறுக்கமான அறை ஆகும் இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது  அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு சம்பவம் நிகழலாம்.

மருண்டவன் கண்ணுக்கு காண்பது எல்லாம்….

அது ஒரு தமிழ் சிங்கள புதுவருட காலப்பகுதி, பொதுவாக இக்காலப்பகுதிகளில் அரச அலுவலகங்களில் வேலைசெய்யும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதற்கு எனது அலுவலகமும் விதிவிலக்கல்ல. இவ்வாறன ஒரு நாளில் நான் எனது அலுவலகத்தினுள் நுழைகின்றேன். வாசல் பகுதியில் இளைஞர்களும் வயதானவர்களும் கூட்டமாக நிற்கின்றனர். அவர்களை தாண்டி உள்நுழையும் பொழுது அலுவலக உதவியாளர் ஒருவர் ஓடிவந்து “சேர், பிறந்து ஒரு கிழமையான பெண் குழந்தையினை உறவினர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக” தெரிவித்தார் மேலும் துஸ்பிரயோகம் செய்தவரையும் போலீசார் கைதுசெய்து நல்ல பூசை போட்டு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இதென்னடா வருஷம் பிறந்து முதல் நோயாளியை இப்படி வருகுது என்று கூறிவிட்டு அவர்களை பரிசோதிக்க ஆயத்தம் ஆனேன். பெண் அலுவலக உதவியாளர் வர காலதாமதம் ஆகும் என்று தெரிந்ததினால் முதலில் சந்தேக நபரினை பரிசோதித்தேன். அவர் ஒரு பல்கலைக்கழக மாணவன் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முடியாதவாறு உதடு, கன்னம், கண் என்பன வீங்கியிந்தது. பொதுவாக இவ்வாறன சம்பவங்களை தொடந்து உறவினர்கள் மற்றும் போலீசார் அவர்களை தாக்குவது வழமை .
மற்றைய சந்தேக நபர்களை போலவே இவனும் தான் எதுவுமே செய்யவில்லை என்றான். அதன் பின்பு குழந்தையின் அம்மாவிடம் நடந்தது என்ன கேட்டேன் அவர் கூறினார் குழந்தையினை சந்தேக நபர் தூக்கி விளையாடியதாகவும் அதன் பின்பு குழந்தையின் ஆடையில் இரத்த கறை இருந்ததாகவும் கூறினார். பெண் உதவியாளர் மற்றும் அம்மா முன்னிலையில் குழந்தையினை பரிசோதித்தேன். குழந்தையின் பிரத்தியேக மற்றும் மல வாசல் பகுதிகளில் எவ்விதமான காயங்களும் காணப்படவில்லை. குழந்தையின் ஆடையில் ஓரஞ்சு நிறமான இரத்தக்கறை போன்ற கறை காணப்பட்டது.

20180922_061813
தொடர்ந்து நடாத்திய பரிசோதனை முடிவுகளில் அது இரத்த கறை அல்ல என்ற முடிவும் அக்கறையானது யூரேட் கிரிஸ்டல் ஆனது என தெரியவந்தது. {Urate crystals (commonly called “brick stain” by doctors) are a combination of calcium and urate} இது சாதாரணமா குழந்தைகள் பிறந்து ஒரு சில நாட்களில் அவர்களின் சிறுநீரில் அதிகளவு யூரேட் வெளியேற்றப்படுவதால் நிகழும் நிகழ்வாகும். இது ஒருசில நாட்களில் தானாகவே குணமடைந்துவிடும். இது தவிர பின்வரும் சந்தர்ப்பங்களிலும் பெண் குழந்தையின் பிரத்தியேக உறுப்பு பிரதேசங்களில் இருந்து இரத்த கசிவு நடைபெறலாம்
1. குழந்தையின் ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் அளவில் ஏற்படும் சடுதியான மாற்றம் காரணமாக. இக்ஹோர்மோன் ஆனது தாயின் தொப்புள் கொடியின் ஊடக கடத்த பட்டு அதிகளவில் இருக்கும். பிறப்பின் பின்பு சடுதியாக குறைவதனால் குழந்தையின் கருப்பையில் இருந்து சிறிதளவு இரத்த கசிவு இருக்கும்.
2. குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதிகளில் நுழையும் லீச் போன்ற அட்டைகளினால், இலங்கையின் மலைநாட்டு பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறன ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது தகுந்த வைத்தியரிடம் அணுகி ஆலோசனை பெறவேண்டும். முக்கியமாக பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இவ்வாறக நடைபெறலாம் .

