தினேஷ்ஷாப்டர் மரணவழக்கு

நீண்டகாலமாக மந்தநிலையிலிருந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மரண வழக்கின் விசாரணை தற்போது அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய மர்ம மரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புதிய விசாரணை தொடங்கியுள்ள நிலையில், புதிய ஆதாரங்கள், நிதி தொடர்புகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் வழக்கிற்கு புதிய திருப்பத்தை அளித்துள்ளன.

தினேஷ் ஷாப்டர் மரண வழக்கு இலங்கையின் சமீபத்திய காலத்தில் மிக அதிக கவனத்தை ஈர்த்த குற்றவியல் வழக்குகளில் ஒன்றாகும். இந்த வழக்கு ஒரு சாதாரண மரண விசாரணையைத் தாண்டி, தடயவியல் மருத்துவம் (Forensic Medicine), குற்றப்புலனாய்வு (Criminal Investigation), சட்டவியல் (Criminal Law) மற்றும் அறிவியல் ஆதாரங்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்திய முக்கிய வழக்காக மாறியுள்ளது.

1. என்ன நடந்தது

2022 டிசம்பர் 15

  • தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் தனது அலுவலகத்தை விட்டு, நிதி தொடர்பான பிரச்சினையைப் பேசுவதற்காக ஒருவர் சந்திக்கப் போவதாக தனது செயலாளரிடம் தெரிவித்திருந்தார்.
  • பின்னர் குடும்பத்தினரால் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.
  • அவரது மனைவி கைப்பேசி இருப்பிடத்தை (Location) பயன்படுத்தி அவரைத் தேடியபோது, பொரளை பொது மயானத்தில் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
  • வாகனத்தின் உள்ளே அவர் கழுத்தில் பிளாஸ்டிக் கம்பி (Cable tie/ligature) சுற்றப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
  • உடனடியாக தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பின்னர் உயிரிழந்தார்.

2. ஏன் இந்த வழக்கு இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியது?

பல காரணங்களால் இந்த மரணம் ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்குரியதாக இருந்தது.

() சம்பவ இடம்

ஒரு பொது மயானத்தில், பகல் நேரத்தில், வாகனத்துக்குள் ஒருவர் இவ்வாறு இறந்த காணப்படுவது மிகவும் அபூர்வமானது.

() கைகள் கட்டப்பட்டிருந்தமை

தற்கொலை செய்யும் ஒருவர் தனது கைகளை எவ்வாறு கட்டிக்கொள்ள முடியும் என்ற கேள்வி ஆரம்பத்திலிருந்தே எழுந்தது.

() கழுத்தில் சுற்றப்பட்டிருந்த வயர்

கழுத்தில் சுற்றப்பட்டிருந்த வயர் அல்லது Cable tighter எந்த முறையில் பயன்படுத்தப்பட்டது என்பது முக்கியமான தடயவியல் கேள்வியாக மாறியது.

() சம்பவ இடத்தில் போராட்டத்தின் தடயங்கள் குறைவாக இருந்தமை

இதுவும் விசாரணையில் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

3. ஆரம்பகால தடயவியல் மருத்துவ கருத்து ஏன் சர்ச்சைக்குரியதாகியது?

மேலும், விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் மரணத்திற்கான காரணம் குறித்து முரண்பட்ட விளக்கங்களை வழங்கியதால் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இது “சுயமாக கழுத்தை இறுக்கியதால் ஏற்பட்ட மரணம்” என கூறப்பட்டது. பின்னர் “சயனைட் ஊசி செலுத்தப்பட்டது” என்ற விளக்கமும் வெளியிடப்பட்டது. ஆரம்ப நீதிமருத்துவ அறிக்கையில், வணிகக் கடன்கள் அல்லது குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சாத்தியம் முன்வைக்கப்பட்டது.

ஆனால், பல தடயவியல் மருத்துவ நிபுணர்கள், உடல் கிடைத்த நிலை, கழுத்தில் சுற்றப்பட்டிருந்த வயர்கள், கட்டப்பட்டிருந்த கைகள் போன்றவை தற்கொலைக்கு இயல்பான அம்சங்களாகத் தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.  பல்வேறு விளக்கங்கள் வெளியானதால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. தடயவியல் மருத்துவத்தில் ஒரு மரணத்தின் காரணம் குறித்து இவ்வாறு முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

4. ஐந்து பேர் கொண்ட தடயவியல் மருத்துவ நிபுணர் குழு

ஷாப்டர் குடும்பத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, ஆரம்பகால காவல்துறை விசாரணை மற்றும் நீதிமருத்துவ அறிக்கையை சவாலுக்கு உட்படுத்தினார். இதன் பின்னர், ஐந்து மூத்த தடயவியல் மருத்துவ நிபுணர்கள் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து தடயவியல் ஆதாரங்களும் மீண்டும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டன. அந்த குழு இறுதியாக வழங்கிய முடிவில்:

