தற்கொலை செய்து கொள்ளும் இடங்கள்

அண்மைக் காலப்பகுதியில் வடபுலத்தில் தற்கொலை செய்து கொளப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து உள்ளது. போதாக்குறைக்கு கொரோனா நோயினால் பிறப்பிக்கப்பட்டுள்ள நாடு முடக்க நிலையும் இதனை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவர் தனது வாழ்விடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ள ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். இதனை விடுத்து பல நூறு கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்தும் ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கும் அவரது வசிப்பிடத்திற்கும் இடையிலான தூரத்திற்கும் அவரது மரணம் ஏற்பட்ட சூழ்நிலைக்கும் (தற்கொலை அல்லது கொலை) எதுவிதமான அறிவியல் ரீதியான தொடர்பும் இல்லை.
எம்மில் சிலர் தற்கொலை என்றால் நிச்சயம் அவர்களின் வீட்டில் அல்லது வீட்டிற்கு மிக அருகாமையில் தான் நடக்கும் எனவும் தூர பிரதேசங்களில் நடைபெற்றால் அது கொலை எனவும் பிழையான கருதுகோளை கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் பொதுவாக ஆள் நடமாற்றம் குறைந்த, ஒதுக்குபுறமான பிரதேசங்களையே தெரிவு செய்வர். மாறாக சிலர் ஆள் நடமாட்டம் கூடிய தொலை தூரத்தில் உள்ள பிரதேசங்களையும் தெரிவு செய்வர்.
தற்கொலை செய்வர்களின் மன நிலை, அவர்களின் கல்வி அறிவு, சமய, கலாச்சார செல்வாக்கு என்பன இவ்வாறு அவர்கள் தற்கொலை செய்யும் இடத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். இனி நாம் உலகத்தில் ஒரு சில இடங்களில் அதிகளவிலான மக்கள் தற்கொலை செய்துள்ளனர், அவ்வாறான ஒரு சில இடங்களினை பார்ப்போம்
1. Nanjing Yangtze ஆற்றுப்பாலம் இது சீனாவின் Nanjing பிரதேசத்தில் உள்ளது. இதில் இருந்து குதித்து வருடம் தோறும் பலர் இறக்கின்றனர். பலரின் உடல்கள் காணாது போய்விடுவதினால் எண்ணிக்கை மிக அதிகமாகும். 1968-2006 வரையான காலப்பகுதியில் 2000 வரையானோரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Nanjing Yangtze River Bridge - Wikipedia
2. Golden Gate பாலம் இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இங்கும் வருடம் தோறும் பல நூற்றுக்கணக்கானோர் குதித்து தற்கொலை செய்கின்றனர்.

Golden Gate Bridge - Wikipedia
இவ்வாறான இடங்களில் தற்கொலை செய்வதற்காகவே பலர் பல நூறு கிலோமீட்டர் பிரயாணம் செய்து வருவர்.
இலங்கையிலும் இவ்வாறான பல இடங்கள் உண்டு.

Kallady / Lady Manning Bridge (Batticaloa) · YAMU
முக்கியமாக இப்பதிவு தற்கொலையினை தூண்டும் விதமாக பதிவிடப்படவில்லை. மாறாக ஒருவர் எங்கு வேண்டுமானாலும் சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது கொலை செய்யப்படலாம். நாம் இது சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடும் பொழுது எமது குறுகிய நோக்கங்களை தவிர்த்து உண்மையினை வெளிக்கொணரும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்பதினை வலியுறுத்துகின்றது .
முற்றும்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை (Psychological Autopsy)

எம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

சாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of death) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermint) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது. உதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .

அவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்

  1. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்
  2. இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்
  3. இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

Psychological Autopsy & Modern Autopsy - The Nurse Page

திடீரென ஏற்படும் மன அழுத்தங்களால் தற்கொலைகள் நிகழ வாய்ப்பு இருக்காதா? அப்படி ஒருவர் உடனடி முடிவில் தற்கொலையை மேற்கொண்டால் அது பற்றி இந்த முறையில் முரண்பாடு தோன்றாதா? இல்லை. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது விஞ்ஞானரீதியான ஓர் செயன்முறை அதன் பிரதான நோக்கமே தற்கொலையினை இனம்காணல். திடீர் மனஅழுத்தம் ஏற்படும் மனிதர்கள் எல்லோரும் தற்கொலை செய்வதில்லை ஒருசிலரே செய்கின்றனர். இதற்கு அவர்களின் ஆளுமை, கடந்தகால அனுபவங்கள், சமூக பொருளாதார காரணிகள், உறவினர்களின் அரவணைப்பு / வெறுப்பு (psychology, sociology, biology, epidemiology, and anthropology)….. போன்ற பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை உளவியல் நிபுணர்கள் மேற்கொள்ளும் போது மேற்படி காரணிகளையும் கருத்தில்கொண்டே முடிவெடுப்பர் .

மேலும் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை ஆனது இறந்தவர்களின் உடலில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனைக்கு நிகரானது அல்ல மாறாக உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை எவ்வாறான சூழ்நிலையில் ஒருவர் இறந்தார் என கணடறியப் உபயோகிக்கப்படும் பரிசோதனை முறை ஆகும். மேலைத்தேச நாடுகளில் Psychological Autopsy Investigator (PAI) என்ற விற்பன்னர்கள் மூலமே இவ்வாறான உளவியல் உடற்கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன

முற்றும்

தகனமா? புதைகுழியா? சிறந்தது

நாட்டில் ஒரு புறம் கொரோனா நோயினால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அந்த நோயினால் இறந்த இரு முஸ்லீம் மக்களின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான முறையில் எரிக்கப்பட்டதினை தொடர்ந்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டுமா? புதைத்தால் ஆபத்தாய் முடியுமா? என்ற வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இப்பதிவில் இவை பற்றி ஆராயப்படுகின்றது.

