அண்மைக் காலப்பகுதியில் வடபுலத்தில் தற்கொலை செய்து கொளப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து உள்ளது. போதாக்குறைக்கு கொரோனா நோயினால் பிறப்பிக்கப்பட்டுள்ள நாடு முடக்க நிலையும் இதனை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவர் தனது வாழ்விடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ள ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். இதனை விடுத்து பல நூறு கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்தும் ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கும் அவரது வசிப்பிடத்திற்கும் இடையிலான தூரத்திற்கும் அவரது மரணம் ஏற்பட்ட சூழ்நிலைக்கும் (தற்கொலை அல்லது கொலை) எதுவிதமான அறிவியல் ரீதியான தொடர்பும் இல்லை.
எம்மில் சிலர் தற்கொலை என்றால் நிச்சயம் அவர்களின் வீட்டில் அல்லது வீட்டிற்கு மிக அருகாமையில் தான் நடக்கும் எனவும் தூர பிரதேசங்களில் நடைபெற்றால் அது கொலை எனவும் பிழையான கருதுகோளை கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் பொதுவாக ஆள் நடமாற்றம் குறைந்த, ஒதுக்குபுறமான பிரதேசங்களையே தெரிவு செய்வர். மாறாக சிலர் ஆள் நடமாட்டம் கூடிய தொலை தூரத்தில் உள்ள பிரதேசங்களையும் தெரிவு செய்வர்.
தற்கொலை செய்வர்களின் மன நிலை, அவர்களின் கல்வி அறிவு, சமய, கலாச்சார செல்வாக்கு என்பன இவ்வாறு அவர்கள் தற்கொலை செய்யும் இடத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். இனி நாம் உலகத்தில் ஒரு சில இடங்களில் அதிகளவிலான மக்கள் தற்கொலை செய்துள்ளனர், அவ்வாறான ஒரு சில இடங்களினை பார்ப்போம்
1. Nanjing Yangtze ஆற்றுப்பாலம் இது சீனாவின் Nanjing பிரதேசத்தில் உள்ளது. இதில் இருந்து குதித்து வருடம் தோறும் பலர் இறக்கின்றனர். பலரின் உடல்கள் காணாது போய்விடுவதினால் எண்ணிக்கை மிக அதிகமாகும். 1968-2006 வரையான காலப்பகுதியில் 2000 வரையானோரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

2. Golden Gate பாலம் இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இங்கும் வருடம் தோறும் பல நூற்றுக்கணக்கானோர் குதித்து தற்கொலை செய்கின்றனர்.

இவ்வாறான இடங்களில் தற்கொலை செய்வதற்காகவே பலர் பல நூறு கிலோமீட்டர் பிரயாணம் செய்து வருவர்.
இலங்கையிலும் இவ்வாறான பல இடங்கள் உண்டு.

முக்கியமாக இப்பதிவு தற்கொலையினை தூண்டும் விதமாக பதிவிடப்படவில்லை. மாறாக ஒருவர் எங்கு வேண்டுமானாலும் சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது கொலை செய்யப்படலாம். நாம் இது சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடும் பொழுது எமது குறுகிய நோக்கங்களை தவிர்த்து உண்மையினை வெளிக்கொணரும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்பதினை வலியுறுத்துகின்றது .
முற்றும்
