யாழில் முதியோர் துஸ்பிரயோகம்

அண்மையில் காரைநகர் பிரதேசத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வயோதிபர் ஒருவர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுமதிக்க பட்டார் என்பதை முகநூல் வாயிலாக அறிய முடிந்தது. முதியோர் எனப்படுபவர் யார் என்று பார்ப்போமானால் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 65வயதினை கடந்தவர்கள் என்று வரைவிலக்கணப் படுத்த படுகின்றனர். எனினும் நாட்டிக்கு நாடு இது வேறுபடலாம். சில நாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டோர் முதியராக கருதப்படுவதுண்டு.

1.முதியோர் துஸ்பிரயோகம் என்றால் என்ன?

முதியவர் ஒருவரினை கவனிப்பவரினால் அல்லது அவரின் நம்பிக்கைக்கு உரியவர்களினால் வேண்டும் என்றே செய்யப்படுகின்ற ஓர் நடவடிக்கையினால் அல்லது உரிய செயற்பாடு ஒன்றினை செய்யாது விடுவதன் காரணமாக முதியவர் ஒருவருக்கு தீங்கு அல்லது தீங்கு ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுமாயின் அது முதியோர் துஸ்பிரயோகம் எனப்படும்.

 2. ஏன் முதியோர் துஸ்பிரயோகம் பற்றி நாம் கவலைப்பட அல்லது அக்கறைப்பட வேண்டும்?

 சிறுவர்களை போன்றே முதியவர்களும் மற்றையோரில் தங்கி வாழ்வதன் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடிவெடுக்க முடியாது போவதாலும் அவர்கள் துஸ்பிரயோகத்திர்ற்கு உட்பட கூடிய சாத்தியக்கூறு அதிகம் உள்ளவர்கள். இவ்வாறான பல்வேறு காரணங்களால் முதியோர் துஸ்பிரயோகம் பற்றி அக்கறைப்பட வேண்டியதாயிருக்கின்றது.

3. முதியோர் துஸ்பிரயோகம் மிக அண்மைக்காலத்தில்தான் ஆரம்பித்ததா ?

தமிழ்ச் சமுதாயத்தில் முதியோர் துஸ்பிரயோகம் ஆனது முந்திய காலத்தில் மிக குறைவாகவே இருந்தது. முன்பு இருந்த கூட்டுக்குடும்ப முறை மற்றும் தமிழரின் சமய கலாச்சாரங்களின் இறுக்கம் காரணமாக முந்திய காலத்தில் மிக குறைவாகவே இருந்தது. போரின் பொழுதான இடம் பெயர்வுகள் போரின் பின்னரான காலப்பகுதியில் உள்ள தமிழரின் சமய கலாச்சாரங்களின் தளர்வுகள் முதியோர் துஸ்பிரயோகம் அதிகரிக்க பெரிதும் காரணமாக அமைகின்றன.

4. முதியோர் துஸ்பிரயோகம் எவ்வாறு நடைபெறுகின்றது?

முதியோர் துஸ்பிரயோகமானது பின்வரும் வழிகளில் நடைபெறுகின்றது

  • உடலியல் ரீதியான துன்புறுத்தல்கள் (Physical Abuse)

இதன்பொழுது முதியோருக்கு அடித்தல், நுள்ளுதல் போன்ற உடலை வேதனையாக்கும் செயற்பாடுகள் இடம்பெறும். மேலும் இதனுள் முதியோரின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தும் முகமாக கட்டிப்போடுதல் போன்றவையும் உள்ளடங்கும்.

  • பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் (Sexual Abuse or Abusive Sexual Contact)

இலங்கையில் இவ்வகையான துஸ்பிரயோகங்கள் நடப்பது குறைவாகும்.

  • மனரீதியான துஸ்பிரயோகம் (Emotional or Psychological Abuse)

முதியோரினை தகாத வார்த்தைகளை பிரயோகித்து திட்டுவதினால் அவர்களுக்கு உண்டாகும் மனவேதனை, மனப்பயம், மனக்கிலேசம் போன்றவற்றினை இவ்வகையான துஸ்பிரயோகம் உள்ளடக்கின்றது. இலங்கையில் இவ்வகையான துஸ்பிரயோகங்கள் அதிகளவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • கவனிப்பாரற்று விடுத்தல் (Neglect )

எம்மை பெற்று வளர்த்து பெரியவர்களாக்கிய பெற்றோருக்கு உரிய மருத்தவ வசதிகள், தங்குமிட வசதிகள், உணவு, உடை, நீர் … போன்றவற்றினை வேண்டும் என்றே அளிக்காமல் விடுதல். இவ்வகையான துஸ்பிரயோகம் இலங்கையை அதிகளவில் தற்பொழுது நடைபெறுகின்றது. இதன் காரணமாகவே அதிகளவு முதியோர் இல்லங்களும் தோற்றம் பெற்றுள்ளன.

  • நிதி ரீதியான துஸ்பிரயோகம் Financial Abuse or Exploitation)

முதியவர் ஒருவருக்குரிய பணத்தினை அல்லது சொத்தினை முறையற்ற விதத்தில் அல்லது அதிகாரமற்ற விதத்தில் அவரின் பின்னுருத்தாளி செலவு செய்தலினை இது குறிக்கும். பல இடங்களில் முதியவர்களின் ஓய்வூதியம் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்படுவது வழமை.

5. முதியோர் துஸ்பிரயோக சம்பவங்களை முகநூல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பிரசுரிக்கலாமா?

இல்லை . முதியோர் துஸ்பிரயோகம் என்பது முதியோரின் உறவினர் மற்றும் பிள்ளைகளினால் வேண்டும் என்றே செய்யப்படும் ஒரு செயற்பாடு,  இவ்வாறு நடைபெற்றதினை நாம் ஊடகங்களில் பிரசுரித்து அவரின் உறவினர்களுக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்திய பின்பு முதியவரினை நாம்  அவரின் உறவினர்களுக்கு முதியவரினை பராமரிக்கும் படி கையளிக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில் அது முதியவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தப்படலாம் மரணம் கூட சம்பவித்த சம்பவங்கள் உண்டு. இவற்றுக்கு மேலதிகமாக முதிவரினை நாம் அவரும் ஓர் மனிதர் என்று கணம் பண்ண வேண்டும். சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் மாதிரியே இவ்வாறான சம்பவங்களினை நாம் கையாள வேண்டும்.