போதைகொள்ளவைக்கும் “ஐஸ்”

கடந்த வாரத்தில் யாழ் குடாநாட்டில் முதன் முறையாக “ஐஸ்” என்ற போதை பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மெத் அம்பீர்றமைன் (methamphetamine ) என்ற பொருளே ஐஸ், எக்டஸி (ectacy ), XTC , yuppie, ஸ்பீட் போல்…   போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. நாட்டிற்கு நாடு வட்டாரத்திற்கு வட்டாரம் இதன் பெயர் வேறுபடும். மற்றைய போதை பொருட்டுகளை விட இந்த போதை பொருள் யாழ் குடாநாட்டிற்கு புதியது.

ஆனால் நாட்டின் மற்றைய பகுதிகளில் குறிப்பாக கொழும்பு போன்ற நகர புகுதிகளில் இப்போதைப்பொருள் ஆனது சர்வசாதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கும். இப்போதை பொருள் ஏன் ஆபத்தானது என்று ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

பெரும்பாலான மற்றைய போதைப்பொருட்கள் எல்லாம் எமது நரம்பு தொகுதியினை செயற்பாடு குறைந்த நிலைக்கு கொண்டுவரும், ஆனால் ஐஸ் என்ற இப்போதைப்பொருள் ஆனது எமது மூளை மற்றும் நரம்புத்தொகுதியின் செயற்பாட்டினை தூண்டும் (Central Nervous system stimulant). இதன் காரணமாக பலர் இலகுவாக இப்போதைப்பொருளுக்கு அடிமையாகுவர். இப்போதைப்பொருளினை பாவிப்பவரில் பின்வரும் இயல்புகள் ஏற்படும்

  1. கனவுலகில் மிதத்தல்
  2. மனதில் எல்லாம் முடியும் என்ற நிலை
  3. நித்திரை, பசி மற்றும் களைப்பு என்பவற்றினை தாண்டி வேலை செய்யும் ஆற்றல்
  4. அதீத உடல்வேலைகளை செய்யக்கூடிய ஆற்றல்
  5. அதிகம் கதைக்கும் தன்மை

இவ்வாறான இயல்புகள் காரணமாக பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், இரவு நேர களியாட்ட விடுதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் நெடும்தூர பஸ், லொரி சாரதிகள் இப்போதைபொருளினை பாவிப்பர். முக்கியமாக சராசரி அல்லது கடைநிலை மாணவர்கள் அதிகநேரம் படிக்கவேண்டும் ஏன்ற ஆவலில் இப்போதைபொருளினை பயன்படுத்தத் தொடங்கி இறுதியில் அதற்கு அடிமையாகுவர். சிலர் கேட்கலாம் இப்போதைபொருளினை சிறிது காலம் பாவித்து நன்றாக படிக்கலாம் பரீட்சை முடிந்தபிறகு விடலாம் என்று ஆனால்  இப்போதைபொருளினை பாவிக்க தொடங்கினாலே நிறுத்த முடியாது (Serious drug addiction). மற்றும் இப்போதைபொருள் நித்திரை, பசி மற்றும் களைப்பு என்பவற்றினை தாண்டி வேலை செய்யும் ஆற்றலினை கொடுத்தாலும் படித்தலில் முக்கியமான கிரகித்தல் போன்ற மூளையின் உயர் தொழில்பாடுகளுக்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை.

இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் பாரிய விடுதிகள் அற்ற யாழ்ப்பாணத்தில் இப்போதைபொருளின் அறிமுகம் பாடசாலை மற்றும் உயர் கல்விநிறுவன மாணவர்களே அன்றி வேறுயாரும் அல்லர். மேலும் ஒரு ஆச்சரியமான விடயமெனில் இப்போதைபொருளானது தகுந்த வைத்தியரின் சிபாரிசுடன் சிலவகை நோய்களுக்கு மருந்தாக பாவிக்கபடுகின்றது. எனவே இது சம்பந்தமாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கவனமாக இருக்க வேண்டும்.
முற்றும்

ஆண்மையை பறித்த மோட்டார் சைக்கிள்…

அன்றும் வழமைபோல் எனது அலுவலக ஊழியருடன் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளரை பார்வையிட்டு வந்தேன். அது ஆண்கள் சிகிச்சை பிரிவு.   வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் கட்டிலில் படுத்திருந்தார். முதலில் என்னை நான் அறிமுகப்படுத்தி நான் அவரின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை கேட்டேன். அடுத்து அவரிடம் என்ன காயம் இருக்கு என்று கேட்டேன்,  அதற்கு அவர் தனக்கு பெரிதாககாயம் ஒன்றும் இல்லை என்று கூறியதோடு தனக்கு சட்ட வைத்தியபரிசோதனை செய்ய விருப்பம் இல்லை என்றார். மேலும் அவர்  தான் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த மதிலில் மோதியதாக கூறினார். வழமையாக அலுவலக ஊழியர் இயலுமான நோயாளர்களை கட்டிலில் இருந்து எழுப்பியே என்னை பரிசோதிக்க அனுமதிப்பார். இவர் எழும்ப பின்னடித்ததை அடுத்து அவரது மருத்துவ குறிப்பேட்டினை பார்வையிட்டேன். அதில் விபத்தின் போது அவரது விதைகள் இரண்டும் (Crush injury) கடுமையாக நசிவடைந்து         பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பி  ட்டியிருந்தார்கள்.

