ஒரு சில நாட்களுக்கு முன்னர் யாழில் இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு வாளால் வெட்டப்பட்டு வீதியோரம் தூக்கி வீசப்பட்டார். பொதுமக்கள் எவருமே அவனை தொடவும் இல்லை அவனை வைத்திய சாலையில் அனுமதிக்கவும் இல்லை. அவர்கள் பொலிசாருக்கு அறிவித்தனர். அதனை தொடர்ந்து அவ்விடத்தில் எற்கு வந்த பொலிஸார் குற்றியிராக இருந்த இளைஞனை வைத்திய சாலையில் அனுமதிக்காது, வீதியோரத்தில் குற்று உயிராக இருந்த அவனிடம் இருந்து வாக்கு மூலம் போன்று தகவல்களை ஏற்தாழ 30 நிமிடங்களுக்கு மேலாக பெற்றனர் அதன் பின்னரே வைத்திய சாலையில் அனுமதித்தனர். அதிக இரத்த போக்கு காரணமாக குருதி மாற்றீடு மற்றும் சத்திர சிகிச்சை போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்டான் . அதன் பின்னர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அவதானித்த ஊடகங்கள் அவன் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன அவ்வாறே இணையதளங்களும் செய்தி வெளியிப்பட்டுள்ளது.
ஊடக விதிகளின் அடிப்படையில் ஓர் சம்பவத்தினை தீர விசாரித்து உறுதி செய்யத பின்னரே செய்தியாக வெளியிட வேண்டும். அதாவது ஓர் சம்பவத்தினை கண்ணால் கண்டலும் காதினால் கேட்டாலும் போதாது. தீர விசாரித்து உறுதி செய்ய வேண்டும்.
நம்மில் பலர் இவ்வாறு தாக்கபடுபவர்களை அல்லது வீதி விபத்தில் சிக்குபவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க பின்னிற்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் தாங்கள் எதிர்காலத்தில் போலீசாரின் விசாரணை மற்றும் நீதி மன்ற விசாரணை போன்றவற்றை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதே. முதலில் நாம் ஒன்றினை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் நாம் சாட்சிகள் மட்டுமே. நாம் குற்ற வாளியோ அல்லது பாதிக்கபட்ட தரப்போ அல்ல. வாய்ப்பேச்சிலும் முகநூலிலும் தங்களை நியாயவான்களாகவும் அநியாயத்திற்கு எதிராக பொங்குபவர்களாகவும் இருப்பவர்கள் நியத்தில் அவ்வாறு இருப்பதில்லை. இவ்வாறு பிரச்சனைகளுக்கு பயப்டுபவர்கள் அவசர ஆம்புலன்ஸ் சேவையினை அழைத்து காயப் பட்டவர்களுக்கு உதவி செய்யலாம். தற்பொழுது இந்த அவசர ஆம்புலன்ஸ் சேவை நாடு பூராவும் உள்ளது . இங்கு அழைப்பவர்களின் விபரம் பொதுவாக பொலிஸாருக்கோ அல்லது வேறு யாருக்குமோ பொதுவாக தெரியப்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு போராடியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் ….
முற்றும்