80

சத்தமின்றி ஒரு வேட்டு

கடந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பினை தொடர்ந்து இலங்கையில் காலகாலமாக நடைபெற்று வந்த வேள்வி மீதான தடை சட்ட ரீதியாக அகற்ற ப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலர் சமூக வலைத்தளங்களில் வேள்விக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலைத்தேச நாடுகளில் எவ்வாறு விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும். மேலைத்தேச நாடுகளில் ஆடு, பன்றி  மற்றும் மாடுகள் போன்றவற்றினை அவை வலி, வேதனை அனுபவிக்காதவாறு கொல்ல  பல்வேறுபட்ட முறைகள் பாவிக்கப்பட் டாலும் Captive bolt pistol என்ற துப்பாக்கி தான் பொதுவாக பாவிக்க படுகின்றது. இது பொதுவாக பின்வரும் பெயர்களில் அழைக்கப் படுகின்றது cattle gun, stunbolt gun, bolt gun, or stunner. இது பொதுவாக மிருகத்தினை உடனடியான மயக்க நிலைக்கு கொண்டு சென்று இறப்பினை ஏற்படுத்த உதவுகின்றது. இங்கு துருப்பிடிக்காத உலோகத்தினால் ஆன கம்பியே வழமையான துப்பாக்கியின் சன்னதிற்கு பதிலாக பாவிக்கப்படுகின்றது. இங்கு உலோகக் கம்பி துப்பாக்கியில் மறைந்த நிலையில் இருக்கும் சாதாரண துப்பாக்கி போன்றே trigger இணை அழுத்த உலோக கம்பி விடுவிக்கப்படும். இங்கு துப்பாக்கி ரவையில் வெடி மருந்துக்கு பதிலாக உலோக கம்பியானது வாயு மூலம் அல்லது ஸ்பிரிங் மூலம் அமுக்கப்பட்ட உலோக கம்பி விடுவிக்கப்படும். சிலவேளைகளில் அரிதாக blank round இல் வெடி மருந்து பாவிக்கப்பட்டு அமுக்கம் உண்டாக்கப்பட்டு (explosive)உலோக கம்பி விடுவிக்கப்படும்.

இவற்றில் பொதுவாக 3 வகைகள் உண்டு

  1. penetrating – இதில் பாவிக்கப்படும் உலோக கம்பியானது கொல்லப்படவிருக்கும் விலங்கின் மண்டையோட்டினுள் பாயும் தன்மை உடையது.
  2. non-penetrating – இதில் பாவிக்கப்படும் உலோக கம்பியானது நுனிப்பகுதியில் காளான் போன்று விரிந்து இருப்பதால் கொல்லப்படவிருக்கும் விலங்கின் மண்டையோட்டினுள் பாயும் தன்மை அற்றது ஆனால் கடுமையான விசையினை கொடுப்பதால் விலங்கு இறக்கும். இது பொதுவாக வினைத்திறன் குறைந்த உபகரணம் ஆகும்.

மேற்குறிய இருவகையிலும் நாம் உலோக கம்பியினை மீளப்பெற்று பயன்படுத்த முடியும்.

3.  free bolt – இது சாதாரண துப்பாக்கி போன்றது.

captivebolt.placements

இவ்வகையான துப்பாக்கிகளை பயன்படுத்தி   மனிதர்களை கொல்ல முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் விடை ஆம் என்பதே. ஊடகவியலாளர் லசந்த விக்ரம துங்கவும் இவ்வாறான ஒருவகையான துப்பாக்கியினால் தான் கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர மேலைத்தேசத்தில் பல்வேறு நபர்கள் இவ்வகையான துப்பாக்கியினால் கொல்லப்பட்தாக சான்றுகள் உள்ளன.

நடிகை ஸ்ரீதேவியின் மர்மமரணம்

கடந்த வருடம் பிரபல நடிகை ஸ்ரீ தேவி டுபாயில் உள்ள ஓர் விடுதியில் திடீர்ரென்று இறந்தார். அவரது உடல் குளியறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்தே மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த மரண விசாரணையின் பொழுது அவர் மாரடைப்பின் காரணமாகவே இறந்தார் என்று கூறப்பட்டது. இவ்வாறு பிரபலங்கள் அகால மரணம் அடைந்த பொழுதெல்லாம் பல்வேறு பட்ட சர்ச்சைகள் எழுவது வழமை. பலரும் தங்களை பெரும் புலனாய்வார்களாக உருவகித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்புவார்கள். இவ்வாறே கடந்த வாரமும் கேரளத்தினை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஸ்ரீ தேவி அவர்கள் கொலை செய்யப்பட்டே இறந்தார் எனக்கூறி பெரும் பரபரப்பினினை ஏற்படுத்தியிருந்தார். அவர் மேலும் கூறியதாவது ஸ்ரீ தேவி அதிகமாக குடித்து விட்டு நீர்த்தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார் என்பது ஏற்க முடியாதது அப்படி அவர் அதிகமாக குடித்து இருந்தாலும் அவரினால் 1 அடி தண்ணீரில் அவரினால் மூழ்க முடியாது, அவரது தலையினை யாராவது ஒருவர் பலவந்தமாக நீரில் அமிழ்த்தியே சாகடித்தனர் என்று பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

இப்பதிவின் நோக்கம் ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது எவ்வாறு மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் அவர் இறந்த சூழ்நிலை (Circumstance of Death) எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை ஆராய்வதே ஆகும்.