Cremation-or-Burial-How-to-Choose-Whats-Best-for-You-1024x681

  1. இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

ஆரம்பத்தில் சுகாதார திணைக்களம் விடுத்த சுற்றறிக்கையின் பிரகாரம் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்த அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படும் உடல்களை புதைக்கவும் அல்லது எரிக்கவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாவது நோயாளியின் இறப்பினை தொடர்ந்து 1/4/2020 இல் ஏற்கனவே இருந்த சுற்றறிக்கை முற்றாக  மாற்றி அமைக்கப்பட்டு அவ்வாறான ஓர் உடலை எரித்து தகனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது QUARANTINE AND PREVENTION OF DISEASES என்ற சட்டத்தின் பிரகாரம் ஆகும். இச்சட்டதின் பிரகாரம் சுகாதார அமைச்சின் இயக்குனர் (DGHS ) அவர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

  1. சடலத்தினை புதைப்பதினால் கொரோனா வைரசு மேலும் பரவ சாத்தியம் உண்டா?

கொரோனா வைரசு 2019 ம் ஆண்டின் இறுதிப்குதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது, இக்குறுகிய கால இடைவேளையில் இவ்வைரசு சம்பந்தமான சகல தகவல்களும் ஆராய்ச்சிகள் மூலம் பெறப்படவில்லை. எனினும் கொரோனா குடும்ப வைரசுக்களின் இயல்புகள் போன்றவை ஏற்கனவே உள்ள தெளிவான தகவல்கள் ஆகும். தற்பொழுது உள்ள விஞ்ஞான அறிவின் பிரகாரம் இவ்வாறு கொரோனாவினால் இறந்த ஒருவரின் உடலினை புதைப்பதினால் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிப்பதில்லை.

  1. புதைப்பதினால் கொரோனா வைரசு நிலத்தடி நீரில் சென்று குடிநீர் மூலம் பரவுமா?

இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தில் உடலானது 8 அல்லது 10 அடி ஆழமான குழியிலே புதைக்கப்படும். மேலும் இரு தடித்த பொலித்தின் இனால் ஆன உறைகள் (more than 150µm and zipped seal body bag) மூலம் உடல் முற்றாக மூடப்படும். இதனால் உயிர்ப்பான நிலையில் வைரசுவானது நிலத்தடி நீரினை அடையாது. ஓரிரு மாதங்களில் உடலின் முக்கிய பகுதிகள் அழிவடைந்து விடும். அதன் பின்னரே பொலித்தீன் பைகள் உக்கி அழிவடைய ஆரம்பிக்கும். இவ்வாறே உடலினை சுற்றி பொலித்தீன் பைகள் போடப்படுவதினால் வழமைக்கு மாறாக அதிக வேகத்தில் உடலமானது உக்கி அழிவடையும். இக்காலப்பகுதியில் இறந்தவரின் உடலில் இருக்கும் வைரசுவும் இறந்து விடும். பொதுவாக இந்த வைரசுவானது 4 மணித்தியாலங்கள் வரை இறந்தவரின் உடலில் உயிர்ப்பான நிலையில் இருக்கும். வைரசுக்கள் தொடர்ந்து பிரிந்து பெருகி உயிர் வாழ  உயிர் நிலையில் உள்ள ஓர் கலம் தேவை. எனினும் தற்போதைய ஆய்வுகளின் பிரகாரம் இவ்வைரசுக்கள் உலோகம் போன்றவற்றின் மேற்பரப்பில் 72 மணித்தியாலங்கள் வாழும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் கருத்தின்படி புதைத்தல் மூலம் நிலத்தடி நீர் மாசுபடும் என்பதினை கூறவில்லை.

wp-15841865674796858912672646381447.jpg

  1. உடற் கூராய்வு பரிசோதனைகள் ஆபத்தானதா?

இவ்வைரசுவின் தொற்று ஏற்படும் காரணமாக இந்த நோயினால் இறந்தவர்களுக்கும் அவ்வாறு சந்தேக படுபவர்களுக்கு சுகாதார சேவை ஊழியர்களின் நலன் கருதி பொதுவாக செய்யப்படுவதில்லை. கொரோனா வைரசுவானது நோயாளி தும்மும் பொழுதும் இருமும் பொழுதும் அவரின் சுவாச தொகுதியில் உள்ள வைரசு ஆனது துணிக்கைகள் மூலம் மற்றையவரை சென்றடையும் ஆனால் உடற்கு கூராய்வு பரிசோதனையின்  பொழுது  இறந்த உடலில் இருந்து இவ்வாறு தும்மல் போன்ற போன்ற செயற்பாடுகள் நடைபெறாது எனினும் மின்சாரம் வாள் போன்றவற்றில் இருந்து துகள்கள் பறப்பதினாலும், இவ்வாறு வளியில் வைரசு ஆனது உயிர்ப்பாக காணப்படும் தன்மை இருப்பதினாலும், உடலின் மேற்பரப்பில் இருந்து தொடுகை மூலம் நேரடித்தொற்று ஏற்பட சாத்தியம் இருப்பதினாலும் உடற் கூராய்வு ஆபத்தானதாக இருக்கும்.

  1. உலகம் இவ்வாறான ஆபத்தான நிலையில் உள்ள பொழுது கட்டாயம் எரித்தல்/ புதைத்தல் என்ற வேறுபாடு தேவை தானா?

இன்றைய பொழுதில் உலக வல்லரசுகள் நோயின் தாக்கத்தினால் ஆடிபோயிருக்கும் நிலையில் பலரினதும் கேள்வி ஏன் சிலர் மட்டும் புதைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர், உடலினை எரித்தால் என்ன நடந்து விடப்போகின்றது. வேறு சிலரின் கருத்து மனிதன் இறந்து விட்டால் அது சடலம் தானே அதன் பிறகு எரித்தென்ன  புதைத்தென்ன.

தற்போதைய கால கட்டம் ஓர் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஓர் நெருக்கடியான அனர்த்தம் ஆகும். அதிஷ்டவசமாக   ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை கையாளக்கூடிய எண்ணிக்கையில் தான் அமைந்துள்ளன. இறப்புக்களின் எண்ணிக்கை கையாள முடியாத எண்ணிக்கையினை தாண்டி செல்லும் பொழுது நாம் எல்லோரும் நாட்டின் நன்மை கருதியும் சக பொதுமக்களின் நன்மை கருதியும் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். இலங்கையில் அதிஷ்டவசமாக அந்த நிலை இன்னமும் ஏற்படவில்லை.

