நேற்றைய தினம் அதிகாலையில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு இரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன.
விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிளாஸ்ட்டிக் தொழிலிற்சாலையில் தான் இவ்விபத்து நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்திய வாயு styrene வாயு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தினை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 1984-ல் நிகழ்ந்த போபால் விச வாயு கசிவு சம்பவத்தோடு பலர் ஒப்பிடுகின்றனர். போபாலில் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயன நச்சு வாயுவால் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகினர். அத்துடன் 3,500க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இனி styrene வாயுவின் தாக்கத்தினால் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது பற்றி சிறிது பார்ப்போம். strene ஆனது polystyrene plastics, ரப்பர், latex மற்றும் resins உற்பத்தியில் பயன்படும் ஓர் பொருளாகும். இது ஓர் எளிதில் தீப்பற்றக்கூடிய ஓர் திரவமாகும். இது வாகனங்களின் புகை, சிலவகையான மரக்கறி போன்றவற்றிலும் காணப்படும்.

styrene இற்கு ஒருவர் உடனடியான முறையில் அல்லது நீண்ட காலத்திற்கு தொடர்பு படலாம். ஒருவர் Styrene வாயுவினை சுவாசிக்கும் பொழுது அவர்களுக்கு கண் எரிவு, தலையிடி, தலை சுற்றல், வாய் எரிவு, வாந்தி மற்றும் சுய நினைவு இழத்தல் போன்றன ஏற்படலாம். இது தவிர ஒருவர் நீண்ட காலமாக styrene உடன் தொடர்புபடுவாராயின் அவருக்கு மனச்சோர்வு மற்றும் நரம்புத்தொகுதியில் பாதிப்பு(peripheral neropathy) என்பன ஏற்பட சாத்தியம் உண்டு.

LC50 (Lethal Concentration 50) என்பது குறித்த ஓர் கூட்ட விலங்குகளுக்கு ஓர் நஞ்சானது செலுத்தப்படும்பொழுது அதில் உள்ள அரைவாசி எண்ணிக்கையான விலங்குகளை இறக்க வைக்க தேவையான நஞ்சின் அளவு ஆகும். இங்கு LC50 ஆனது 2194 ppm ஆக உள்ளது அதாவது குறைந்த செறிவுள்ள styrene வாயுவே அதிகளவான உயிரினங்களை கொல்ல போதுமானது.
மேலும் The LCLo (Lowest lethal concentration) என்பது குறித்த காலப்பகுதியில் ஓர் விலங்கில் இறப்பினை ஏற்படுத்த தேவையான ஓர் நஞ்சின் குறைந்த செறிவு ஆகும். styrene வாயுவானது 10,000 ppm அளவில் வளியில் காணப்படும் பொழுது 30 நிமிடத்தில் அது இறப்பினை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்தத்தில் Styrene ஆனது ஓர் நஞ்சு தன்மையான வாயு ஆகும் அதன் காரணமாகவே மேற்குறித்த இழப்புக்கள் ஏற்பட்டன. நாட்கள் செல்லச்செல்ல தான் முழுமையான பாதிப்பு விபரம் வெளிவரும். இறுதியாக கொரோனா நோய்ப்பரவல் காரணமாக தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததன் காரணமாக வாயு தேங்கி இருந்தமையாலும் அதிக வெப்பம் காரணமாக styrene வாயு தன்னிச்சையாகவே auto polymerization அடைந்ததன் காரணமாகவும் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. விசாரணையின் முடிவில் தான் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறும்.
முற்றும்