அண்மைக்காலமாக குறிப்பிட்டவகை மோட்டார் சைக்கிளினை (Yamaha FZ and Pulsar models) பாவிக்கும் இளைஞர்கள் வீதிவிபத்துகளின் பொது மேற்குறிப்பிட்ட வகையான காயங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை அவதானித்து வருகின்றேன். இங்கு விதைப்பையில் அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில்  ஏற்படும் காயம் ஆனது சாதாரண உரஞ்சல் காயத்தில் (Simple abrasion)  இருந்து பாரதூரமான கிழியல் (Degloving laceration) காயம் வரை காணப்படும். இவ்வகையான காயங்கள் straddle injuries (trauma occurs to the groin area between the thighs) என்றழைக்கபடும். ஏற்படும் பாரதூரமான காயத்தினால் விதைப்பைகள் அகற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு. மேலும் ஏற்பட்ட சாதாரண காயத்தினால் இளைஞர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இல்லற வாழ்வினை பின்தள்ளி போட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

20191006_1021117702099394673634080.jpg

(குறிப்பு – மேலுள்ள புகைப்படம் மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது. இங்கும் இக்காயம் மோட்டார் சைக்கிள் விபத்தினாலேயே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

மேற்படி வகை மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவ்வகையான காயம் ஏற்படாது. குறிப்பாக சைக்கிளோட்டி தூக்கி எறியப்பட்டால்  இவ்வகையான காயம் ஏற்படாது. சாதாரணமாக சைக்கிளோட்டியின்வேகம் மோட்டார் சைக்கிளின் வேகத்திற்கு சமனாக இருக்கும். விபத்தின் பொது சடுதியாக மோட்டார் சைக்கிளின் வேகம் பூச்சியமாகும் போது மோட்டார் சைக்கிளோட்டியினை நோக்கி விசை ஒன்று தாக்கும் (பச்சை நிற அம்புக்குறி ) இதன் காரணமாக இவ்வகையான காயம் ஏற்படுகின்றது.

2017-yamaha-fz-10-ab9t8878

ராகல (Ragala) குகையில் நடந்தது என்ன?

அண்மையில் இரு இளைஞர்கள் வேட்டையாடும் பொழுது ஓர் முள்ளம் பன்றி ஒன்றினை கண்டார்கள். அவர்கள் அதனை துரத்தும் பொது அது அருகில் உள்ள குகை ஒன்றினுள் சென்றது. அதனை தொடர்ந்து அவர்களும் அவர்களின் வேட்டை நாயும் குகைவாசலில் நீண்ட நேரம் பன்றியின் வருகைக்குகாக காத்திருந்தார்கள். பன்றி வரவேயில்லை. அதன் பின்பு அவர்கள் அருகில் உள்ள குப்பை  எரித்து அதில் உண்டாகிய புகையினை குகையினுள் செலுத்தினார்கள் அதன் பின்னும் பன்றி வரவில்லை. அதன் பின்னர் அவர்களது வேட்டை நாய்  உள் நுழைந்தது நீண்ட நேரமாகியும் அது வரவில்லை பின்னர் அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவராக உள்சென்றர்கள். இறுதியில் ஒருவருமே வீடு திரும்பவில்லை. கிராம மக்கள் அடுத்த நாள் தேடுதல் வேட்டையில் இறங்கி தேடியபொழுது அவர்களின் இரு இறந்த உடல்களையும் மற்றும் பன்றி, நாய் என்பற்றின் உடல்களையும் எடுக்க முடிந்தது.

1537424826_6513812_hirunews_deth

சாதரரணமாக  நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவீத ஒக்சிசன் வாயு உள்ளது. ஆழமான கிணறு, குகை, மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பலின் கொள்கலன் போன்றவற்றில் ஒக்சிசன் வாயு குறைந்த சதவீதத்தில் உள்ளது. இவற்றினுள் செல்லும்போது மனிதர்களுக்கு மூச்சு திணறல் (Suffocation ) ஏற்படும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டது. அத்துடன் இவ்வாறான குகைகளில் நச்சு வாயுக்களும் (poisonous gases ) மனித சுவாசத்திற்கு உதவாத வாயுக்களும் ( irrespirable gases ) நிறைந்திருக்கும். மேலும் புகையுட்டல் ஆனது இச்சூழ்நிலையினை நிச்சயம் மோசமாக்கி இருக்கும். மூச்சு திணறல் ஏற்படும் பொழுது ஒருகட்டத்தில் எங்களின் சுயநினைவு குறைந்து அல்லது முற்றாக அற்று விடும் இந்நிலையில் அவர்களால் சிந்தித்து வெளியேறுவது கடினமாகிவிடும்.

யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா? ஓர் மருத்துவரீதியான அலசல்

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால்  யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. குறித்த சம்பவம் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில்  கடந்த  வெள்ளிக்கிழமை(08/06/2018)இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.இந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை (06/06/2018) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

viber image

பின்வரும் காரணங்களினால் குழந்தை உயிருடன் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நம்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட  நிலையில் குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

  1. 08/06/2018 நண்பகல்-12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன.
  2. உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து மூக்குச் சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளது.
  3. குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமை.
  4. குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமை.
  5. குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்றுநாட்கள் ஆகின்ற போதிலும் உடலியல் ரீதியாக இறந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் எதுவும் குழந்தையின் உடலில் ஏற்படவில்லை.
  6. குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசாரியொருவரால் தெரிவிக்கப்பட்டமை.

விஞ்ஞான ரீதியில் ஓர் மனிதனின் இறப்பானது  பின்வருமாறு வரையறுக்கப்படும்  மனிதனின் மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின்  நிரந்தர  தொழில்பாட்டு  நிறுத்தமாகும்.

சாதாரணமாக மனிதன் இறந்து 18 மணித்தியாலங்களின் பின்பு உடலானது அழுக தொடங்கும். அழுகலானது முதலில் வயிறு பகுதியில் இருந்துதான் தொடங்கும், ஏன் எனில் குடலில்  இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் பாக்டீரியா நுண்ணங்கி செயற்பாட்டினால் ஆகும். இதன் காரணமாக வயிற்றில் அதிகளவு வாயுக்கள் தேங்கும் இதன் காரணமாக வயிற்றில் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் உள்ள மலம், சிறுநீர் மற்றும் கருப்பையில் உள்ள இறந்த குழந்தை என்பன வெளியேற்றப்படும்.

postmortem deliveryசில சமயங்களில் வயிற்று தசை வெடித்து உள்ளிருக்கும் குடல் போன்றன   வெளியேற்றப்படும் (இவ்வெடிப்பு சில சமயங்களில் வெட்டு காயம் போன்றும் தோன்றலாம், அனுபவம் மிகுந்த சட்ட வைத்தியர்கள் இவற்றினை இலகுவாக வேறுபடுத்துவர்) இதற்காக மனிதன் உயிருடன் உள்ளார் என்று அர்த்தமில்லை. இவ்வாறே மார்பு கூட்டிலும் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் நாக்கு வெளித்தள்ளும், மூக்கு மற்றும் வாயில் இருந்து சளி மற்றும் இரத்தம் வெளியேறும். இச் செயற்பாடுகள் ஒருவர் இறந்து சராசரியாக 2 தொடக்கம் 3 நாட்களில் நடைபெறும். சிலவேளைகளில் முன்பதாகவும் நடைபெறலாம்.

இறந்த உடலை மூடி (துணியால் அல்லது பிரேத பெட்டியால்) வைக்கும் பொழுது,  இறந்த உடலில் இருந்து ஆவியாகும் நீர்   அணிந்திருக்கும் ஆடையில் பட்டு ஒடுங்கி உடலில் வியர்வை மாதிரி படிந்திருக்கும்.

மனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 8 மணித்தியாலங்களில் உடல் வெப்பநிலையானது குறைவடைந்து சூழல் வெப்பநிலையினை அடையும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது குளிரும்)  18 மணித்தியாலங்களின் பின்பு உடல் அழுக தொடங்கியவுடன் உடல் வெப்பநிலையானது அதிகரிக்கும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது சுடும்) .

மனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 2  மணித்தியாலங்கள் வரை கை மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும் (Primary Flaccidity) பின்பு 2 தொடக்கம் 12 மணித்தியாலங்களில்  படிப்படியாக   விறைத்தநிலைக்கு வரும். இதற்கு தசைகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்களே காரணம் (Rigor mortis).  இதன் பொது கை மற்றும் கால் எனவற்றினை அசைக்க கடினமாக இருக்கும்.  இதன் பின்னர் இவ்விறைப்பு  படிப்படியாக குறைவடைந்து முற்றாக நீங்கும் (secondary flaccidity) இதன் பொது மீண்டும் காய் மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும். இவ்வாறு விறைப்பு தன்மையும் தளர்வு தன்மையும் மாறிமாறி வருவதன் காரணமாக நெஞசு பகுதில் வைக்கப்பட்ட கை அல்லது விரல் அசைத்து இருக்கும்.