ஒருவரின் மத நம்பிக்கை என்பது அவர் பின்பற்றும் மதங்களுக்கு ஏற்ப வேறுபடும், இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அந்த நம்பிக்கைக்கு அடிப்படையில் ஓர் விஞ்ஞான ரீதியான அல்லது தர்க்க ரீதியான அடிப்படை ஒன்று இருக்கும். பல சந்தர்ப்பங்களில்  மேற்குறித்த ஒன்றுமே இருக்காது. இவ்வாறான நிலையில் ஏன் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் என்ன என்ற ரீதியில் வாதிடுவது ஓர் முட்டாள் தனமான செயற்பாடாகவே அமையும்.  மேலும் மத அறிஞர்கள் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையில் தமது மத சம்பந்தமான அறிவின் ஊடாக புதைத்தலுக்கு பிரதியீடாக என்ன செய்யலாம் என்பது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

  1. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டுமா?

 உலக சுகாதார நிறுவனம் (WHO) அவ்வவ்போது தனது உறுப்பு நாடுகளுக்கு இவ்வாறு வழிகாட்டுதல்களை வெளிவிடும். அவை உண்மையிலேயே வழிகாட்டுதல்கள் தான் மாறாக சட்டம் அல்ல. உறுப்பு நாடுகள் அதனை தமது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம் அல்லது முற்றாகவே பின்பற்றாமல் விடலாம் அல்லது தமது நாட்டிற்கு என தனித்துவமான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தலாம்.

  1. சுகாதார அல்லது வைத்திய அதிகாரிகள் ஏன் இறந்தவரின் உடலினை உறவினரிடம் கையளிக்க பின்னிற்கின்றனர்?

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்த ஒருவரின் உடலில் அதிகளவு Covid 19 வைரசுக்கள் (high virus load) காணப்படும் இதன் காரணமாக மற்றவர்கள் இலகுவில் தொற்றுக்கு உள்ளவர் மேலும் இறந்தவரின் உடலினை குறித்த கால இடைவெளியினுள் (less than 12 hours ) மேலும் மத அறிஞர்கள் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையில் தமது மத சம்பந்தமான அறிவின் ஊடாக புதைத்தலுக்கு பிரதியீடாக என்ன செய்யலாம் என்பது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இது தவிர இலங்கையில் மரண சடங்கினை கொண்டு நடத்துபவர்களுக்கு (funeral directors) என விசேட சட்ட மூலங்கள் எதுவும் இல்லை, இதன் காரணமாக கையளிக்கப்பட்ட உடலுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியாது. மேலும் உறவினர்களினால் சீல் செய்யப்பட்ட உடல் சூழலுக்கு வெளிக்காட்டிடப்படும் சந்தர்ப்பமும் உண்டு.

                                                                      முற்றும்

கொரோனாவை ஒளித்து மறைப்பது ஏன்?

நேற்றைய தினம் நீர்கொழும்பு பகுதியில் ஒருவர் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தார். அதனைத்தொடர்ந்து அந்த நோயாளி மீது தன்னிடம் இருந்த நோயினை மறைத்து வைத்ததாகவும், சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்கவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் குற்ற சாட்டுக்கள் பரவிய வண்ணம் உள்ளன. நோயாளியும் குடும்பத்தினரும் இவ்வாறு மறைத்தமைக்கான காரணங்களில் ஒன்று இறந்தவர் கொரோனா நோயாளி என கண்டுபிடிக்கப்பட்டால் இறப்பினை தொடர்ந்து அவரது உடல் கட்டாயம் எரிக்கப்படும் என்ற பொய்யான தகவலே ஆகும். பொதுவாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூத மதத்தினர் இறந்தவரின் உடலினை புதைக்கவே விரும்புவர். எரித்து தகனம் செய்வது என்பது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதினால் அதனை விரும்புவதில்லை.
இலங்கையில் உள்ள தற்போதைய சுகாதார அமைச்சின் சட்ட திட்டங்களின் பிரகாரம் கொரோனா தொற்றினால் மரணமடைந்த ஒருவரின் உடலினை எரித்து தகனம் செய்ய அல்லது புதைக்க முடியும். புதைப்பதாயின் 6 அடி ஆழமான குழியில் நீருடன் தொடுகையில் இல்லாதவாறு உரிய சட்ட விதிகளின் படி புதைக்க முடியும். வைத்தியசாலையில் இவ்வாறான இறப்பு நடைபெற்ற பின்னர் அதிகாரிகள் யாரவது இறந்தவரின் உடலினை எரித்து தகனம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்தினால் மேலதிகாரிகளுக்கு அல்லது நீதிமன்றில் முறையிட முடியும்.
கீழே உள்ள படத்தில் இருந்து உரிய தகவல்களை பெற்று கொள்ள முடியும்.

Doc2-1_LI

ஆதாரம்: http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/covid-19-cpg_march-2020-moh-sl.pdf
25 தொடக்கம் 28 வரையான பக்கங்கள்

                                                                        முற்றும்

கொரோனா – மரணத்தின் பின்னர்?

எது நடக்கக்கூடாது என்று பலரின் பிரார்த்தனையாகவும் விருப்பமாகவும் இருந்ததோ, அது நடந்துவிட்டது. ஆம் அதுதான் இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியின் மரணம். மருத்துவ உலகில் உள்ள எவருமே இவ்வாறான மரணங்களை விரும்புவதில்லை. இம்மரணத்தினை தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் கொரோனாவின் கோரமுகத்தினை நாம் பார்க்கலாம்.

New coronavirus cases jump sharply in Europe, with Italy worst hit ...இப்பதிவில் இலங்கையில் கொரோனா நோய் உள்ளது என அல்லது இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால் அடுத்து அவரது உடல்  என்ன என்ன செயற்பாட்டு முறைகளுக்கு உள்ளாகும் என விபரிக்கப்படுகின்றது.

