எம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
சாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of death) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermint) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது. உதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .
அவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்
- இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்
- இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்
- இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்
உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

திடீரென ஏற்படும் மன அழுத்தங்களால் தற்கொலைகள் நிகழ வாய்ப்பு இருக்காதா? அப்படி ஒருவர் உடனடி முடிவில் தற்கொலையை மேற்கொண்டால் அது பற்றி இந்த முறையில் முரண்பாடு தோன்றாதா? இல்லை. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது விஞ்ஞானரீதியான ஓர் செயன்முறை அதன் பிரதான நோக்கமே தற்கொலையினை இனம்காணல். திடீர் மனஅழுத்தம் ஏற்படும் மனிதர்கள் எல்லோரும் தற்கொலை செய்வதில்லை ஒருசிலரே செய்கின்றனர். இதற்கு அவர்களின் ஆளுமை, கடந்தகால அனுபவங்கள், சமூக பொருளாதார காரணிகள், உறவினர்களின் அரவணைப்பு / வெறுப்பு (psychology, sociology, biology, epidemiology, and anthropology)….. போன்ற பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை உளவியல் நிபுணர்கள் மேற்கொள்ளும் போது மேற்படி காரணிகளையும் கருத்தில்கொண்டே முடிவெடுப்பர் .
மேலும் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை ஆனது இறந்தவர்களின் உடலில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனைக்கு நிகரானது அல்ல மாறாக உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை எவ்வாறான சூழ்நிலையில் ஒருவர் இறந்தார் என கணடறியப் உபயோகிக்கப்படும் பரிசோதனை முறை ஆகும். மேலைத்தேச நாடுகளில் Psychological Autopsy Investigator (PAI) என்ற விற்பன்னர்கள் மூலமே இவ்வாறான உளவியல் உடற்கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன
முற்றும்

நல்ல விளக்கம் Dr.
LikeLiked by 1 person
நன்றி
LikeLiked by 1 person