கருக்கலைப்பு மாத்திரையும் சனத்தொகையும்….

முதலில் நாம் சில சொற்பதங்கள் சம்பந்தமான விளக்கங்களை பார்ப்போம்

  1. கருத்தடை மாத்திரைகள் – இவ்வகையான மாத்திரைகள் பெண்ணின் இனப்பெருக்க தொகுதியில் பலவிதமான மாற்றங்களை உண்டுபண்ணி அப்பெண்ணானவள் கருத்தரிக்க விடாமல் செய்யும் ஆற்றல் கொண்டவை. பெண்ணின் இனப்பெருக்க தொகுதியினுள் ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பெண்ணின் முட்டையுடன் இணைவதன் மூலமே கரு உருவாகும்.
  2. கருக்கலைப்பு மாத்திரைகள் – இவ் வகை மாத்திரைகள் பெண்ணின் கருப்பையில் ஏற்கனவே உருவாகியுள்ள கருவினை இல்லாமல் செய்யும். பலசந்தர்ப்பங்களில் இவ்வகை மாத்திரைகள் சாதாரண பிள்ளைப்பேறின் போது பிரசவத்தினை தொடங்கவும் அதீத குருதிபோக்கினை தடுக்கவும் பயன்படும்.
  3. இனப்பெருக்க வீதம் (total fertility rate -TFR)- ஓர் பெண்னின் இனப்பெருக்கத்திற்க்குரிய காலப்பகுதியில் அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையினை குறிக்கும். இங்கு இனப்பெருக்கத்திற்குரிய காலப்பகுதியென அதாவது குழந்தைகளை பெறக்கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட வயது எல்லை 14 தொடக்கம் 44/49 வரையாகும்.

இனி விடயத்திற்கு வருவோம் அதாவது அண்மைய காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான மருந்துவகைகள் கைப்பெற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றில் கருக்கலைப்பு மாத்திரைகளான மெஸோப்ரோஸ்டால் (Misoprostol) மாத்திரைகளும் உள்ளடங்கும். இந்நிலையில் சில வைத்தியர்கள் இவை கருக்கலைப்பு மாத்திரைகள் தான் இவற்றின் மூலம் கர்ப்பத்தடையினை அல்லது மலட்டுத்தன்மையினை ஏற்படுத்த முடியாது என்றும் மேலும் இது குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மேற்குறித்த மாத்திரைகள் மூலம் ஓர் சமூகத்தின் சனத்தொகையினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

சாதாரணமாக 14 வயது தொடக்கம் 49 வயது வரையுள்ள பெண்னொருத்தி விரும்பியோ விரும்பாமலோ  கருத்தரித்துள்ள பொழுது மேற்குறித்த மாத்திரைகளை பார்மசிகளில் அதிக விலையில் வாங்கி பாவிப்பதன் மூலம் தங்கியுள்ள கருவினை அழித்துக்கொள்ளலாம். இவ்வாறு ஒருமுறை சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்த பெண்  தொடர்ந்து விரும்பியோ விரும்பாமலோ பின்வரும் காரணங்களினால் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்

  1. மேலுள்ள மாத்திரைகள் பெரும்பாலும் சட்ட விரோத கருக்கலைப்பிற்கே பயன்படும், இந்நிலையில் சட்ட விரோத கருக்கலைப்பில் உள்ள உயிராபத்தான நிலைமை காரணமாக பெண் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.
  2. சட்ட விரோத கருக்கலைப்பிற்கு செலவழித்த ஆயிரக்கணக்கான பணத்தினை இட்டு மீண்டும் கருத்தரிக்க பெரும்பாலான பெண்கள் விரும்பமாட்டார்கள். சட்ட விரோத கருக்கலைப்பில் சில நூறு பெறுமதியான மாத்திரைகள் பல ஆயிரம் பெறுமதிக்கு விற்கப்படும். அத்துடன் இவ்வகையான மாத்திரைகள் மருத்துவர் அல்லாதோரினால் சிபாரிசு செய்யப்படுவதால் அவர்கள் சரியான அளவு, பாவிக்கும் முறை, இரத்த போக்கின் பொழுது செயற்பட வேண்டிய முறை மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றினை கூறமாட்டார்கள் இதன் காரணமாக பெரும்பாலும் அவர்கள் முதலில் கருக்கலைப்பில் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் பல ஆயிரங்களை செலவழிக்க நேரிட்டிருக்கும். சிலசமயங்களில் ஒரு லட்ச்சத்தினை தாண்டியிருக்கும். இவ்வாறான நிலையில் மீண்டும் ஓர் பெண் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.
  3. பல சந்தர்ப்பங்களில் சட்ட விரோத கருக்கலைப்பினால் ஏற்பட்ட உடல் பாதிப்பினை விட உள பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஏற்பட்ட உள பாதிப்பினால் பெண் ஆனவள் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள். சில வேளைகளில் இப்பெண் கணவனுடன் கூட உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இவ்வாறு திருமண முறிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களை தொழில் வாழ்க்கையில் கண்டுள்ளேன்.img587c9257980a8
  4. இவ்வாறு ஒருமுறை சட்ட விரோத கருக்கலைப்பு செய்தபின் மீண்டும் கருத்தரிக்க நினைக்கும் பொழுது அவளுக்கு வயது போயிருக்கும் அத்துடன் குழந்தை பெறவும் விருப்பம் இல்லாமல் இருக்கும் இதனால் அவள் கருத்தரிக்காமலே வாழ்க்கையினை கழிக்க நேரிடும்.
  5. இவ்வாறு ஒருமுறை சட்ட விரோத கருக்கலைப்பு செய்தபின் மீண்டும் கருத்தரிக்க நினைக்கும் பொழுது அவளின் குடும்ப பொருளாதார சூழ்நிலை இன்னொரு குடும்ப பொருளாதார நிலை புதிய குடும்ப உறுப்பினரை ஏற்க முடியாத நிலையில் இருக்கும், இதனால் அவள் கருத்தரிக்காமலே வாழ்க்கையினை கழிக்க நேரிடும்
  6. சட்ட விரோத கருக்கலைப்பின் பொழுது ஏனையோரினால் பெண்ணானவள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. இதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் மீண்டும் ஓர் பெண் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.

இவ்வாறு பல காரணங்களினால் ஓர் பெண் குறித்த வயதில் கர்ப்பம் அடைவதினை மறைமுகமாக தடுக்கலாம், இதன் மூலம் ஓர் சமூகத்தில் ஓர் பெண்ணுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையினை குறைக்க முடியும். இதன் மூலம் ஓர் சமூகத்தின் சனத்தொகை நீண்ட காலப்போக்கில் குறைவடையலாம்.

 

 

 

2 thoughts on “கருக்கலைப்பு மாத்திரையும் சனத்தொகையும்….

Leave a reply to நிஜத்திலிருந்து..... Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.