  1. கொரோனா நோய் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டவர் இறந்தால்

மரண விசாரணையோ, பிரேத பரிசோதனையோ அல்லது உடலை பதனிடல் போன்ற செயற்பாடுகள் எதுவுமே நடைபெறாது. வைத்தியசாலையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இறந்தவரின் உடலினை  நெருங்கிய உறவினர்கள் பார்வையிடலாம் அதன் பின்னர் உடல் சீல் செய்யப்பட்டு 24 மணி நேரத்தினுள் அடக்கம் செய்யப்படும்.உடலானது வீடு கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

  1. கொரோனா நோய் இருக்கலாம் என சந்தேகிப்படுபவர் இறந்தால்

இங்கு கொரோனா நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர் யாரென்றால் இரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் கொரோனா நோய் இருப்பதனை உறுதிப்படுத்த முன்னர் இறப்பவர்கள் மற்றும் நோயாளியின் குணம் குறிகள் மற்றும் நெஞ்சு கதிர் வீச்சு படங்கள் போன்றன கொரோனா நோய் அவருக்கு இருப்பதனை  உணர்த்தும் நோயாளிகள்

இவர்களுக்கு தேவை ஏற்பட்டால் மரண விசாரணை மேற்கொள்ளப்படும். பொதுவாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு அவசியம் எனில் உடலின் வெளிப்புற பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படும். உடலினை பதப்படுத்தல் செயன்முறைகள் எதுவுமே இல்லை. . வைத்தியசாலையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இறந்தவரின் உடலினை  நெருங்கிய உறவினர்கள் பார்வையிடலாம் அதன் பின்னர் உடல் சீல் செய்யப்பட்டு 24 மணி நேரத்தினுள் அடக்கம் செய்யப்படும்.உடலானது வீடு கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

மேற்படி இருவகையில் இறப்பு நடைபெற்றாலும்  இறப்பின் பின்னர்

  1. உடலினை கழுவி சுத்தம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
  2. உடலினை புதைக்க அல்லது எரிக்க அனுமதி அளிக்கப்படும்.
  3. புதைப்பதாயின் 6 அடி ஆழமான குழியினுள் புதைக்க வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது இறந்தவரின் உடல் உடல் பையினால் சுற்றப்பட்டு சீல் செய்யப்பட்டிருக்கும் மேலும் சில சந்தர்ப்பத்தில் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியானது சீல் செய்யப்பட்டிருக்கும். புதைக்கப்பட்டிருக்கும் இடம் ஆனது இனம் காணக்கூடிய வகையில் அடையாளப்படுத்தப்படும்
  4. உடல் தகனத்திர்ற்கு போலீசார், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர் ஆகியோர் மேற்பார்வை செய்வர்

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இறந்தவரின் உடலினை தகனம் செய்யலாம் அல்லது புதைக்கலாம். சில மக்கள் மத ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் உடலினை தகனம் செய்ய விருப்பபுவதில்லை. இந்நிலையில் யாரவது வைத்திய அதிகாரிகள் கட்டாயம் தகனம் செய்யவேண்டும் என வற்புறுத்தினால் மேலதிகாரிகளுக்கு பொதுமக்கள் முறையிடலாம்.

இப்பதிவானது சாதாரண பொதுமக்களுக்கு விளங்கும் வகையில்  சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையினை  தழுவி எழுதப்பட்டது. மூலப் பிரதியினை பின்வரும் லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளலாம்  http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/covid-19-cpg_march-2020-moh-sl.pdf

                                                            முற்றும்

கொரோனாவும் சட்டமும்

கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியான முறையில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் அண்மையில் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில், அவர்களை விமான நிலையத்தில் தனிமைப் படுத்த முயன்ற பொழுது அவர்கள் பலவந்தமாக தப்பி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் கொரோனா நோயினை வேண்டும் என்றே பரப்புவர்களுக்கு எதிராக இலங்கையில்  தற்பொழுதுள்ள எவ்வகையான சட்ட திட்டங்கள் மூலம் முறையாக நடவடிக்கை எடுக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

hqdefault

1.தொற்று நோய்கள் தொடர்பான தனிமைப்படுத்தல் சட்டம் (Quarantine and Prevention of Diseases Ordinance.)

இந்த சட்ட மூலம் இலங்கையில் உள்ள ஓர் மிக பழமையான சட்ட ஏற்பாடு ஆகும். இது 1897 ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இசசட்டத்தின் பிரகாரம்

இலங்கையின் ஏதாவது துறைமுகம் அல்லது விமான நிலையம் ஒன்றினுள் நுழையும் கப்பல் அல்லது விமானம் ஒன்றில் இருக்கும்  தொற்று நோய்க்கிருமிகளினை அழித்து கிருமி நீக்கம் செய்யவும் அவ்வாறே அவற்றில் கொண்டுவரப்பட்டிருக்கும் பொருட்களினை கிருமி நீக்கம் செய்யவும் அதிகாரம் அளிக்கின்றது. மேலும் இச்செயற்ப்பாடுகளுக்கு தேவையான பணத்தினை அறவிடவும் வழிவகை செய்கின்றது

மேலும் ஓர் கப்பலினை அல்லது விமானத்தினை விட்டு பிரயாணிகள் மற்றும் பொருட்கள் வெளியேற்றப்படுவதினையும் தடை செய்கின்றது. மேலும் தொற்று உள்ளது என சந்தேகிக்கப்படும் பொருட்களை கைப்பற்றவும் அவற்றினை உரிய அனுமதி பெற்ற தரப்பு அழிக்கவும் வழிவகை செய்கின்றது.

சட்ட ரீதியான முறையில் நோய் தடுப்பு மையங்களை அமைக்கவும், முக்கியமாக நோயாளிகளை தடுத்து வைத்து சிகிச்சை அளிக்கவும் மற்றைய பிராயணிகளை தடுத்து வைத்து மருத்துவ கண்காணிப்பு செய்யவும் வழிவகை செய்கின்றது. தொற்று நோய் உள்ள நோயாளிகளை வேறு இடத்திற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கவும் முடியும்.

