உயிருக்கு போராடியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் ….

ஒரு விபத்தில் அல்லது ஒரு தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பலர் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் வருவதில்லை.
மாறாக வேடிக்கை பார்ப்பார்கள். இவ்வாறு ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது அடுத்து என்ன நடக்கும் என்று பலருக்கு சரியான விளக்கம் இல்லை.அதனை தெளிவுபடுத்தும் நோக்குடன் சட்ட வைத்திய அதிகாரியின் பார்வை நோக்கில் இப்பதிவினை பதிவிடுகிறேன்.

 

இவ்வாறு அனுமதிக்க படும் நோயாளி உயிர் பிழைப் பார் எனில்,
அவரின் உடல்நிலை ஓரிரு நாட்களில் முன்னேற்றமடைந்ததும் அவர் பொலிசாருக்கு அவரை இந்நிலைக்கு இட்டுச்சென்ற சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது பற்றி வாக்குமூலம் ஒன்றினை வழங்குவார். அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி மேலதிக தகவல்களை பெற்று தனது சட்ட வைத்திய பரிசோதனையை செய்வார். இங்கு அந்த நோயாளியை அனுமத்திதவர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஆனால் துரதிஸ்டவசமாக அந்த நோயாளி இறப்பார் என்றால் நோயாளியை அணுமத்திதவர் ஓரிரு கடமைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.  அனுமத்தித்தவர் எவ்வாறான சூழ்நிலையில் மரணித்தவருக்கு காயம் ஏற்பட்டது என்பதை பொலிசாருக்கு விளக்கி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும். மேலும் பிரேத பரிசோதனை நடைபெறும் பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகம் சென்று உண்மையான காரணம் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். மேலும் மரணித்தவருக்கு உறவினர் யாரும் இல்லை எனில் அவரின் உடலத்தினை பொலிஸாருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கும் அடையாளம் காண்பதற்கு உதவி புரிய வேண்டும்.
மேற்கூறிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஓரிரு மணித்தியாங்கள் செலவாகும்.
சிலர் ஏன் இந்தச் செயற்பாடுகள் என்று கேட்கலாம்.
அதற்கான காரணத்தை அறியலாமா?

1. பல சந்தர்ப்பங்களில் அதாவது விபத்து, கொலை போன்ற மரணம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மனித உடலில் ஏற்படும் காயங்களின் தன்மை ஒரே மாதிரி இருக்கும். இச்சந்த்ப்பத்தில் அனுமத்திதவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

2. சில வேளைகளில் குறிப்பிட்ட நோயாளி சுய நினைவு இழந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சுய நினைவு மீளாமல் இறக்க நேரிடும். அந்த வகையில் வைத்தியசாலையில் அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

3. பல நேரங்களில் இரு நண்பர்கள் ஒன்றாக மது அருந்துவார்கள். போதை தலைக்கு ஏறியதும் சண்டை போட்டு காயப்படுத்தி கொள்வார்கள். படுகாயம் அடைந்த நண்பனை தாக்கியவனே வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு , மேல்மாடியில் இருந்து விழுந்ததாக OPD பிரிவில் சொன்ன பல சம்பவங்கள் நடை பெற்றுள்ளன.

4. கொழும்பு போன்ற பாரிய நகரங்களில் கணிசமானோர் தெருக்களில் வசிக்கின்றனர். இவ்வாறன ஒருவர் இறக்கும் பொழுது பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வைத்திய சாலையில் அனுமதித்தவரிடம் இருந்து மேலதிக தகவல்களை அறிய முயல்வர்.

5. சில சமயங்களில் விசாரணை செய்யும் பொலிஸார் பிழையான தகவல்களை சட்ட வைத்திய அதிகாரிக்கு வழங்கி அவரை தவறாக வழிநடத்த முற்படுவர்.
இச்சந்த்ப்பத்தில் சாட்சியின் வாக்கு மூலம் முக்கியமானது.

6. நடைபெற்றது கொலை எனில் வைத்திய சாலையில் அனுமதித்தவர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறும் பொழுது ஏனைய சாட்சிகளுடன் சேர்ந்து சாட்சி கொடுக்க வேண்டும்.
இதற்கு நீதி மன்றத்தினால் அழைப்பாணை அனுப்ப படும்.

தமிழர்களில் பெரும்பான்மையினர் நீதி மன்றம் மற்றும் போலீஸ் நிலையம் செல்வதை அவமரியாதையான செயலாக கருதுவதாலும் தாங்கள் ஏதோ குற்றவாளிகள் போன்று அச்சபடுவதாலும் இவ்வாறு உதவி செய்யவும் வாக்கு மூலம் அளிக்கவும் பின்னிற்கின்றனர்.
விபத்து ஒன்று நடைபெறும் நேரங்களில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற எம்மவர்கள் பின்னடிக்க இதுவே காரணம்.

வவுனியாவில் விஷவாயு தாக்குதல்

கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கச்சென்ற நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவுப்பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஒருவர் மயக்கமுற்ற நிலையில் குழியினுள் விழுந்துள்ளார். இந்நிலையில் அவரைக் காப்பாற்றச் சென்ற ஏனைய மூவரும் மயக்கமுற்று குழியினுள் விழுந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த நால்வரையும் காப்பாற்ற காவலாளி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், நகரசபையின் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நால்வரையும் குழியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் விஷவாயு தாக்கியதாலேயே குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகள் என்பன உக்கி அழிவடையும் பொழுது பல்வேறுபட்ட வாயுக்கள் இயற்கையாகவே வெளியேற்றபடும். உக்கி அழிவடைதல் (Decomposition) என்ற செயற்பாடு உலகில் இயற்கை சமநிலையினை பேண மிகமுக்கியமானதொன்றாகும். இவ்வாறு நடைபெறும் பொழுது பல நச்சு (Toxic)மற்றும் நச்சு அல்லாத வாயுக்கள்(non toxic) வெளியேற்றப்படும்.

இலங்கையில் கொல்களங்களில் இருந்து வெளியேற்றப்படும் கொல்லப்பட் ட மிருகங்களின் கழிவுகள் ஏறத்தாழ முற்றாக அடைக்கபட்ட நிலக்கீழ் அமைந்த பெரிய குழிகளில் சேகரிக்க பட்டு குறித்த கால இடைவெளிகளில் அப்பிரதேசங்களிற்கு பொறுப்பான உள்ளுராட்ச்சி சபைகளினால் gully பவுசர் மூலம் வெளியேற்றப்படும். இங்கு தொழிலார்களின் இறப்பு எவ்வாறு நிகழ்ந்தது? என்று பார்ப்போம்.

நச்சு வாயுக்கள் எனப்படும் பொழுது இவை மனிதனால் உட்சுவாசிக்க படும் பொழுது அவை நுரை ஈரலில் மனித இரத்தத்துடன் கலந்து சாதாரணமாக உடலில் நடைபெறும் ஓட்ஸிசன் காவும் செயற்பாட்டினை பாதிப்பன உதாரணமாக Hydrogen Sulphide, Nitrogen dioxide, Sulphur dioxide, carbon monoxide போன்ற வாயுக்கள். நச்சு அல்லாத வாயுக்கள் எனப்படும் பொழுது இவை சாதாரணமாக குறைந்த செறிவில் இருக்கும் பொழுது எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது. ஆனால் அதிக செறிவில் உயிராபத்தினை விளைவிக்கும். உதாரணமாக Methane ,Ammonia, Carbon-dioxide போன்றனவாகும். இவ்வாறு கழிவுத்தொட்டியில் காணப்படும் வாயுக்கள் Sewer gas என்று அழைக்கப்டும்.