ஒவ்வொன்றாக ஆராய்வோம்

  1. ஒருவர் நீர் நிலையில் உள்ள பொழுது அல்லது அதற்கு அருகாமையில் உள்ள பொழுது அவருக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமையானது தீவிரமடையலாம் உதாரணமாக இயற்கையாக ஏற்படும் நோய்களான மாரடைப்பு, காக்கை வலிப்பு , குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் உடலில் சடுதியான குளுகோஸின் குறைவு (Hypoglycemic attack) போன்றன ஏற்படலாம். ஏற்கனவே ஆரோக்கியமானவர் ஏன்று கருதப்படுவருக்கு மாரடைப்பு போன்றன முதன்முறையாகவும் ஏற்படலாம். உண்மையில் இவர்களுக்கு இந்நோய் குணம்குறி அற்று இருந்திருக்கும். இவ்வாறு ஏற்படும் நோய் நிலையினால் அவர்கள் இறந்து நீரில் விழலாம் அல்லது நீரில் வீழ்ந்து இறக்கலாம்.
  2. நீர் நிலை ஒன்றில் பொதுவாக கடல், குளம் , ஆறு போன்றவற்றில் நீச்சல் தெரியாத ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம்.
  3. நீர் நிலை ஒன்றில் பொதுவாக கடல், குளம் , ஆறு போன்றவற்றில் நீச்சல் தெரிந்த ஒருவர் நீச்சலில் ஈடுபடும் பொழுது அவர்கள் சுழி , கடுமையான நீரோட்டம் போன்றவற்றில் அகப்பட்டு தற்செயலாக மரணமடையலாம். இவ்வாறே கடற்கரையில் நிக்கும் ஒருவர் பாரிய அலையில் இழுபட்டு சென்று மரணமடையலாம்
  4. நீச்சல் தெரியாத ஒருவரை வேறு ஒருவர் நீர் நிலையினுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்யலாம். அவ்வாறே நீச்சல் தெரிந்த ஒருவருக்கு அதிகளவு மதுபானம் அல்லது போதைப்பொருள் போன்றவற்றினை கொடுத்து அல்லது தலை போன்றவற்றில் காயங்களை ஏற்படுத்தி அவரினை செயற்படாத நிலைக்கு கொண்டுவந்த பின்னர் நீர் நிலையில் தள்ளி விழுத்தியிருக்கலாம்.

நாம் மதுபானம் அருந்தும் பொழுது அதன் அளவு எமது இரத்தத்தில் அதிகரித்து செல்லும், இவ்வாறு அதிகரித்து செல்லும் பொழுது ஒவ்வொரு செறிவிலும் (Blood alcohol concentration – BAC) அது எமது உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களை உண்டுபண்ணும். இவ்வாறு உடலில் வெவ்வேறு செறிவுகளில்/ அளவுகளில் மதுபானம் உள்ள பொழுது ஏற்படும் மாற்றங்களை பின்வரும் அட்டவனை காட்டி நிற்கின்றது

bac-graph

இதன் பிரகாரம் எமது இரத்தத்தில் 160 – 300 mg/dl வரை மதுபானம் காணப்படும் பொழுது நாம் வழமையான மனிதர்கள் போன்று செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் அதாவது எமக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் மற்றும் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அற்று போகும். பல சந்தர்ப்பங்களில் அறிவு இல்லாமல் போகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவரினை மிக இலகுவாக எவ்விதமான எதிர்ப்புகளும் இன்றி கொலை செய்த சம்பவங்கள் உண்டு. மதுபானத்தின் அளவு இரத்தத்தில் மேலும் அதிகரித்து 300 – 450 mg/dl என்ற செறிவு நிலையினை அடையும் பொழுது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அதாவது அவர் பெரும்பாலும் சுயநினைவு அற்ற நிலைக்கு தள்ளப்படுவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருசில அங்குல உயரத்திற்கு நீர் தங்கி இருந்தாலே போதுமானது. அதாவது ஒருவர் முகம் குப்புற சிறிய அளவிலான நீரில் வீழும் பொழுது அவ்நீரானது உயிரிழப்பினை ஏற்படுத்த கூடியது.
5. குளியலறையின் குளியல் தொட்டியில் நீந்தும் பொழுது சில சந்தர்ப்பங்களில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகலாம்
6.நபர் ஒருவர் ஒருவரினை கொலை செய்துவிட்டு அவரின் உடலினை நீர் நிலை ஒன்றினுள் போடலாம். இதன்மூலம் அவர் நீரில் மூழ்கியே இறந்தார் என்று காட்டிட முற்படுவர்.
7. சில சந்தர்ப்பங்களில் ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடும் பொழுது அங்குள்ள முதலைகள் போன்ற உயிரினங்கள் தாக்கி மனித உயிரிழப்புக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் நிறைய உண்டு.

இவ்வாறு ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் அவர் இறந்த சூழ்நிலை (Circumstance of Death) பல்வேறுபட்டவாறு வேறுபடுகின்றது.

புகைக்கூடு அவசியம்தானா?

அது ஒரு சிறிய குடும்பம். அவர்களின் வசிப்பிடம் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஓர் தொடர்மாடி வீட்டுத்தொகுதி. கணவன் மற்றும் மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகம் மற்றும் இரு பிள்ளைகள். வேலைகாரி  என்று யாரும் இல்லை. அன்றும் அவள் அதிகாலை எழுந்த உடனேயே  சென்று தேநீர் தயாரிக்கும் நோக்குடன் சமையலறைக்கு சென்றாள் . அங்கு சமையலுக்கு பயன்படுத்தும் காஸ் வாசனை அவளது மூக்கை சிறிதளவு அரித்தது. அவளும் என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு மின்சார சுவிட்ஸினை ஒன் பண்ணினாள். ஒருவினாடிதான் அவளின் உடை    மற்றும் சமையலறையில் இருந்த துணி மற்றும் பொலித்தீன் பைகள் போன்றவற்றில் நெருப்பு பற்றிக்கொண்டது. அவள் அவலக் குரல் எழுப்பினாள். கணவன் மற்றும் பிள்ளைகள் தீயினை பகீர பிரயத்தனத்தின் பின்னர் அணைத்தனர். வைத்தியசாலையில் அவள் அனுமதிக்கப்பட்ட பொழுது தீ அவளது உடலின் மேற்பரப்பின் 70 சதவீதத்தினை (Total Body Surface Area) இல்லாமல் செய்திருந்தது. ஒரு சில நாட்கள் அதிதீவிர சிகிச்சையின் பின்னர் அவள் இறந்தாள்.

சாதாரணமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரிலிருந்து காஸ் கசிவடைந்து வெளியேற பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு. பெரும்பாலும் இரவில் சமையலறையில் யாரும் இல்லாத பொழுது வாயு கசிவினை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் மேலும் இரவு வேளைகளில் யன்னல்கள் யாவும் பூட்ட பட்ட நிலையில் கசிவடையும் வாயு ஆனது அறையில் தேங்கி நிற்கும்.இவ்வாறு தேங்கி நிற்கும் வாயு ஆனது துணி, ஈரமான பொருட்கள் போன்றவற்றுடன் பௌதிக ரீதியாக இணைந்திருக்கும். இவ்வாயுவானது மின்சார ஆளிகளை செயற்படுத்தும் பொழுதும், சிகரெட் லைட்டரினை பற்ற வைக்கும் பொழுதும், வாயு அடுப்பினை பற்ற வைக்கும் பொழுதும் உண்டாகும் மிகச்சிறிய தீப்பொறி காரணமாக தானாகவே தீப்பற்றி எரியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் யன்னல் மற்றும் கதவினை திறந்து காற்றோட்டத்தினை ஏற்படுத்தி தேங்கிய வாயுவினை வெளியேற்ற வேண்டும் அல்லது ஐதாக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை பின்னரே ஆராய வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில் பலர் தமது நவீன வடிவமைப்பில் வீடுகளை கட்டும் பொழுது சமையலறையில் புகை போக்கிகளை வைப்பதில்லை அதற்கு  அவர்கள் கூறும் காரணம் எரிவாயுவிலும் மின்சாரத்திலும் சமைக்கும் பொழுது புகை வாராது தானே என்பது தான். உண்மைதான், ஆனால் இவ்வாறு எரி வாயு கசிவு நிகழும் பொழுது புகை போக்கிகள் தேங்கிய எரி வாயுவினை வெளியேற்ற அல்லது ஐதாக்க பெரிதும்  உதவும்.

தமிழரின் வாழ்வியலோடு புகைக்கூடு பெரிதும் தொடர்புபட்டுள்ளது புக்காரா வரும் பொழுது ஓடி பதுங்கிய இடமும் அது தான், கள்ளவன் வீட்டுக்குள் நுழைவதும் அதனால் தான், முன்னோர் விதை தானியங்களை கட்டி சேமித்து வைப்பது அது தான். தமிழ் பிரதேசங்களில் நான் அவதானித்த விடயம் யாதெனில் பெரும்பாலான வீடுகளில் சமையலறையில் GAS குக்கர் ஆனது புகை போக்கியின் (புகைக்கூடு ) கீழ் அல்லாது வேறு ஒரு இடத்தில் தொழில் படுநிலையில் இருக்கும். இந்நிலை வாயுக்  கசிவின் பொழுது ஆபத்தினை விளைவிக்க கூடியது. இன்னொரு சந்தர்ப்பத்தில் gas  குக்கர் இல் எவ்வாறு எரிவாயு கசிவு ஏற்படுகின்றது அதனை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி குறிப்பிடுகின்றேன்.

மேலே உள்ள வீடியோவில் கசிந்துள்ள வாயு எவ்வாறு பற்றி எரிந்து ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை பார்க்கவும். (ஆரம்பத்தில் விபரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இங்கு காட்டப்பட்ட விடியோவிற்கும் தொடர்பில்லை, ஆனால் அதனை ஒத்த ஓர் சம்பவம்)

 

 

 

5G – சில தெளிவு படுத்தல்கள்

  1. 5G தொழில் நுட்பம் தொடர்பான அறிவியல் ரீதியற்ற பதிவுகள் அதிகமாக உள்ளதற்கு காரணம் என்ன?

நேற்றைய தினம் 5G சம்பந்தமாக ஓர் பதிவினை இட்டத்தினை தொடர்ந்து பலர் எனது உள்பெட்டியில் வந்து 5G மிகவும் ஆபத்தானது நீங்கள் ஏன் நல்லது என்று பதிவுட்டுளீர்கள் என்று கேட்டு பல ஆதாரங்களை அனுப்பியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் ரீதியான விளக்கம் அற்றவை. எம்மில் பலர் நினைக்கின்றனர் இன்டர்நெட்டில் வருவதெல்லாம் அறிவியல் சார்ந்தது என்றும் உண்மை என்றும். எம்மில் பலர் எவ்வாறு மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகியிருக்கின்றார்களோ அவ்வாறே வெளிநாடுகளில் உள்ள பலரும் இருக்கின்றார்கள். அவர்களால் தான் இவ்வாறு பல ஆக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஒருசில ஆக்கங்கள் மறைமுகமாக தமது விற்பனையினை ஊக்குவிக்கும் முகமாக ஒருசில கம்பெனிகளால் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக கீழே உள்ள லிங்கில் உள்ள ஆக்கம்

https://www.radiationhealthrisks.com/5g-cell-towers-dangerous/

இது கதிரியக்க தாக்கத்தினினை குறைக்கும் என நம்பப்படும் கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் இணையத்தளம் இதில் அவர்கள் தமது உற்பத்தியினை (Wifi guard) அதிகரிக்கும் முகமாகவே 5G பற்றிய தவறான பல கருத்துக்களை இட்டுள்ளனர்.மிக அண்மைக்காலத்திலேயே தான் மேற்படி தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப் பட்டு சந்தைக்கு வந்தது. இதன் காரணமாக இவற்றின் மீதான அறிவியல் ரீதியான ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிவந்துள்ளன. அதன்காரணமாகவே அறிவியல் ரீதியற்ற பதிவுகள் அதிகமாக உள்ளது.

2. 5G தொழில் நுட்பம் மீதான அறிவியல் ரீதியான ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிவந்துள்ள நிலையில் எவ்வாறு அறிவியல் ரீதியாக அது பாதுகாப்பான தொழில் நுட்பம் என்று எவ்வாறு கூறலாம் ?

தற்போதைய அறிவியல் அறிவின் பிரகாரம் 5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் அயனாக்கும் தன்மை அற்றவை இதன் காரணமாக அவை நிறமூர்த்தத்தில் எவ்விதமான மாற்றங்களையும் உண்டுபண்னாது, ஆனால் நீண்ட காலப்போக்கின் விளைவு என்ன? என்பது பற்றி கண்டறிய பல வருடங்கள் செல்லலாம். இதன் காரணமாகவே National Radiological Protection Board (NRPB) of the United Kingdom, World Health Organization (WHO), International Commission on Non-Ionizing Radiation Protection (ICNIRP) போன்ற பல்வேறு அமைப்புக்கள் பல வரையறைகளை அறிவித்துள்ளன. இதன் பிரகாரம் 0 – 300GHz அதிர்வெண் பொதுவாக அனுமதிக்க படுகின்றது.

உசாத்துணை

(1) International Commission on Non-Ionizing Radiation Protection (ICNIRP). Statement on the “Guidelines for limiting exposure to time-varying electric, magnetic and electromagetic fields (up to 300 GHz)”, 2009.

(2) Institute of Electrical and Electronics Engineers (IEEE). IEEE standard for safety levels with respect to human exposure to radio frequency electromagnetic fields, 3 kHz to 300 GHz, IEEE Std C95.1, 2005.