இவ்வாறே சந்தேகத்திற்குரிய கப்பலினை அல்லது விமானத்தினை சோதனை இடவும் இச்சட்டம் அனுமதி அளிக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நோயாளிகள் தங்கியிருக்கும் கட்டிடத்தினையும் சோதனையிட முடியும்.

wp-15841865674796858912672646381447.jpg

   இனி முக்கியமான விடயமான இச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் எவை என பார்த்தால் முக்கியமாக குறித்த நபர் தனிமைப்படுத்தலுக்கும் அதனைத்தொடர்ந்து சிகிசசைக்கும் ஓத்துழைக்க வேண்டும் அத்துடன் அதிகாரமளிக்கப் பட்ட உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவிக்க கூடாது . அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதிகபட்சமாக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையுடன் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை தண்டமாக அறவிடப்படும்.

2. அடுத்து முக்கியமாக இலங்கையின் தண்டனை சட்ட கோர்வையின் 262, 263 ம் பிரிவின் ( 262 – Negligent act likely to spread injection of any disease dangerous to life, 263 – Malicious act likely to spread infection of any disease dangerous to life.) பிரகாரம் ஒருவர் தனக்கு ஓர் குறித்த நோய் நிலைமை உள்ளது என்பதினை மறைத்து அதனை மற்றவருக்கு பரப்புவதன் மூலம் மற்றவரின் உயிருக்கு பங்கம் விளைவித்தல் ஓர் குற்ற செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறன குற்றங்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை உண்டு அத்துடன் சந்தேக நபர்கள் நீதிமன்றின் பிடியாணை எதுவும் இன்றி கைது செய்யப்படலாம்.

மேலும் 264ம் (Disobedience to a quarantine rule) பிரிவு நோயாளர் தனிமை படுத்தல் சட்டத்திர்ற்கு கட்டுப்பட்டு ஒழுக்காதவர்களை தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.

3. இது தவிர தண்டனை சட்ட கோர்வையின் 310ம் பிரிவின் பிரகாரம் வேண்டும் என்றே இன்னொருவருக்கு நோயினை பரப்பில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும் (Hurt – section 310 of the penal code – Causing bodily pain, disease or infirmity)

4. இது தவிர போலீஸ் சட்டத்தின் பிரகாரம் கொரோனா பற்றிய பொய் செய்திகளையும், சமூகத்திற்கு தீங்கு இளைக்கும் வதந்திகளை பரப்புபவர்களை கைது செய்ய முடியும்.

5. தற்பொழுது புத்தளம், சிலாபம்…போன்ற பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டமும் ஒருவகையில் கொரோனா நோய் பரவுவதினை குறைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

இவ்வாறு பல சட்டங்கள் இருந்து பொறுப்பற்ற விதத்தில் கொரோனா நோயினை பரப்புபவர்களை கட்டுப்படுத்த முடியாமைக்கு முக்கிய காரணம் எம்மவருக்கு உள்ள சமூக அக்கறை அற்ற தன்மை என்றால் அது மிகை அல்ல.

                                                                       முற்றும்

கொரோனா – உயிரிழப்பு ஏன்?

இலங்கையிலும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. பயப்பீதி காரணமாக மக்கள் அதிகளவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பதுக்குகின்றனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றில் பலரும் கொரோனாவில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என பதிவுட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் எவ்வாறு இறப்பு ஏற்படுகின்றது, அது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.

wp-15841866321156732119278545175137.jpg

 

சாதாரணமாக தடிமலை (Flu) தோற்றுவிக்ககூடிய அண்ணளவாக 600 வகையான கொரோனா வைரசுக்கள் உள்ளன , உலகம் பூராக உள்ள அனைவரும் வாழ்நாளில் தடிமலினால் ஒருதடவையாவது  பாதிக்கப்படுகிறார்கள். பலர் ஆயுட்காலத்தில் நூற்றுக்கணக்கான முறை பாதிக்கப்படுகின்றார்கள், இவ்வாறு பாதிக்கப்படும் பொழுது அதனால்  ஏற்படும் மரணம் மிக மிக குறைவு , 10000 தடவை தடிமல் ஏற்படும் போது எத்தனை பேர் மரணிக்கின்றார்கள் என்பதை ,  10000 பேருக்கு கொரோனா ஏற்படும் போது எத்தனை பேர் மரணிக்கின்றார்கள் என்பதே சர்ச்சசைக்குரிய கேள்வி.

மேலே உள்ள படமானது கோரோனோவினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் நெஞ்சு பகுதிக்குரிய கதிர்ப்படமாகும். இதிலிருந்து நோயாளியின் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதினை நாம் பார்த்து அறிந்து கொள்ளலாம்

wp-15841865674796858912672646381447.jpg

கொரோனா நோயினை உண்டாக்கும் வைரசுவானது நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து தும்மும் போதும் இருமும் போதும்  வெளியேறும் சிறு திவலைகள் காற்றின் மூலம் மற்றையவரை அடைவதன் காரணமாக பரவுகின்றது. கொரோனா ஆனது மிக்க வீரியமாக பரவும் திறன் கொண்டமையினால், இந்த நோயினால் இறந்தவரின் உடலை நோயியல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு (pathological autopsy) உட்படுத்தி ஆராய்வதில் பல பிரச்சனைகள் உண்டு. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே (limited autopsy) உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆராய்ச்சி முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

முக்கியமாக இவ்வைரசுக்கள் மனிதனின் நுரையீரலில் நியூமோனியாவினை ஏற்படுத்துகின்றன. இதன் பொழுது எமது சுவாச சிற்றறைகளில் ஆரம்பத்தில் நீர்ப்பாயம் தேங்கும் (pulmonary odema) அதன்பின்னர் இரத்தம் தேங்கும் (diffuse alveolar hemorrhage) அதன் காரணமாக சூழலில் உள்ள ஓட்ஸிசன் ஆனது வினைத்திறன் மிக்க முறையில் எமது இரத்தத்துடன் சேராது. இதன்காரணமாக உடலின் பல்வேறு அங்கங்களில் ஓட்ஸிசன் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் தொழில்பாடு குறைவடையும். முக்கியமாக சிறுநீரகம், மூளை, இருதயம் போன்றவற்றின் செயற்பாடுகள் குறைவடையும். இறுதியாக மனிதனுக்கு இறப்பு ஏற்படும். கொரோனா வைரசுவின் வீரியம் மிக அதிகமாகும் ஒரு நாளிலேயே நோயாளியின் இரு நுரையீரலும் கடுமையான நியூமோனியா தாக்கத்திற்கு உள்ளாகும். lung-pathology-n