கழிவுகளுடன் நீரும் சேர்க்க படுவதன் காரணமாக இவ்வகையான வாயுக்கள் அதிக அளவில் நொதித்தல் (fermentation) மூலம் உருவாகும். இவை பொதுவாக கழுவுத்தொட்டியின் உள்ளே கழிவுகளின் மேற்பரப்பில்தான் அதிக செறிவில் காணப்படும், மேலும் இவை வளியில் உள்ள ஓட்ஸிசனை இடம்பெயர்த்து காணப்படுவதால் கழிவுத்தொட்டியின் உள்ளே ஒப்பிட்டளவில் ஓட்ஸிசன் பற்றாக்குறை காணப்படும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (21)

625.0.560.320.160.600.053.800.700.160.90 (23)

இவ்வாறான இறப்புக்களினை எவ்வாறு தடுக்கலாம்

  1. கழிவுகளை அதிக நாட்களுக்கு விடாமல், குறைந்த நாட்களில் அகற்றுவதன் மூலம். இதன்போது வாயுக்கள் குறைந்த அளவிலேயே தோற்றம் பெற்றிருக்கும்
  2. கழிவுத்தொட்டிகளினால் குளோரின் போன்ற கிருமிக்கொல்லிகளை போடுவதன் மூலம் இவ்வாயுக்கள் தோற்றம் பெறுவதினை குறைக்கலாம்.
  3. மேலும் கழிவுகளை அகற்ற முதல் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே கழிவுத்தொட்டியின் மூடிகளை திறந்து விடுவதன் மூலம். இதனால் இவ்வாயுக்கள் வெளியேறும்.
  4. பொதுவாக தொழிலார்கள் தொட்டியினுள் இருக்கும் திண்ம கழிவுகள் நீர்க்குழாயினை அடைக்கும் பொழுது தொழிலார்கள் தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்யும்பொழுதுதான் அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமாக தொழிலார்கள் குழியினுள் இறங்காமல் அதிசக்தி வாய்ந்த நீரினுள் வேலைசெய்யும் (High power Submersible Water Pump) நீர்பம்பிகளை பாவிக்க வகைசெய்ய வேண்டும்.
  5. மனிதன் ஒருவன் இவ்வாயுக்களினை சுவாசிக்கும் பொழுது அவனுக்கு மயக்கம் மற்றும் தலைச்சுற்று போன்றன வந்து அவன் நினைவிழந்து கழிவு நீரினுள் வீழ்வதன் காரணமாக அதாவது நீரில் மூழ்கியே (Drowning) இறப்பு ஏற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பொழுது சகதொழிலாளர் உணர்ச்சி வசப்பட்டு தொட்டியினுள் குதிக்காமல் புத்தி சாதுரியமாக செயற்படவேண்டும்.
  6. தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்யும் பொழுது உரிய முகமூடிகள் மற்றும் ஏனைய தனி நபர் பாதுகாப்பு சாதனங்களை (Personal protective equipment) அணிவதன் மூலமும் அநியாய இறப்பினை தடுக்கலாம். இவை கணிசமான விலை கூடியவை மற்றும் இவற்றின் வினைத்திறன் கேள்விக்குரியது.

இவ்வாறு விஷவாயுக்களினால் இறப்பு நடந்த வேறு இரு சம்பவங்களினை இங்கு தருகின்றேன்.

காப்பாற்ற குதித்தவனும் மாண்ட கதை

ராகல (Ragala) குகையில் நடந்தது என்ன?

குண்டு வெடிப்பும் JMO உம்

முதலில் அண்மைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு இப்பதிவினை எழுத தொடங்குகிறேன். அண்மைய குண்டு வெடிப்பினை தொடர்ந்து பல சிதிலமடைந்த, உயிரிழந்த மனித உடல்கள் எனது அலுவலகத்திற்கு உடற் கூராய்வு பரிசோதனைக்குகாக கொண்டு வர ப்பட்டிருந்தன. இந்நிலையில் பலரிடம் இருந்து குறிப்பாக அரசியல் வாதிகள், சக வைத்தியர், மத தலைவர்கள், சக வைத்திய சாலை பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றோரிடம் இருந்து அதிகமான தொலை பேசி அழைப்புகள் . அவர்கள் யாவரின் வேண்டுதலும் விரைவாக உடற் கூராய்வு பரிசோதனையை முடித்து தரும்படியே ஆகும். ஓர் அரச அதிகாரி கேட்டார் டாக்டர் உங்களுக்கு மரணத்திற்கான காரண தெரியும் தானே? நீங்கள்  ஏன் போஸ்ட் மொட்டம் செய்ய வேண்டும்? மரணத்திற்கு ஏதுவான காரணத்தை (Cause of dead) கொடுத்து உடலினை ரிலீஸாகக்கலாம் தானே என்று. இவ்வாறு பலர் நினைத்து கொண்டு உள்ளார்கள்.

 இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல மனித உயிர்கள் பறிக்கப்படும் சம்பவங்களில் குற்றவியல் புலன் விசாரணையின் (Criminal investigation) பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் (JMO – Judicial Medical Officer) பங்குகள் பற்றி விளக்குவதே இப்பதிவின் நோக்கம். மேலும் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வாறு ஓர் குற்றவியல் புலன் விசாரணை நடைபெறுகின்றது என்பதையும் இப்பதிவு விளக்குகின்றது.

  1. இவ்வாறன சம்பவங்கள் நடைபெற்ற உடனேயே சட்டவைத்திய அதிகாரி, இரசாயன பகுப்பு திணைக்களத்தின் குண்டுகள் தொடர்பான நிபுணர், போலீஸ் திணைக்கள விசாரணை அதிகாரிகள் போன்றோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைக்கபடுவர். இது ஒரு குழு வேலை ஆகும். இங்கு சட்ட வைத்திய அதிகாரி மனித தசைத் துண்டங்களின் குவியலுக்கிடையே தேவையான சான்று பொருட்களை தேடி சேகரிப்பர்.                                                                                                                              grid-search-pattern-130103-8392200இவர் வெடித்த குண்டின் சன்னங்கள், இறந்த மனிதர்களை அடையாளம் காண்பதற்கு தேவையான பொருட்கள் போன்ற வற்றை சேகரிப்பர். மனித மனதினை மிகவும் நிலை குலையவைக்கும் இவ்வாறன சம்பவங்களில் ஓர் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரால் தான் திறமையாக மனம் தளராமல் கடமையாற்ற முடியும். இங்கு சன்னங்கள் (Shrapnel) எனப்படும் பொழுது இரு வகைப்படும். முதலாவது வகை வெடிகுண்டு ஆக்க பயன்பட்ட உலோகம் மற்றும் அதனுள் அமைந்த உலோக குண்டுகள் ஆகும். இரண்டாவது வகை குண்டு கொண்டு வரப்பட்ட கொள்கலன் அல்லது பொருள் போன்றவற்றின் பகுதிகளை குறிக்கும். இவை மிக முக்கியமானவை எனெனில் இவை மூலம் வெடித்த குண்டு எது, அது எவ்வகையான பொருட்களால் செய்யப்பட்டுள்ளது, எதனுள் மறைத்து கொன்டு வரப்பட்டுள்து போன்றவர்றை கண்டுபிடிக்கலாம். மேலும் சட்ட வைத்திய அதிகாரி உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது இவற்றினை கவனமாகக் சேகரிப்பார்.
  2. ஓர் குண்டு வெடிப்பு தாக்குதல் ஆனது சனநடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெறும் பொழுது இறுதியில் அவ்விடத்தில் தசைகளினதும் எழும்புகளினதும் ஓர் குவியலே எஞ்சும். இவற்றில் இருந்து எத்தனை மனிதர்கள் இறந்தார்கள்? அவர்கள் யார்? என்பதை கண்டு பிடிப்பதும் ஓர் சட்ட வைத்திய அதிகாரியின் பிரதான வேலை ஆகும். அவர்கள் முதலில் குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் உள்ள தனித்துவமான சான்றுபொருடகள் மூலம், கைரேகை, பற்களின் அமைப்பு (forensic odentology) மூலம் அடையாளம் காண முற்படுவார்கள். தேவை ஏற்படும் போது DNA தொழில் நுட்ப முறையும் பாவிக்கப்படும். இதுவே மிகவும் சரியான முறை ஆகும்.
  3. தற்கொலை குண்டு தாக்குதல்களில் இறந்த மனிதர்களில் யார் குண்டுதாரி என்று கண்டு பிடிப்பதும் சட்ட வைத்திய அதிகாரி அவர்களின் பணிகளில் ஒன்று. அவர் பொதுவாக இறந்தவர்களில் காணப்படும் காயங்களின் தன்மையை வைத்து கண்டறிவார். பொதுவாக தற்கொலை குண்டுதாரி குண்டுகளை ஜாக்கெட் வடிவில் நெஞ்சு, தொடை அல்லது வயிற்று பகுதிகளில் அணிந்து இருப்பர். மற்றும் இங்கு பயன்படுத்த படுவது சக்தி வாய்ந்த வெடிபொருள் என்பதால் குண்டுதாரியின் தலை கழுத்து பகுதியுடன் வேறாக்கபட்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் காணப்படும்.பல சமயங்களில் தலை பல மீட்டர் தூரம்  வீசப்பட்டு காணப்படும். அதிலிருந்து வெளித்தோற்ற இயல்பு, பற்களின் அமைப்பு மற்றும் DNA போன்ற வற்றின் மூலம் குண்டுதாரியை அடையாளம் காண்பர்.FB_IMG_1555921871844.jpg
  4. சட்ட மருத்துவத்தில் இவ்வாறு குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் குற்றம் எவ்வாறு நடைபெற்றது என்பதை மீண்டும் ஒருமுறை அறிவியல் ரீதியில் அமைத்து பார்த்தல் அதாவது reconstruction of the crime. இதன் மூலம் பாதுகாப்பு ஒட்டைகளினை கண்டு பிடித்து அவற்றினை சீர் செய்து எதிர் காலத்தில் அவ்வாறு நடைபெறாது தடுத்தல் ஆகும்.
  5. மேலும் இறந்தவர்களின் மற்றும் காயப்படவர்களின் உடல்களில் உள்ள காயங்களின் தன்மையை ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வகையான காயங்களை தடுக்கும் உபகரணங்களை உருவாக்க உதவுதல் ஆகும் (personal protective equipment)
  6. மேலும் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்று ஆராய்தல் ஆகும். சாதாரணமாக இவ்வாறு குண்டு வெடிப்பின் போது ஏற்படும் காயங்கள் காரணமாக பெரும்பான்மையானவர் இறப்பர். மேலும் அதிர்ச்சி காரணமாக ஏற்கனவே உள்ள இருதய நோய்கள் காரணமாகவும் இறப்பு ஏற்படலாம். மேலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து அதன் மூலமும், மேலும் மின்சாரத் தாக்குதல் மூலமும் இறப்பு ஏற்படலாம்.

