மீண்டும் தோண்டப்படும் உடல்கள்

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் நடாத்தி பலியான ISIS தீவிர வாதிகளின் புதைக்கப்பட்ட உடல்கள் மீண்டும் DNA பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றன. சட்ட மருத்துவத்தில் புதைக்கப்பட்ட ஒரு உடல் ஆனது பின்வரும் சந்தர்ப்பங்களில் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்

  1. இறந்தவர்கள் உரிய முறையில் அடையாளம் காணாமல் அதாவது விஞ்ஞான முறையில் யாவரும் ஏற்றுக்கொள்ள தக்க முறையில் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்டிருந்தால் உரிய முறையில் DNA பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் முகமாக தோண்டி எடுக்க படும்.
  2. மரணம் சம்பவித்த சூழ்நிலை / சந்தர்ப்பம் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்க பெறும் இடத்து, மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  3. மரணத்திற்கான காரணம் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்க பெறும் இடத்து, மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  4. முதலில் நடைபெற்ற உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்படாமல், மரணம் அடைந்தவர் இயற்கை மரணம் அடைந்ததாக சான்றிதழ்கள் தயாரிக்க பட்டு இறந்தவரின் உடல் புதைக்கப்படும் இடத்து மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  5. முதலில் உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்படாமலும் , உரிய சான்றிதழ்கள் தயாரிக்க ப்படாமலும்  இறந்தவரின் உடல் புதைக்கப்படும் இடத்து மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும். உதாரணமாக பலசந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்டு இரகசிமான முறையில்  புதைக்கப்படும் உடல்கள்.
  6. முதலில் உடற்கூராய்வு பரிசோதனை தகுதி குறைந்த அல்லது அனுபவம் அற்ற வைத்தியரினால் செய்யப்பட்டு , உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் கேள்விக்கு உட்படுத்த பட்டு பல வினாக்களுக்கு உரிய விடை சட்ட வைத்திய அதிகாரியினால் கூறப்படாதவிடத்து இறந்தவரின் புதைக்கப்பட்ட  உடல்  மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  7. முதலில் நடைபெற்ற உடற்கூராய்வு பரிசோதனையின் பொழுது உரிய சான்று பொருட்கள் மற்றும் மாதிரி பொருட்கள் பெற்றுக்கொள்ள படாத விடத்து இறந்தவரின் புதைக்கப்பட்ட உடல்  மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.

மேலே கூறப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர பல்வேறுபட்ட சிவில் காரணகளுக்காகவும் புதைக்க ப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப் படலாம், அவையாவன

  1. பல்வேறு பட்ட காரணங்களால் மரண சடங்குகள் உரிய முறையில் செய்யப்படாமல் புதைக்க பட்ட உடல்கள், மரண சடங்குகளை உரிய முறையில் செய்யும் முகமாக
  2. கல்லறைகள் மற்றும் மயானங்கள் விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக
  3. வீதி விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக

ஒரு மரணத்தில் நாம்  சந்தேகம் கொள்ளும் இடத்து தீடீர் மரண விசாரணை அதிகாரியிடத்து விளக்கத்தினை பெற்று கொள்ளலாம் , அவ்விளக்கம் திருப்பதி அளிக்காவிடின்   நீதவான் நீதி மன்றில் சட்ட தரணி  மூலம்  நாம் உரிய முறைப்பாட்டினை மேற்கொண்டு உடலினை தோண்டி எடுத்து நாம் விரும்பிய சட்ட வைத்திய அதிகாரியின் மூலம் உடற் கூராய்வு பரிசோதனையினை மேற்கொள்ளலாம்.

DNA பரிசோதனையும் மனிதனை அடையாளம் காணலும்

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.