இவ்வாறு ஏற்படும் கொரோணவிற்கு மருத்துவ சிகிச்சை இல்லையா? கொரோனா வைரஸ் எனப்படுகின்ற covid-19 தொற்றானது குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகவே அறியப்படுகிறது. பெரும்பாலான நோயாளிகள் எதுவிதமான விசேட சிகிச்சை எதுவும் இன்றி குணமடைந்தாலும் சில நோயாளிகளுக்கு அதிதீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாகும். செயற்கை சுவாச இயந்திரம்(Medical ventilator), டயலைசிஸ் (Hemodialysis) எனப்படும் குருதி சுத்திகரிப்பு, நாளமூடு செலுத்தப்படும் திரவ சிகிச்சை போன்றவை தேவைப்படும். இவற்றைச் செய்வதற்கு போதிய உபகரணங்கள் தேவைப்படும். எமது சுகாதார சேவையால் கையாளக்கூடியளவு நோயாளர்கள் தொற்றுக்குள்ளாகும்போது குணப்படுத்தல் சாத்தியப்படும். அதிகளவான நோயாளர்கள் தொற்றுக்குள்ளாகும்போது மருத்துவ சேவைகள் செயலிழக்கும். அதன்பின் நிலைமை பாரதூரமாக கை மீறிப் போகக்கூடும். அத்துடன் இவ்வாறு கொரோனா நோயாளி ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் பொழுது சிகிச்சை காரணமாக அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு (complications) உள்ளாவர், உதாரணமாக  சில சந்தர்ப்பங்களில் புதிதாக அவர்களுக்கு நுரையீரலில் பக்ரீறியாக்களின் தொற்று ஏற்பட்டு (secondary bacterial infection) இறப்பு ஏற்படலாம்.  இது தவிர நோயாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் நோய் நிலைமையானது அதாவது இருதய நோய்கள், சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்றன கொரோனா காரணமாக தீவிரமடைந்து இறப்பினை ஏற்படுத்தும் சாத்தியமும் உள்ளது.
முற்றும்

 

உயிரை பறித்த உலக்கை வைத்தியம்

இன்றைய உலகத்தில் பல்வேறு பட்ட மக்கள் பல்வேறுபட்ட வைத்திய முறைகளை மேற்கொள்ளுகின்றனர். எமது நாட்டில் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி மருத்துவம்… போன்ற பல்வேறு பட்ட வைத்தியமுறைகள் தற்பொழுது மக்களால் பின்பற்றபட்டு வருகின்றன. அண்மையில் கூட நண்பர் ஒருவர் முந்தைய காலத்தில் இருந்த முறிவு, நெரிவு வைத்தியம் தற்பொழுது இல்லாமல் போய்விட்டதாக பெரிதும் குறைப்பட்டுக் கொண்டார்.

இனி விடயத்திற்கு வருவோம், அவனுக்கு 25 வயதுதான் ஆனால் அவனது முதுகு சிறுவயதில் இருந்து கூனி (Kyphosis) விட்டது. இதன் காரணமாக அவன் படிப்பினை இடை நடுவில் கைவிட நேர்ந்தது. மற்றைய சிறுவர்களுடன் கூட பெரிதாக சேர்வதில்லை. ஆரம்பத்தில் பெற்றோர் பல வைத்தியர்களை நாடினர் எல்லோருமே சத்திர சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என தெரிவித்து விட்டனர். அவனுக்கும் பெற்றோருக்கும் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த பயம் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று. இதன் காரணமாக அவர்கள் வைத்தியசாலை கிளினிக் செல்வதையே பல வருடங்களுக்கு முன்னர் நிறுத்தி விட்டனர். இந்நிலையில் தான் அவர்களின் உறவினர்கள் மூலம் ஓர் வைத்தியரின் தொடர்பு கிடைத்தது. அவ்வைத்தியர் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் பிரபல்யம் வாய்ந்தவர் அத்தோடு பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்தவர் என்ற சிபாரிசுவுடன். அவனும் பெற்றோரும் ஓர் நன்னாளில் அவ்வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்றனர். முதலில் அவ்வைத்தியர் ஏன் இவ்வளவு காலமும் தன்னிடம் வரவில்லை என கடிந்து கொண்டார். அதன்பிறகு தனது சிகிச்சை முறைகளை பற்றி விளக்கப்படுத்தினார்.
அதன் பின்னர் அவனை தனது சிகிசசை அறைக்கு அழைத்து சென்று மரத்தினால் ஆன கட்டிலில் முகம் குப்பற படுக்க வைத்தார். அதன் பின்னர் பலவகை தைலங்கள் தடவினார்கள். பின்னர் அவ்வைத்தியரும் அவரது உதவியாளரும் சேர்ந்து உலக்கையினை எடுத்து அவனது முதுகில் வைத்து பலமாக அழுத்தினார்கள். அவன் வேதனையில் துடித்தான். வைத்தியர் அவனுக்கு பல பகிடிகள் கூறியவண்ணம் மீண்டும் அழுத்தினார். அவன் வேதனையில் பலமாக கத்திய படி மயங்கி விட்டான். வைத்தியர் பதறியபடி அவனது முகத்தில் நீரினை ஊற்றினார். எதுவித சலனமும் இல்லை. பெற்றோர் பதறியபடி அவசர சேவை அம்புலன்ஸினை அழைத்தனர். அவர்கள் வந்தனர். அவர்கள் அவனை பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாக கூறினர்.

Image result for kyphosis

இச்சம்பவத்தின் பிறகு போலீசார் அவனது உடலை உடற் கூராய்வு பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். உடற் கூராய்வின் பொழுது அவ்வைத்தியர் அதிகமாக அழுத்தியதன் காரணமாக அவனது முதுகு எலும்பு விலத்தி அதன் அருகில் உள்ள தொகுதி பெரு நாடியினை (Aorta) காயப்படுத்தியதன் காரணமாக அவனது இரண்டு லிட்டர்க்கும் அதிகமான இரத்தம் வெளியேறி வயிற்று குழியினுள் வந்திருந்தமை கண்டறியப்பட்டது.