3. யார்தான் கருத்து கூறலாம்

சாதாரணமாக ஒருசில வைத்தியர்களை தவிர ஏனையோர் சட்ட மருத்துவ துறையில் மேற்படிப்பு மேற்கொள்வதை விரும்புவதில்லை. ஏன்னெனில் தினமும் இறந்தவர்களை பரிசோதனை செய்யவும் காயங்களை பரிசோதிக்கவும் நேரிடும் என்பதுவும் ஓர் காரணம். சட்ட மருத்துவ துறையில் மேற்படிப்பினை மேற்கொள்ளும் பொழுது பாடத்திட்டத்தில் INJURIES DUE TO PHYSICAL AGENTS, WARFARE INJURIES என்ற இரு பாடங்கள் உண்டு இதில் பல்வேறுபட்ட கதிரியக்கங்கள் எவ்வாறு எமது உடலை பாதித்து உடலில் காயத்தினை அல்லது மரணத்தினை ஏற்படுத்துகின்றது என்பதை பற்றியதே ஆகும்.

மேலும் WARFARE INJURIES என்ற பாடத்தில் யுத்தத்தில் எவ்வாறு இரசாயன, உயிரியல் மற்றும் கதிரியக்க ஆயுதங்கள் உடலில் காயத்தினை உண்டு பண்ணி இறப்பினை உண்டு பண்ணுகின்றது என்பது பற்றியது ஆகும். இங்கு கதிரியக்க ஆயுதங்கள்/ உபகரணங்கள் எனப்படும் பொழுது சாதாரண மைக்ரோ wave oven மற்றும் கைத்தொலைபேசியில் இருந்து அணுகுண்டு வரையானவற்றில் எவ்வையான கதிரியக்கம் நிகழுகின்றது அவற்றினால் மனித உடலுக்கு எவ்வகையில் தீங்கு ஏற்படும் என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது. மேலும் நான் சட்ட மருத்துவ துறையில் நச்சியல் (Forensic Toxicology) சம்பந்தமாக விசேட கற்கை நெறியினை மேற்கொண்டுள்ளேன். இப்பாடத்திட்டத்தில் Radio toxicity என்ற பெரிய பாடமே உள்ளது இதில் சாதாரணமாக இயற்கையில் காணப்படும் கதிரியக்கத்தினை காலும் மூலகங்கள் தொடக்கம் தொலைத்தொடர்பு சாதனங்கள், அணு ஆயுதங்கள் வரை அவற்றின் கதிரியக்கமும் அதனால் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி விலாவாரியாக குறிப்பிட பட்டுள்ளது.நான் தொழில்முறையில் தொலைதொடர்பாடல் பொறியியலாளர் அல்ல. ஆனால் வைத்தியர் என்ற அடிப்படையிலேயே உடல் நலத்திற்கு 5G தொழில் நுட்பம் தீங்காகுமா? என்ற கருத்தினை இடுகின்றேன்.

இனி விடயத்திற்கு வருவோம் 5G தொழில் நுட்பம் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்று கருத்து தெரிவிக்க எத்தகைய கல்வி அறிவு தேவை? கருத்து தெரிவிப்பவர் ஆராய்ச்சிகள் பல செய்ய வேண்டுமா? 5G தொழில் நுட்பம் ஆனது ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பல நாடுகளில் பல ஆராச்சிகளின் பின்னர் அறிமுக படுத்தப்பட்டு பாவனையில் உள்ளது. இங்கு எவ்வகையான அலைகள் பாவிக்கப் படுகின்றன, அவை அயனாக்கும் திறன் உடையவையா, மனித கலம் ஒன்றின் நிறமூர்த்ததில் மாற்றத்தினை உண்டு பண்ணுமா போன்ற விடயங்கள் தெரிந்தாலே போதுமானது. அதாவது பௌதீகவியல் மற்றும் உரியல் அறிவு உள்ள கல்வி பொது தராதர உயர் தரத்தில் கல்வி கற்கும் திறமையான மாணவன் ஒருவனாலேயே முடியும்.

இங்கு கீழ் உள்ள படத்தில் காணப்படுவதை விளங்கிக் கொண்டாலே பலவற்றிக்கு விடை கிடைக்கும்.

emspectrum

00

5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் உண்மையாகவே சக்தி குறைந்தவை அதாவது நீண்ட தூரம் பயணிக்க மாட்டாது மேலும் சுவர்கள் போன்றவற்றையும் ஊடுருவ மாட்டாது. மேலும் இவை ஒருசில நூறு மீட்டர்களே செல்லும் அதன் காரணமாகவே ஸ்மார்ட் லாம்ப் போல் (smart lamp pole) குறுகிய தூர இடைவெளியில் போடப்படுகின்றது. மாறாக தொலைத்தொடர்பு கோபுரங்களில் ட்ரான்ஸ்மிட்டர்களினால் காலப்படும் அலைகள் அதிக சக்தி கொண்டவை. இவை ஒருசில கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் அத்துடன் சுவர் போன்றவற்றினையும் ஊடுருவும். அதன் காரணமாகவே தொலைத்தொடர்பு கோபுரங்கள் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைக்க பட்டுள்ளன.

இலங்கையில் இத்தொலை தொடர்பு கோபுரங்களில் இருந்து காலப்படும் அலைகளின் அதிர்வெண் போன்றவற்றினை இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவே கண்காணிக்கின்றது. முக்கியமாக அவை அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா? என்று பரிசோதிக்கப்படும். ஆனால் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இலாப நோக்கம் கருதி அதிக தூர இடைவெளியில் கோபுரங்களை பராமரிப்பதன் காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலான அளவில் அலைகளை வைத்திருப்பதுண்டு. அவ்வாறு வைத்திருந்தால் தான் எல்லா இடமும் Coverage வரும் இலங்கை போன்ற நாட்டில் இவற்றினை கண்டு பிடிப்பதுவும் தடுப்பதுவும் கடினமே.

4. 5G ஆபத்தானது என கூக்குரல் ஈடுபவர்கள் என்ன செய்யலாம்?

000

Ericsson நிறுவனத்தின் 5G தொழில் நுட்பம் ஏற்கனவே தொழில் படுநிலையில் உள்ள சில நாடுகளை மேற்படி படம் காட்டுகின்றது.

