அந்த குழந்தைக்கு வயது இரண்டு தான். அன்று மாலை அந்த சிறுமி அவளது உறவினர்கள் கொண்டுவந்திருந்த பலகாரங்களை உண்டு கொண்டிருந்த பொழுதுதான் அந்த விபரீத சம்பவம் நடைபெற்றது. அவள் உண்ணும் பொழுது பலகாரத்தின் துண்டு ஒன்று அவளது தொண்டையின் வாதநாளி (சுவாச குழாய் ) பகுதியில் இறங்கி சிக்கிக் கொண்டது. குழந்தை துடிதுடித்து அலறியது. உடனே உறவினர் ஒருவர் குழந்தையின் வாயினை பலவந்தமாக திறந்து தனது விரலினை உள்நுழைந்து சிக்கிய பலகாரத் துண்டினை எடுக்கும் முகமாக துளாவினார். துரதிஸ்ட்ட வசமாக பலகாரத் துண்டு வெளியில் வருவதற்கு பதிலாக மேலும் சுவாச குழாயினுள் சென்று செருகிக் கொண்டது. அடுத்து ஐந்து நிமிடங்களில் நடந்த துயர சம்பவங்களினை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இறுதியில் குழந்தை மரணத்தினை தழுவிக்கொண்டது.
சிறுவர்களின் நரம்புத் தொகுதி முற்றாக விருத்தி அடையாததன் காரணமாக அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவது வழமையே . எமது வாய்க்குழியில் உள்ள உணவை அரைத்து இரைப்பைக்கு கொண்டு செல்ல எமது நரம்பு தொகுதி உதவி செய்யும். உணவு புரைக்கு ஏறியவர் கதைப்பதத்திற்கு வெகுவாக சிரமப்படுவார் அல்லது கதைக்க மாட்டார், சுவாசிக் கடிமைப்படுவார் அல்லது சுவாசத்தின் பொழுது வித்தியாசமான சப்தம் கேட்கும், மேலும் அவர்கள் கடுமையாக இருமுவார்கள் அத்துடன் அவர்களது உதடு, விரல் நுனி போன்றவை நீலமாக அல்லது கறுப்பாக மாறிவிடும். எனவே இவ்வாறான அறிகுறிகளுடன் குழந்தைகள் தென்படும் இடத்து நாம் உரிய முதலுதவிகளை வழங்க வேண்டும் மாறாக பிழையாக மேற்கொள்ளப்படும் முதலுதவி குழந்தையின் உயிரினை பறிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

புரைக்கேறிய குழந்தை ஒன்றிற்கு எவ்வாறு சரியான முதலுதவியினை வழங்குவது என்பது பற்றி பார்ப்போம் (வளந்தவர்களுக்கான முதலுதவி வேறுபாடானது)
1. குழந்தை சுவாசிக்க கூடிய நிலையில் இருமியவாறு காணப்பட்டால் அவர்களாகவே இருமி இறுகிய உணவு பொருளினை வெளியேற்றுவார்கள். குழந்தை மூச்சு அற்று இருந்திருந்தால் நாம் குழந்தையின் கன்னத்தில் இறுக்கி தட்டி குழந்தையின் நினைவினை மீள கொண்டுவர முயற்சிப்பதுடன் உடனடியாகவே முதலுதவியினை ஆரம்பிக்க வேண்டும்.
2. குழந்தையினை முகம் கீழ் (நிலம்) நோக்கி பார்க்கும் வண்ணம் இடது தொடையின் மீதும் இடது கையின் மீதும் கிடத்த வேண்டும். அதன் பின்னர் உள்ளங்கையின் அடிப்பகுதியால் குழந்தையின் தோல்பட்டைகளுக்கு இடையில் ஐந்து முறை பலமாக தட்ட வேண்டும்.
3. குழந்தையினை மறுபக்கமாக திருப்பி விரலினை வாயில் உட் செலுத்தி விரல் நுனியால் வெளிவந்த உணவு பொருளினை பற்றி எடுக்க வேண்டும். விரலினால் துளாவ கூடாது (Do not sweep the mouth as this could push the object further down the throat)
4. பொருள் வரவில்லை எனில் குழந்தையின் முகம் மேல்நோக்கி இருக்கவாறு தொடையின் மீது கிடத்தி குழந்தையின் தலை மற்றும் கழுத்து பகுதியினை கையினால் ஆதாரம் கொடுத்த வண்ணம் மறு கையின் விரல் நுனியால் பொக்குளிர்ற்கு மேலாக ஐந்து முறை பலமாக தட்ட வேண்டும்.
5. விரலினை உட்செலுத்தி மறுபடியும் உணவு பொருளினை எடுக்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறான முதலுதவி பயனளிக்காவிடின் அவசர நோயாளி சேவையை அழைக்க வேண்டும். சிறுவர்கள் எனில் கீழ் வரும் முறையில் (Heimlich Maneuver) வயிற்றினை அழுத்துவதன் மூலமும் சுவாச பாதையில் சிக்கி இருக்கும் பொருளினை வெளியேற்ற முடியும்

முற்றும்

It’s amazing job Anna.
All arevGood awareness creation posts.
LikeLiked by 1 person
Use full Information Anna!
LikeLiked by 1 person