நாம் அன்றாடம் பாவிக்கும் மலசக்கூடத்தினை பல்வேறுபட்ட சுத்தம் செய்யும் திரவங்கள் (toilet cleaner ) மற்றும் தொற்று நீக்கிகள் (Disinfectant) கொண்டு சுத்தம் செய்வோம். எம்மில் பலர் அதில் அடங்கியிருக்கும் இரசாயணப் பதார்த்தங்களின் தீங்கு விளைவிக்கும் தன்மை பற்றி அறிவதில்லை.
எம்மில் பலர் மலசக்கூடத்திற்கு சென்று மறைந்து இருந்து தான் சிகரெட்/ பீடி அல்லது சுருட்டினை புகைப்பார்கள். பலருக்கு இவ்வாறு புகைத்தால் தான் இலகுவாக மலம் கழிக்க முடியும் என்பது வேறுவிடயம். இன்னும் சிலர் பொது மலசல கூடங்களை பாவிக்கும் பொழுது புகைப்பிடிப்பர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த மலசல கூடங்கள் அதிக நாற்றம் அடிக்கின்றமையே என்பதாகும். எது எவ்வாறு எனினும் பலர் புகைப்பிடித்த பின்னர் மீதமுள்ள சிகரெட் துண்டினை மலசல கூடத்தில் வீசியெறிவார்கள் அல்லது அதன் யன்னல் ஓரத்தில் எவ்வித பிரயோசனமும் இன்றி சேமித்து வைப்பார்கள்.
இவ்வாறே மலசல கூடங்களினை சுத்தம் செய்ய பயன்படுத்திய திரவங்கள் அடங்கிய போத்தல்களை மலசலகூடத்தின் உள்ளே ஓர்மூலையில் அல்லது கொமட்டின் நீர்த்தொட்டியின் மேற்புறத்தில் சேகரித்து வைப்பார்கள். அவர் 75 வயது நிரம்பிய முதியவர், அவரும் அவ்வாறே தனது பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய இவ்வாறான போத்தல்களை பாவித்து பாதி, பாவிக்காதது பாதி என்ற வகையில் மலசலகூடத்தின் உள்ளே ஓர்மூலையில் சேகரித்து வைத்திருந்தார். புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய அவர் அன்றும் வழமைபோல் மலசக்கூடத்தில் அமர்ந்து இருந்து புகைப்பிடித்த பின்னர் எஞ்சிய துண்டினை இவ்வாறான போத்தல்கள் இருக்கும் பகுதியில் வீசி எறிந்தார். உடனே பாரிய சத்தத்துடன் வெடிபோசையினை தொடர்ந்து அப்பகுதி பற்றி எரிய ஆரம்பித்தது. அவர் சுதாகரித்து வெளியேறுவதற்கு முதல் தீயின் நாக்குகள் அவரின் உடலினை பதம் பார்த்தன. உடல் 90% மேல் எரிந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவர் ஒருசில மணித்தியாலங்களில் மரணத்தினை தழுவிக்கொண்டார்.
நாம் பொதுவாக மலசல கூடங்களினை சுத்தம் செய்ய பாவிக்கும் திரவங்கள் தீப்பற்றும் தன்மை அற்றவை. ஆனால் சில வகை திரவங்கள் உலோகத்தினால் ஆன போத்தலில் சாதாரண முறையில் அல்லது உயர் அமுக்கத்தில் அடைக்கப்பட்டிருக்கும். இவ்வகையான போத்தல்களில் காலாவதி திகதி கடக்கும் பொழுது அவரின் உட்புறத்தில் இருக்கும் பூச்சு தானாகவே சிதைவடையும் அதன் காரணமாக உள்ளே இருக்கும் திரவம் உலோக போத்தலில் தொடுகையுறும் இதன் பொழுது ஏற்படும் இரசாயன தாக்கத்தின் பொழுது ஐதரசன் வாயு வெளியேறும் அது அப்போத்தலின் உள்ளே அதிக அமுக்கத்திலும் செறிவிலும் இருக்கும் மேலும் வெளிச்சூழலில் குறைந்த செறிவில் இருக்கும். இவ்வாறான நிலையில் நாம் வீசும் எரிகின்ற தீக்குச்சி அல்லது சிகரெட் துண்டு காரணமாக ஐதரசன் வாயு வெடித்தலுடன் பற்றி எரியும்.


மேலுள்ள படத்தில் இவ்வாறு தீப்பற்றி எரிந்த இடத்தினை காணலாம். கொமட்டின் நீர்த்தாங்கியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்து எவ்வாறு தீச்சுவாலை வீசியது என்பதினை தெளிவாக நாம் பார்க்கலாம்.
புகைத்தலை கைவிடும்படி சொன்னால் யார்தான் கேட்கப்போகின்றனர் எனவே நாம் இவ்வாறான போத்தல்களினை மலசலகூடத்தின் வெளிப்புறத்தில் சேமித்து வைப்பதன் மூலம் இவ்வாறான விபத்துக்களை தடுக்கலாம்.
முற்றும்



