 

blunt-aortic-injury-1-728

இவ்வாறு உடற்கூற்றியல், உடற் தொழிலியல், நோயியல் போன்றவற்றின் துறைசார் அறிவு இல்லாமல் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பது நிச்சயம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தினை விளைவித்து விடும்.

HP PNG
இப்பதிவு மற்றைய வைத்திய முறைகளை பற்றி குறை கூறி ஓர் குறிப்பிட்ட மருத்துவ முறைதான் சிறந்தது அதனைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறவிழையவில்லை . மாறாக விஞ்ஞான ரீதியாக அற்று, பட்டறிவின் மூலம் அதாவது அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வைத்தியம் மூலம் எவ்வாறு மனித உயிருக்கு தீங்கு உண்டாகின்றது என்பது பற்றி விளக்குகின்றது.
முற்றும்

கிழக்கிற்கும் கொரனோ பரவும் ஆபத்து?

நாளுக்கு நாள் உலக நாடுகளில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் பலியாவோர் தொகை அதிகரித்து வருகின்றது அத்தோடு பல புதிய நாடுகளும் இவ்வைரசுவின் தாக்கத்திர்ற்கு உட்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பில் தொழுநோயாளர்களின் சிகிச்சை நிலையமாக அமைந்திருக்கும் மாந்தீவு வைத்தியசாலையிணை கொரனோ வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கை திருப்புபவர்களையும், பாதிக்கப்பட்ட வேறு வேறு வெளிநாட்டு நபர்களையும் அங்கு  தங்கி சிகிச்சை பெறும் நிலையமாக மாற்ற வேண்டும் என சில  வைத்திய அதிகாரிகள் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இச்செயற்பாடானது புத்திஜீவிகள் மத்தியில்  பலத்த சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது.

Quarantine என்ற ஆங்கில சொற்பதமானது  தொற்று நோய் பரவுவதினை தடுக்கும் முகமாக மக்களின் நடமாட்டத்தினை குறைத்தல் அல்லது மட்டுப்படுத்தல் என தமிழில் பொருள்படும். Quarantine என்பது Quaranta Giorni என்ற இத்தாலிய சொல்லினை அடிப்படையாக கொண்டே உருவாகியது. இதன் கருத்து நாற்பது நாட்கள் என்பதாகும். அதாவது முந்திய காலங்களில் ஓர் கப்பல் இத்தாலியினை அடையுமாயின் அவர்கள் அக்கப்பலில் உள்ளவர்களினை நாற்பது நாட்கள் தடுத்து வைத்த பின்னரே தமது நாட்டுக்குள் உள்நுழைய அனுமதிப்பர். இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஏதாவது தொற்று நோய் உள்ளதா என அவதானிப்பர், இருப்பின் அதற்கு சிகிச்சை வழங்குவர். அதன் பின்னரே தமது நாட்டிற்கு அனுமதிப்பர். தமிழில் quarantine என்பதினை தனிமைப்படுத்தப்பட்ட வைத்திய சாலை அல்லது விடுதி என அழைப்பதே சிறப்பானது.

 

quarantineக்கான பட முடிவுகள்

இவ்வாறான ஓர் நிலையில் மாந்தீவில் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்க முற்படுவது பின்வரும் சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது

  1. மாந்தீவு வைத்தியசாலை ஆனது ஆங்கிலேயரினால் தொழு நோயாளருக்கு கிசிச்சை அளிப்பதற்கென உருவாக்கப்பட்டது. அது ஓர் ஒதுக்கு புறத்தில், இலகுவில் அடையமுடியாது இடமாக அக்காலத்தில் இருந்தது. இதன் மூலம் தொழு நோயாளர் வெளிஉலகத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் வெளிச்செல்வது தடுக்கப்பட்டது. தொழு நோய் அற்றவர் ஒருவர் தொழு நோய் உள்ளவர்களுடன் நீண்ட காலம் தொடர்பில் இருக்கும் பொழுது தான் அவருக்கு அந்த நோய் ஏற்படுகின்றது. ஆனால் கொரனோ வைரசுவின் தாக்கம் அவ்வாறு அன்று அது மிக இலகுவாக மற்றவருக்கு (highly contagious) பரவி விடுகின்றது. இதன் காரணமாகவே உலக நாடுகள் இந்த வைரசுவினை கண்டு அச்சம் கொள்கின்றன. இந்நிலையில் மாந்தீவு வைத்திய சாலையில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், சிற்றுழியர், ஆய்வுகூட வசதி மற்றும் தொற்று நீக்கும் வசதி போன்றன உரிய வசதிகள்  காணப்படுமா என்றால் நிச்சயம் இல்லை. மேற்குறித்த வசதிகள் செய்யப்பட்டால் கூட   சிறப்பு வைத்தியர்களின் (Virologist, Microbiologist and other specialist) மேற்பார்வை மற்றும் MRI (Medical Research Institute) நிறுவனங்களின் போன்ற ஆய்வுகூட வசதிகள் கொழும்பினை தளமாக கொண்டே கிடைக்கப் பெறுகின்றன. எனவே இவற்றினை பெறுவது பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் கொழும்பில் இருந்து வைத்தியர்கள் வருகை தந்தாலும் அவர்கள் வாராந்தம் ஒருசில நாட்கள் மட்டுமே தங்கி நிற்பர். அவர்களை நம்பி இத்தகைய சவால் மிக்க சிகிச்சையினை ஆரம்பிக்கலாமா?
  1. பொதுவாக இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகள் அல்லது முகாம்கள் விமான நிலையம் அல்லது துறைமுகம் போன்றவற்றினை அண்டியே அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் உள்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதினை குறைக்கும் முகமாகவே, இலங்கையிலும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன. அந்நிலையில் அவற்றினை தவிர்த்து மிக தொலைவில் இருக்கும் மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன ?
  2. இவ்வாறு தெரிவு செய்ததன் மூலம் அப்பிரதேச மக்களுக்கும் ஏன் அம்மாகாண மக்களும் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்து அதிகம் ஏன்னெனில் நோய்தொற்றடைந்தவர் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்பு துறைமுகம் போன்றவற்றில் இருந்து இவ்வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படுவர். அவ்வாறு கொண்டுவரப்படும் பாதை முழுவதுமே நோய் பரவும் சாத்தியம் உள்ளது.
  3. நோயாளிகளை தரைப் பாதை தவிர்ந்து உலங்கு வானுர்தி மூலம் கொண்டுவருவது சாத்தியப்பாடு குறைவானது. அத்துடன் ஓர் நோயாளி கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் இறப்பராயின் உடலை என்ன செய்வது? உடலினை உலங்கு வானுர்தி மூலம் கொண்டுசெல்வது சாத்தியம் அற்றது. இறந்த உடல் நிச்சயம் ஆபத்தானது. சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு இவ்வாறு கொரனோ தொற்றடைந்த அல்லது சந்தேகங்களுக்குரிய மரணங்களுக்கு எவ்விதமான உடற் கூராய்வு பரிசோதனைகளும் செய்ய வேண்டாம் என கண்டிப்பான அறிவுறுத்தல் வேறு விடுக்கப்பட்டுள்ளது
  4. இலங்கையில் ஏற்கனவே இவ்வாறு ஏற்படும் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென முல்லேரியாவில் IDH (Infectious Disease Hospital) என்ற வைத்தியசாலை பெரும் வசதிகளுடனும் உரிய வைத்திய நிபுணர்களுடனும் செயற்பட்டு வரும் நிலையில், மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?HP PNG
  5. ஏற்கனவே துறைமுகங்கள் மற்றும் விமனநிலையங்கள் போன்றவற்றில் செய்யப்பட்டு வரும் இத்தகைய வைத்திய சாலைகள் போன்றவற்றின் பங்களிப்பு என்ன ?

