சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் ஒரு கும்பல் பெண்களை மிரட்டி ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டியதாக செய்திகள் வெளிவந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அவ்வாறே ஒருசில சம்பவங்கள் வட புலத்திலேயும் நடைபெற தொடங்கி விட்டன என்பது தான் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்.
1. யார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் ?
பெரும்பாலும் இளைஞர்களே ஈடுபடுகின்றனர் குறிப்பாக 20 தொடக்கம் 30 வயதான இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேலை அற்றவர்களாகவும் மதுபானம் மற்றும் போதை பொருளுக்கு அடிமையானவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் அதிக வாகன கடன் போன்ற கடன்களையும் கொண்டுள்ளனர்.
2. யார் இவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
இளவயது பெண்கள் தொடக்கம் நடுத்தர வயது குடும்ப பெண்கள் வரை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெண்கள் சமூக சூழ்நிலை கருதியும், தமது பாதுகாப்பு கருதியும் தகவல்களை வெளிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவனை இழந்த பெண்களும் கணவனினால் கைவிடப்பட்ட பெண்களும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. எவ்வாறு பெண்கள் இந்த வலையில் விழுகின்றனர்?
பொதுவாக காதல்/நட்பு மூலமே பெண்கள் இந்த மோசடி வலையில் விழுகின்றனர். மேலும் சிலர் குறித்த நபர்களிடம் இருந்து பொருட்கள் மற்றும் பண உதவிகள் போன்றவற்றினை பெறும் சந்தர்ப்பத்தில் இந்த மோசடி வலையில் விழுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் முகநூல், வைபர், வாட்சப் போன்றவற்றின் மூலமும் பெண்கள் இந்த வலையில் வீழ்த்தப்படுகின்றனர். இந்த மோசடி ஆண்கள் தங்களை காதல் செய்யுமாறு வற்புறுத்துவார்கள் மறுக்கும் சந்தர்ப்பத்தில் தமது கைகளை அல்லது கழுத்தினை பிளேட்டினால் அறுத்து தற்கொலை செய்ய போவதாகவும் அச்சுறுத்துவர். சிலர் பெண்களை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியும் உள்ளனர்.
4. எவ்வாறு இந்த மோசடி நடைபெறுகின்றது?
காதல் அல்லது நடப்பு மூலம் ஓர் பெண்ணின் படத்தினை அவர்கள் பெறுவார்கள் அதன் பின்னர் அவர்கள் போட்டோஷொப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் நிர்வாணமாக இருக்குமாறு மாற்றி அமைப்பார்கள், சில சந்தர்ப்பத்தில் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை நேரிடையாகவே பெறுவார்கள். இதன் பின்னர் தான் அவர்களின் சுய ரூபம் தெரியவரும் அவர்கள் பெண்களிடம் வாகன லீசிங் கட்ட வேண்டும், கடன் கட்ட வேண்டும், புதிய போன் வாங்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்பார்கள். அவர்கள் மறுக்கும் பொழுது அவர்களின் நிர்வாண படத்தினை அல்லது தங்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தினை முகநூலில் அல்லது இணைய தளத்தில் பதிவேற்ற போவதாக குரு மிரட்டுவர். மேலும் இவர்கள் பொதுவாக போதைக்கு அடிமையானவர்களாக இருப்பதோடு பெண்களை தமது காம இச்சைக்கு (sexual torture) வேண்டியவாறு பயன் படுத்துவர் இதன் பொழுது அவர்கள் உடலியல் ரீதியான வேதனை, உளவியல் ரீதியான வேதனை, பாலியல் நோய்களுக்கு உள்ளாகும் ஆபத்து போன்ற பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வர். இவர்கள் மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் உடலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவர்.

5. இவர்கள் குழுக்களாக இயங்குவார்களா ?
ஆம். இவர்களில் பல்வேறு பட்ட நபர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரே நேரிடையாக தொடர்பு படுவர், மற்றையோர் அவர்களுக்கு உதவி புரிவர். ஒருசிலர் பெண்களின் போட்டோக்களை கணகச்சித்தமாக மாற்றி அமைப்பர். சிலர் பெண்களின் நடமாட்டம், தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம் … போன்றவற்றினை பெற்று கொடுப்பர். சில போலீஸ் உத்தியோகத்தர்களை இவர்கள் காசு கொடுத்து வாங்கியிருப்பர். அந்த போலீஸ் உத்தியோகத்தர்கள் பெண்கள் முறைப்பாடு செய்ய செல்லும் பொழுது பல்வேறு காரணங்களை கூறி வாக்குமூலங்களை திரித்து எழுதி, முறைப்பாட்டினை குடும்ப வன்முறையாக எழுதி திசை திரும்புவர். அத்துடன் குற்றவாளிக்கு அவர்கள் உடனே தகவல் கொடுப்பர் இதனால் முறைப்பாடு செய்ய சென்ற பெண்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவர்.
தொடரும்
அடுத்த பகுதியில் எவ்வாறு பெண்கள் இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கலாம் என்பது பற்றியும் எவ்வாறு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்

One thought on “தமிழ்ப்பெண்களும் ஆபாசப் படங்களும் (பகுதி 01)”