                       மேலும் அரிதாக குண்டுதாரி எய்ட்ஸ் அல்லது ஹெப்படைட்டிஸ் B போன்ற நோய்களால் பாதிக்கபட்டிருப்பின் அவர்களின் இரத்தம் மூலம் காயம் அடைந்தவர்களுக்கு அந்த நோய்கள் தோற்ற கூடிய அபாயம் உள்ளது. இவற்றினை கண்டறிவதும் சட்டவைத்திய அதிகாரி ஒருவரின் கடமை ஆகும்.

இவற்றிக்கு மேலதிகமாக இவ்வாறன திடீர்  மரணங்கள் நிகழும் பொழுது இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் கட்டாய உடற் கூராய்வு செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது.

தூக்கு தண்டனை கைதிக்கு வலிக்குமா?

நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய அந்த சம்பவம் நடந்து இன்றோடு 7 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2012 டிசம்பர் 16ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. டெல்லியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள முனிர்கா பகுதியில்தான் பேருந்தில் அந்த கூட்டு பலாத்காரம் நடந்தது. தனது நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டு இருந்த நிர்பயா கொடூரமான 6 பேர் கொண்ட குழுவால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். டெல்லியில் ஓடும் பேருந்தில் மிக மோசமாக நிர்பயா துன்புறுத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதன் பொழுது தூக்கு தண்டனை கைதிக்கு வலிக்குமா? என்பதை மருத்துவ ரீதியாக ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.

454612101000100408611no

மரணத்திற்கான பொறிமுறையினை (mechanism of death) பொறுத்த மட்டில் சாதாரணமாக தூக்கில் தொங்கி இறப்பதற்கும், தூக்கு தண்டனை விதித்து இறப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

அதாவது சாதாரணமாக தூக்கில் தொங்கி இறக்கும் பொழுது அவர்களின் காலிற்கும் நிலத்திற்கும் ஒருசில அடிகள் உயரமே காணப்படும். மேலும் சிலவேளைகளில் அவர்களின் கால்கள் நிலத்தில் தொடுகையில் இருக்கலாம். இதன் பொழுது ஓப்பிட்டளவில் கணிசமான விசை அவர்களின் கழுத்தினை நெரிக்கும். இவ்வாறு தாக்கும் விசை அவர்களின் நிறை மற்றும் குதிக்கும் உயரம் (Potential energy = mass x gravity x height) என்பவற்றில் தங்கி இருக்கும்.

இதன் பொழுது கழுத்தில் உள்ள பிரதான இரத்த குழாய்கள்(carotid artery, great veins and vertebral artery) மற்றும் சுவாச குழாய்கள்(trachea) நசிபடும். இதன்காரணமாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் மற்றும் ஓட்ஸிசன் தடைப்பட மரணம் சம்பவிக்கும். இவ்வாறு நடைபெற 3 தொடக்கம் 5 நிமிடங்கள் செல்லும். முதலில் அவர்கள் மூச்சு எடுக்க கடினப்பட்டு வேதனை படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் தாமே சுருக்கினை நீக்க முற்படுவர். ஒருஇரு நிமிடங்களின் பின்பே சுய நினைவினை இழப்பார்கள் அதன் பின்னரே அவர்களுக்கு வலி வேதனை இருக்க மாட்டாது.

ஆனால் தூக்கு தண்டனை விதிக்கும் பொழுது மிக உயரத்தில் உள்ள தூக்கு மேடையில் இருந்து சடுதியாக தூக்கு தண்டனை கைதி கீழ்நோக்கி வீழ்த்தப்படுவர். இதன் பொழுது அவர்களின் கழுத்தில் உள்ள பிரதான இரத்த குழாய்கள் மற்றும் சுவாச குழாய்கள் நசிபடுவதோடு மேலதிகமாக கழுத்து பகுதியில் உள்ள முள்ளந்தண்டு உடைக்கப்பட (Hangman fracture) அதனுள்ளே அமைந்த முன்னான் மற்றும் முள்ளந்தண்டு என்பன சிதைக்கப்படும். இதன் பொழுது தூக்கு தண்டனை கைதி அதிர்ச்சி நிலைக்கு (spinal shock/ decerebrate state) உட்பட்டு உடனடியாகவே சுயநினைவினை இழப்பர். இதன் காரணமாக அவர்களுக்கு வலி மற்றும் வேதனை தெரியாது.சுயநினைவினை இழந்த பின்னரே அவர்களுக்கு மூளைக்கு ஓட்ஸிசன் பற்றா குறை காரணமாக வலிப்பு வரும்.

மேற்குறிய அவதானங்கள் யாவும் யூதர்களுக்கு எதிரான இன படுகொலையின் பொழுது நாசி படைகளுடன் சேர்ந்து பணியாற்றிய வைத்தியர்களினால் நேரடியாக அவதானிக்கப்பட்டு பதிவு செய்யப்பட் டன. இதன் காரணமாகவே பிற்காலத்தில் மருத்துவர்கள் இவ்வாறு மனித சித்திரவதைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவது மருத்துவ ஒழுக்கவியலுக்கு முரணானது என்று கருதப்படுகின்றது. இங்கு நான் உடல் ரீதியான (physical pain ) இணையே கருத்தில் கொண்டுள்ளேன், ஆனால் மரண தண்டனை கைதிகள் மன ரீதியான வேதனையில் (mental pain ) நிச்சயம் இருப்பார்கள்.

மருத்துவ தவறா?

அண்மை காலங்களில் பத்திரிகை, இணையத் தளங்கள் மற்றும் முக நூல் பதிவுகளில் வைத்தியர்களின் அலட்சிய போக்கினால் பல உயிர்கள் பறிக்க படுள்ளதாக குற்ற சாட்டுகள் பல்வேறு பட்ட தரப்புகளினால் வைக்கபட்டு வருகின்ற நிலையில் உண்மைத்தன்மையை ஆராயும் முகமாக இப்பதிவு இடம்பெறுகின்றது.

“மருத்துவ தவறு” சரியான சொற்பதமா?