 ஒரு குடும்ப உறுப்பினருக்கு திடீர் மரணமானது ஏற்படும் போது சில குடும்பதினர் பொதுவாக இறப்பினை ஏற்றுகொள்வதில்லை, அவர்கள் இறந்தவர் உயிருடன் இருப்பதாகவே கருதுவார்கள். இதன்காரணமாகவே தந்தையினால் இறந்த அன்பு மகளில் நாடிதுடிப்பினை போலியாக உணரமுடிந்தது.

மனித உடலின் அழுகல் வீதமானது (Rate of putrefaction)  உடல் மற்றும் சூழல் காரணிகளில் தங்கியுள்ளது. வெப்பநிலை கூடிய யாழ்ப்பாணத்தில் இறந்து 24 மணித்தியாலங்களின் பின்னர் பதப்படுத்தப்படாத உடலில்  பெரும்பாலும் அழுகல் ஆனது ஆரம்பித்து இருக்கும் ஆனால் உறவினர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் மருத்துவ அறிவு இன்மையால் அவற்றினை அவர்களால் இனம் காணமுடியாது போயிருக்கலாம்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தும் மனித உடல் அழுகுவதன் (Putrefaction changes of body) காரணமாகவே ஏற்பட்டது .

இம்மரணமானது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ள பொது வைத்தியர்கள் சிறுமியின்   மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின் தொழில்பாடு  நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதினை உறுதி செய்து, இறப்பினை உறுதிப்படுத்தி இருப்பார்கள். இன்நிலையில்  சாதாரண பூசாரி குறித்த குழந்தை இறக்கவில்லை என தெரிவித்தமை நகைப்புக்குரியது.

ஒரு காலத்தில் கல்வி அறிவுக்கு பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்தில் இவ்வாறன மூடநண்பிக்கையான செயற்பாடு நடைபெற்றமை வருந்த தக்கது . அதனை விட சில இலத்திரனியல் ஊடகங்கள் இச்சம்வத்திற்கு பெரும் பரபரப்பு கொடுத்து செய்தி வெளியிட்டமை மேலும் கண்டிக்கத்தக்கது.

 

 

 

பல்வேறுவகையான பாலியல் துஸ்பிரயோகங்கள்

1 (1)      medium

  1.  பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வெளியீட்டு விடயம்

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவரின் சம்மதமின்றி அவரை அடையாளம் காணக்கூடியவராக பெயரை அல்லது ஏதேனும் விபரங்களை வெளியிடுதல் 20வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனையால் அல்லது தண்டத்தால் அல்லது இரண்டாலும் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். பிரிவு- 365இ, குற்றவியல் கோவை.

 

  1. ஆட்கவர்தல்/ ஆட்கடத்தல்

ஒரு பெண் தான் சட்டவிரோதமான பாலியல் உடலுறவிற்கு வற்புறுத்த அல்லது கட்டாயப்படுத்தப்படக்கூடும் என்ற அறிவு அல்லது ஆட்கடத்தல் 10வருடங்களுக்கு நீடிக்ககூடிய சிறைத்தண்டனையாலும் தண்டத்தாலும் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். பிரிவு 367, குற்றவியல் கோவை.

 

  1. குடும்ப வன்முறை

எந்தக் கணவனும் தன் மனைவியை தாக்கவோ அவளுக்கு காயம் விளைவிக்கவோ அல்லத தொந்தரவு செய்யவோ உரிமையற்றவர். காயம் விளைவித்தலானது குற்றவியல் கோவையின் 314,315,316,317 பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றவியல் குற்றமாகும். ஓவ்வொரு மானைவியும் தன்னை தாக்கிய அல்லது காயம் விளைவித்த தன் கணவனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சட்ட உரிமை உடையவர். எந்த மனைவியும் தனது கணவனால் விளைவிக்கப்படும் தாக்குதல்களையும் தொந்தரவுகளையும் அமைதியாக எதிர்ப்பின்றி அல்லது முறைப்பாடு செய்யாது தாங்கிக் கொள்ள கடமைப்பட்டவர் அல்ல.

 

  1. பராயமடையாதவரின் பாலியல் வல்லுறவு

எவராவது ஆள் 16 வயதிற்குட்பட்ட பெண்ணுடன் அவளின் சம்மதமுடனோ, அன்றியோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால், அவர் பாலியல் வல்லுறவுக்குற்றம் புரிந்தவராவார்.

தவறாளர் 20 வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடியதும் ஆகக் குறைந்தது 10 வருட மறியற் தண்டனையாலும் தண்டத்தாலும் தண்டிக்கப்பட பொறுப்பாவார். அவர் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு செலுத்த பொறுப்பாவார்.

