வீட்டிற்குள்ளும் வந்தது 5G

தற்போதைய தொழில் நுட்ப உலகில் இணையத்தின் வேகம் அதிகம் இருந்தால் மட்டுமே அதிக விடயங்களை இலகுவாக சாதிக்கலாம். இதன் பொருட்டு காலகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றில் இறுதியாக தொலைத்தொடர்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததே 5G தொழில்நுட்பம் ஆகும். தற்பொழுது இதனை விட மேலான மேலான தொழில் நுட்பங்களை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் மிகவும் அதிக தூரம் இடையூறு இன்றி பயணம் செய்யும் ஆற்றல் அற்றவை. இதன் காரணமாகவே மேற்குறித்த 5G அலைகளை கடத்தும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மிக குறைந்த இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வலைகள் தொடர் மாடித்தொகுதிகளினுள் குறைவாகவே உட்செல்லும் அதன்காரணமாக பெரும்பாலான நேரங்களில் தொடர் மாடிகளில் வசிக்கும் மக்கள் குறைந்தளவான coverage இணை பெற்றுக்கொள்வர். இவ்வாறன பகுதிகளில் எமது கைத்தொலை பேசி வேலை செய்யும் பொழுது அதிகளவான கதிர்வீச்சினை காலும். இவற்றினை நிவர்த்தி செய்ய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று தொடர் மாடிப்பகுதிகளில் அல்லது coverage குறைந்த பகுதிகளில் அதனை கூட்டும் முகமாக கருவி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வீடுகளில் உள்ளும் மக்கள் தங்கு தடையின்றி 5G வசதியினை அனுபவிக்க முடியும்.

இலங்கையில் தற்பொழுது 4.5G தொழில் நுட்பத்தினை வழங்கும் முகமாகவே இலங்கையின் பல பல பிரதேசங்களில் smart pole என்ற சிறிய கோபுரங்கள் நாட்டப்பட்டுள்ளன. கீழே உள்ள படங்களில் யாழ்ப்பாணம், அனுராதபுரம், வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களை காணலாம்.

facebook_15624903826149118478306109136995.jpg

இவ்வாறான smart pole திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சூழலியல்வாதிகள் ஆகியோர் இலங்கையின் நகர்ப்புறங்களில் தொடர் மாடிகளின் மேற்பகுதியில் அதுவும் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு எதிராக ஒருபொழுதும் குரல் எழுப்பியதில்லை. கீழே உள்ள படத்தில் கொழும்பின் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை காணலாம்.

20190516_1809331477561231918233699.jpg