சில காலங்களுக்கு முன்பு “மருத்துவ கொலை” என்ற தலைப்பில் ஒரு சில பதிவுகள் வந்தன. கொலை என்பது சட்ட ரீதியாக கொலையாளியின் மன ரீதியான உத்வேகத்தினை வைத்தே முடிவு செய்யப் படுகினறது. இங்கு மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதால் ” மருத்துவ கொலை” என்ற சொற் பதம் பொருத்தம் அற்றதே.

ஒருவன் ஒரு செயலினை தெரிந்து செய்தால் அது “தப்பு” என்றழைக்கப் படுகிறது. அவ்வாறே ஒரு செயலினை தெரியாமல் செய்தல் “தவறு” என்றழைக்கப் படுகின்றது.

மருத்துவ தவறு என்றழைக்கப்படும் பொழுது  எல்லா தவறுகளும் ஏதோ தெரியாமல் இழைக்க படுவதாக எண்ண தோன்றும்.

உண்மையில் மருத்துவ தவறுகள் யாவும் மருத்துவ துறை சார்ந்த வைத்தியர்கள், தாதியர், மற்றும் எனையோர்களின் அலட்சிய போக்கினால் தான் ஏற்படுகின்றது. இதனாலேயே ஆங்கிலத்தில் medical negligence அதாவது மருத்துவ அலட்சியம் என்று அழைப்பதே சாலா சிறந்தது .

மருத்துவ அலட்சியம் என்பதும் ஓர் சட்ட சொல் ஆகும். எனவே ஒரு சம்பவம் நடைபெற்ற உடனேயே நாம் மருத்துவ அலட்சியம் அல்லது மருத்துவ தவறு என்று கூற முடியாது. வழக்கு விசாரணையின் பின்பே நடைபெற்ற சம்பவம் மருத்துவ அலட்சியம் அல்லது மருத்துவ தவறு என்று தீர்மானிக்க படும்.

மருத்துவ அலட்சியம் என்றால் என்ன?

மருத்துவ துறை சார்ந்தவர்களின் அதாவது வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப வியலாளர்கள் … போன்றவர்களின் கடமை தவறிய அலட்சிய போக்கினால் (breech of duty of care) நோயாளி ஒருவருக்கு சேதாரம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் நிலை மருத்துவ அலட்சியம் என்று அழைக்கபடும். இங்கு மருத்துவ துறை சார்ந்தவர்கள் ஒரு செயற்பாடினை செய்வதன் மூலமாக உதாரணமாக தவறான அளவில் ஊசி மருந்தினை போடுவதால்  அல்லது உரிய செயன்முறையினை செய்யாமல் விடுவதன் காரணமாக உயிரிழப்பு அல்லது சேதாரம் ஏற்படுகிறது. உதரணமாக பிறந்த குழந்தைக்கு போர்வையினை போர்க்காமல் குளிருக்கு வெளிக்காட்ட  இடம் அளிப்பதன் மூலம் உயிரிழப்பு ஏற்படலாம்.

இலங்கையில் மருத்துவ அலட்சியம்

இலங்கையின் அரச மற்றும் தனியார் மருத்துவ துறையில் மருத்துவ அலட்சியம் ஒன்றும் நடைபெறவில்லை என்று கருத்து சார்ந்து வரும் செய்திகள் யாவும் ஒருவிதத்தில் பிழையானவை ஆகும். உண்மையில் இலங்கையில் இது சம்பந்தமான தரவுகள் எதுவும் இல்லை என்பதால் அப்படி ஒன்றும் இல்லை என்றே பலர் நினைக்கின்றனர்.

மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடான ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவ அலட்சியமே  அதிக மரணங்களை விளைவிக்கும் காரணி ஆகும். இந்நிலையில் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் மருத்துவ அலட்சியம் காரணமாக உண்டாகும் மரணங்கள் மற்றும் சேதாரங்கள் உண்மையில் மிக அதிகமாகும்.

மேலும் சில உண்மைகள்

050416-MedicalErrors

  1. இலங்கையில் மருத்துவ அலட்சியத்தினை அடையாளப்படுத்தி இனம் காணும் பொறிமுறை ஒன்றும் இல்லை (notification system).
  2. பொதுவாக சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் தமது நோயாளி திடீர் என்று இறந்தால், அவர்கள் என்ன காரணத்துக்காக நோயாளி இறந்தார் என்று அறிந்து கொள்ள விரும்புவதில்லை. உதாரணமாக நோயாளி ஒருவர் வைத்தியரின் தவறான சிகிச்சையினால் இறந்தார் என்றால் அதுசம்பந்தமாக அவர்கள் மேலதிக தகவல்களை பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவதில்லை. விதிவிலக்காக இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் சம்பந்தமாக பல்வேறு வைத்திய நிபுணர்கள் கலந்துரையாடும் வழக்கம் உள்ளது. பல மேற்கத்தேய நாடுகளில் நோயாளியொருவர் திடீர் மரணம் அடையும் இடத்து பல வைத்திய நிபுணர்கள் ஒன்றுகூடி ஆராய்வார்கள் அதன் பொழுது அவர்கள் விட்ட தவறுகள் விஞ்ஞான ரீதியில் அடையாளம் காணப்பட்டு எதிர்காலத்தில் நிகழாதவண்ணம் தடுக்கப்படும். சில நாடுகளில் நோயாளிக்கு இழப்பீடு வழங்கப்படுவதோடு உரிய வைத்தியர்கள் தண்டிக்க படாது அவர்களுக்கு மேலதிக பயிற்சி வழங்கப்படும்
  3. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்ட வைத்திய அதிகாரிகள் பிரேத பரிசோதனைகளில் கிடைக்கும் மருத்துவ அலட்சியம் சம்பந்தமான தகவல்களை உறவினர்களுக்கு விளங்க படுத்துவர் ஆனால் உறவினர்கள் அவற்றினை விளங்க முடியாத நிலையில் இருப்பர். சிலர் மிக தெளிவான விளக்கத்துடன் இருப்பர். இவ்வாறு தெளிவான விளக்கத்துடன் இருப்பவர்களும் சட்ட தரணிகளுக்கு அதிகளவு பணம் கொடுக்க வேண்டி வருவதால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ள படுவர்.
  4. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டதரணிகள் இது சம்பந்தமாக குறைந்த அளவு அனுபவம் மற்றும் அறிவு உள்ள காரணத்தினால் வழக்கினை சிறந்த முறையில் எடுத்துச்செல்ல மாட்டார்கள்.
    மேலும் சில சட்ட தரணிகள் குறித்த வைத்தியருக்கு அல்லது வைத்திய சாலைக்கு எதிராக வாதாட தனிப்பட்ட ரீதியில் விரும்புவதில்லை.
    பல சந்தர்ப்பங்களில் மரணம் நிகழ்ந்த தனியார் வைத்திய சாலை மதம் சம்பந்தமான வைத்தியசாலை எனில் அம்மதத்தினை சேர்ந்த சட்டதரணிகள் அவ்வைத்திய சாலைக்கு எதிராக வாதாட தனிப்பட்ட ரீதியில் விரும்புவதில்லை
  5. சில சந்தர்ப்பங்களில் சட்ட வைத்திய அதிகாரிகள் பிரேத பரிசோதனைகளில் கிடைக்கும் மருத்துவ அலட்சியம் சம்பந்தமான தகவல்களை சக வைத்தியர்களுக்காக மூடிமறைப்பர்.

தொடரும்

“மப்பு” எவ்வளவு மணித்தியாலங்களில் இல்லாமல் போகும்?