5G தொழில் நுட்பம் இலங்கையில் கொழும்பில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளநிலையில் யாழ்ப்பாணத்தில் கொண்டுவர முற்படுகின்றனர். இலங்கையில் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொழுது குறித்த தொலைபேசி நிறுவனம் TRC எனப்படும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் அனுமதி பெறவேண்டும். இது சம்பந்தமாக RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள் ? பயன்படுத்தப்படும் அலை கதிர்வீச்சின் விபரம்? அனுமதிக்க ப்பட் ட அளவு? எவ்வாறு கண்பாணிப்பார்கள்? உலக அளவில் அனுமதிக்க பட்ட கதிர்வீச்சின் அளவு? இலங்கையில் அனுமதிக்க ப்பட்ட கதிர்வீச்சின் அளவு போன்ற தகவலைகளை பெற்று உரிய வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வழக்கினை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும். அதை விடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தனிப்பட்ட ரீதியில் இலாபம் தரும் வகையில் செயற்பட கூடாது.

5. யாழ்ப்பாணிக்கு 4G தொழில் நுட்பம் போதுமா?

சிலர் கூறுகின்றனர் தங்களுக்கு ஆளில்லா வாகன வசதி தேவையில்லை, ஏற்கனவே உள்ள 4G வசதியினை ஒழுங்கான முறையில் தந்தால் போதுமானது என வாதிடுகின்றனர். உலகில் ஒவ்வொருவரும் தமது கல்வி, தொழில் தகமைகளுக்கு ஏற்பவே தொழில் நுட்பத்தினை தெரிவு செய்கின்றனர். உதாரணமாக இன்று பலர் அதிக வசதிகளுடன் கூடிய கைத்தொலை பேசிகளை வைத்திருந்தாலும் எல்லாரும் எல்லா வசதிகளையும் பயன்படுத்துவதில்லை.

எனது வெளிநாட்டு நண்பன் அடிக்கடி தொலை பேசியில் கூறும் விடயம் தனது இலங்கையில் தாய் மற்றும் தகப்பனாரை அவதானிக்க பூட்டிய CCTV கேமரா அடிக்கடி struck ஆகுது என்பதே. சுருங்க சொன்னால் slow motion இல் தான் வீடியோ வினை பார்க்க முடிகின்றது. மேலும் நான் உரிய வல்லுநர்கள் மூலம் ஆராய்ந்த பொழுது தெரியவந்த விடயம் யாதெனில் இலங்கையில் தற்பொழுதுள்ள இன்டர்நெட் வேகம் போதாமையே ஆகும்.

1_7aPrPnd1wK9y8U_jJx9l0Q

இப்பதிவில் நன்மைகள் பற்றி பட்டியல் இடாமல் நான் 5G தொழில் நுட்பத்தினால் உடல்நலக்கேடு உண்டாகுமா? என்பது பற்றித்தான் ஆராய்ந்துள்ளேன்.+

5G தொழில்நுட்பம் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

கணவன் மனைவியை பல தடவைகள் கத்தியால் குத்தியது ஏன்?

அன்மையில் நடந்த ஓர் கொலைச்சம்பவம் ஒன்றில் கணவன் மனைவியை 15 தடவைகள் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்தார். இவ்வாறாக நடைபெற்ற சம்பவங்களில் எம்மனதில் ஏன் இவ்வாறு ஒருவர் பலமுறை குத்தி அல்லது வெட்டி கொலை செய்யவேண்டும்? என்ற வினா மனதில் எழும். சாதாரணமாக இவ்வாறான குற்ற சம்பவங்களில் குற்றவாளியின் மனதில் எழும் பழிவாங்க வேண்டும் என்ற மன உந்துதல் (intention) காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்து செயற்பாடும் (action) மன உந்துதலும் ஒருங்கே நடைபெற்றிருக்க வேண்டும்.

மன உந்துதல் இன்றி நடைபெற்ற குற்ற சம்பவங்கள், குற்ற செயல்களாக கருதப்படுவதில்லை அத்துடன் தண்டனையும் விதிக்க படுவதில்லை. பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியின் மனநிலை சட்ட மருத்துவ துறை சார்ந்த உளவியல் நிபுணரால் விசேட ஆராயப்படும். மேலும் இவ்வகையான குற்றவாளிகள் சமுதாயத்தில் இருப்பதால் பெரும் தீங்குண்டாகும். இதனால் சமூகத்தின் நன்மை கருதி இவர்கள் வாழ்நாள் முழுவதும் அல்லது அவர்கள் மன நோயில் இருந்து மீளும் வரை மனநல வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

வழக்கு விசாரணையின் பொழுது சட்ட வைத்திய அதிகாரியிடம் குற்றவாளியின் மன உந்துதல் சம்பந்தமாக பல்வேறு கேள்விக்கணைகள் தொடுக்கப்படும். ஓர் சட்ட வைத்திய அதிகாரியானவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது இறந்தவரின் உடலில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவார்

  1. வெட்டு அல்லது குத்து காயங்களின் எண்ணிக்கை

குற்றவாளிக்கு மன உந்துதல் அதிகமாயின் காயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்

  1. வெட்டு அல்லது குத்து காயங்கள் உடலில் காணப்பட்ட பிரதேசங்கள்

குற்றவாளிக்கு மன உந்துதல் அதிகமாயின் காயங்கள் பொதுவாக நெஞ்சு, கழுத்து மற்றும் முகத்தில் காணப்படும். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளினால் ஏற்படும் கொலைகளில் பொதுவாக பெண்களின் அல்லது ஆண்களின் முகம் அதிகளவில் சிதைக்க ப்பட்டிருக்கும்

3. ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளில் காயத்தினை ஏற்படுத்தியிருத்தல்

உதாரணமாக வெட்டு காயங்கள் மூலமும் துப்பாக்கி சூட்டு மூலமும் மரணத்தினை ஏற்படுத்தியிருத்தல்
4. சில சந்தர்ப்பங்களில் ஒரு நபர் இறந்த பின்பும் குற்றவாளி தீவிர மன உந்துதல் காரணமாக காயங்களை (postmortem injuries) ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது அவரது உடலை துண்டங்களாக வெட்டி (Dismemberment) இருக்கலாம
5. ஒரு நபர் இறந்த பின்பும் குற்றவாளி மன உந்துதல் காரணமாக அவரது உடலை மறைத்து வைத்திருக்கலாம் (surreptitious disposal)

இவ்வாறான விடயங்களின் அடிப்படையிலேயே குற்றவாளியின் மன உந்துதல் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படுகின்றது

போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

நிஜத்திலிருந்து.....'s avatarநிஜத்திலிருந்து.....