இவ்வாறான திடீர் நடவடிக்கையினால் நிச்சயம் பாதிக்கப்படுவது மக்கள் தான். மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வைத்தியர்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குறியாகின்றது. அவர்கள் மக்களுக்கு உண்மையில் நன்மை செய்ய விழைகின்றனரா? அல்லது மறைமுகமாக தாம் நன்மையடைய முற்படுகின்றனரா? என்ற கேள்விக்கான பதிலே முக்கியமானது ஆகும்.

முற்றும்

சாரதி தப்பி ஓட முடியாமைக்கு காரணம் என்ன?

அண்மையில் வவுனியாவில் ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கியிருந்த சாரதி விஷமிகளால் வைக்கப்பட்ட தீயில் கருகி உயிரிழந்தமை யாவரும் அறிந்ததே. சாதாரணமாக பாரிய விபத்து சம்பவம் ஒன்றினை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து சாரதி மற்றும் முன்னிருக்கையில் இருப்பவர் உடனடியாக வாகனத்தினை விட்டு வெளியேறுவது ஓர் கடினமான செயலாகவே இருந்து வருகின்றது. ஏன் இவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும். ஒவ்வோர் காரணங்களும் பின்வருமாறு
1. வாகனத்தின் முன்பகுதி (dash board) சாரதியின் கால்களினை தாக்கி எலும்பு முறிவு உட்பட பலத்த காயங்களினை விளைவித்திருக்கும் மற்றும் இரு கால்களும் வாகனத்தின் உடைந்த பகுதியில் வசமாக சிக்கி இருக்கும்.

driver injury patternக்கான பட முடிவுகள்

2. நவீன வாகனங்களில் வாகனத்தின் கதவானது விபத்தினை தொடர்ந்து இலகுவில் திறபடாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வீதி விபத்துக்களின் பொழுது வாகனங்கள் உருளும் பொழுது, வாகனத்தில் உள்ளிருப்பவர்கள் வெளியே தூக்கி எறியப்படாதவாறு வாகனங்களின் கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவும் ஓர் வகை பாதுக்காப்பு ஏற்பாடு தான். ஆனால் தீ பரவும் சமயங்களில் பிரயாணிகளுக்கு மற்றும் சாரதிக்கு ஆபத்தானதாக மாறிவிடுகின்றது.
3. சாரதியின் கழுத்து பகுதியில் ஏற்படும் காயம். இது சட்ட மருத்துவத்தில் whip lash injury என அழைக்கப்படும். விபத்துக்களின் பொழுது ஏற்படும் சடுதியான அமர்முடுகல் காரணமாக ஏற்படுகின்றது. இதன் காரணமாக கழுத்து பகுதியின் உள்ள தண்டு வடம் பாதிக்கப்படுவதன் காரணமாக உடனடியாகவே குறித்த நபரின் கை மற்றும் கால் ஆகியன பாரிசாவாத நிலைக்கு உள்ளாவதன் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

whiplash injuryக்கான பட முடிவுகள்

4. சிறிது நேரம் ஏற்படும் மயக்கமான நிலை (transient loss of consciousness) அதாவது தலையில் பலமான மொட்டை விசை ஒன்று தாக்கும் (blunt force) பொழுது அவருக்கு தலையில் எவ்விதமான காயங்களும் ஏற்படாது ஆனால் சிறிது நேரம் மயக்க நிலையில் இருப்பார். இவ்வாறான நிலை சட்ட மருத்துவத்தில் concussion என்றழைக்கப்படும். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

concussionக்கான பட முடிவுகள்

5. தலைப்பகுதியில் ஏற்படும் பாரதூரமான காயங்களினால் (Severe traumatic brain injury) ஏற்படும் நினைவிழந்த நிலை காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
6. மதுபானம் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை பாவித்து இருந்தால் அதன் தாக்கம் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

HP PNG

7. வாகனம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் இருந்து பல்வேறுபட்ட மனிதனின் சுவாசத்திற்கு உகந்தது அல்லாத வாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்களினை அவர் சுவாசிப்பதன் காரணமாக அவர் மயக்க நிலைமைக்கு உள்ளாவர். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
8. சாரதிக்கு விபத்தினை தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமைகளான மாரடைப்பு போன்றன தீவிரமடைந்த நிலையில்

முற்றும்