அவன் ஹயஸ் வான் ஒன்றின் உரிமையாளர் ஆவார். அவன் வழமையாக யாழ் கொழும்பு பிராயணங்களில் இடுபடுவான். அன்றும் வழமை போன்று வெளிநாடு ஒன்றில் இருந்து வந்திருந்த குடும்பம் ஒன்றினை யாழில் இருந்து வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கினான். வழமையாக இவ்வாறு இறக்கிய பின்பு யாராவது விமான நிலையத்தில் இருந்து யாழ் செல்ல விரும்பினால் ஏற்றி செல்வான். ஆட்கள் இல்லாவிடில் கொழும்பு வந்து ஒருசில நாட்கள் தங்கி இருந்து மீண்டும் பயணிகளுடன் யாழ் நோக்கி செல்வான். அன்றும் அவ்வாறே குடும்பம் ஒன்றினை விமான நிலையத்தில் காலை 5 மணிக்கு இறக்கி விட்டு பிரதான வீதியில் வாகனத்தினை செலுத்தினான் திடீரென்று வந்த போக்குவரத்து பொலிஸார் அவனை மறித்து சோதனை இட்டனர். பின்னர் அவனை சாராயம் குடித்து இருப்பதாக கைது செய்து அருகி உள்ள வைத்தியசாலையின் OPD பிரிவில் உள்ள ஒரு பெண் வைத்தியரிடம் நண்பகல் 12 மணியளவில் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவ்வைத்தியார் அவன் மது போதையில் (under influence of alcohol) இருப்பதாக அறிக்கை இட்டார். இதனை தொடர்ந்து அவன் நீதி மன்றத்தில் நிறுத்த பட்டான். அவனுக்கு ஒரு தொகை பணம் அபராதமாக விதிக்க பட்டது. அவனிடம் உடனடியாக காசு இல்லை என்பதால் இரு நாட்கள் சிறையில் தள்ளபட்ட நிலையில் வெளிவந்தான்.

  அவன் இச்சம்பவ நடைபெற்ற முதல் நாள் மாலை 3 மணிக்கு நண்பர்களுடன் இணைந்து அவன் 2 போத்தல் பியர் ( Lion strong 8.8% ) அருந்தி இருந்தான். மேலும் அவர்களின் கருத்துப்படி அவன் அதன் பிறகு வேறு எந்த சாராயம் அல்லது போதை பொருட்களோ பாவிக்க வில்லை.

சாதாரணமாக நாம் அருந்தும் மதுபானம் ஆனது அரை மணி நேரத்தில் உடலில் இருந்து உறிஞ்சபட தொடங்கும். இரத்தத்தில் ஒரு மணி நேரத்தில் மதுபான அளவு உச்சத்தில் இருக்கும். எமது இரத்தத்தில் உள்ள மதுபான அளவானது உறிஞ்சப்படும் வீதத்திற்கும் வெளியேற்றப்படும் வீதத்திலும் தங்கியுள்ளது. பெரும்பாலும் 12 மணிநேரத்தில் மதுபானம் ஆனது சிறுநீர் மூலம் வெளியேற்ற பட்டு விடும் அதாவது உடலில் இருந்து முற்றாக நீங்கி விடும். இங்கு வைத்தியர் ஏறத்தாழ 20 மணித்தியாலங்களின் பின்பே அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவ்வைத்தியரிடம் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக வினவியபொழுது அவர் இது சம்பந்தமாக அறிவியல் ரீதியான (no scientific explanation) விளக்கமொன்றையும் தரவில்லை.

tmp458_thumb_thumb

அவனுக்கும் அது சம்பந்தமான அறிவும் இல்லை. அவன் பிடித்த வழக்கு அறிஞர் அவர்களுக்கும் அது சம்பந்தமான அறிவும் இல்லை. அவர் இவனை குற்றதினை ஓப்புகொள்ள சொன்னார். இவனும் வழக்கிற்காக செலவு செய்ய பணம் மற்றும் நேரம் வேண்டும் என்பதால் வேறு வழி இன்றி  குற்றத்தினை ஒப்புக்கொண்டு உரிய பணத்தினை செலுத்தினான்.

  இவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் கொலை, திடீர் இறப்பு, விபத்து மரணம் , பாலியல் துஸ்பிரயோகம், அடித்து காயமேற்படுத்துதல் போன்ற பல்வேறு சம்பவங்களில் பொதுமக்களுக்கு சட்ட மருத்துவ சம்பந்தமன அறிவு தேவை. அது அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் குற்றங்களினை விசாரணை செய்யும் அதிகாரிகளினால் இலகுவில் ஏமாற்றபடுவர். பொதுமக்களை தவிர அவர்கள் சார்பில் வாதாடும் சட்ட தரணிகளுக்கு கட்டாயம் சட்ட மருத்துவ சம்பந்தமான அறிவு தேவை. இதனை கருத்தில் கொண்டே அவர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறி ஒன்று கொழும்பு மற்றும் ஜெயவர்தன பல்கலை கழக மருத்துவ பீடங்களில் நடத்தபடுகின்றது. சில வேளைகளில் சாதாரண பொதுமக்களுக்கும் ஒரு சில சட்ட தரணிகளுக்கும் இவ்விடயம் தெரிய வருவதால் ஒருசில குற்றவாளிகள் தப்பிக்க சாத்தியம் உள்ளது. ஆனால் ஆயிரம் குற்ற வாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு சுற்றவாளி தண்டிக்கபட கூடாது என்ற தத்துவ அடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில் சட்ட மருத்துவ சம்பந்தமான அறிவு எல்லோருக்கும் தேவையானது.

மன்னார் புதைகுழி – சில உண்மைகள்

  1. இரும்பு 500 வருடமாக துரு பிடிக்காமல் இருக்குமா?

முதலில் கண்டெடுக்கப்பட்ட உலோகம் ஆனது இரும்பு தானா? என்பதை உறுதி செய்யவேண்டும். பொன், வெள்ளி , செம்பு மற்றும் பித்தளை போன்ற கலப்பு உலோகங்கள் பல நூற்றான்டுகள் சென்றாலும் மிக மிக சிறிதளவே துரு பிடிக்கும் அல்லது துரு பிடிக்காமலே இருக்கும். இனி இரும்பானது எவ்வாறு துரு பிடிக்கின்றது என்பதை இரசாயன ரீதியில் பார்ப்போம். இரும்பானது புதைக்கப்படும் பொழுது மண்ணில் உள்ள ஓட்ஸிசன் மற்றும் அமில உப்புக்களுடன் தாக்கமடையும். இதன் பொழுது Fe2O3, FePO4, Fe2(OH)3 போன்ற கனியுப்புக்கள் கொண்ட படைகள்(layers) உருவாகும். மேலும் இவை புதைக்கபட்ட இரும்பின் மீது படிவதன் காரணமாக ஓட்ஸிசன் மற்றும் அமில உப்புக்களுடனான மேலதிக தொடுகை தடுக்க படும் இதன் காரணமாக மேலதிகமான துருப்பிடித்தல் தடுக்கப்படும். மேலும் மண்னில் உலோகம் ஆனது அசைவற்ற நிலையில் காணப்படுவதால் இவ்வாறு தோன்றிய படைகள் இலகுவில் உலோகத்தில் இருந்து விடுபடாது. சாதாரணமாக வீட்டில் நாம் பாவிக்கும் கத்தி போன்றன துரு பிடித்த நிலையில் உள்ள பொழுது, துருவினை நாம் நீக்குவோம் அல்லது பாவிக்கும் பொழுது தானாகவே இல்லாமல் போகும் இதன் காரணமாக துருபிடித்தல் மேலும் அதிகரிக்கும்.

  1. பல்லானது 500 வருடமாக உக்காமல் இருக்குமா?

பல்லானது எனாமல் என்ற பதார்த்தத்தினால் வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வெப்பநிலை, கடும் குளிர் போன்றவற்றினை தாங்கி இலகுவில் அழிவடைந்து போகாது. இதன் காரணமாகவே குண்டு வெடிப்பு, விமான விபத்து மற்றும் மனித புதைகுழி சமபந்தமான புலனாய்வுகளில் பல்லானது பாவிக்கப்படுகின்றது.

116228-004-804F6391

3. மனித பல்லினை வைத்து கொண்டு மனிதன் எப்பொழுது புதைக்கப்பட்டான் என்பதை கூற முடியுமா?

மனித பல்லினை வைத்து கொண்டு மனித எலும்பு கூட்டின் வயதினை அதாவது அம்மனிதன் எப்பொழுது பிறந்தான் என்பதை கூற முடியுமே தவிர அவன் எப்பொழுது கொன்று புதைக்கப்பட்டான் என்பதை கூற முடியாது. இது சம்பந்தமான படிப்பு Forensic odontology ஆகும். (Forensic odontology is the application of dental science to legal investigations, primarily involving the identification of the offender by comparing dental records to a bite mark left on the victim or at the scene, or identification of human remains based on dental records) மற்றும் இறந்த மனிதனை அடையாளம் காண அவனது பல்லின் விபரங்கள் உதவி புரியும்.