அன்று காலை எனது அலுவலக அறையினுள் வெலிக்கடை சிறை காவலர்கள் இருவர் 50 வயது மதிக்கதக்க ஒருவரை கைத்தாங்கலாக தூக்கி வந்து எனக்கு முன்னாள் நிறுத்தினார்கள். என்ன பிரச்சனை என்று விசாரித்த பொழுது அவர்கள் சொன்னார்கள் “இவன் மரணதண்டனை கைதி, இவனுக்கு மெடிக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது”. நான் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு அவனிடம் கேட்டேன் யார் அடித்தார்கள்? என்று அவன் சொன்னான் ஒருவரும் அடிக்கவில்லை. நான்  பயப்படவேண்டாம் என்று சொல்லி மீண்டும் கேட்டேன், யார் அடித்தார்கள்? என்று, அவன் சொன்னான் சேர் ஒருத்தரும் அடிக்கவில்லை. என்னால் நடக்க முடியாது. தயவு செய்து கிட்ட வந்து ஒருக்கா பாருங்கள் என்றான். அவனும் நின்றபடியே தனது சாரத்தினை மெதுவாக அவிழ்த்து காட்டினான். ஒருகணம் நான் திகைத்து விட்டேன். அவனுக்கு இரண்டு பக்கமும் ஹேர்னியா வந்து அவனது விதைப்பை தேங்காய் அளவு வீங்கி இருந்தது. அவன் தொடர்ந்து நடந்ததால் அது தேய்ப்பட்டு புண்ணாகி சீழ் பிடித்து மணத்தது. நான் கேட்டேன் உந்த ஹேர்னியா எவ்வளவு காலமாக இருக்கின்றது என்று? அவன் கூறினான் 6 வருடமாக. மேலும் அவரிடம் தொடந்து வினவிய பொழுது அவர் கூறினார் தான் முன்பு மெனிங்க் மீன் மார்க்கெட்டில் நாளாந்த கூலிக்கு மீன் வெட்டியதாகவும் வழமையாக வேலை முடிந்து வரும் பொழுது அவ் மார்க்கெட்டில் முதலாளியாக இருக்கும் ஒருவரின் முச்சக்கரவண்டியில் வந்து தனது வீட்டிக்கு அருகாமையில் இறங்குவதாகவும் தெரிவித்தார். மேலும்…

View original post 195 more words

ஏன் நாம் மரண தண்டனையினை எதிர்க்க வேண்டும்?

இலங்கை சனாதிபதி கையெழுத்து இட்டதினை தொடர்ந்து அடுத்த வாரம் அளவில் ஒரு சில மரண தண்டனை கைதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் மரணதண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மரணதண்டனைக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. இதனால் தான் சர்வதேச நாடுகள் பலவும் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பலவும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பலருக்கு ஏன் நாம் மரண தண்டனையினை எதிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை. இதற்கு அண்மையில் நடந்த ஓர் சம்பவத்தினை எடுத்துக்கூற விரும்புகின்றேன். கடந்த வருடத்தில் மாவீரர் தினத்தினை ஓட்டி வவுணதீவில் நடைபெற்ற சம்பவத்தில் இரு போலீசார் கொல்லப்பட்டனர். அதனை அடுத்து அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் தடுப்பில் வைக்க பட்டார். அண்மையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பினை தொடர்ந்து கைது செய்யப் பட்டவர்களில் நடந்த விசாரணைகளின் படி அவர் குற்றம் அற்றவர் என்று விடுதலை செய்ய பட்டுள்ளார். இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழாது விடின் அவர் கொலைக்குற்றவாளி ஆக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது பல வருட சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப் பட்டிருக்கலாம் அல்லது சிறையிலேயே இறந்திருக்கலாம்

இவ்வாறு ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், சட்ட வைத்திய அதிகாரி உரிய சான்று பொருட்களை சேகரிக்காமல் விடலாம் அல்லது நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம், சட்ட தரணி உரிய முறையில் வாதாடாமல் இருக்கலாம், பிரபல குற்றவியல் சட்ட தரணியின் சேவை கிடைக்காமல் விடலாம், மற்றும் சிலவேளைகளில் நீதிபதி உணர்ச்சி வசப்பட்டு தீர்ப்பு வழங்கலாம்.

இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப் பட்ட வழக்கினை விஞ்ஞான ரீதியில் மீளாய்வு செய்ய வசதிகள் இல்லை, இவ்வாறான நிலையில் பல மனித உயிர்கள் மரணதண்டனை மூலம் பலியாக வாய்ப்புள்ளது. மேலும் மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம்.

போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

 

ஆபத்தான பட்டன் பற்றரி

இன்றைய நவீன காலத்தில் பல சிறிய மின்னணு உபகரணங்கள் மிகச்சிறிய லித்தியம் பற்றரியினால் நெடுங்காலம் இயங்கத்தக்கதாக வடிவமைக்க பட்டுள்ளன. அவற்றில் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் முக்கியமானவை. ஆரம்ப காலத்தில் அளவில் பெரிதாயும் வினைத்திறன் குறைந்ததாயும் இருந்த மின்கலங்கள் தற்பொழுது அளவில் சிறியதாயும் நீண்டகாலம் பாவிக்க கூடியதாயும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்த மூன்று வயது சிறுவனின் தந்தையார் கொழும்பு மாநகரின் சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்களை விற்கும் கடை ஒன்றினை நடாத்தி வருபவர். அநேகமாக வாராந்தம் அவரது கடைக்கு வரும் புதிய விளையாட்டு சாதனங்களில் ஒன்றினை வீட்டிற்கு கொண்டு வந்து, அச்சிறுவணிற்கு விளையாட கொடுப்பது வழமை.

மூன்று மாதங்களுக்கு முன்னர் துடிதுடிப்பாக இருந்த சிறுவனுக்கு கடுமையான சளி, காய்ச்சல் வந்தது. அவர்களும் அவனை வழமையாக போகும் அவர்களது குடும்ப வைத்தியரிடம் அழைத்து சென்று மருந்து எடுத்தார்கள். வைத்தியரும்  அவனை பரிசோதித்து விட்டு ஒரு சில மருந்துகளை கொடுத்தார். இரண்டு வாரமாக மருந்து எடுத்தும் அவனது நோய் நிலைமை குறையவில்லை மாறாக நோய் நிலைமை கூடியது.