  • இது தற்கொலை அல்ல.
  • இலங்கை தண்டனைச் சட்டத்தின் 296 ஆம் பிரிவின் கீழ் வரக்கூடிய கொலை (Homicide).
  • இந்த மரணம் வெளிப்புற நபரால் ஏற்படுத்தப்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவு இலங்கையின் சட்ட வரலாற்றில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக ஆரம்ப நீதிமருத்துவ அறிக்கையின் முடிவு, சிறப்பு தடயவியல் நிபுணர் குழுவின் அறிவியல் ஆய்வின் மூலம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த குழு,

  • பிரேதப் பரிசோதனை பதிவுகள்
  • Histopathology
  • Toxicology
  • புகைப்படங்கள்
  • சம்பவ இட ஆதாரங்கள்
  • பாதுகாக்கப்பட்ட உடல் உறுப்புகள்
  • ஆய்வக அறிக்கைகள்

என அனைத்து ஆதாரங்களையும் மீளாய்வு செய்தது.

5. உடலை ஏன் மீண்டும் தோண்டி எடுத்தார்கள்?

சாதாரணமாக பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடலை மீண்டும் தோண்டி எடுப்பது மிகவும் அரிது. ஆனால்,

  • ஆரம்ப அறிக்கையில் சந்தேகங்கள் இருந்தால்
  • புதிய அறிவியல் கேள்விகள் எழுந்தால்
  • புதிய நிபுணர் குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டுமென கருதினால்

உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்படலாம். இதன் மூலம்,

  • எலும்பு காயங்கள்
  • கழுத்து அமைப்புகள்
  • மென்மையான திசுக்கள்
  • பழைய காயங்கள்

மீண்டும் ஆய்வு செய்ய முடியும்.

6. நவீன தடயவியல் ஆய்வுகள்

இந்த வழக்கில் பல்வேறு அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைபேசி ஆய்வு

  • Call Detail Records (CDR)
  • Cell Tower Analysis
  • கைப்பேசி இருப்பிடம்

CCTV

  • வாகனம் எப்போது வந்தது?
  • யார் வந்தார்கள்?
  • யார் வெளியேறினார்கள்?

இலத்திரனியல் தடயவியல் (Digital Forensics)

  • WhatsApp
  • SMS
  • Email
  • GPS தகவல்கள்

நச்சியல் (Toxicology)

  • மருந்துகள்
  • நஞ்சு
  • வேதிப்பொருட்கள்

7. குற்றச்சம்பவ இடத்தின் முக்கியத்துவம்

தடயவியல் மருத்துவத்தில் உடலை விட Crime Scene மிக முக்கியமானதாகும். இந்த வழக்கில் ஆய்வு செய்யப்பட்ட முக்கிய அம்சங்கள்

  • வாகனத்தின் கதவுகள்
  • இருக்கையின் நிலை
  • கயிறு அல்லது Cable tighter அமைப்பு
  • இரத்தக்கறைகள்
  • விரல் ரேகைகள்
  • DNA ஆதாரங்கள்

8. இந்த வழக்கின் சட்ட முக்கியத்துவம்

இந்த வழக்கு இலங்கை நீதித்துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில்,

  • ஆரம்ப நீதிமருத்துவ கருத்து பின்னர் மாற்றப்பட்டது.
  • நீதிமன்றம் சுயாதீன நிபுணர் குழுவை நியமித்தது.
  • அறிவியல் ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
  • விசாரணை புதிய திசையில் முன்னெடுக்கப்பட்டது.

9. இலங்கையின் தடயவியல் மருத்துவ வரலாற்றில் இந்த வழக்கின் இடம்

தினேஷ் ஷாப்டர் வழக்கு, இலங்கையில் அறிவியல் ஆதாரங்கள், நீதிமன்ற கண்காணிப்பு, மற்றும் பல்துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த ஆய்வு எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டிய வழக்காகக் கருதப்படுகிறது. இது, ஆரம்ப மருத்துவக் கருத்து இறுதியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.  புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்தால் வழக்கின் முடிவு மாறக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊடகங்களில் வெளியான அரசியல் தொடர்புகள், நிதி பரிமாற்றங்கள், இடைத்தரகர்கள், அல்லது குறிப்பிட்ட நபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணைக்குட்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே. அவை நீதிமன்றத்தில் இறுதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. குற்றவியல் நீதிமுறையின் அடிப்படை கொள்கையின்படி, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை எந்த நபரும் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும். மேலும் பின்வரும் விடயங்களையும் எடுத்துக்காட்டுகின்றது

✔ சம்பவ இட ஆய்வு இல்லாமல் பிரேதப் பரிசோதனை மட்டும் போதாது.

கழுத்தில் இருக்கும் அடையாளங்களை மட்டும் வைத்து தற்கொலையா, கொலையா என்று முடிவு செய்ய முடியாது.

உடல் கிடைத்த நிலை (Body Position) மிக முக்கியமான ஆதாரமாகும்.

கைகள் கட்டப்பட்ட விதம் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

✔ DNA, Toxicology, Histopathology, Radiology ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து மதிப்பிடப்பட வேண்டும்.

✔ விசாரணை அதிகாரி, நீதிமருத்துவர் மற்றும் தடயவியல் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுவது அவசியம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.