  1. மனித எலும்பானது 500 வருடங்களாக உக்காமல் இருக்குமா?

சாதாரணமாக புதைக்கப்பட்ட எலும்பானது உக்கி அழிவடைந்து போதல் என்பது அவ்வெலும்பு புதைக்கப்பட்ட சூழலில் தங்கி உள்ளது. அதிக வெப்பநிலை, குறைந்த மழை வீழ்ச்சி(மன்னார் மாவட்டமே இலங்கையில் அதிகுறைந்த மழை வீழ்ச்சி பெறும் இடம்), அதிக காற்றோடடம், உப்புத்தன்மை மிகுந்த மண் என்பன மண்ணில் உள்ள நுண்ணங்கிகளின் தொழில்பாட்டினை குறைக்கும். இதன்காரணமாக 500 வருடங்களாக எலும்புகள் உக்காமல் இருந்தமை என்பது ஆச்சரிய படக்கூடிய விடயம் அல்ல.

மேலும் கிடைக்க பெற்ற எலும்பு கூடுகள் கடுமையாக உக்கிய நிலையிலேயே கிடைக்க பெற்றன. அவை சிறிதளவு விசைக்கு கூட உடைந்து விடும் நிலையில் காணப்பட்டன. இவ்வாறே இரும்பும் மிகவும் துரு பிடித்து தும்பு மிட்டாசு போன்றே காணப்பட்டது.

5. தலையில் வாள்வெட்டு காயங்கள் காணப்பட்டனவே?
மண்டை ஓடு ஆனது நீண்ட காலமாக மண்ணில் புதையுண்ட நிலையில் இருக்கும் போது ஏற்படும் உக்கல் செயற்பாடு காரணமாக வெளிப்புறத்தில் மட்டுமே வெடிப்புகள் தோன்றும் இவை சட்ட மருத்துவ அறிவு இல்லாதவர்கள் இவற்றினை பார்வை இடும் பொழுது அவர்களுக்கு அது வாளால் வெடியதினை போன்று தோன்றும். அனுபவம் மிக்க சட்ட வைத்தியர் மிக இலகுவாக இவற்றினை அடையாளம் காண்பார்.

download.jpeg

6. புதைகுழிகளில் மம்மி தோற்றம் பெற்றது உண்மையா?
புதைக்கப்படும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு துளி நீரும் முற்றாக இழக்கபட்டு மனித உடலில் தசையும் எலும்புகளும் எஞ்சும் நிலையே மம்மி நிலை ஆகும். அதாவது உடல் கருவாடு மாதிரி வருதல் ஆகும். இவ்வாறு தோன்றும் மம்மி பல வருடங்களாக பளு தடையாமல் இருக்கும். இங்கு இவ்வாறு கிடைக்க பெற்ற எலும்பு கூடுகளில் மம்மி நிலை தோற்றம் பெறவில்லை.

7. மலிபன் உறை மூலம் சம்பவம் நடை பெற்ற காலத்தினை கூறமுடியுமா?
ஒரு மனித புதைகுழியில் அகழ்வு நடை பெறும் பொழுது இவ்வாறு பல பொருட்கள் கிடைப்பது வழமையான ஒன்றே. சட்ட மருத்துவ துறையில் இவற்றின் மதிப்பு குறைவானது ஏனெனில் இவை அகழ்வு நடைபெறும் பிரதேசத்தில் வேண்டும் என்றோ அல்லது தற்செயலாக வோ கலக்கப் ப டலாம். மேலும் உற்பத்தி திகதியினை வைத்து புதைகுழி யின் காலத்தினை கணிப்பது தவறாக அமையும். உதாரணமாக 2000 ஆண்டில் அமைக்கப்பட்ட புதைகுழியில் ஆங்கிலேய காலத்து நாணயக்குற்றி காணப்பட்டால் நாம் அதனை ஆங்கிலேய காலத்தில் அமைக்க பெற்றது என்று கூறமுடியாது. மேலும் இம்முறையானது அறிவியல் ரீதியில் அமைந்தது அல்லது எனவே பொதுவாக நீதி மன்றம் பொதுவாக இவ்வாறன சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

8. கார்பன் பரிசோதனையில் கால இடைவெளி 1499- 1700 வரை அதாவது இரு நூ்றாண்டுகளுக்கு இடைபட்ட தாக குறிப்பிட்டு உள்ளர்களே இது எவ்வாறு?

சாதாரணமாக கிடைக்கப்பெறும் எலும்புகள் முதலில் nuclear bomb effect மூலம் கால கணிப்புக்கு உட்படுத்த படும் அப்போது கதிரியக்க கார்பன் அணுக்கள் மிக குறைந்த அளவில் காணப்படுவது காரணமாக AMS முறையில் காலம் கணிக்கபடும். AMS முறையில் தொல்பொருட் களுக்கு காலம் கணிக்க படும் பொழுது இவ்வாறு நீண்ட கால இடைவெளியே வரும். Nuclear bomb effect மூலம் 10 வருட இடைவெளியில் காலத்தினை கணிக்கலாம். ஒரு பொருளில் அதிகளவு கதிரியக்க கார்பன் காணப்படும் பொழுதே nuclear bomb effect முறையினை பயன்படுத்தலாம்.

9. கார்பன் டேட்டிங் முறையில் தவறுகள் ஏற்படாதா?
சட்ட மருத்துவத்தில் பரிசோதனைக்காக எடுக்கப்பட ஒரு மாதிரிப் பொருள் உரிய பரிசோதனை கூடத்தின மாற்றம் அடையாது சென்றடைந்தல் முக்கியமானது. இது chain of custody என்றழைக்கப்படும். மனித புதைகுழியில் எலும்பு கூடுகள் ஒரு படையில் அல்லது பல படைகளில் காணப்படும். பல படைகளில் காணப்படுவதன் காரணம் அவை பல்வேறுபட்ட சந்தர்பங்களில் புதைக்க பட்ட மையே ஆகும். இறுதி யாகப் புதைக்கப்பட வை மேலும் முதலில் புதைக்கப் பட்டவை அடியிலும் இருக்கும். எனவே மாதிரிகள் அடியில் உள்ள படையில் இருந்து எடுக்க பட் டால் அவை பிழையான முடிவினையே காட்டும். மேலும் இவ்வாறு எலும்பு மாதிரிகளை சேகரிப்பவர் forensic archaeology துறையில் நிபுணத்துவம் மிக்கவராக இருத்தல் அவசியம்.

15525613984107241823873080178175.jpg

10. இவ்வாறன பிழைகளை எவ்வாறு எதிர்காலத்தில் திருத்தலாம்?
சாதாரணமாக இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த மனிதப் புதை குழி அகழ்வு நடைபெறும் பொழுது காணாமல் போனோர் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உரிய துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் forensic archaeologist/anthropologist  பங்கு பெறுவதன் மூலம் இவ்வாறு பிழைகள் ஏற்படுவதினை குறைக்கலாம்.

கார்பன் டேட்டிங் நம்பத்தகுந்ததா ?

சாதாரணமாக ஒரு இடத்தில் அகழ்வு நடைபெறும் பொழுது  ஒன்று அல்லது பல மனிதர்களின் எலும்புக்கூடுகள் காணப்படும் பொழுது அவை எக்காலத்திற்குரியவை? அதாவது மனிதர்கள் எக்காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதே மிக முக்கியமான கேள்வி இக்கேள்விக்கான பதிலினை பொறுத்தே மிகுதி புலன் விசாரணைகள் நடைபெறும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக இவ்எலும்பு கூடுகள் 50 வருடத்திற்கு உட்பட்ட காலப்பகுதியினுள் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 50 வருடங்களுக்கு மேலாக இருந்தால் அவை பொதுவாக தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கருதப்படும். இக்கேள்விக்கான பதில் நிச்சயம் விஞ்ஞா ரீதியில் அல்லது வரலாறு ரீதியில்   பொதுவா அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறான சந்தர்ப்பக்கங்களில் எவ்வாறான முறைகள் நடைமுறையில் உள்ளது என்பதை பற்றியே இப்பதிவு ஆகும்.