பிரிவு-364, குற்றவியல் கோவை.

 

  1. பெண்களின் பாலியல் சுரண்டல்

எவரேனும் தெரிந்து கொண்டு 18 வயதிற்குட்பட்ட பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் நோக்கத்துக்காக அல்லது ஏதாவது பாலியல் நடவடிக்கையில் பங்குபற்ற ஏதாவது இடத்தில் வைத்திருக்க அனுமதிப்பின் அவர் சிறுவர் பாலியல் சுரண்டல் குற்றம் புரிகின்றார்.

இக்குற்றம் 20 வருடங்கள் நீடிக்கப்படக்கூடியதும் ஆகக் குறைந்தது 5 வருட கட்டாய மறியற் தண்டனையாலும் தண்டத்தாலும் தண்டிக்கப்படக்கூடியதாகும்

பிரிவு-360ஆ, குற்றவியல் கோவை.

 

 

  1. விபச்சாரத்திற்கு கூட்டிக்கொடுத்தல்

எந்த வயது பெண்ணையும் அவளின் சம்மதமுடனோ அன்றியோ விபச்சாரியாக மாற்றுவதற்கு  அல்லது விபச்சாரவிடுதிக்கு அடிக்கடி செல்ல,கூட்டிக் கொடுத்தல் 2 வருடங்களுக்கு குறையாததும் 10 வருடங்களுக்கு மேற்படாததுமான மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்

பிரிவு-350அ, குற்றவியல் கோவை

  1. முறையற்ற வியாபாரம்

பணத்திற்காக அல்லது வேறு ஏதேனும் பிரதிபலனுக்காக ஒரு ஆளை        விற்கின்ற அல்லது வாங்குகின்ற அல்லது பண்ட மாற்றம் செய்கின்ற நடவடிக்கையில் ஈடுபடும் எவரேனும் ஆள் முறையற்ற வியாபாரக் குற்றம் புரிந்தவர் ஆவார்.

முறையற்ற வியாபாரம் 2 வருடங்களுக்கு குறையாததும் 20 வருடங்களுக்கு மேற்படாததுமான சிறைத்தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் ஆகும்   பிரிவு-360இ குற்றவியல் கோவை.

  1. கோஷ்டி பாலியல் வல்லுறவு

ஒரு பெண் ஆட்கள் கோஷ்டியினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும்போது அக் கோஷ்டியிலுள்ள ஒவ்வோவரும் 20 வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடியதும் ஆகக் குறைந்தது 10 வருட கட்டாய மறியற் தண்டனையாலும் தண்டத்தனாலும் தண்டிக்கப்பட பொறுப்பாவார். குற்றத் தீர்ப்பாளிக்கப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு செலுத்தவும் பொறுப்பாவார். பிரிவு-364 குற்றவியல் கோவை.

  1. பாரதூரமான பாலியல் துஷ்பிரNhயகம்.

ஒரு பெண்ணின் வாய்க்குள் அல்லது   குதத்தினுள்      அல்லது     உடலின் வேறு எந்தப்பாகத்தினுள் எவரெனும் ஆள் தனது ஆண் உறுப்புக்களை அல்லது வேறு ஏதேனும் உடற்பாகத்தை பயன்படுத்தி பாலியல் திருப்தியை அடையச்செய்யும் செயலில் ஈடுபட்டால் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் புரிந்தவராகின்றார். பிரிவு-365,ஆ குற்றவியல் கோவை.

  1. தகாத புணர்ச்சி

தகாத புணர்ச்சி என்பது நேரடி முற்சந்ததியினர் அல்லது பிற்சந்ததியினர் அல்லது இரத்தம் அல்லது திருமணம் அல்லது மகவேற்பு மூலமான நெருங்கிய உறவினர்கள் (அதாவது தந்தையும மகளும், சகோதரனும் சகோதரியும், பேரனும் பாட்டியும்) பாலியல் உறவில் ஈடுபடுவதாகும். தகாத புணர்ச்சி ஆகக் குறைந்தது 7 வருட மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடியது.                                                  பிரிவு-364,(3) குற்றவியல் கோவை

 

  1. விவாகரத்து

பரஸ்பர சம்மதம் விவாகரத்துக்கான அடிப்படை அல்ல, விவாகரத்துக்கான சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே பெறப்பட முடியும். அவையாவன திருமணத்தின் பின்பான சோரம்,வேண்;டுமென்று கைவிடல் திருமணத்தின் போதான மாற்றமுடியாத மலட்டுத்தன்மை.