உணவு அருந்தும் பொழுதும் பால் குடிக்கும் பொழுதும் மற்றும் அவன் கடுமையாக இருமுவான், பலசந்தர்ப்பங்களில் வாந்தியும் எடுப்பான். இவ்வாறு இவனது நிலை நாளுக்கு நாள் மோசமாகியதால் அவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். தூரதிஷ்டவசமாக அனுமதிக்கப்பட்ட ஒரிஇரு மணித்தியாலங்களில் அவன் இறந்துவிட்டான்.

JMedSci_2014_34_1_40_129392_f1

அவனது உடலினை உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொண்ட பொழுது தெரியவந்த அதிர்ச்சி தரும் விடயம்  யாதெனில் அவன் விளையாடும் பொழுது அவனது விளையாட்டு சாதனத்தில் இருந்த பட்டன் பற்றியினை விழுங்கி இருந்தான் அது அவனது களத்தில் (Oesophagus) ஒட்டியவாறு இருந்து அதில் துவாரத்தினை (traumatic tracheoesophageal fistula) ஏற்படுத்தி அவனின் சுவாச தொகுதியின் வாதனாளியுடன் தொடர்பு படுத்தியது இதன் காரணமாக அவன் சாப்பிட்ட உணவு மற்றும் பால் போன்ற திரவங்கள் அவனின் சுவாச தொகுதியினுள் சென்று அவனிற்கு நிமோனியா காய்ச்சலினை ஏற்படுத்தி அவனிற்கு இறப்பினை ஏற்படுத்தியது.

சாதாரணமாக பாவிக்கும் இவ்வாறான பற்றரிகளில் லித்தியம் காணப்படும். இவ்வகை பற்றிகள்  மிக ஆபத்தானது ஏனெனில் தவறுதலாக விழுங்கப்படும் பொழுது இவை சிறுவர்களின் களத்தில் ஓட்டுப்பட்டு அவற்றில் துவாரத்தினை ஏற்படுத்தும், இத்துவாரமானது அருகில் உள்ள வாதநாளி உடனோ அல்லது அருகில் உள்ள இரத்த குழாய்களுடனோ தொடர்பு கொள்ளும் பொழுது முறையே எமது சுவாச தொகுதியினுள் உணவு உட்செல்லல் மற்றும் இரத்த போக்கு என்பன ஏற்படும் இவை காலப்போக்கில் இறப்பிற்கு வழிகோலும். (The damage is caused, not by the contents of the battery, but by the electric current that is created when the anode  of the battery comes in contact with the electrolyte-rich esophageal tissue. The surrounding water undergoes a hydrolysis reaction that produces a sodium hydroxide (caustic soda) build up near the battery’s anode face. This results in the liquefactive necrosis of the tissue, a process whereby the tissue effectively is melted away by the alkaline solution. Severe complications can occur, such as erosion into nearby structures like the trachea or major blood vessels, the latter of which can cause fatal bleeds)

(இங்கு மேலே விளையாட்டு சாதனம் ஒன்றில் பற்றரி இலகுவில் கழற்ற முடியாதபடி மூடியில் ஆணி வைத்து பூட்ட பட்டுள்ளது)

இவற்றிக்கு மேலதிகமாக இவ்வாறான பற்றரிகளில் Mercury or cadmium போன்ற பார உலோகங்கள் காணப்படும் இவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சாதாரணமாக விளையாட்டு உபகரணங்களில் இவ்வகையான பற்றரிகள் இலகுவில் கழன்று வெளியே வாரா வண்ணம் ஓர் சிறிய ஆணி (screw ) மூடியில் போடப்பட்டிருக்கும். விலை குறைந்த உபகரணங்களில் இவ்வாறு இருப்பதில்லை.

Gagging உயிருக்கு ஆபத்தானதா?

அண்மையில் திருட்டில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மூதாட்டி ஒருவரின் வீட்டினுள் பலாத்காரமாக புகுந்து கொள்ளையில் இடுபட்ட பொழுது, அம் மூதாட்டி உதவி கோரி கத்த முற்பட்டார் அப்பொழுது அவர்கள் அவரின் வாயினுள் துணியினை அடைந்து விட்டு கொள்ளையில் இடுபட்டார்கள். பின்னர் அவரின் கை மற்றும் கால்களில் கயிற்று மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைத்து விட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் வாயில் அடைந்த துணியை எடுக்கவும் இல்லை. மறுநாள் அயலவர் அவரினை பார்க்க சென்ற பொழுது அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டு அவசரமாக வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உயிர் பிழைத்தார்.
கடந்த காலங்களில் இவ்வாறு மேற்கூறியதை ஒத்த பல சம்பவங்களில் பல உயிரிழப்புக்கள் நடைபெற்றுள்ளன. உண்மையில் திருடர்களின் நோக்கம் அவ்மூதாட்டியினை கொலை செய்வதல்ல. அவரின் உதவி கோரும் குரலினை வெளியில் கேட்க விடாமல் செய்வதே.

man-mouth-covered-masking-tape-preventing-speech-isolated-black-410325867978025000070593872.jpg

இனி இவ்வாறன சம்பவங்களில் எவ்வாறு மரணம் சம்பவிக்கும் என்பதை பார்ப்போம். சாதாரணமாக எமது வாய்க்குழியில் எந்தவொரு பிற பொருளும் வைக்க படும் இடத்து வழமைக்கு மாறாக அதிக அளவில் உமிழ் நீர் சுரக்கும். இங்கும் இவ்வாறே அதிகளவு உமிழ்நீர் சுரந்து அடைக்கப்பட்ட துணியை ஈரமாக்கும் இதனால் துணி (gag)அளவில் பெரிதாகி தொண்டையினுள் (naso pharynx) இறங்கி தொண்டையை முற்றாக அடைக்கும் அல்லது ஏற்கனவே பகுதி அளவில் அடைபட்டிருந்த தொண்டை முற்று முழுதாக அடைப்பட சுவாசம் மேற்கொள்ள முடியாமல் இறப்பு ஏற்படும். இது சட்ட மருத்துவத்தில் Gagging என்று அழைக்கப்படும். இங்கு துணியானது தொண்டை பகுதியிலேயே காணப்படும். உலகில் இவ்வாறன சம்பவங்கள் அரிதாக வாய்மூல உடலுறவின் போதும் ஏற்படலாம்.
தமிழில் புரைக்கேறல் என்பது நாம் உண்ணும் உணவு வாத நாளியினுள் (trachea) உள்ளிறங்குதல் ஆகும்.