  1. உருவ தோற்றவியல் (Bone Morphology) மூலம்

மிக அண்மை காலப்பகுதியில் புதைக்கப்பட்ட எலும்புகளில் தசை மற்றும் இணையங்கள் இணைந்து இருக்கும். மேலும் எலும்புகள் பாரமாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். கூடவே நாற்றமும் இருக்கும். பொதுவாக மேற்குறித்த இயல்புகள் 6 மாதம் வரையே இருக்கும்.

2. அகழ்வின் பொழுது எடுக்கப்படும் வேறு பொருட்கள் (Circumstance evidence) மூலம்

உதாரணமாக எலும்புகளுடன் கிடைக்கும் பத்திரிகை துண்டுகள், நாணய குற்றிகள் மற்றும் வேறுபொருட்கள். இவற்றில் உள்ள திகதி  மூலம் மூலம் காலத்தினை கணிக்கலாம். ஆனால் இம்முறையில்  பெரும் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இம்முறை பொதுவாக சட்ட நடவடிக்கைகளுக்குகாக ஏற்று கொள்ளப்படுவதில்லை.

3. Luminal முறை

இம்முறையில் Chemiluminescence (CL) டெஸ்ட் பயன்படுகின்றது. இம்முறை மிக செலவு குறைந்தது அத்துடன் மிக இலகுவாக செய்யலாம்.   ஆனால் இம்முறையில் உணர்திறன்(sensitivity) குறைவு என்பதால் பொதுவாக ஏற்று கொள்ளப்படுவதில்லை. sensitivity  என்பது நோய் நிலைமையைக் கொண்டிருக்கும் நோயாளிகளை சரியாகக் கண்டறியும் திறனின் திறனை  குறிக்கிறது. specificity என்பது ஒரு நிபந்தனையின்றி ஆரோக்கியமான நோயாளிகளை சரியாக நிராகரிப்பதற்கான சோதனை திறனைக் குறிப்பிடுகிறது. அவ்வாறே specificity யும் குறைவாகவே உள்ளது.

525px-Sensitivity_and_specificity.svg.png

  1. Oxford histology index முறை

இம்முறையில் எலும்பானது காலப்பகுதியுடன் அழிவடையும் பொழுது அவற்றில் ஏற்படும் மாற்றங்களை நுணுக்கு காட்டியின் ஊடாக பரிசோதிப்பதன் மூலம் எலும்பின் காலப்பகுதி அறவிடப்படும். இம்முறையில் பல குறைபாடுகள் இருப்பதால் பொதுவாக ஏற்றுக்கொள்ள படுவதில்லை.

  1. வேறு முறைகள்

இங்கு சூழவுள்ள மண்ணில் மற்றும் எலும்பில் ஏற்படும் இரசாயன மாற்றங்களை அடிப்படையாக கொண்டு காலத்தினை அளவிடும் முறை ஆகும். இம்முறையும் காலத்தினை சரியாக கணிக்க பெரிதளவில் உதவாது.

  1. கார்பன் டேட்டிங் முறை

இம்முறையே நவீன செலவு மிக்க முறை ஆகும். இதில் sensitivity அண்ட் specificity  கூடவாக உள்ளதால் தெளிவாக காலத்தினை கணிக்கலாம். இங்கு அணுகுண்டு கார்பன் விளைவு (Bomb carbon effect) மூலம் முதலில் எலும்புகள் 1950 இற்கு பிந்தியது அல்லது முந்தியதா என்று கணிக்கப்படும். 1950 இற்கு பிந்தியது எனில் 10வருட துல்லிய கால இடைவேளையில் காலத்தினை கணிக்கலாம. 1950 இற்கு பிந்தியது எனில் Accelerator mass spectrometry.(AMS) முறை மூலம் ஓரளவு பெரிதான கால இடைவெளியில் தான் காலத்தினை கணிக்க முடியும். 1950இற்கு பிந்தியது எனில் அது தொல்பொருளியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மனித எலும்புகள் 500 ஆண்டுகளாக புதைகுழியில் இருக்குமா?

மன்னார் மனித புதை குழி சம்பந்தமான கார்பன் டேட்டிங் ரிப்போர்ட் வெளியாகி பலத்த சர்ச்சையினை கிளம்பியுள்ள நிலையில் பலர் 500 வருட காலமாக மனித எலும்புகள் உக்காமல் இருக்குமா? எலும்பு கூடுகளுடன் உலோகங்கள் 500வருடகாலமாக உக்காமல் இருக்குமா? என்பது பற்றி மூளையினை கசக்கி பிழிந்தவண்ணம் உள்ளனர். மனிதன் இறந்த பின்பு மண்ணில் புதைக்கப்பட்டால்  அவனது எலும்பு கூடுகளுக்கு என்ன நிகழும் என்பது பற்றிய படிப்பே FORENSIC TAPHONOMY ( Forensic taphonomy is the study of these postmortem changes to human remains caused by soil, water, and the interaction with plants, insects, and other animals)

சாதாரணமாக புதைக்கப்பட்ட மனித உடலானது மண்ணுடனும், மண்ணில் உள்ள நீருடனும் அல்லது நீர் நிலைகளில் உள்ள நீருடனும், மண்ணில் உள்ள உரினங்களுடனும் மண்ணில் மேல் உயிர் வாழும் தாவரங்களுடனும் இடைத்தாக்கமடையும். இவ்வாறு இடைத்தாக்கமடைந்து படிப்படியாக உக்கி அழிவடையும். மனிதனோடு கூடவே புதைக்க பட்ட உலோகங்கள் மற்றும் ஏனைய ஆபரனங்களும் இவ்வாறே இடைத்தாக்கமடையும். இவ்வாறு மனித உடல் காலத்துடன் உக்கும் வீதம் (decomposition rate) பல்வேறுபட்ட காரணிகளில் தங்கி உள்ளது. அவையாவன எனில்

  1. சூழல் காரணிகள் (Environmental factors)
  2. மனித காரணிகள் (Human factors)

சூழல் காரணிகளை எடுத்து கொண்டால் உக்கும் வீதமானது பின்வருவனவற்றில் தங்கி உள்ளது

  1. சூழலின் வெப்பநிலை – அதிக வெப்பநிலையானது உக்கும் வீதத்தினினை அதிகரிக்கும். மாறாக வெப்பநிலை 120F இணை தாண்டும் பொழுது நுண்ணங்கிகளின் தொழில்பாடு இல்லாமல் போவதன் காரணமாக உக்கல் நடைபெறாது. அவ்வாறே 32F இணை விட குறைவாக வரும் பொழுதும் நடைபெறாது.
  2. ஈரப்பதன் (Moisture) – ஈரப்பதன் அதிகமாக இருக்கும் பொழுது மனித உடல் உக்கும் வீதமானது அதிகமாக இருக்கும் காரணம் அதிகரித்த பற்றீரியாக்களின் தொழில்பாடே ஆகும். உதாரணமாக நீரில் இருந்து மீட்கப்படும் உடல் மிக விரைவில் உக்கி பழுதடையும்.
  3. காற்றுக்கு வெளிப்படல் (Expose to air) – உடல் ஆனது காற்றுக்கு வெளிப்பட்டு இருந்தால் மிக விரைவில் உக்கி பழுதடையும். காரணம் பற்றீரியாக்களின் தொழில் பாட்டிற்கு தேவையான அளவு ஓட்ஸிசன் வாயு கிடைக்கின்றமையே ஆகும். இதேவேளை உடனடியாகவே ஆழ் கிடங்குகளில் புதைக்கப்பட்டால் கிடைக்கும்  ஓட்ஸிசன் அளவு குறைவு காரணமாக உக்கும் வீதம் குறைவடையும்.
  4. வெளிப்பட்ட மனித உடல்கள் (Exposed body to environment) – மனித உடலானது சூழலுக்கு வெளிக்காட்ட பட்ட நிலையில் இருக்கும்பொழுது அவை மிருகங்களின் தாக்குதல்களுக்கு மற்றும் இலையான் ஏனைய பூச்சி வகைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும். இவ்வாறு உள்ளாகும் உடல்கள் வெகுவிரைவில் உக்கி மண்ணாகும்.