 

  1. வேலையிடத்தில் பாலியல் தொல்லை

வேலையிடத்தில் அதிகாரத்திலுள்ள எவரேனும் ஆள், அங்கு வேலை செய்யும் பெண்ணின் சம்மதமின்றி அல்லது விருப்புக்கு மாறாக பாலியல் தொனியிலான சொற்களைப் பேசுதல் அல்லது ஏதாவது செய்கைகளைப்புரிதல் மூலமாக பாலியல் தொந்தரவு செய்யின் அவர் பாலியல்  தொல்லைக்குற்றம் புரிந்தவராவார்.

இக்குற்றம் 5 வருடங்களுக்கு மேற்படாத மறியல் தண்டனையால்தண்டிக்கப்படக்கூடிய குற்றம். பிரிவு-345 குற்றவியல் கோவை.

  1. பாலியல் வல்லுறவு

ஏதாவது ஆள் ஒரு பெண்ணின் சம்மதமின்றி அல்லது வலுக்கட்டாயம்,பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக அல்லது அவளுக்கு கொலை அல்லது காயம் விளைவிப்பதற்கான அச்சத்தை ஏற்படுத்தி அல்லது அவளை சித்தசுவாதீனமற்ற நிலையிலுள்ளபோது அல்லது குடிபோதையில் உள்ளபோது அல்லது சட்டமுறையற்ற தடுத்துவைப்பிலுள்ள போது சம்மதம் பெற்று பாலியல் உறவு கொண்டால் அவர் பாலியல் குற்றம் புரிந்தவராவார்

பாலியல் வல்லுறவுக் குற்றமானது 20 வருடங்கள் நீடிக்கப்படக்கூடியதும் ஆகக்குறைந்தது 7 வருடங்கள் கட்டாயமான மறியல்தண்டனையால் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் தவாறாளி தண்டம் செலுத்துவதுடன் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடும் செலுத்த பொறுப்பாவார். பிரிவு- 364குற்றவியல் கோவை.

 

  1. பெண்களை சோதனை செய்தல்

பெண்களை சோதனை செய்யும் போது வேறொரு பெண்ணிணால் கண்ணியமான முறையில் சோதனை செய்தல் வேண்டும். பிரிவு- 30 குற்றவியல் கோவை

 

  1. இருதாதர மணம்

எதாவது ஒருவரின் முன்னைய திருமணம் வலிதாகவுள்ள போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வது ஒரு குற்றமாகும்

இருதாரமணக்குற்றம் 7-10 வருடங்கள் மறியல் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும் பிரிவு- 362இ, குற்றவியல் கோவை.

 

  1. பொது இடங்களிலும் பொது போக்குவரத்துக்களிலும் பாலியல் தொல்லை

எதாவது பெண்களுக்கு சொற்கள் அல்லது செயல்கள் மூலமாக பாலியல் தொல்லை அல்லது தொந்தரவு செய்தால் அவர் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவராவார். பெண்ணின் சம்மதமின்றி அல்லது விருப்பக்கு மாறாக உடலைத்தொடுவது அல்லது பாலியல் தொனியிலான வார்த்தைகளை பிரயோகிப்பது பாலியல் தொல்லைக்கு சமமாகும்.

இக்குற்றமானது 5 வருடங்களுக்கு மேற்படாத மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றம். பிரிவு- 345, குற்றவியல் கோவை.

  1. 18 வயதிற்குட்பட்ட ஆட்களின் திருமணம்

ஆண் பெண் இருவரும் திருமணம் செய்யக்கூடிய வயது 18 ஆகும். 18 வயதிற்குட்பட்டவர்களால் அல்லது 18 வயதுக்குட்பட்டவர்களுடன் செய்யப்படும் திருமணம் சட்டப்படி வலிதற்றது. 18 வயதிற்குட்பட்ட ஒருவர் அல்லது இருவரினதும் திருமணம் பெற்றோர் சம்மதம் வழங்குவதால் வலிதுடமை பெறமாட்டாது.

ஒருவர் 16 வயதிற்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்து அவளுடன் பாலியல் உறவு கொண்டால் அவர் பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கு பொறுப்பாவார்.

 

  1. பாரபட்சம் காட்டாதிருப்பதற்கான உரிமை

ஆண் பெண் இருவரம் சமமான உரிமைகளுக்கு உரித்துடையவர்கள். பால் காரணமாக பாரபட்சம் காட்டாதிருப்பதற்கான உரிமை எமது அரசியவமைப்பினால் உத்தரவாதம் செய்யப்பட உரிமையாகும். அடிப்படை உரிமைமீறப்படுகின்ற போது அல்லது மீறப்படவுள்ளபோது ஒருவர் அத்திகதியிலிருந்து ஒரு மாதத்தினுள் உயர் நீதிமன்றத்துக்கு முறைப்பாடு செய்வதன் மூலம் நிவாரணம் பெறமுடியும்.

