மருண்டவன் கண்ணுக்கு காண்பது எல்லாம்….

அது ஒரு தமிழ் சிங்கள புதுவருட காலப்பகுதி, பொதுவாக இக்காலப்பகுதிகளில் அரச அலுவலகங்களில் வேலைசெய்யும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதற்கு எனது அலுவலகமும் விதிவிலக்கல்ல. இவ்வாறன ஒரு நாளில் நான் எனது அலுவலகத்தினுள் நுழைகின்றேன். வாசல் பகுதியில் இளைஞர்களும் வயதானவர்களும் கூட்டமாக நிற்கின்றனர். அவர்களை தாண்டி உள்நுழையும் பொழுது அலுவலக உதவியாளர் ஒருவர் ஓடிவந்து “சேர், பிறந்து ஒரு கிழமையான பெண் குழந்தையினை உறவினர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக” தெரிவித்தார் மேலும் துஸ்பிரயோகம் செய்தவரையும் போலீசார் கைதுசெய்து நல்ல பூசை போட்டு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இதென்னடா வருஷம் பிறந்து முதல் நோயாளியை இப்படி வருகுது என்று கூறிவிட்டு அவர்களை பரிசோதிக்க ஆயத்தம் ஆனேன். பெண் அலுவலக உதவியாளர் வர காலதாமதம் ஆகும் என்று தெரிந்ததினால் முதலில் சந்தேக நபரினை பரிசோதித்தேன். அவர் ஒரு பல்கலைக்கழக மாணவன் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முடியாதவாறு உதடு, கன்னம், கண் என்பன வீங்கியிந்தது. பொதுவாக இவ்வாறன சம்பவங்களை தொடந்து உறவினர்கள் மற்றும் போலீசார் அவர்களை தாக்குவது வழமை .
மற்றைய சந்தேக நபர்களை போலவே இவனும் தான் எதுவுமே செய்யவில்லை என்றான். அதன் பின்பு குழந்தையின் அம்மாவிடம் நடந்தது என்ன கேட்டேன் அவர் கூறினார் குழந்தையினை சந்தேக நபர் தூக்கி விளையாடியதாகவும் அதன் பின்பு குழந்தையின் ஆடையில் இரத்த கறை இருந்ததாகவும் கூறினார். பெண் உதவியாளர் மற்றும் அம்மா முன்னிலையில் குழந்தையினை பரிசோதித்தேன். குழந்தையின் பிரத்தியேக மற்றும் மல வாசல் பகுதிகளில் எவ்விதமான காயங்களும் காணப்படவில்லை. குழந்தையின் ஆடையில் ஓரஞ்சு நிறமான இரத்தக்கறை போன்ற கறை காணப்பட்டது.

20180922_061813
தொடர்ந்து நடாத்திய பரிசோதனை முடிவுகளில் அது இரத்த கறை அல்ல என்ற முடிவும் அக்கறையானது யூரேட் கிரிஸ்டல் ஆனது என தெரியவந்தது. {Urate crystals (commonly called “brick stain” by doctors) are a combination of calcium and urate} இது சாதாரணமா குழந்தைகள் பிறந்து ஒரு சில நாட்களில் அவர்களின் சிறுநீரில் அதிகளவு யூரேட் வெளியேற்றப்படுவதால் நிகழும் நிகழ்வாகும். இது ஒருசில நாட்களில் தானாகவே குணமடைந்துவிடும். இது தவிர பின்வரும் சந்தர்ப்பங்களிலும் பெண் குழந்தையின் பிரத்தியேக உறுப்பு பிரதேசங்களில் இருந்து இரத்த கசிவு நடைபெறலாம்
1. குழந்தையின் ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் அளவில் ஏற்படும் சடுதியான மாற்றம் காரணமாக. இக்ஹோர்மோன் ஆனது தாயின் தொப்புள் கொடியின் ஊடக கடத்த பட்டு அதிகளவில் இருக்கும். பிறப்பின் பின்பு சடுதியாக குறைவதனால் குழந்தையின் கருப்பையில் இருந்து சிறிதளவு இரத்த கசிவு இருக்கும்.
2. குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதிகளில் நுழையும் லீச் போன்ற அட்டைகளினால், இலங்கையின் மலைநாட்டு பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறன ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது தகுந்த வைத்தியரிடம் அணுகி ஆலோசனை பெறவேண்டும். முக்கியமாக பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இவ்வாறக நடைபெறலாம் .

2 thoughts on “மருண்டவன் கண்ணுக்கு காண்பது எல்லாம்….

  1. Dear Dr Vasudeva,
    You render a marvellous service by educating laymen in forensic madicine related implications in day- to- day lives ; this is a novel effort and had been an unidentified necessity till you started the mission.
    Your delivering skill is unique and attractive.
    Wish you all the best.

    Thanks.

    Dr Anton Marianayagam
    United Kingdom.

    Liked by 1 person

  2. Dear doctor,
    It’s a great initiative awareness. I’m very proud and happy about your attempt to clarifying the justice by forensic science

    Dr.N.Yazeevan
    VETERINARY SURGEON

    Liked by 1 person

Leave a reply to Dr Anton Marianayagam Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.