பின்வரும் மனித காரணிகள் உக்கும் வீதத்தில் செல்வாக்கு செலுத்தும்

  1. வயது – உடன் பிறந்த குழந்தைகளில் குடலில் நுண்ணங்கிகள் குறைவாக இருப்பதன் காரணமாக அவற்றில் உக்கும் வீதம் குறைவாகவே இருக்கும்.
  2. உடற் பருமன் – பருத்த உடல் கொண்ட நபரின் உடலில் அதிகளவு நீர் காணப்படுவதனால் அவ்வுடல் இலகுவில் உக்கும் . மாறாக மெல்லிய உடல் பருமன் உள்ளவர்களின் உடலில் குறைந்தளவு நீர் காணப்படுவதனால் அவ்வுடல் இலகுவில் உக்காது.
  3. மரணத்திர்கான காரணம் (Cause of dead) – ஒருவர் செப்டிசீமியா போன்ற கிருமித் தொற்றின் காரணமாக இறப்பாராக இருந்தால் அவரின் உடலில் உள்ள கிருமிகள் காரணமாக உடல் விரைவில் உக்கி அழிவடையும். ஒருவர் ஆசனிக்கு மற்றும் பாதரசம் போன்ற நஞ்சு பொருட்களினால் நச்சூட்டப்பட்டு இறப்பாராக இருந்தால் அவரின் குறைந்த வீதத்திலேயே  உக்கி அழிவடையும்.

ஆக மொத்தத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட உடலானது உக்கி அழிவடையத்தான் வேண்டும். ஆனால் அழிவடையும் அல்லது உக்கும் வீதமானது மேற்கூறப்பட்ட பல்வேறு காரணிகளில் தங்கி உள்ளது. அதன்காரணமாகவே சில பிரதேசங்களில் மனித எலும்பு கூடுகள் பல நூற்றான்டுகள் சென்றும் முழுதாக கிடைக்கின்றன. மாறாக சில பிரதேசங்களில் மனித எலும்பு கூடுகள் ஒருசில வருடங்களிலேயே அல்லது மாதங்களிலிலேயே முற்றாக உக்கி அழிவடைந்து விடுகின்றன. இவ்வாறே மனித உடலோடு கூடவே புதைக்க பட்ட உலோகங்களின் இருக்கையும் தீர்மானிக்க படுகின்றது. மேலும் மிக பெரிய ஒரு மனித புதை குழியினை அமைக்கும் பொழுது மனித உடலினை கை மற்றும்  கால் என்பவற்றினை நூலினால் அல்லது கம்பியினால் பிணைத்த பின்னர் தூக்கி உள்ள நோக்கி வீசுவார்கள்.

பஸ்ஸில் உங்கள் ஆசனம் பாதுகாப்பானதா?

அவள் முதன் முதல் கொழும்பு பல்கலைகழகம் செல்வதற்காக தனது தாயாருடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தாள். அவளின் தாயார் பஸ்ஸின் சாரதி இருக்கைக்கு நேரடி பின்னாகவும் அவள் தாயாரின் அருகிலும் அமர்ந்திருந்தாள். அவள் தாயாருடன் தனது எதிர்கால படிப்பு சம்பந்தமாகவும் தனது விடுதி வசதி தொடர்பாகவும் உரையாடியவண்ணம் இருந்தாள் . தாயாரும் தனது பங்குக்கு அவளுக்கு அறிவுரைகள் கூறியவண்ணம் இருந்தாள். பஸ்ஸானது ஆணையிறவினை தாண்டி யாழ் – கண்டி வீதியில் கடும் இருட்டினுள் மிகவேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று பாரிய சப்தம்   அதனை தொடர்ந்து அவளுக்கு என்ன நடந்தது என்னெவென்று தெரியவில்லை. அவள் கண் விழித்தபொழுது வைத்தியசாலையில் இருந்தாள். அவளின் தாடை எலும்பு மற்றும் பற்கள் உடைந்து இருந்தன. தாயாரும் படு காயத்திற்கு உள்ளாகி இருந்தார்.

கடந்த மாதத்தில் மட்டும் யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் 3 பஸ்கள் விபத்துக்குள்ளாகி இருந்தன. இதனால் ஒருசில உயிரிழப்புக்களும் பல பேர் படுகாயங்களுக்கும் உள்ளார்கள். இப்பதிவில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை அன்றி எவ்வாறு ஒரு பாதுகாப்பான இருக்கையினை பஸ்ஸில் தெரிவு செய்வது பற்றி சட்ட மருத்துவ அடிப்படையில் ஆராயப்படுகின்றது.

பெரும்பாலான விபத்துகள் நடைபெறும் பொழுது பஸ்சின் முகப்பு பக்கத்திலேயே அதிக விசை தாக்கும் (head on collision/front impact) இதன் காரணமாக தற்பொழுது சொகுசு பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய முகப்பு (Windscreen) கண்ணாடி, ஏனைய அதனோடிணைந்த பொருட்கள் மற்றும் நம்மவர்களால் பொறுத்தப்பட்ட கடவுள் படங்கள், சிலைகள் மற்றும் தொலைக்காடசி என்பன பலத்த விசையுடன் உள்நோக்கி நகரும் அதேவேளை சாரதி, சாரதிக்கு பக்கத்தில் இருப்பவர் அல்லது மிதிப்பலகையின் நின்று கொண்டிருப்பவர் ஆகியோரும் முன்னோக்கி நகர அவர்களுக்கு கடுமையான காயங்கள் மற்றும்  சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும். இவ்வாறே சாரதிக்கு பின்னான இருக்கையில் இருப்பவர்களுக்கும் எதிர் நிரையில் முதலாவதாக இருப்பவர்களுக்கும் கடுமையான காயங்கள் மற்றும்  சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும். பஸ்சின் முற்பகுதிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் தடுப்பு இருந்தாலும் கணிசமான விசை தாக்கும். மேலும் கண்ணாடியிலான அல்லது தகட்டிலான தடுப்பு இருந்தால் அவை உடைந்து அதிக காயங்களை ஏற்படுத்தும்.

vehicle_safetyseats_bus

பஸ்சின் பின் நிரையில் இருப்பவர்களில் நடுவில் இருப்பருக்கு முன்பாக எவ்விதமான தடுப்பும் இல்லை. இதன் காரணமாக விபத்தின் பொழுது வாகனத்தின் மிகக்குறைந்த நேரத்தில் வேகம் சடுதியாக பூச்சியமாக வரும் (Deceleration) இதன் காரணமாக அவர் தூக்கி வீசப்பட்டு அதிக காயங்களுக்கு உள்ளவார்.

மேலும் பஸ்ஸானது நிறுத்த பட்டிருக்கும் பொழுது பின்பக்கமாக வரும் வாகனம் மோதும் பொழுது பஸ்சின் பின் நிரையில் இருப்பவர்கள் அதிக காயங்களுக்கு உள்ளவார். குறிப்பாக பஸ்ஸின் பின் பக்கத்தில் எதுவித இரும்பாலான குறுக்கு சட்டங்களும் (Iron cross bars) இல்லாததினால் விசையானது நேரடியாக தாக்கி அதிக சேதாரங்களை ஏற்படுத்தும்.

மேலும் பஸ்சின் எரிபொருள் தாங்கி உள்ள இடத்திற்கு மேலே உள்ள இருக்கையில் இருப்பவர்களுக்கு விபத்தின் காரணமாக தீ ஏற்பட்டால் அவருக்கு அதிக காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் விபத்தின் காரணமாக எரிபொருள் தாங்கி வெடிக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

மேலும் சாரதி இருக்கையின் பின்னாக உள்ள நிரையில் உள்ளவர்கள் எதிர் பக்கத்தில் இருந்து வரும் வாகனம் வேக கட்டுப்பாடினை இழந்து மோதும் பொழுது அவர்களுக்கு அதிக காயங்கள் ஏற்படும் (side impact) சாத்திய கூறு உண்டு. எனினும் இரும்பாலான குறுக்கு சட்டங்கள்  (Iron cross bars) இருப்பதன் காரணமாக காயங்கள் குறைவாக இருக்கும்.