  1. பெண்களைத் தடுத்து வைத்தல்

ஒரு பெண் இன்னொரு பெண் அலுவலரின் பொறுப்பிலுள்ள கட்டுக்காவலில் வைத்திருக்கப்படல் வேண்டும்.

 

  1. சொற்கள் மூலமான பாலியற் தொல்லை

பாலியல் தொனியிலான சொற் பிரயோகத்தின் விளைவாக ஒரு பெண்ணுக்கு பாலியற் தொந்தரவு ஏற்படின் அது பாலியற் தொல்லையை உருவாக்கும்.

இக்குற்றம் 5 வருடங்களுக்கு மேற்படாத மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். பிரிவு- 345 குற்றவியல் கோவை

இச்சிறுமியின் மரணத்திற்கு யார் காரணம்?

ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையை சேர்ந்த (13வயதுடைய மாணவி) கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் பேசியதால் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குணமாகிய நிலையில் நேற்றைய தினம் மாலை வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/community/01/175575?ref=rightsidebar

இச்சிறுமியின் மரணத்திற்கு யார் காரணம்?

  1.  பாடசாலை ஆசிரியர் – மாணவியின் மனதை படிப்பு என்ற போர்வையில் நோகடித்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியமை. (Teaching method is specific for every individual) 
  1. வைத்தியம் பார்த்த மருத்துவர் – மாணவி நச்சருந்தி வந்தபோது  மருத்துவம் அளித்தபின், மாணவியின் மனநிலையை அறியாமல் வைத்தியசாலையில் இருந்து விடுவித்தமை (mental state should be assessed before discharge from hospital, if there was high risk of suicidal tendency patient should be detained and rehabilitated)
  2. பெற்றோர் – சிறுமியை மன திடகாத்திரம் அற்றவராக வளர்த்தமை 

ஈழத் தமிழர்கள் உட்பட 8 பேரைக் கொலை செய்த சீரியல் கொலையாளி Bruce McArthurக்கு ஆயுட்தண்டனை

ஸ்கந்தராசா நவரட்ணம் , கிஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட 8 பேரை தொடர் கொலையாக புரிந்தமையை நீதிமன்றில் Bruce McArthur ஏற்றுக்கொண்டார் அத்துடன் அதற்கு மன்னிப்பும் கோரி இருந்த நிலையில் நேற்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியது.

Bruce McArthur என்பவருக்கு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன் 25 ஆண்டுகளுக்கு பிணை கோரமுடியாத  சிறைத்  தண்டனை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் படி தற் பொழுது  67 வயதான Bruce McArthur   91 வயது வரை நன்னடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது.

சீரியல் கொலையாளி (Serial Killer) என்பவர்கள் உண்மையில் ஓர் வகையான மனநோயாளிகள். இவர்கள் தங்கள் மனதில் ஏற்படும் கொலை வெறியினை தீர்பதற்காகவே மற்றவர்களை கொலை செய்வார்கள். அதுவும் தம்மோடு எவ்வித விரோதமில்லாதவர்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. இவ்வாறே கிஷ்ணா கனகரட்ணம் என்ற இலங்கையரும் கனடாவின் டொராண்டோவில் Bruce McArthur என்ற Serial Killer இனால் கொல்லப்பட்டு கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு பூச்சாடியினுள் வைக்கப்பட்டார்.

இவர் 2010 இல் கனடா வந்தநிலையில் 2015ம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் டிசம்பர் காலப்பகுதிக்குள் கொல்லப்பட்டார். இவர் Bruce McArthur இனால் கொல்லப்பட்ட 8 வது நபர்.

சீரியல் கில்லர் என்பவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை குறிப்பிட்ட கால இடைவெளியினுள் கொல்வார். ஒரு கொலையினை செய்துவிட்டு குறிப்பிட்ட கால இடைவெயியினுள் அடுத்த கொலையினை மேற்கொள்ள திட்டமிடுவர். இவர்கள் எல்லா கொலைகளினையும் ஓர் குறிப்பிட்ட விதத்தினுள் மேற்கொள்வர் உதாரணமாக தலையினை சிதைத்தல் மூலம் மரணத்தினை ஏற்படுதல் அல்லது குறிப்பிட்ட இயல்புடையோரினை இலக்கு வைத்து கொல்வர் உதாரணமாக பருவமடையாத சிறுமிகள்.

போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இவர்கள் மேற்கொள்ளும் கொலையின் விதம் மற்றும் கொலையுண்ட நபர்களின் இயல்புகள் (offender profiling) ஒப்பிடுவதன் மூலம் சாத்தியமான சீரியல் கொலையாளியினை கண்டறிய முற்படுவர்